03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்
0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.
ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.
[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017
*****
0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்
விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.
15/04/2017
*****
0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)
சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்
வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1
வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2
15/04/2017
*****