தமிழகத்தின் பரிதாப நிலையை

ravikrishnan

New member
530919_10150661960753450_656813449_9474580_1459586647_n.jpg


தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்...

1. குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.
2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.
3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியை விட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள்...
4. தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.
5. மிக அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்கு குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே முதன்மைக் காரணம்.
6. மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.
7. கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.
8. இந்தியாவின் விவாகரத்து பட்டியலில் தமிழ் நாடு முதல் இடம்.
பால் விலை உயர்வு, பேரூந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு....வேலையில்லா திண்டாட்டம்... தினம் தினம் கொலை, கொள்ளை, வழிப்பறி.... எங்கும் பார பட்சமின்றி லஞ்சம், ஊழல்... இவை அனைத்தையும் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து பார்க்கும் போது.... நமது எதிர்காலத்தையும், நமது எதிர்கால சமூகத்தை நினைத்து சற்றே அச்சம் ஏற்படுகிறது.
தமிழக மக்கள் அனைவரையும் ஓட்டாண்டியாக்கும் முயற்சியில் ஒருபுறம் அரசுக்கு நல்ல வெற்றி கிடைத்து வருகிறது...!!!
மறுபுறம் குடிமக்களை குடிகாரர்களாக மாற்றும் முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது...!!!
சிறுவர்கள் வாங்கிச்செல்லும் அளவுக்கு மது விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது தமிழக அரசு...!!!
அன்பர்களின் கருத்துகளை அறிய ஆவல்,
 
அரசுக்கு வருமானம் வருவதால் தானே எலைட் பாரை திறக்கிறார்கள் !

அது மட்டும் இல்லாமல் டாஸ்மாக்கில் கூட டார்கெட் பிக்ஸ் செய்து விட்டார்களாம் அவர்கள் நிர்ணயித்த சேல்சை காட்டா விட்டால் வேலை போய் விடும் என சொல்கிறார்கள் ... இந்த மாதிரி வேறெந்த மாநிலத்திலாவது நடக்குமா ..

தமிழகம் தள்ளாடி கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை
 
எங்கிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் இவை..?

அதீதமாய் எழுதப்பட்டதாய் தோன்றுகிறது.

வருந்துகிறேன்...
 
இந்த புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் 7 ல் ஒருத்தர் அன்றாடம் மது அருந்துகிறார்.

தமிழ்நாட்டின் இன்றைய வருமானம் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி. பன்னிரண்டரை ஆயிரம் கோடி என்பது உண்மை ஆனாலும் அது 30 சதவிகிதம் இல்லை.

வருடா வருடம் பத்தாவது பரீட்சை எழுதுபவர்கள் 8 இலட்சம் பேர். அதை அப்படியே எடுத்துக் கொண்டாலும், 15 x 8 = 120 இலட்சம் 13 லிருந்து 28 வயது வரை. அதில் பாதி பெண்கள். 60 இலட்ச இளைஞர்களில் 40 இலட்சம் குடிகாரர்கள். ஆக மூன்றில் இரு பங்கு மாணவர்கள் குடிகாரர்கள்.

புள்ளி விவரங்கள் பேசும் பொழுது இப்படி எடக்கு மடக்காக கொடுப்பதால் பல உண்மையான வருத்தங்கள் மூலைக்குள் கடாசப்படுகின்றன. கொஞ்சம் ஆனாலும் சரி, அதிகம் ஆனாலும் சரி.. மது தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும், ஊருக்கும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு.
 
எப்படியோ நாம சாதிக்கிறமில்ல. தமிழ்நாடு பின் தங்கியிருக்கு பின்தங்கியிருக்கு என கத்துறவங்க இனிமேல் சும்மா இருந்துடுவாங்க .
வாழ்க சாதனைக்குடிகாரர்கள்
:aetsch013::aetsch013::aetsch013:
 
வருத்தமான விசயம்..
இதில் நாம் கற்க்கொண்ட பாடம்தான் என்ன?

நாளைய தலைமுறை (அதாவது நமது பிள்ளைகள், நமது சகோதரன் சகோதிரிகளின் பிள்ளைகள்) நல்ல இருக்க நாம் முன்னோடிகளாக இருக்க வேண்டியது நமது கடமை..

நாம் நமது கடமைகளை சரியாக செய்வோம்.
 
தமிழ் நாட்டில் இனி 24 மணி நேரமும் மது கிடைக்கும்.. இந்த ஒரு சாதனை நூறாண்டு குடிமக்கள் மத்தியில் பேசப்படும் என்பது உறுதி உறுதி ..
 
பால் குடிக்கும் சிறுவன் எல்லாம் இப்போது மது குடிக்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்துவிட்டது, ஓ தாழ்ந்த தமிழகமே நீ விழித்து கொள்வது எப்போது, உன் சிறந்த பண்பாட்டை மீண்டும் நிலை நிறுத்துவது எப்போது.
 
அப்போ எந்தளவுக்கு மோசம்.....????

பொங்கல் கலெக்ஷன் மட்டும் 250 கோடி என செய்தி தாள்களில் பார்த்தேன் .. ஆம் அந்தளவுக்கு மோசமில்லை தான் ஏனெனில் ஆயிரம் கோடியை தாண்ட வில்லை
 
ஈழ பிரச்சனைக்காக யார் எது செய்தாலும், குறுக்கு சால் ஓட்டி, அதை எப்படியாவது மழுங்கடிப்பதே வைகோவின் செயல்பாடாய் இருந்துவந்துள்ளது...வெளியிலே ஏதோ தீவிர ஈழ, புலிகள் ஆதரவு போல பேசினாலும், வேடமிட்டாலும், அவரின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையாக தான் இருந்துவந்துள்ளது..

முள்ளிவாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது, அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் பல பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளியானது. ஆனால், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர், அவர்களின் இறப்பினை உறுதிப்படுத்தாமல், பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இன்றும் பிராபகரன் உயிருடன் உள்ளார், நான்காம் ஈழ போரை துவக்குவார் என்று சொல்வது, தங்களின் ஈழ வியாபாரம் பாதிப்படையகூடாது என்பதற்கு தானே...இவர்கள் இப்படி பேசியது, பேசிவருவது, நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் செய்து விட்டது..

இவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது எல்லாம் கட்டுக்கதையா? இறுதிகட்ட ஈழ போரின் போது, புலி தலைமைக்கு, இந்திய நிலவரம் குறித்து தவறான தகவல்கள் கொடுத்து, கடைசிநேரம் வரை பொய்யான நம்பிக்கைகளை அளித்து அவர்களை கழுத்தறுத்தவர் வைகோ..

இந்த சம்பவங்கள் நடந்த அன்றே உண்மையை விளக்கி பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கும், ஆனால் மொன்னையாக, தெளிவில்லாமல் பேசி, பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்றும் நடக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, அங்கு உண்மையில் நடந்தவைகளை மறைத்து, அந்த படுகொலைகளின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்....
 
Back
Top