அன்பு நண்பர்களே,
நண்பர் தங்கவேல் அவர்களின் பதிவுகள் ஓரளவுக்கு நுகர்வோர் உரிமையைப் பற்றி எடுத்துக்காட்டுகின்றன. எனக்கும் சில அனுபவங்கள் முன்பு நிகழ்ந்திருக்கின்றன. இப்போதைக்கு நடந்தது இது.
நான் டிஜிட் எனப்படும் கணினி மாத இதழுக்கு சந்தா செலுத்தி இருக்கிறேன். முன்பெல்லாம் பிரச்சினை இன்றி இதழைக் கிடைக்கப்பெற்ற நான் கடந்த சில மாதங்களாக சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டேன். சில முறை நான் பணியில் இருந்த காரணத்தால் என்னாலும் அவர்களை முறையாக கேட்க இயலவில்லை.
இம்மாத இதழ் சிறப்பிதழ் என்பதாகவும் அதனால் தயாரிப்புப் பணிகள் அதிகமானதன் காரணமாக இதழ் அனுப்புவது தாமதமாகும் என முதலில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பின்னர் 12 ஆம் தேதியன்று 8 ஆம் தேதி பொத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பத்து அலுவலக நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும் பொறுமையாக காத்திருந்தேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கப்பெறாததால் காரணம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே தானாக பதில் கிடைக்கபெற்றேன் - விரைவில் எனது குறை நீக்கப்படுமென்று பதிலுடன். அது தானியங்கி சேவையாக இருக்க வேண்டும். சில தினங்கள் கடந்தன. பதில் ஒன்றும் இல்லை.
அவர்க்ளே கொடுத்திருந்த அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். மொத்தம் மூன்று எண்கள்... எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் யாரும் தொலைபேசியையே எடுக்கக் காணோம்!
மீண்டும் மின்னஞ்சல்.. மீண்டும் தொலைபேசி முயற்சி... என அடுத்தடுத்த தினங்களில் பல முறை முயற்சி செய்து பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை; அழைப்பிற்கும் பதில் இல்லை.
பொறுத்த நான் கடைசியாக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்; உடனடியாக எனது பிரச்சினையை தீர்க்கவும், நான்கு தினங்களுக்கு உட்பட பொத்தகத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டேன்.
அடுத்த தினமே மின்னஞ்சலும், அழைப்பும் வந்தன; நான்கு தினங்களுக்குள்ளாக எனக்கு பொத்தகம் கிடைக்குமென்று!! அடுத்த மூன்று தினங்களுக்கு உள்ளாக பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். பார்ப்போம்.
நண்பர் தங்கவேல் அவர்களின் பதிவுகள் ஓரளவுக்கு நுகர்வோர் உரிமையைப் பற்றி எடுத்துக்காட்டுகின்றன. எனக்கும் சில அனுபவங்கள் முன்பு நிகழ்ந்திருக்கின்றன. இப்போதைக்கு நடந்தது இது.
நான் டிஜிட் எனப்படும் கணினி மாத இதழுக்கு சந்தா செலுத்தி இருக்கிறேன். முன்பெல்லாம் பிரச்சினை இன்றி இதழைக் கிடைக்கப்பெற்ற நான் கடந்த சில மாதங்களாக சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டேன். சில முறை நான் பணியில் இருந்த காரணத்தால் என்னாலும் அவர்களை முறையாக கேட்க இயலவில்லை.
இம்மாத இதழ் சிறப்பிதழ் என்பதாகவும் அதனால் தயாரிப்புப் பணிகள் அதிகமானதன் காரணமாக இதழ் அனுப்புவது தாமதமாகும் என முதலில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பின்னர் 12 ஆம் தேதியன்று 8 ஆம் தேதி பொத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் பத்து அலுவலக நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும் பொறுமையாக காத்திருந்தேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொத்தகம் எனக்கு கிடைக்கப்பெறாததால் காரணம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே தானாக பதில் கிடைக்கபெற்றேன் - விரைவில் எனது குறை நீக்கப்படுமென்று பதிலுடன். அது தானியங்கி சேவையாக இருக்க வேண்டும். சில தினங்கள் கடந்தன. பதில் ஒன்றும் இல்லை.
அவர்க்ளே கொடுத்திருந்த அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். மொத்தம் மூன்று எண்கள்... எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் யாரும் தொலைபேசியையே எடுக்கக் காணோம்!
மீண்டும் மின்னஞ்சல்.. மீண்டும் தொலைபேசி முயற்சி... என அடுத்தடுத்த தினங்களில் பல முறை முயற்சி செய்து பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை; அழைப்பிற்கும் பதில் இல்லை.
பொறுத்த நான் கடைசியாக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்; உடனடியாக எனது பிரச்சினையை தீர்க்கவும், நான்கு தினங்களுக்கு உட்பட பொத்தகத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டேன்.
அடுத்த தினமே மின்னஞ்சலும், அழைப்பும் வந்தன; நான்கு தினங்களுக்குள்ளாக எனக்கு பொத்தகம் கிடைக்குமென்று!! அடுத்த மூன்று தினங்களுக்கு உள்ளாக பொத்தகம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். பார்ப்போம்.