M.Jagadeesan
New member
யானையாரே! யானையாரே! எங்கே போறீங்க?
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்-கொடிய
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்.
தந்தங்கள் உமக்கெதற்கு யானையாரே?
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வலுவில்
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்.
காதிரண்டும் ஆட்டுவதேன் யானையாரே?
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்-மனிதரின்
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்.
தூண்போன்ற காலெதற்கு யானையாரே?
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!-கொடிய
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!
தும்பிக்கை உமக்கெதற்கு யானையாரே?
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வாழ்வில்
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்.
பானைவயிறு உமக்கெதற்கு யானையாரே?
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!-உணவை
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!
மண்ணைவாரித் தூற்றுவதேன் யானையாரே?
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!-வாழ்க்கை
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்-கொடிய
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்.
தந்தங்கள் உமக்கெதற்கு யானையாரே?
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வலுவில்
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்.
காதிரண்டும் ஆட்டுவதேன் யானையாரே?
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்-மனிதரின்
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்.
தூண்போன்ற காலெதற்கு யானையாரே?
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!-கொடிய
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!
தும்பிக்கை உமக்கெதற்கு யானையாரே?
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வாழ்வில்
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்.
பானைவயிறு உமக்கெதற்கு யானையாரே?
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!-உணவை
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!
மண்ணைவாரித் தூற்றுவதேன் யானையாரே?
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!-வாழ்க்கை
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!