ஆன்டனி ஜானி
Banned
தமிழ தெரிந்தவர்களை மட்டுமே என்னுடைய படத்தின் நாயகியாக்குவேன் என்று டைரக்டர் பாக்யராஜ் கூறினார். பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சித்து நாயகனாக நடிக்கும் படம் சித்து பிளஸ் 2. படத்தின் நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இந்த படம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் முதல் படம் செய்தபோது பயந்தது இல்லை. ஆனால் இந்த படம் தாமதம் ஆவதால் சற்று பயமாக இருக்கிறது. சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. முன்பு 16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்தானது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன ஒருவர் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது. அது போல்தான் இந்த படத்துக்கும் தாமதம் எற்பட்டது. என கருதுகிறேன். 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் வெற்றி பெறும். என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களை தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.
இவ்வாறு பாக்யராஜ் என்றார்.
********************* நன்றி தினமலர் ***************
நான் முதல் படம் செய்தபோது பயந்தது இல்லை. ஆனால் இந்த படம் தாமதம் ஆவதால் சற்று பயமாக இருக்கிறது. சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. முன்பு 16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்தானது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன ஒருவர் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது. அது போல்தான் இந்த படத்துக்கும் தாமதம் எற்பட்டது. என கருதுகிறேன். 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் வெற்றி பெறும். என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களை தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.
இவ்வாறு பாக்யராஜ் என்றார்.
********************* நன்றி தினமலர் ***************