எல்லையில் வாசல் குறுகச்சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயமில்லை, நேமியும் சங்கமும் ஏந்தினானே !
சொல்லலாம்போதே உன் நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிகொண்டு என்றும்
அல்லல் படா வன்ணம் காக்கவேண்டும், அரங்கத்து அரவணைப்பள்ளியனே !
பெரியாழ்வார்