இறைநேசன்
New member
அவ்வையார் பற்றி அனைவரும் அறிவோம் அவர் இந்து சாமிகளுடன் நேரடியாக பேசியதாக புராண கதைகள் கூறுகின்றன. மேலும் அவ்வையார் என்றொருவர் இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய ஆத்திசூடி இன்றும் ஆதாரமாக இருக்கிறது. அதுபோல் சரித்திரத்தில் உள்ள பல மன்னர்கள்கூட புராண கதையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்
மேலும் புராணங்களை ஆராய்ந்த போது அதில் பல கருத்துக்கள் நடைமுறை வாழ்வோடு ஒத்து வருவதை அறியமுடிந்தது மகாபாரதத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் அப்படியே உண்மை தன்மை வாய்ந்தவையாக இருப்பதை அறியமுடிகிறது. இதன் அடிப்படையில் நான் இந்து புராணங்கள் எல்லாம் உண்மை என்று நம்புகிறேன்
ஆனால் அனேக இந்து நண்பர்களே புராணங்களை வெறும் கதைகள் என்று கூறி அதை நம்ப மறுக்கின்றனர்.
"தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு;தீக்கிடங்கை;
தேடாதே தெரியச் சொன்னேன்
பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும்
பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள்
நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த
நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்;
ஒருவர் அருள் பூசை செய்து
உத்தமனே கண்ணீரால் கழுவுவாயே;"
- அகத்தியர் 27வது பாடல்
மேலே சொல்லப்பட்ட அகத்தியர் பாடல் இந்து புராணம் பிராமணர் பிழைப்பதற்காக சொல்லப்பட்ட கட்டு கதைகள் என்று சொல்கிறது இதை என்னால் நம்பவும் முடியவில்லை அதே நேரத்தில் அகத்திய முனிவர் ஒரு உயர்ந்தவர் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை
இந்நிலையில் இந்து புராணங்கள் உண்மையா? அறிந்தவர் சற்று விளக்கலாமே!
மேலும் புராணங்களை ஆராய்ந்த போது அதில் பல கருத்துக்கள் நடைமுறை வாழ்வோடு ஒத்து வருவதை அறியமுடிந்தது மகாபாரதத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் அப்படியே உண்மை தன்மை வாய்ந்தவையாக இருப்பதை அறியமுடிகிறது. இதன் அடிப்படையில் நான் இந்து புராணங்கள் எல்லாம் உண்மை என்று நம்புகிறேன்
ஆனால் அனேக இந்து நண்பர்களே புராணங்களை வெறும் கதைகள் என்று கூறி அதை நம்ப மறுக்கின்றனர்.
"தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு;தீக்கிடங்கை;
தேடாதே தெரியச் சொன்னேன்
பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும்
பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள்
நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த
நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்;
ஒருவர் அருள் பூசை செய்து
உத்தமனே கண்ணீரால் கழுவுவாயே;"
- அகத்தியர் 27வது பாடல்
மேலே சொல்லப்பட்ட அகத்தியர் பாடல் இந்து புராணம் பிராமணர் பிழைப்பதற்காக சொல்லப்பட்ட கட்டு கதைகள் என்று சொல்கிறது இதை என்னால் நம்பவும் முடியவில்லை அதே நேரத்தில் அகத்திய முனிவர் ஒரு உயர்ந்தவர் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை
இந்நிலையில் இந்து புராணங்கள் உண்மையா? அறிந்தவர் சற்று விளக்கலாமே!