என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

`நான் பாடிய பழைய பாடல்களை இப்போது உள்ள புதிய பாடகர்கள் உணர்ச்சியே இல்லாமல் பாடி கேவலப்படுத்துகிறார்கள். இந்த பாவம் சும்மா விடாது என்று டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசமாக கூறினார். பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை புரிந்த பின்னணி பாடகர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பின்னணி பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா, ஹரிகரன், மனோ, உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா, மாணிக்க விநாயகம், டி.எம்.எஸ்.செல்வகுமார், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சித்ரா, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு பாடினார்கள். டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல்களை, சில பாடகர்கள் இணைந்து பாடியபோது, பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் தடுமாறினார்கள்.

அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த டி.எம்.சவுந்தரராஜன், புதிய பாடகர்களை கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, `அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பி.சுசீலா, `உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்றார். இதனால் சிறிது நேரம் மேடையில் பரபரப்பு நிலவியது.
நன்றி சினிமலர்
 
உண்மைதான்.
ஒருவர் தனக்கு தெரிந்ததை மட்டும் செய்ய வேண்டும். தானும் ஒரு பின்னணி பாடல் ஆசிரியர் என்று மேடையில் தவறாக பாடினால் மனம் வேதனைப்படும் தானே.
நன்றாக ஆவேசப்படுகிறத்திர்க்கு முதலே சுசீலாம்மா இப்படி சொல்லிவிட்டா.
 
என்ன செய்ய... இப்பல்லாம் பாட்டு வரிக்கு முக்கியம் இல்லையே.. இசைக்குதான் முக்கியம் குடுக்கிறாங்க.. அதான் இதுக்கு காரனம்..
 
அந்தக்காலம் போல் இந்தக்காலம் இல்லை..

எந்தக்காலத்திலும் இது இல்லாமல் போகாது..

டி.எம்.எஸ் சிறந்த பாடற் கலைஞர்.

கலைஞர்கள் விரைவாக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள்.
 
அந்த காலத்தை போல இந்த காலத்தில் உள்ள பாடல் வரிகள் இல்லை , அந்த காலத்தில் உள்ள பாடல் வரிகளை இந்த காலத்து இளைஞர்கள் கேட்டால் இந்த சமுதாயம் சீர்குலைந்து சின்னா பின்னமாக போய் இருக்காது இந்த காலத்து வரிகள் அனைத்தும் " கட்டி புடி கட்டி புடிடா " சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் '' ஒல்லிக் குச்சி உடம்புக்காரி ''' இப்படி பட்ட பாடல் வரிகளை மாணவர்கள் படிக்கும் பருவத்தில் கேட்டால் எங்கு உருப்படும் இந்த சமுதாயம் நீங்களே சொல்லுங்கள் முடிவு
 
டி.எம்.ஸ், பி.சுசீலா , கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற கலைஞர்கள் இக்காலத்தில் இல்லை. அக்காலம் திரை இசைப் பாடல்களின் பொற்காலம்.
 
காலத்துக்கு தகுந்தவாறு இரசனை வேறுபடுகின்றது. பாகவதர் கிருஸ்ணா முகுந்தா என்று பாடியதை அந்த நேரத்தில் எல்லோரும் இரசித்திருப்பார்கள். அதற்கு பின் வந்த நம்மில் எத்தனைபேர் அதை இரசித்தோம்? அதுபோலதான் இரசனை மாறுபடுகின்றது. இன்றைய ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் சிலவேளை அடுத்து வரும் காலங்களில் சிறந்ததாக இருக்கலாம்

பழையபாடல்களை சிதைப்பது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று
 
பழமையான பாடல்கள் எல்லாம் தத்துவ பாடல்கள் ,இன்றய பாடல்கள் காமத்தைமட்டும் தான் வைத்து பாடல்கள் எழுதுகிறார்கள்,,,தத்துவங்கழும்,நல்ல ஒழுக்கங்கலும் இப்ப உள்ள பாடல்களில் கிடையாது
 
என்னதான் காலத்துக்கு ஏற்ப வரும் மாறுதல்கள் என்று சொன்னாலும் remix என்ற பெயரில் பல நல்ல பாடல்களை கொலை செய்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு வகையான இசையை ரசிக்கிறார்கள், இருந்தாலும் முடிந்தவரை நல்லதை கெடுக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேணும்
 
பல நல்ல பாடல்களை புதிய மெட்டில் கொலை செய்வது சுலபமாகி விட்டது
 
அவரவர் கருத்து அவரவருக்கும்..

எதுவும் சரியுமில்லை.. எதுவும் தவறுமில்லை.. சரி தவறு நிரந்தரமுமில்லை..
 
Last edited:
பழமையான பாடல்கள் எல்லாம் தத்துவ பாடல்கள் ,இன்றய பாடல்கள் காமத்தைமட்டும் தான் வைத்து பாடல்கள் எழுதுகிறார்கள்,,,தத்துவங்கழும்,நல்ல ஒழுக்கங்கலும் இப்ப உள்ள பாடல்களில் கிடையாது

மன்மதன் அம்பு பாடல்களை கேட்டுப்பாருங்கள் அதில் ஒரு கவிதை கேவலம்
 
நமது வீட்டில் மரக்கன்றை நட்டால் பெரிய மரம் ஆகும் போது,, நம்ம


வீட்டிற்க்கும்,பக்கத்து விட்டிற்க்கும் சண்டை தான் வரும் நண்பரே.......
பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கருத்து கூறுவதை தவிருங்கள்.
 
அவரவர் கருத்து அவரவருக்கும்..

எதுவும் சரியுமில்லை.. எதுவும் தவறுமில்லை.. சரி தவறு நிரந்தரமுமில்லை..

ஆணித்தரமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து.
எந்த விஷயத்திலுமே அவரவருக்கு தனிப்பட்ட ரசனைகள் நிச்சயமாக இருக்கும். பொது இடங்களில் அவைகளை குற்றம் சாட்டும் தோரணயில் கூறாமல் இருப்பதே நல்லது.

டிஎம்.எஸ். பிபிஎஸ் போன்றவர்களில் பாட்டுக்களை மிகவும் ரசித்துக் கேட்பதுண்டு. ஆனால் இன்றைய பாடகர்கள் இசை அமைப்பாளர்கள் தேர்ந்தவர்கள் இல்லை என்னும் கூற்று அவசியமற்றது. அந்தக் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு பாடினோம்.. தற்போது தொழில் நுட்பத்தால் மிகவும் இலகுவாக பாட முடிகிறது என்ற முணு முணுப்பெல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. அந்தக் காலத்தில் 3 அல்லது 4 பிரபல பாடகர்கள்தான் இருந்தார்கள்.. இப்போதோ .. எத்தனை பேர்.. எத்தனை நிகழ்ச்சிகள். படங்கள், ஆல்பங்கள்.. பலரும் மின்னலாய்த் தோன்றி மறைந்துவிடுவதையும் பார்க்கலாம்.

"என் பாடல்கள்" என்று டிஎம்.எஸ். கூறியிருந்தால், அது சற்று கேள்விக்குறியது. பாடல்கள் மெட்டுக்காகத்தான் பெரும்பான்மையாக ரசிக்கப் படுகின்றன. வரிகள், பக்க வாத்தியங்கள், பாடுபவரின் குரல், உணர்வு எல்லாமே மெருகு சேர்த்தாலும், பாடலின் உயிர் நாடி 'ட்யூன்'.
எனவே இசை அமைப்பாளர்தான் பாடலுக்குச் சொந்தம் என்பது எனது கருத்து.

ரீமிக்ஸ் என்பது பல இடங்களிலும் ரசிக்கக் கூடியதாக இல்லை என்றாலும் இது மக்கள் ரசனை சம்பந்தப் பட்ட விஷயம். ரசிக்கக் கூடிய ரசிகர் கூட்டம் இருக்கும் வரையில் இதைத் தவிர்க்க முடியாது. 'தொட்டால் பூ மலரும்..' பாட்டை ஏஆர் ரகுமான், அற்புதமாகவே செய்திருந்தார்.

சில பாட்டுக்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கலாம். அது நமது ரசனையின் கோளாறாகக் கூட இருக்கலாம். நாம் ரசிப்பவற்றை நாம் ரசிப்போம். பிரியம் இல்லாததைக் கேட்காமல் இருக்கத்தான் ரிமோட் கண்ட்ரோல், அல்லது கணினியின் எலி, வானொலியின் அலறலைப் பூட்ட ஒரு ஸ்விட்ச் இருக்கிறதே...!! அதை விட்டு விட்டு நமது இரத்தக் கொதிப்பை எதற்கு அதிகம் ஆக்கிக் கொண்டிருப்பது?
 
என்னுடய திரிக்கு பகிர்ந்தளித்த அனைவருக்கும்
நன்றிகள் ......வாழ்த்துக்கள் ............ பாராட்டுக்கள் :lachen001: :lachen001:
 
டி.எம்.எஸ் பேசியது இருக்கட்டும். என்ன பாட்டுகள் இப்போது? ஒரு மண்ணும் புறியவும் இல்லை, ரசிக்கவும் முடியவில்லை. நல்ல பாட்டுக்களை ரீமிஸ் என்று சொல்லி கேவலப்படுத்தாமல் இருந்தாலே அது அவர்கள் தாய் மொழிக்கு செய்யும் மரியாதை என்று சொல்லலாம்.
 
Back
Top