" பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை
கற்றார் உனைப் பிரியார் கண்டாய் பராபரமே."
தாயுமானவர்
"உலகத்தவர் பொருளையும் போகத்தையும் விரும்புவது போல, பரம்பொருளே உன்னை நான் விரும்புவேனாக.
அறிவும் அமைதியும் வேண்டுமென்று விழைகின்ற நாம், அதைப் பெறவில்லை என்றால், அதற்குக் காரணம் உண்டு.
நாம் வாக்கால் வேண்டுவது ஒன்று, மனதாலும் காயத்தாலும் வேண்டுவது மற்றொன்று..... இந்த முரண்பாட்டை அகற்றவேண்டும்
நாம் முற்றிலும் பரம்பொருளுக்குச் சொந்தமாகிவிட்டால், பரம்பொருளும் நமக்குச் சொந்தமாகிவிடும்."
சித்பவானந்தர்