சின்னத்திரை வில்லிகளும் சீரழியும் தமிழ் கலாச்சாரமும்

எது எப்படி போனாலும் சீரியல் மட்டும் ஒருநாளைக்கு நிறுத்தினால் பெரிய போராட்டமே வெடிக்கும் என நினைக்கிறேன் :lachen001:

40 வயது ஆண்கள் மற்றும் 75 வயது தாத்தாக்கள் சங்கம் :eek::lachen001::D:mini023:

உங்கள் கவிதை அருமை.
 
40 வயது ஆண்கள் மற்றும் 75 வயது தாத்தாக்கள் சங்கம்

நண்பரே நீங்கள் முதலாவதா? இரண்டாவதா?:lachen001:
 
எல்லா சீரியல்களிலும் ஒரு கொடூரமான வில்லி அதை தான் நமது மக்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்ன செய்ய இந்த மாதிரி சீரியல்களை பார்க்காமல் தவிர்த்தால் தான் சீரியல்களின் மோகம் குறையும்
 
எல்லா சீரியல்களிலும் ஒரு கொடூரமான வில்லி அதை தான் நமது மக்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்ன செய்ய இந்த மாதிரி சீரியல்களை பார்க்காமல் தவிர்த்தால் தான் சீரியல்களின் மோகம் குறையும்
(நான் எழுதிய இன்னொரு கவிதை..)

ஆத்தாளும் மவளும் – இன்னிக்கி எபிசோடு

மவ கல்யாணத்துக்கு மாப்ள தேடுறா ஆத்தா....

‘ஒரு சாதகம் சேந்துருக்குடீ’ ன்னு சொன்னா மவளாண்ட....

பொண்ணு கேட்டா ஆத்தா கிட்ட.... இன்னா கேட்டா?

புருஷன் எப்படின்னா ? இல்லீங்க! ‘ஆத்தா...போற வூட்டுல டீ.வி இருக்குதா? இன்னா டீ.வீ ன்னு?’ கேட்டா.

ஆதங்கப்பட்டா ஆத்தா.......‘அய்யோ கண்ணு….! நீ கல்லாணங்கட்டிகிட்டு பூட்டா

உன் தொணையில்லாம நான் எப்படிடீ ஒண்டியா டீ.வி பாப்பேன்...? ஓரு நா , ரெண்டு நா பாக்காம வுட்ட எபிசோடு கதையை யாரு கிட்டடீ கேப்பேன் ?’
கண்ணக் கசக்குறா ஆத்தா.....

கோவப்பட்டா பொண்ணு, கையில கெடச்சதை தூக்கி எறிஞ்சா ஆத்தா மேல...

பயந்துட்டா ஆத்தா....

‘ஆத்தா? நான் என் புருஷன் வூட்டை பத்தி கேட்டா, நீ ஒங்கொறையச் சொல்றியே? என்னப் பெத்த ஆத்தாவா நீ?’

‘அய்யோ..ஆமாண்டி செல்லம் ...என்னை கட்டையால அடிக்கணுன்டி கண்ணு.... பொறந்த வூட்டுல சொகமா இருந்துட்டேடீ.......நீ இம்மா நாளும்..... ’

பெரீசா அழுவறா ஆத்தா......

‘மொதல்ல ஒரு நல்ல டீ.வீ யும் ‘டாட்டா ஸ்கைய்யி’ கனெக்சணும்...பொறந்த வீட்டு சீரா வாங்கிப் போடறேண்டி...அப்புறம் தேடுறேண்டி கட்டிக்கொடுக்க ஒரு புள்ளையை ஒனக்கு’.

இப்ப மகளும் அழுவறா... (ஆனா...இது ஆனந்தக் கண்ணீர்)

‘ஆத்தா.. என்ன பெத்த ஆத்தா நீயும் வருவியா ஆத்தா சனி, ஞாயிறு எங்கூட சேந்து கட்டி அளுவ.....’?.

‘அய்யோ அதவுடவும் வேற என்னாடி வேலை உன் ஆத்தாவுக்கு வரேண்டி என் சொக்கத் தங்கமே.....’

இருவரும் கட்டிப் பிடிச்சு சிரிக்கிறாங்க....
 
வணக்கம்...
நெடுந்தொடர் பற்றிய இந்த திரியில் என் கருத்தைப் பதிவதில் மிக்க மகிழ்ச்சி!!

சின்னத்திரையின் அருமை பெருமைகளை அறியாதோர் தான் இப்படி 'சின்னத்திரை வில்லிகளும் சீரழியும் தமிழ் கலாச்சாரமும் ' என்று அதனை இழிவுப்படுத்தி எழுத முடியும்!!

சின்னத்திரை நெடுந்தொடர்களால் தமிழ் கூறும் நல்லுலகம் வளம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று தான் கூற முடியும்...

இக்கால நெடுந்தொடர்களுக்கும் சங்க இலக்கியங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்க இலக்கியங்களிலேயே நெடுந்தொடர் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கிறன!!

அகநானூறு
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி எம்போல்

என்று கூறுகிறது!!

ஜி.கே.செஸ்டெர்டோன் (G.K.Chesterton) என்று ஒரு மாமேதை இருந்தார். அவர் வாசிக்கும் பழக்கம் எவ்வளவு நல்லது என்று கூறும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருவன் திடீரென தான் வாசித்துவரும் தொடர்கதையில் கதாநாயகிக்கு அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற நினைப்பு வந்ததும், ‘சரி, அதைப் படித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாமென நினைத்துத் திரும்பிவிடுவான் என்று எழுதுவார்.

நம்ம ஊரு சின்னத்திரை மெகாசீரியல்கள் எடுக்கும் இயக்குனர்கள் இதே போல எத்தனை எத்தனை தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ, யாருக்குத் தெரியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றியும் அவர்கள் எடுக்கும் சீரியல்கள் பற்றியும் மக்கள் நிறைய பேருக்கு கிண்டலும் கேலியும். நியாயப்படி அவர்களை நம் சமுதாயம் தனிப்பட்ட முறையில் கெளரவிக்க வேண்டும்.

இப்படி நெடுந்தொடர் பற்றி ஆன்றோர் சான்றோர் கூறியவற்றை இன்னும் சொல்லலாம்!!

நெடுந்தொடர்களால் ஏற்பட்டுள்ள சில நல்ல விளைவுகளை அனைவரும் அறிந்து கொள்வோம்:

* அளப்பறிய பல நல்ல (??!!) தமிழ் சொற்களை உலகம் அறிந்து கொள்கிறது!
* பிறருடன் பேச்சை வளர்க்க நல்ல தொடக்கம் [நான் ..... சீரியல் விடாம பார்ப்பேன்.. நீங்க?]
* கருத்துபரிமாற்றத் திறனை (Communication Skills) ஐ வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல களமாக செயல் படுகிறது!! [ யார்கிட்ட பேசினாலும், அந்த சீரியல்கள் பற்றி தானே பேச்சு]
* காலந்தவறாமையை மக்களிடத்தில் அதிகரித்துள்ளது [ ஐய்யோ!! இன்னும் பத்து நிமிசத்துல *** சீரியல் போட்டு விடுவானே!!]
* வார நாட்களில் வெளியிட களிப்பாட்டங்களுக்கு விடை கொடுக்கிறது [ஒரு நாள் பார்க்கலைனாலும், கதை (??!!) புரியாதுல!]
* பல முகங்களை அருகாமையில் [ Closeup] காட்டி பூச்சாண்டி பயத்தை ஒழிக்கிறது!!
* ஏறும் விலைவாசியினால், பல வீடுகளில் உணவு சிக்கனம் கடைப்பிடிக்கப் படுகிறது!

முக்கியமாக,
அரசுக்கு நல்ல வருவாயைத் தேடித் தருகிறது!
(குடி போதை அடிமைகளுக்கு - டாஸ்மாக் - மது;
சீரியல் அடிமைகளுக்கு - சீரியல் - மின்சாரம்)

இன்னும் பல...
இனியேனும், சீரியல்களைப் பழிக்காமல், சீரியசாக (:D ) சிந்தியுங்கள்!!

நன்றி: தருமி
 
மொத்ததில் சாவைத் தவிர்ப்பதற்காக அரேபியன் இரவுகள் கதை சொன்ன இளவரசியைப் போல் சின்னத்திரை இருப்பதாக சொல்லுகிறீர்கள்.

இதே சின்னத்திரையில் தான் நாம் மகிழ்ந்த பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் வந்தன. [வேறொருத் திரியில் பதித்து வருகிறேன்..]. இனிமேல் வரவைப்பது நம் கையில் தான் உள்ளது. நாம் இப்போது சிறுபான்மை, இதுவே பெரும்பான்மையாக மாறினால் நாம் விரும்பும் நிகழ்ச்சிகள் தானே வரும்.
 
Last edited:
இதே சின்னத்திரையில், தப்பித் தவறி சில நல்ல நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

பொதிகை அலைவரிசையில், '' கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேனீர் ' என்ற நிகழ்ச்சியில், மனுஷ்யபுத்திரன், இசைக்கவி ரமணன் போன்றோர் கலந்துகொள்ளும் கவியரங்கம் மிகவும் அருமையாக இருக்கிறது.

ரமணன் அவர்கள் நடத்தும் ' சொல், கவனி, விளையாடு ' என்ற நிகழ்ச்சியும் நன்றாகவே உள்ளது.

பரிதாபம் என்னவென்றால், பொதிகை பக்கம் வருவது மிகச்சிலரே....
 
மகிழ்வித்தது சின்னத்திரை என்று சீரழிவுடன் ஒப்பிட்டால் - சீரழிவு தான் அதிகம். ஒண்ணுமில்லை சீரியல்களை ஒழித்தாலே போதும் - அப்புறம் சென்சார் வேணும் அவ்வளவுதான் :redface::frown:
 
சின்னத்திரை வில்லிகளாலேயே பல குடும்பங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் குடும்ப பெண்கள் எல்லாம் இந்த தொ(ல்)லைக் காட்சிகளுக்கு முன் உட்கார்ந்து அவர்கள் செய்யும் அனைத்து வில்லத்தனத்தையும் உடனே செய்து பார்த்து விட துடிக்கிறார்கள்..
 
மக்களுக்கு தங்களின் வரவேற்பு அறையில் வந்து அன்றாக நிகழ்சிகளை சொல்வதேர்கேன்று உருவான தொலை காட்சி இன்று தொல்லை காட்சியாக மாறிப்போனது கொடுமை.. என்ன செய்வது வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆகவேண்டும்..
 
கதை ஆசிரியரின் வக்கிரத்தின் வடிகால் அது எல்லோருக்குள்ளும் சிறிதளவு இருப்பதனால் தான் சீரியல்கள் ஓடுகின்றன
 
வாழ்க்கையின் எதார்த்தத்தை விட்டு விட்டு எங்கோ போய் கொண்டிருக்கிறது தொலைக்காட்சி நாடகங்கள். இதில் வரும் சம்பவங்களை பார்க்கும் பெண்களும் சரி ஆண்களும் சரி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம். நன்றாக போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையில் கூட சின்ன பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக பார்க்கின்ற மனோபாவத்தை தருகின்றது. பெரும்பாலும் குடும்ப உறவுகளில் ஒருவரை ஒருவர் சந்தேகம் படுதல், யாருடைய அதிகாரம் உயர்ந்து இருக்கணும் என்பதில் போட்டி, தேவையில்லாததர்க்கெல்லாம் அழுகை போன்றவையே பிரதானமாய் தொடர் நாடகங்களில் காண்பிக்கப்படுகிறது. இதை பார்கின்ற ஆணோ பெண்ணோ தன்னை சுற்றி நடக்கும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னை சுற்றி உள்ளவர்களை கூட சந்தேக கண் கொண்டு பார்க்கும் ஒரு கேவலமான சூழல் தான் இன்று.
 
செல்லமே தொடரில் வரும் அனைத்து பாத்திரங்களும் டெர்ரர் தான்
 
செல்லமே திசை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது! எப்போதும் போல் திடீர் என்று தொய்வோடு அதை முடித்து விடுவார்கள் என்றே எண்ணுகிறேன்! அது முடியும் அன்று அடுத்த சீரியல் அடுத்த வாரமே ஆரம்பிக்கும் அறிவிப்பும் போடுவார்கள்! பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள் மிக ஆறுதலாக இருக்கின்றன! ஆனால் அவற்றுக்கு நம் நாட்டில் என்ன வரவேற்பு இருக்கிறது?:mini023:
 
மொத்தத்தில் மக்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறைக்கு உபயோகமான எந்த செய்தியும் இல்லை.ஒரே குறிக்கோள் பணம் பண்ணுவது.
 
அத்திப்பூக்கள் என்றொரு சீரியல் ,தமாசாக இருக்கிறது,அந்த சீரியலை முடிக்காமல் இழுக்க வேண்டும் என்று ஏதோ வேண்டுதல் போலிருக்கிறது,அதற்காக முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்க முடியாமல் பாவம் தடுமாறி தடுமாறி அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் திணறி போய் கொண்டிருக்கிறது.என்னுடைய கேள்வி...ஏன் சீரியலின் கதை முடிந்த பிறகும் வம்படியாக இப்படி இழு இழு என்று இழுத்து பார்க்கும் அப்பாவி மக்களை பழி வாங்குகிறார்கள்..இதை எதிர்த்து நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர முடியுமா...?
 
Back
Top