நாஞ்சில் த.க.ஜெய்
New member
"அம்மா ! நான் பள்ளிகூடம் போயிட்டு வரேன்." என்று கூறிவிட்டு தனது மிதிவண்டியில் கிளம்பினாள் பதினொன்றாவது படிக்கும் எலிசபெத்.
வகுப்பில் சிறந்த மாணவி..இவள் தந்தை ஊரில் பெரிதும் மதிக்கப்படும் மனிதர் . வழியில் இணைந்து கொண்டாள் காயத்ரி இவளும் படிக்கின்ற மாணவிதான் ஆனால் அவள் அளவிற்கு இல்லை, இவள் குடும்பம் ஊரில் பெரிய குடும்பம் அவளுக்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் கல்வியின் அவசியம் புரிந்ததால் இன்றும் தொடர்கிறாள் ..இவருடைய நட்பும் நன்முறையில் திகழ்கிறது .
"ஏண்டி ! நேத்தைக்கு கணக்கு டீச்சர் போட்ட விட்டுகணக்க முடிச்சிடியா ?" என கேட்டாள் காயத்திரி .
"இன்னும் பண்ணலை , நேத்திக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருந்திச்சி,.அதான் பண்ண முடியல" .
"என்னடி ! இப்படி சொல்லுற? , உன்ன பாத்து எழுதலாமுன்னு வந்தேன். "
"அதுக்கென்ன மணி இப்போ 8.20 தான 25 நிமிசத்துல முடிச்சிரலாம் .சரியா ?"
"சரி ..அப்புறம் உன்னை கேக்கனுமுன்னு நெனச்சேன் .நேத்தைக்கு சாயுங்காலம் பள்ளிகூடத்தவிட்டு கிளம்பும் போது மாரியப்பன் என்ன சொன்னான்னு அவன திட்டுன ?"
"பிறகென்ன நேத்தைக்கு ஆங்கில வாத்தியார் வச்ச பரிச்சையில் அவன் பின்னால் இருந்து பேப்பர காட்ட சொன்னான், நான் காட்டல அதுக்கு அவன் கோவத்துல என்ன திட் டுனான் அதுக்கு நான் பதிலுக்கு திட்டுனேன் ."
"சரி பள்ளிக்கூடம் வந்துடிச்சி .அப்புறம் அவன்கிட்ட கொஞ்சம் கவனமா இரு,அவன் வில்லங்கம் புடிச்சவன் .போனவருசம் வரலாறு வாத்தியாரு எதோ கேள்வி கேட்டு திட்டிட்டாரு அத அவன் மனசுல வச்சிக்கிட்டு ராத்திரி அவரோட வீட்டுல போய் அவரு வீட்டு கண்ணாடிய ஓடச்சிட்டான் இது யாருக்கும் தெரியாது என் அண்ணங்கிட்ட சொல்லிருக்கான் .அத இப்போ உங்கிட்ட சொல்லுறேன் .அதில்லாம அவன் அப்பனும் அந்தமாதிரி ஆளு அதான் சொல்லுறேன் புரிஞ்சுதா ?"
"சரிடி "..
வகுப்பறைக்கு சென்றதும் வீட்டு கணக்கை முடிக்கவும் முதல் மணி அடித்து தமிழ் வகுப்பும் துவங்கியது .
"உள்ளே வரலாமா ஐயா ?" என்ற குரல் கேட்டு திரும்பினார் தமிழாசிரியர் .அங்கே மாரியப்பன் நின்றிருந்தான் .
"ஒரு நாளும் சரியான வேளைக்கு வரமாட்டியா ? உனக்கு இன்னைக்கு வருகை கிடையாது ..மீண்டும் இது போல் நடந்தால் உன் அப்பாவை கூட்டி வரவேண்டியிருக்கும்" என்ற படி உள்ளே அமர சொன்னார் ..
தன்னை பார்த்து சிரித்த எலிசபெத்தை வெறித்து பார்த்தபடி தன்னிடத்தில் வந்தமர்ந்தான் ..
அவன் மனதில் " இவளுக்கு எப்ப பாரு என்ன பாத்தா இளக்காரம் போல நேத்திக்கு பரிச்சை பேப்பர் காட்ட சொன்னா காட்டல இன்னைக்கு என்னனா கொஞ்சம் பிந்தி வந்துட்டேன் அதுக்கு சிரிக்கிற சிரிப்பா பாரு இவள இப்படியே விடக்கொடாது .இவளுக்கு ஒரு பாடம் கத்து கொடுக்கணும் அப்பத்தான் மத்தவங்களுக்கும் என்ன பாத்தா ஒரு பயம் வரும் .." என்ன செய்யலாம் என்ற நினைவில் எண்ணவோட்டம் சென்றது ..
சிந்தனை நீண்டது காலம் சுருங்கியது வகுப்பு முடிந்ததது கூட தெரியவில்லை மணி சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தான் ..
தொடரும் ...
வகுப்பில் சிறந்த மாணவி..இவள் தந்தை ஊரில் பெரிதும் மதிக்கப்படும் மனிதர் . வழியில் இணைந்து கொண்டாள் காயத்ரி இவளும் படிக்கின்ற மாணவிதான் ஆனால் அவள் அளவிற்கு இல்லை, இவள் குடும்பம் ஊரில் பெரிய குடும்பம் அவளுக்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் கல்வியின் அவசியம் புரிந்ததால் இன்றும் தொடர்கிறாள் ..இவருடைய நட்பும் நன்முறையில் திகழ்கிறது .
"ஏண்டி ! நேத்தைக்கு கணக்கு டீச்சர் போட்ட விட்டுகணக்க முடிச்சிடியா ?" என கேட்டாள் காயத்திரி .
"இன்னும் பண்ணலை , நேத்திக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருந்திச்சி,.அதான் பண்ண முடியல" .
"என்னடி ! இப்படி சொல்லுற? , உன்ன பாத்து எழுதலாமுன்னு வந்தேன். "
"அதுக்கென்ன மணி இப்போ 8.20 தான 25 நிமிசத்துல முடிச்சிரலாம் .சரியா ?"
"சரி ..அப்புறம் உன்னை கேக்கனுமுன்னு நெனச்சேன் .நேத்தைக்கு சாயுங்காலம் பள்ளிகூடத்தவிட்டு கிளம்பும் போது மாரியப்பன் என்ன சொன்னான்னு அவன திட்டுன ?"
"பிறகென்ன நேத்தைக்கு ஆங்கில வாத்தியார் வச்ச பரிச்சையில் அவன் பின்னால் இருந்து பேப்பர காட்ட சொன்னான், நான் காட்டல அதுக்கு அவன் கோவத்துல என்ன திட் டுனான் அதுக்கு நான் பதிலுக்கு திட்டுனேன் ."
"சரி பள்ளிக்கூடம் வந்துடிச்சி .அப்புறம் அவன்கிட்ட கொஞ்சம் கவனமா இரு,அவன் வில்லங்கம் புடிச்சவன் .போனவருசம் வரலாறு வாத்தியாரு எதோ கேள்வி கேட்டு திட்டிட்டாரு அத அவன் மனசுல வச்சிக்கிட்டு ராத்திரி அவரோட வீட்டுல போய் அவரு வீட்டு கண்ணாடிய ஓடச்சிட்டான் இது யாருக்கும் தெரியாது என் அண்ணங்கிட்ட சொல்லிருக்கான் .அத இப்போ உங்கிட்ட சொல்லுறேன் .அதில்லாம அவன் அப்பனும் அந்தமாதிரி ஆளு அதான் சொல்லுறேன் புரிஞ்சுதா ?"
"சரிடி "..
வகுப்பறைக்கு சென்றதும் வீட்டு கணக்கை முடிக்கவும் முதல் மணி அடித்து தமிழ் வகுப்பும் துவங்கியது .
"உள்ளே வரலாமா ஐயா ?" என்ற குரல் கேட்டு திரும்பினார் தமிழாசிரியர் .அங்கே மாரியப்பன் நின்றிருந்தான் .
"ஒரு நாளும் சரியான வேளைக்கு வரமாட்டியா ? உனக்கு இன்னைக்கு வருகை கிடையாது ..மீண்டும் இது போல் நடந்தால் உன் அப்பாவை கூட்டி வரவேண்டியிருக்கும்" என்ற படி உள்ளே அமர சொன்னார் ..
தன்னை பார்த்து சிரித்த எலிசபெத்தை வெறித்து பார்த்தபடி தன்னிடத்தில் வந்தமர்ந்தான் ..
அவன் மனதில் " இவளுக்கு எப்ப பாரு என்ன பாத்தா இளக்காரம் போல நேத்திக்கு பரிச்சை பேப்பர் காட்ட சொன்னா காட்டல இன்னைக்கு என்னனா கொஞ்சம் பிந்தி வந்துட்டேன் அதுக்கு சிரிக்கிற சிரிப்பா பாரு இவள இப்படியே விடக்கொடாது .இவளுக்கு ஒரு பாடம் கத்து கொடுக்கணும் அப்பத்தான் மத்தவங்களுக்கும் என்ன பாத்தா ஒரு பயம் வரும் .." என்ன செய்யலாம் என்ற நினைவில் எண்ணவோட்டம் சென்றது ..
சிந்தனை நீண்டது காலம் சுருங்கியது வகுப்பு முடிந்ததது கூட தெரியவில்லை மணி சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தான் ..
தொடரும் ...
Last edited: