கருப்பு பண ஒழிப்பு

Mano60

New member
ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழிக்குமா? வீண் சர்ச்சையை விடுத்து நல்ல கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே.
 
நோக்கம் நல்லதாக தெரிந்தாலும் நடைமுறையில் எதிர்பார்க்கும் பலன் கிட்டாது போல் தான் தோன்றுகின்றது.. கள்ளசந்தையில் (சில இடங்களில் வங்கி ஊழியர்களே உடந்தை பல இடங்களில் பொது மக்களும் உடந்தை) 20% லிருந்து 50% தரகுடன் கருப்பு பணம் மாற்றப்பட்டு மீண்டும் பதுக்கப்படுகின்றன.. அதன் மூலம் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வருமானம் மீண்டும் தனி நபர்களின் கைகளுக்கே சென்று தஞ்சமடைகின்றன.. அதை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அப்பாவி மக்களை வதைக்கின்றதே தவிர கருப்பு பண மாற்றலை தடுக்கவில்லை.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் கருப்பு பண விடயத்திற்க்கும் பொருந்தும்.. அதற்கு அரசு வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும்.. வருமான வரி 20% க்கு மிகாமல் இருந்தால் பெரும்பாலோர் வருமான வரியை கட்டிவிடுவார்கள்.. வருமான வரி விகிதம் 30% 45% என்பதாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாத வருமான வரிக்கு வருமான வரியுடன் சேர்த்து 200% அபராதம் என்பதாலேயே சம்பாரித்த பணத்தில் பெரும்பங்கை வருமான வரியாகவும் அபராதமாகவும் கட்ட யாருக்கும் மனம் வரவில்லை.. ஒரு படி மேல் சென்று தாங்கள் சம்பாரித்த பணத்தை (விசாரணைக்கு அஞ்சி யாருக்கும் பயன்படாத வகையில்) எரிக்கவும் செய்கின்றார்கள்.. இதை எல்லாம் சிந்தித்து அரசாங்கம் வருமான வரி விகிதத்தில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வராத வரையில் எந்த மாற்றங்களும் வரப்போவதில்லை..
 
நல்ல பதிலுக்கு மிக்க நன்றி சகோதரி. இதற்கு முன் 1978 ல் ஜனதா அரசு இப்படி ஒரு அறிவிப்பு செய்திருந்தது. அதன் பின் விளைவுகளை ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று யோசிக்கவேண்டும். அரசும் தன கையிருப்பில் உள்ள பணத்தை மக்கள் நலத்திற்கு சுயநலமின்றி செலவழித்தால் நீங்கள் சொன்னது போல் திருடராய் பார்த்து திருந்திடிவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா? காலம் பதில் சொல்லவேண்டும்.

நல்ல கருத்துக்கள் நமது மன்றம் மீண்டும் புத்துணர்ச்சி பெறுதல் இரண்டையும் நோக்கமாக கொண்டு எழுதப்பட்ட திரிக்கு ஆதரவு தந்ததற்கு மிக்க நன்றி சகோதரி.
 
அரசும் தன கையிருப்பில் உள்ள பணத்தை மக்கள் நலத்திற்கு சுயநலமின்றி செலவழித்தால் நீங்கள் சொன்னது போல் திருடராய் பார்த்து திருந்திடிவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா?
கண்டிப்பாக.. நான் நேற்றே சொல்ல எண்ணி சொல்லாமல் விட்டதை அப்படியே கூறியுள்ளீர்கள்.. அரசு கிடைக்கும் வருவாயை முறையாக மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் செலவு செய்தால் வருமான வரி கட்டுவோருக்கும் ஒரு மன நிறைவைத் தருவதோடு வருமான வரியையும் தவறாமல் செலுத்த ஒரு உந்துதல் வரும்.. தற்காலத்தில் மக்களின் வரிப் பணங்களை திட்டங்களுக்கான செலவினங்கள் என்ற பெயரில் திட்டங்களுக்கு குறைவாகவும் அரசியவாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பெருமளவிலும் ஊழல் உருவில் கொண்டு செல்வதாலேயே வரி செலுத்துவோருக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டு வரியை முறையாக செலுத்த மறுக்கின்றனர்..
 
மீண்டும் உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு நெறிமுறை வகுத்து வாழ்ந்தால் ஊழல்கள் பெருமளவு குறையும். ஊழலே கருப்புப்பணத்தின் பிறப்பிடம். இது மறைய மக்களின் மனதில் நீதிக்கருத்துக்கள் வளரவேண்டும். இதற்கு பள்ளிப்பருவத்திலேயே குழந்தைகளின் மனதில் நீதி போதனையை தரவேண்டும்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடலுக்கு வாயசைத்து நடித்தவர் இன்னொரு படத்தில் "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று சொல்லி இருக்கிறார்.

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றும் பேய் அரசாண்டான் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றும் பழ மொழிகள் உள்ளன. எனவே நல்ல அரசாட்சியில் நீதியும் நேர்மையும் நிலைக்கும் என நம்புவோமாக. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சேலம் ரயில் கொள்ளையர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுகின்றனரோ இல்லையோ. அவர்கள் கொள்ளையடித்த பணம் செல்லாது என்று ஆகிவிட்டது.

சகோதரி நீங்களாவது வந்து உங்களின் கருத்துக்களை தைரியமாக சொல்லுகிறீர்கள் மிக்க நன்றி.
 
500 / 1000 செல்லாது என்று அறிவித்தது கருப்புப் பணத்தில் கொஞ்சத்தை அழிக்கும். அதை விட முக்கிய பயன் முடங்கிக் கிடக்கும் கரன்சிகள் பயன்பாட்டிற்கு வரும்.

ஒரு கேள்வி... இந்தியாவில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 18 இலட்சம் கோடி.

இந்தியாவின் 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எவ்வளவு?

The Indian government has proposed to spend Rs.19,78,060 crore in the fiscal year 2016-17, which is 10.8% higher than Rs. 17,65,436 crore, revised estimates for previous year.

இப்பொழுது பலரும் சில கோடி ரூபாய்களை புழக்கத்தில் விடாமல் மறைத்து வைத்துருக்கிறார்கள்.

ஒருவர் 100 கோடி ரூபாய்களை ஹவாலா மூலம் டாலராக மாற்றுகிறார் என்றாலும் அந்த நூறு கோடி ரூபாய் ஹவாலா கும்பலிடம் இந்தியாவில்தான் இருக்கும். அதைச் சொத்தாக இன்னொருவரிடம் வாங்கி மறைத்தாலும் அந்த 100 கோடி ரூபாய் இந்தியாவில் இன்னும் சிலரிடம் போய் மறைகிறது. தங்கமாக வாங்கினாலும் ரூபாய் இந்தியாவில்தான் தங்க வியாபாரிகள், கடத்தல்காரர்களிடம் போய்ச் சேருகிறது.

ஆக ஊழல் செய்தவரிடம் காகிதப் பணமாக இல்லாவிட்டாலும் அது பலரிடம் பரவி மறைந்து கிடக்கும். ஒருவர் தன் நிலத்தை 1 இலட்சம் கணக்கு காட்டி விட்டு 50 இலட்சத்திற்கு விற்றிருப்பார். அந்த 49 இலட்சம் பணமாக அவரிடம் இருக்கலாம். அல்லது அதை அவர் தங்கமாக மாற்றினால் கடத்தல்க்காரர்களிடம் அந்தப் பணம் தங்கி விடலாம். இப்படி பணம் தேங்கி விடுவதால் அரசிற்கு வருமானம் குறைந்து விடுகிறது. பணப் பரிமாற்றம் நடக்கும் பொழுதெல்லாம் அரசிற்கு அதில் வரி செல்கிறது. எனவே பரிமாற்றத்தில் இல்லாத பணம் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கி விடும். ஒரு கோடி பேரிடம் ஆளுக்கு ஒரு இலட்சம் தங்கி விட்டால் இலட்சம் கோடி பணப்பரிமாற்றத்திற்கு ஆட்படுவதில்லை. அதனால் அதிலிருந்து அரசுக்கு ஒரு வருமானமும் வராது.

செல்வம் கைக்கு கை மாறிக் கொண்டே இருந்தால்தான் பொருளாதாரம் மேன்மையடையும். வங்கிகள் இதற்காகத்தான் உருவாகின.



இன்னொரு வகை கருப்புப் பணம் 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து விட்டு 40 ரூபாய்களை கணக்கில் காட்டி வெளிநாட்டின் பணத்தை அப்படியே வெளி நாட்டு வங்கிகளில் போட்டு விடுவது. இது இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிப்பது. இதை ஒழிக்க உலகளாவிய நடவடிக்கை தேவை. இதற்கு அடுத்து அந்த இந்தியாவின் வளம் இன்னொரு நாட்டின் கருப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்து இலாபமெடுப்பது. இது கொள்ளையிலும் கொள்ளை. இதிலும் உலகளாவிய அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் செயல் பட்டால் மட்டுமே ஒடுக்க முடியும்
 
உதாரணமாக ரெட்டி பிரதர்ஸ் 45000 கோடி மதிப்புள்ள இரும்புத்தாதை வரிகட்டாமல் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். இதில் பல நிலைகளிலும் பலரும் உதவி இருந்தால் ஒழிய இதை நடத்தி இருக்கவே முடியாது. இதற்கு என்ன நடவடிக்கையை எப்படி எடுப்பது என்றே அரசுக்கு தெரியவில்லை.
 
உதாரணமாக

1. ஜப்பானுக்கு இந்தியாவின் ஏற்றுமதி --- ஜப்பானில் இந்தியாவில் இருந்து இறக்குமதி இரண்டும் டேலியாக வேண்டும். இப்படி அனைத்து நாடுகளும் கணக்கை நேர் செய்ய ஒரு அமைப்பு இருக்க வேண்டும்

இது வர்த்தக ரீதியாக கணக்கை நேர் செய்யும். ஜப்பானுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத்தாதை ஏற்றுமதி செய்ததாக இங்கும் கணக்கு இருக்கும். இறக்குமதி செய்ததாக அங்கும் கணக்கு இருக்கும்.

இது போல அனைத்து நாட்களுக்கு இடையேயும் ஒரு கணக்காய்வாளர் கமிட்டி இருக்க வேண்டும். இதனால் கருப்புப் பணம் கடத்தல் மூலம் மட்டுமே உண்டாகும் என்னும் நிலை உண்டாகும்.

அடுத்து எந்த நாட்டில் பணம் சம்பாதிக்கப்படுகிறதோ அந்த நாட்டின் வரிதான் முதலில் கட்டப்பட வேண்டும். மொரீசியஸ் நாட்டு நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அந்த லாபத்திற்கு முதலில் இந்தியச் சட்டப்படி வரி கட்ட வேண்டும். மொரீசியஸில் வரி அதிகம் என்றால் வித்தியாசத்தை அவர்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்தியாவிற்கு வரிகட்டாமல் இந்தியாவிலிருந்து வருமானம் பார்க்க அனுமதிக்கக் கூடாது.

இன்னும் பலப்பல வகையில் நடவடிக்கை ஒழித்தால் ஒழிய கருப்பைக் கட்ட முடியாது. அனைத்து நாடுகளும் இணைந்து முயற்சித்தால் ஒழிய கருப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது
 
ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழிக்குமா? வீண் சர்ச்சையை விடுத்து நல்ல கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே.

எனக்கென்னவோ இது கருப்புபணத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கையாகத் தெரியவில்லை. பெருமளவு வராக் கடன்களால் வங்கிகள் திவாலாகிக்கொண்டிருக்கின்றன. எனவே அவற்றைக் காப்பாற்ற எடுத்த அதிரடி நடவடிக்கையாகவே தெரிகிறது. இந்தக் கசப்பு மாத்திரையை கருப்புபணம் என்னும் இனிப்பு உறையில் தருகிறார்கள்.
 
நண்பர்கள் தாமரை மற்றும் செல்வா இருவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தாமரை அவர்களின் கருத்துக்கள் சிந்திக்கவைக்கின்றன. அவற்றில் பொதிந்துகிடக்கும் உண்மைகள் மறுப்பதற்கில்லை. இவை எல்லாம் நமது பிரதமருக்கும் நிதிமந்திரிக்கும் தெரியாமலா இருக்கும். அவை தொடர்பாக அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லையென்றால் நடைமுறை படுத்துவதில் ஏதோ சிக்கல் இருப்பதாக அர்த்தம்.

தற்சமயம் பாராளுமன்றம் கூடி உள்ளது. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ள பிரதிநிதிகள் கூச்சலும் குழப்பத்தையும் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் வேதனைக்குரிய விஷயம். நேற்று ஒருநாள் மட்டும் விவாதம் நடந்தது. அப்பொழுது பேசிய முன்னாள் பிரதமரும் நாட்டின் தலை சிறந்த பொருளாதார நிபுணருமான திரு மன்மோகன்சிங் அவர்கள் இந்த செயலை "ஆர்கனைஸ்ட் லூட்" என்றும் "லீகலய்ஸ்ட் ப்ளண்டர்" என்றும் கூறி இருக்கிறார். தவிர இதனால் நாட்டின் ஜி.டி.பி. 2 சதவிகிதம் குறையும் என்றும் சொல்லி இருக்கிறார். உண்மையிலேயே குறையுமா? இது பொருளாதார சீரழிவை ஏற்படுத்துமா?

உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் நமது பிரதமர் இங்கு நண்பர் தாமரை கூறியுள்ள கருத்துக்களின் படி சிந்தித்து அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பை பெற முயற்சிகள் மேற்கொள்ளுகிறாரா என்பதை நடைமுறையில் தான் பார்க்கவேண்டும்.

1990 களில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நிதியமைச்சராக இருந்தபோது எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நாட்டை பெரும் சீரழிவிலிருந்து காப்பாற்றியதாக சொல்லுகிறார்கள். அவர் அன்று எடுத்த நடவடிக்கைகளின் நல்ல பயன்கள் மக்களை சென்றடைந்திருந்தால் இன்று காங்கிரஸ் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில் அந்த நல்ல பலன்கள் யாரை சென்றடைந்தன? அரசியல்வாதிகளையா?

நண்பர்களே கட்சி சார்பின்றி உங்களின் சீரிய கருத்துக்களை பகிருங்கள். நன்றி.
 
இதுவரை எத்தனை 500 ரூபாய் நோட்டுகள் அச்சாகி இருக்கின்றன. அவற்றுள் எத்தனை புழக்கத்தில் உள்ளான என்பதை கணக்கிட்டால் பல லட்சம் கோடி ரூபாய்கள் புழக்கத்தில் வராமல் இருந்ததாக இன்னும் பல தகவல்களுடன் கூடிய ஒலிநாடா என் வாட்ஸாப்ப் லே வந்தது. இதனால் இன்னும் ஒரு வருட காலத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயரும் என்றும் உள்நாட்டிலும் விலைவாசிகள் குறையும் என்றும் அதில் சொல்லப்படுகிறது.

சரிதானா என்று அதே ஒலிநாடாவை வங்கி கிளை மேலாளராக இருந்து ஒய்வு பெற்ற ஒரு நண்பரை கேட்டேன். அவர் இதில் உண்மை உள்ளது ஆனால் பலன்களை நடைமுறையில் பார்க்கவேண்டும் என்று பதில் சொல்லி உள்ளார்.

உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது நண்பர்களே.
 
நீண்ட கால பலன் சில மாதங்களுக்கு பிறகு தான் தெரியும்.
தற்போதைய பலன் பலரும் கால் கடுக்க வரிசையில் நிற்பதும் வீடுகளில் சில செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை தள்ளிப்போட வேண்டிய நிலையிலிருப்பதும்.

பணமில்லாமல் கார்டுகள் மூலம் செலவு செய்யும் பழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தி விட்டு இதை செய்திருக்கலாம். அல்லது 500 ரூபாயை விட்டு விட்டு 1000 ரூபாய் தாளை மட்டும் செல்லாது என அறிவித்திருக்கலாம்.

தீவிர வாத செயல்களுக்கு பயண்படுத்தப்பட்ட பணம் தடுக்கப்பட்டுள்ளது என்பது ஆறுதளிக்கிறது.

கறுப்பு பணாத்தை முற்றிலும் ஒழிப்பது வெறும் ரூபாய் நோட்டொடு முடிகிற விசயமில்லை

ஆனால் பிரதமருக்கு கறுப்பு பணத்தை ஒழிக்க ஆர்வம் இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்து விட்டது என்னவோ உண்மை.
 
பண மதிப்பிழப்பு என்பது வரவேற்கக் கூடியது தான், என்றாலும் ரூ. 500, 1000 நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்துவிட்டு ரூ. 500(புதிய நோட்டு) மற்றும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அன்றே வெளியிட்டது தான் கேள்விக்குரியது. இதன் மூலம் பல பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் தாங்கள் பதுக்கிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சில வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிவிட்டார்கள். வழக்கம்போல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள்.
 
Back
Top