kathir_tamil
New member
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படு பவர் டான் பிராட்மேன். தற்போது தெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். டெஸ்டில் 50-வது சதத்தை நெருங்குவதால் அவர் பிராட்மேனுக்கு மேலானவராக கருதப்படுகிறார். இன்றைய பிராட்மேன் தெண்டுல்கர் என்று இங்கிலாந்து பத்திரிகை புகழாரம் சூட்டி இருந்தது.
இந்த நிலையில் பிராட்மேனை விட தெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிராட் மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக் கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்தது கிடையாது. அதே நேரத்தில் அவர் தெண்டுல் கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.
பிராட் மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.
அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக் கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.
முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.
நன்றி - மாலை மலர்
இந்த நிலையில் பிராட்மேனை விட தெண்டுல்கர் சிறந்தவர், கிரிக்கெட்டின் எல்லா காலக்கட்டத்திலும் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிராட் மேனை சிறந்த வீரராக மக்கள் நினைக் கிறார்கள். அவரது பேட்டிங்கை நான் பார்த்தது கிடையாது. அதே நேரத்தில் அவர் தெண்டுல் கரை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க முடியாது.
பிராட் மேனை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆயிரக்கணக்கான ரன்களையும், டஜன் கணக்கில் சதங்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில் இன்னும் புதுமுக வீரர் போல் ரன்களை குவிக்க நினைக்கிறார்.
அவரது பேட்டிங்கை பார்க்கும்போது இளைஞர்போல் ஆடுவது தெரிகிறது. பாகிஸ்தான் வீரர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். சரியான காலக் கட்டத்தில் அவர் பிறந்து இருப்பது அதிர்ஷ்டமே.
முதல் தர போட்டியில் 100-க்கும் மேற்பட்ட சதம் அடித்த ஒரே ஆசிய வீரர் என்ற பெருமை எனக்கு உள்ளது. ஆனால் என்னால் 16 ஆண்டுகளில் 78 டெஸ்ட்டே ஆட முடிந்தது. 1970-ல் பிறந்து இருந்தால் மேலும் டெஸ்டில் விளையாடி இருக்கலாம். தவறான காலக்கட்டத்தில் நான் பிறந்ததாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
63 வயதான ஜாகீர்அப்பாஸ் 78 டெஸ்டில் விளையாடி 5062 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடித்துள்ளார். 459 முதல் தரப் போட்டியில் விளையாடி 108 சதம் அடித்துள்ளார்.
நன்றி - மாலை மலர்