கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

250 கோடி பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகி மூன்று நாட்கள் ஆகிடுச்சே... விக்னேஷ் என்ன பண்றாரு?:redface:;):confused:
 
ரொம்பவும் மெனக்கெட்டு பல விஷயங்களை சேகரித்து எழுதுகிறீர்கள். மிகவும் சுவாரசியமாய் செல்லும் கதையின் அடுத்தடுத்த பாகங்களைப் படிக்கும் ஆவல் கூடுவதை தவிர்க்க முடியவில்லை கலை. தொடருங்கள்....தொடர்கிறேன்.
 
தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன். விரைவில் தினம் ஒரு அத்தியாயமாக பதிந்துவிடுகிறேன்.!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 10

ன்னும் 250 கோடி கணக்கிலிருந்து ஸ்வாஹா ஆனதைக்கேட்டு விக்னேஷ் அதிக வியப்படையவில்லை. மாணிக்கம் தான் தன் குடியே மூழ்கினதைப்போல தலைகவிழ்ந்து கிடந்தான்.

‘’ என்ன மாணிக்கம் சார்...? நீங்க இன்னும் உங்க அக்கவுண்ட்டை லாக் செய்யலையா.? அல்லது பாஸ்வேர்டை மாத்தலையா..? சேகர் சுப்ரமணியம்னு எனக்கு தெரிந்த பேங்கர் எனக்கு சொல்லி இருக்கார். மாதம் ஒருமுறை கணக்கை மாற்றி லாகின் மற்றும் ட்ரான்சாக்சன் பாஸ்வேர்டை மாற்றனும் அடிக்கடி சொல்லுவார். நீங்க ஏன் அதை செய்யலை...? ‘’ - விக்ரம் அமைதியாகக் கேட்டான்.

‘’ முயற்சி செய்தோமுங்க... ஐபி லாக் செய்யப்பட்டு இருக்கு. அக்செஸ் மட்டும் ஆகுது. ஆனா பாஸ்வேர்ட் சேஞ்ச் ஆப்ஷன் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கு. நாங்க எவ்வளவு முயற்சி செய்தும் எங்க இன்னொரு பிரைமரி அக்கவுண்ட்டுக்கு இந்த அமௌண்ட்டை ட்ரான்ஃபர் செய்ய முடியவே இல்லை. ப்யூர் ஹாக்கிங் இது. ‘’ - மாணிக்கம் சோர்ந்த முகத்துடன் நிராசையுடன் சொன்னான்.

‘’ என்னது ..? பிரைமரி அக்கவுண்ட்டா...? அது என்ன ...? விளக்கமா சொல்லுங்க... ‘’ - முதன்முறையாக தனது சிமிழ் போன்ற சிவந்த உதடுகளைத் திறந்து வசந்தி கேட்டாள்.

மாணிக்கம் வசந்தியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னான்.

‘’ பொதுவா ஸ்விஸ்ல மொத்தம் 400 க்கும் மேல வங்கிகள் இருந்தாலும் ஒரு சில வங்கிகள் தான் மிகப்பெரியவை. உதாரணத்துக்கு யூபிஎஸ் ( யூனியன் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாண்ட் ) மற்றும் சி பி எஸ் (கிரெடிட் ஸ்யூஸ்ஸெ க்ரூப்) இந்த ரெண்டு வங்கிதான் மிகப்பெரியது. பொதுவா இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டர்வேர்ல்ட் டான்கள் அனைவரும் இந்த இரண்டில் தான் பெரும்பாலும் தங்கள் கணக்கை வைத்து இருப்பாங்க.நம்பர்ட் அக்கவுண்ட் அப்படின்னு சொல்லுவாங்க.. அக்செஸ் நம்பருக்கு அவங்க ஒரு கிலோ சுத்த தங்கத்திலானான அக்செஸ் கீ தருவாங்க.. அப்படி ஓபன் செய்பவங்க பிரைமரி மற்றும் சப் அக்கவுண்ட் வைச்சுக்கலாம். எப்போது வேணும்னாலும் தங்கள் கணக்கில் தொகையை மாற்றிக் கொள்ளலாம். பாதுகாப்பு கருதி இந்த வசதி தந்து இருக்காங்க. ‘’ - மாணிக்கம் கொஞ்சம் நிறுத்திவிட்டு தன் பர்சில் வைத்திருந்த சிறிய புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.

swiss-bank-account-8.jpg


அதைக்கண்டதும் வசந்தியின் முகம் வியப்பால் மலர்ந்து இன்னும் அழகு பெற்றது.

விக்னேஷ் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் மாணிக்கத்திடம் கொடுத்தான்..

‘’ இன்னைக்கு காலை அமைச்சர் அந்த ட்ரான்சாக்சனைக் கண்டு பிடிச்சதும் என்னிடம் அழைத்துக் காட்டியதும் நாங்க முதலில் செய்ய முயன்றது அக்கவுண்ட் லாக் தான். ஆனா அதை லாக் செய்ய முடியாதபடியும் பாஸ்வேர்ட் மாற்றும் வாய்ப்பில்லாத படியும் முடக்கப்பட்டு இருக்கு. ஆனா ஆச்சரியம் என்ன என்றால் அக்சேஸ் கோட் மற்றும் பாதுப்பாப்பு சமாச்சாரங்கள் எல்லாமே மாற்றப்படவே இல்லை.இதனால் ரெண்டு பிரச்சினை எழும்..’’ - என்று கூறிவிட்டு விக்னேஷின் முகத்தைப் பார்த்தான் மாணிக்கம்.

மேல சொல்லுங்க என்று சைகையால் காட்டிய விக்னேஷ் லேசாக கண்களை இடுக்கிக்கொண்டு யோசித்தான். அவன் அப்படி அரைக்கண் மூடினால் பிறருக்கு தூங்குவது போல் தோன்றினாலும் அதன் உண்மையான பொருள் வசந்தி மட்டுமே அறிவாள். தீவிரமாக சிந்திக்கும் போது விக்னேஷின் கண்கள் இடுங்கி அரைத்தூக்கம் போல் தென்படும்.

இதை எல்லாம் அறியாத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ முதல் பிரச்சினை என்ன என்றால் பாஸ்வேர்ட் மாற்றும் போது சிறிய தவறுகள் கூட கணக்கை முடக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதனால் இதைக் கையாள்பவன் மாற்றாமல் இருக்கிறான். அதே சமயம் நாங்க மாத்திடுவோம்னு நினைச்சு அந்த ஆப்ஷனை டிசேபிள் செய்து இருக்கான். இதை முதல் அக்செஸ் போது செய்து இருக்கிறான். அதனால் எங்களால் அதை மீண்டும் எனேபிள் செய்ய முடியவில்லை.

இரண்டாவது பிரச்சினை என்ன என்றால் கணக்கின் பாஸ்வேர்ட் மாற்றாமல் நாங்கள் பேங்குக்கு புகார் செய்தாலும் அதை வங்கி ஏற்காது. ஏன்னா எங்களுக்கு முதல் இன்ஸ்ட்ரக்*ஷன் என்னன்னா எந்த நெருக்கடியிலும் அக்செஸ் கோடை மாற்றிவிடனும் என்பது தான். அது செய்யாமல் இழப்பிற்கு வங்கியின் உதவி நாடினால் பயன் எதுவும் இல்லை.

இதை எல்லாம் நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கும் கில்லாடி தான் இதை செய்கிறான்.’’ - என்று முடித்தான் மாணிக்கம்.

‘’ செய்கிறாள் என்று கூட எடுக்கலாம் இல்லையா ‘’ - புன்னகைத்தான் விக்னேஷ்.

‘’ என்ன சொல்றீங்க விக்னேஷ்..? ‘’ - பீதியில் முகம் வெளுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ பயப்படாதீங்க .. பாசிபிளிட்டியைச் சொன்னேன் ’’ - ஆசுவாசம் அளித்தான் விக்னேஷ்.

‘’ இனி என்ன செய்யலாம் விக்னேஷ்... நீங்க தான் இதை எபப்டியாவது சால்வ் செய்யனும்... ‘’ - எழுந்து கெஞ்சாத குறையாக விக்னேஷின் கைகளைப் பிடித்து வேண்டுகோள் விடுத்தான் மாணிக்கம்.

’’ மாணிக்கம் ஒரு விஷயம் கவனிச்சீங்களா...? இந்த வேலை செய்பவன் நிதானமாக ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டுக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறான். ஆனால் எல்லா பணமும் ஒரு கணக்குக்கு போகாமல் வெவ்வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றுவது ஏன்..? அப்படியானால் அவனுக்கு எத்தனை நாட்டில் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்..? இது ஒரு வேளை தீவிர வாதிகள் வேலையாகக் கூட இருக்கலாம். ஒரு மிகப்பெரிய கும்பலின் வேலையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மேலும் உங்க ஒருத்தர் கணக்கிலிருந்து தான் எடுக்கிறான் என்றும் நிச்சயமாகக் கூற முடியாது....ம்ம்ம்... நான் சில வேலைகளை முடித்து இன்று மாலை 6 மணி சுமாருக்கு அமைச்சர் வீட்டுக்கு வரேன். எனக்கு அந்த லேப்டாப்பைப் பார்க்கனும்.சில விவரங்கள் சேகரிக்கனும்.. அதுக்கும் முன் நீலமேகம் முகவரி கொடுத்துட்டு போங்க நான் உங்களை சந்திச்சதும் இன்றிரவே நீலமேகம் ஊரான கும்பகோணம் போகிறேன்.’’ - சந்திப்பு முடிந்தது என்று சொன்னது போல எழுந்தான் விக்னேஷ்.

’’ அதுக்குள் இன்னொரு முறை பணம் எடுத்தான்னா...? - மாணிக்கத்தின் நியாயமான கவலை ( சுப்ரமணியம் சேகரின் கவலையும் கூடத்தான் . ) அவனைப் படர்ந்தது

‘’ பயப்படாதீங்க... 24 மணி நேரத்துல ஸ்விஸ் பேங்குல இருந்து இரண்டு ட்ரான்சாக்*ஷனுக்கு மேல் செய்ய இயலாது. சிறப்பு அனுமதி பெற்றுஇருந்தால் ஒழிய.. இது உங்களுக்கு தெரியாதா ...? ‘’ - விக்னேஷ் கேள்விக்குறியுடன் மாணிக்கத்தைப் பார்த்தான்.

‘’ தெரியும் விக்னேஷ்... ஆனா... ஐயாக்கு அந்த அனுமதி உண்டு .. ‘’ - கவலையில் அவன் முகம் பொலிவிழந்தது.

’’அப்படின்னா இறைவனை வேண்டிக்கோங்க... நான் மந்திரவாதி இல்லை. குறைந்த பட்சம் எனக்கு 24 மணி நேரம் அவசியம் ..'' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு ..வசந்தியிடம் ‘’’ வசந்தி லேப்டாப்பை ஆன் செய்து வை. இதோ வரேன் என்று கூறிவிட்டு வெளியில் வந்து மாணிக்கம் சென்ற காரின் வழியை கவனித்தான். அவன் முகம் சந்தேகத்தால் இறுகியது.

துடிப்புகள் தொடரும்..!
 
கொஞ்சம் தான் படித்தேன் இன்னும் நிறைய படிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது தொடர்வேன். விறுவிறுப்பாக உள்ளது. நன்றி கலைவேந்தன் அவர்களே.:)
 
அப்பாடி கதை பின்னும் விறுவிறுப்போடு டாப் கியரில் பயணிக்குது. கலக்குங்க... வேகமா போங்க
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 11

மாணிக்கம் வெளியில் சென்றதும் விரைந்து அவனைப் பின் தொடர்ந்து சென்ற விக்னேஷ் அவன் காரில் ஏறும்முன் வெளியில் காத்துக்கொண்டு இருந்த ஒரு பெண்ணும் காரில் ஏறியதைப் பார்த்தான். அவன் மனதில் பல வித யோசனைகள் தோன்றின.

சொன்னதை உடனே செய்யும் பணிவுமிக்க சகதர்மிணியைப் போல இவன் கேட்டதும் லேப்டாப்பை ஆன் செய்து இணையத்தையும் இணைத்து அவன் முன் மேஜைமீது வைத்தாள் வசந்தி.

தனது சேரில் அமர்ந்து கொண்ட விக்னேஷ் வசந்தியையும் பக்கத்தில் இருந்த இன்னொரு சேரில் அருகில் அமர்த்திக்கொண்டான்.

‘’ வசந்தி.. நீ ஒரு வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டால் என்ன விதமாக பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வாய்.? ‘’ - தொடர்பில்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு கண்களை அகல விரித்து குழ்ந்தைத் தனமாகச் சிரித்தாள்.

‘’ ம்ம்ம்... எனக்கு பிடிச்ச ஜாஸ்மின் பூவை பாஸ்வேர்டாக வைப்பேன். .’’ - இனிய குரலில் பதிலளித்தாள்.

‘’ சரி ... ஒரு ஆளின் பெயரை பாஸ்வேர்டாக வைக்கனும் என்றால் என்ன பெயர் வைப்பாய்..? ’’- குறும்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ விக்னேஷ் மை டியர் அல்லது மை டியர் விக்னேஷ் என்று வைப்பேன். ‘’ - தயக்கமின்றி பதில் வந்தது வசந்தியிடம்.

விக்னேஷின் கவனம் அவள் சொன்னதில் லேசாக அசைந்தாலும் அவன் கண்கள் லேசாக இடுங்கி மங்கியது.

சட்டென ‘’ வசந்தி... நீ உடனே எனக்கு ஒரு தகவல் விசாரிச்சு சொல்லனும். செய்வியா ?‘’ - என்று கேட்டான்.

‘’ சொல்லுங்க விக்னேஷ்.. ‘’ - விக்னேஷ் எது செய்யப்பணித்தாலும் புன்முறுவலுடன் உடனே மகிழ்ச்சியுடன் செய்வது வசந்தியின் சுபாவம்.

‘’ அமைச்சர் ஆறுமுகம் மற்றும் மாணிக்கத்துக்கு தம் மனைவியர் தவிர வேற பெண் தொடர்பு இருப்பதா கேள்விப்பட்டு இருக்கேன். அவங்க யாரு என்ன விவரம்னு தெரியனும்.’’ - விக்னேஷ் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இதைச் சொன்னான்.

'' இப்படி ஒருவேலை தரேன்னு நீ ஒன்னும்நினைக்கலையே வசந்தி..? ‘’ - மனதில் வேதனயுடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ இல்லை விக்னேஷ்.இதுவும் நம் தொழிலுக்கு மிக அவசியமான வேலைன்னு தெரியுமே... மேலும் நீங்க சொல்லி எதையாவது தட்டியதுண்டா நான்..? ‘’ - வசந்தியின் அழகான கண்களைச் சந்திக்க திடமின்றி தலைகுனிந்தான் விக்னேஷ்.

.வசந்திக்கு் விவரம் சொல்லி சேகரிக்க வேண்டிய செய்திகளைப் பற்றி விவரித்துக்கூறி அனுப்பியபின் ஸ்விஸ்வங்கியின் அடிப்படை விடயங்களைக் குறித்து சில குறிப்புகள் தேடி எடுத்துக் கொண்டான். மாலை ஐந்து மணி ஆன பின் பக்கத்து நாயர் கடையில் இருந்து வந்த டீயைக் குடித்துவிட்டு தன் டி வி எஸ் ஸ்டார் சிட்டியை எடுத்துக் கொண்டு மந்திரியின் வீட்டுக்கு போனான்.

மந்திரியின் பங்களா ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சற்றும் குறையவில்லை. மிக உயரமான அழகிய பி ஓ பி கூரையும் அதில் விலை உயர்ந்த சாண்டிலியர்களும் உயர்தர தேக்கிலான தளவாடப் பொருட்களும் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய கூடமும் அதன் நடுவில் அழகான மாடிப்படிகளும் கண்களைக் கவர்ந்தன.

உயர் தர திரைச்சீலைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் சுவர்ச்சித்திரங்களும் ஆறுமுகம் எப்படிப்பட்டவராயிருப்பினும் கலை நுணுக்கம் அறிந்தவர் என்பதைக் காட்டிக்கொண்டு இருந்தன.

விக்னேஷ் வருவது முன்பே அறிந்திருந்த செய்தி என்பதால் அவனை அழைத்து அமரச்செய்து உயர்ந்தவகை குளிர் பானமும் அளிக்கப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டான். ’’ ஐயா பூஜையில் இருக்காரு.. பத்து நிமிடத்தில் வந்துடுவாரு. மாணிக்கம் ஐயாவும் இப்ப வந்துடுவாங்க ’’ - என்று சொல்லிவிட்டு பவ்யமாக ஒதுங்கினர் பணியாட்கள்.

மாணிக்கம் வெளியிலிருந்து வரவும் ஆறுமுகம் மாடிப்படியில் இறங்கி வரவும் மிகச்சரியாக இருந்ததைப் பார்த்த விக்னேஷ் இது அதிசயப்புரிதலா இல்லை ஒருவருக்கொருவர் தகவல் தொடர்பின் விளைவா என்று வியந்தபோது அவனை மேலே தனது பிரைவேட் ஹாலுக்கு அழைத்துச்சென்றார் ஆறுமுகம்.பணியாட்களுக்கு சில சைககளைச் செய்துவிட்டு மாணிக்கமும் அவர்களுடன் மேலே விரைந்தான்.

அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் லேப்டாப்பில் தாம் கண்ட விஷயங்களை விவரித்தார்.

இரண்டு பணமாற்றமும் செய்யப்பட்ட சிங்கப்பூர் வங்கி மற்றும் லண்டன் வங்கி விவரங்களையும் விக்னேஷ் குறிப்பெடுத்துக்கொண்டான்.

திடீரென்று விக்னேஷ் கேட்ட கேள்வி இருவரையும் திடுக்கிட வைத்தது.


துடிப்புகள் தொடரும்..!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி * 12.

விக்னேஷ் அப்படி ஒரு கேள்வி கேட்பானென்று எதிர்பார்க்கவில்லை இருவரும்.

இத்தனைக்கும் அமைதியாகத்தான் விக்னேஷ் கேட்டான், ‘’ உங்களுக்கு ஏதாவது ஆனால் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் எல்லாப் பணமும் யாருக்குச் சேரும்..? ‘’ - விக்னேஷ் கேட்டது மிகப்பெரிய சிக்கலான கேள்வி.

இருவருமே தமது பணத்திற்கு மிகத்தெளிவாக வாரிசுகளை அறிவித்து இருந்தார்கள். தமது அதிகாரப் பூர்வமான மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் பெரும் பங்கையும் அதாவது எழுபத்தைந்து சதவீதமும் ரகசிய உறவுகளுக்கு இருபத்தைந்து சதவீதமும் தெளிவாக வாரிசுரிமைப் பத்திரம் எழுதி வங்கிகளுக்கு அளித்திருந்தனர். இதை எப்படி விக்னேஷுக்கு தெரிவிப்பது..? பின்னாளில் சிக்கல் ஏற்பட ஏதுவாகிவிடுமே என்ற கவலை அவர்களை சிந்திக்க வைத்தது.

மாணிக்கம் தான் அதிர்ச்சியிலிருந்து தெளிந்தான்.

‘’ பொதுவாக வங்கிகளுக்குரிய வாரிசுமைப் பங்கீடுகள் ஸ்விஸ் வங்கிகளுக்கும் உண்டு. அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். கணக்காளர்கள் தங்கள் வாரிசுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கும் பட்சத்தில் வங்கியே உரியவர்களுக்கு பிரித்து வழங்கிவிடும்.இதில் சிறப்பு என்ன என்றால் எத்தனை இருந்தது யாருக்கு என்ன பங்கு என்பதை விரிவாக அனைவருக்கும் அறிவிக்காமல் பொது வக்கீல் முன்னிலையில் அவரவர்களுக்குச் சேரவேண்டிய தொகையை மட்டும் அறிவித்து வழங்கிவிடும். இதற்கென தனிக் கட்டணம் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.’’ - மாணிக்கம் விவரித்தான்.

‘’ ஒரு வேளை உங்களுக்கு எதுவும் ஆனது வங்கிகளுக்கு தெரியாமல் போய்விடும் நிலையில்.. என்னவாகும்..? வாரிசுகளுக்கும் உங்கள் பங்கீடு பற்றிய தெளிவு இல்லாதிருக்கும் பட்சத்தில்..’’ - என்று இழுத்தான் விக்னேஷ்.

‘’ உண்மைதான். வாரிசுகள் யாரென்பது வங்கிகளின் ஊழியர்களுக்கு அறியப்படாமல் இருக்கும். கணக்காளர் இறந்த செய்தி உரிய முறையில் அவர்களுக்கு அறிவிக்கப்படவேண்டும். இதற்காக வருடம் ஒருமுறை உயிருடன் இருப்பதாகப் பிரமாணம் ஒன்றை கணக்காளர்கள் அளிக்க வேண்டும். அவ்வாறு பிரமாணம் கிடைக்காத சூழலில் பத்து வருடங்கள் கழிந்தபின் கணக்காளர் இறந்ததாகக் கருதி வாரிசு உயிலைப்பிரித்து யாருக்குச் சேரவேண்டுமோ அவரவருக்குப் பங்கிட்டு அளிக்கப்படும். ஒரு வேளை வாரிசு தெரிவிக்கப்படாமல் மறைந்துவிடும் கணக்காளர்களின் கணக்குகளை பத்து வருடங்கள் வரை உரியவர் க்ளெய்ம் செய்யாத நிலையில் அவை டார்மெண்ட் அக்கவுண்ட்ஸ் (Dormant accounts ) * எனப்படும் தர்மக்கணககாக மாறி வங்கிகளுக்கே உரிமையாகிவிடும். ’’ - மாணிக்கம் விவரமாகக் கூறினான்.

’’ அப்படியா ... ? ‘’ - என்று வியந்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம். இது போன்ற டார்மெண்ட் கணக்குகளின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் குவிந்துகிடக்கும் அனாமதேயச் சொத்துகள் பல ஆயிரம் ட்ரில்லியன்களைத் தொடும். இந்தியாவில் இருந்து மட்டும் இது போன்ற தொகை ஐம்பதினாயிரம் கோடிகளுக்கும் மேல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ‘’ - மாணிக்கத்தின் இந்த வார்த்தைகள் விக்னேஷின் மனதை வேதனைப்படுத்தின.

‘’ ஓ இத்தனை சிரமம் இருக்கா இதுல..? இப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்து பணம் சேர்த்து என்ன தான் செய்யப்போறீங்க..? பொசுக்குன்னு நீங்க போயிட்டா எல்லாம் போச்சு தானே..? ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் வேதனை நிறைந்த விரக்தி தெரிந்தது. ‘’ மேலும் இந்தியாவின் ஏழை மக்களின் உழைப்பில் வந்த கோடிக்கணக்கான பணம் இப்படி ஒரு அன்னிய நாட்டில் தர்மக்கணக்காக மாறி கொள்ளை போகவேண்டுமா...? இதுக்கெல்லாம் விடிவே வராதா ? ‘’ - விக்னேஷ் நெகிழ்ந்து போய் குரல் தழுதழுக்கக் கூறினான்.

’’ சரி ஐயா... இன்னைக்கு இரவே நான் கும்பகோணம் புறப்படுகிறேன். நீலமேகம் பற்றி விசாரித்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனக்கு ஃப்ளைட் ஏற்பாடும் செய்து கும்பகோணத்தில் தங்குவதற்கு ஏற்பாடும் செய்துவிடுங்க.. - என்றான் விக்னேஷ்.

‘’ அதெல்லாம் நீங்க சொன்னதுமே மாலையே ஏற்பாடு செய்துட்டேன் விக்னேஷ். இரவு 11 மணிக்கு திருச்சி வரை ஃப்ளைட்டுக்கு ஏற்பாடு செய்துட்டேன். திருச்சி விமான நிலையத்தில் உங்களுக்காக இன்னோவா கார் தயாரா இருக்கு,. சரியா ஆறுமணிக்கு கும்பகோணம் ஹோட்டல் ராயாஸ் ல செக் இன் செய்றீங்க..’’ - விவரங்களை ஒப்புவித்தான் மாணிக்கம்.

விக்னேஷ் நிஜமாகவே மாணிக்கத்தின் ஏற்பாட்டையும் சுறுசுறுப்பையும் கண்டு அதிசயித்தான். ஆறுமுகத்தின் சாய்ஸ் மிகவும் சரிதான் என்று மனதுக்குள் முடிவு செய்துகொண்டான்.

’’ சரி ..இப்ப மணி ஒன்பது ஆகுது. இப்ப புறப்பட்டா சரியா இருக்கும். நீங்க கவலைப்படாதீங்க. அதிக பட்சம் அவன் இன்னொரு ட்ரான்சாக்*ஷன் செய்துகொள்ள முடியும். அதற்குள் பிரச்சினையை சால்வ் செய்துவிடலாம்.நான் புறப்படறேன் ‘’ - விக்னேஷ் விமான நிலையம் செல்லும் வழியில் வசந்தியை தொடர்பு கொண்டான். தான் கும்பகோணம் செல்லும் விவரத்தை அறிவித்துவிட்டு அவள் சேகரித்த விவரத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். இருவரின் அந்தரங்க உறவுப்பெண்கள் கணிணித்துறையில் பூஜ்யம் என்பதை அறிந்து அவர்கள் மேலிருந்த ஐயத்தை நினைவிலிருந்து அழித்தான்.

திட்டமிட்டபடி கும்பகோணம் சென்று ஹோட்டல் ராயாவில் செக் இன் செய்து அலுப்புத் தீர குளித்துவிட்டு அருமையான டீயைக் குடித்துவிட்டு நீலமேகம் வீட்டுக்குச் சென்றான்.

நீலமேகத்தின் மனைவி பார்வதியம்மாளிடம் தான் அவரது க்ளையண்ட் ரங்கசாமியின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது மறைவுக்கு துக்கம் விசாரித்தான் விக்னேஷ்.

தனது தந்தைக்கான சில ஆவணங்கள் நீலமேகம் அறையில் வைத்திருந்ததாகவும் பார்வதியம்மாள் அனுமதித்தால் அந்த டாகுமெண்ட்ஸைத் தேடிக்கொள்வதாகவும் கூறினான்.

பார்வதியம்மாள் நடுங்கியவாறே கேட்டாள், ‘’ நீங்க அமைச்சர் ஆறுமுகம் ஆள் இல்லையே..? ‘’

துடிப்புகள் ... தொடரும்..!


* Dormant accounts
As with anything that's "secret," you have to deal with what happens when one of the few people who know about it die. Accounts whose owners die without having passed on information to others concerning the existence of the account become dormant after a period of time. The account can be passed on to heirs but that becomes difficult if no one knows about it and the bank doesn't know you've died.

Your banker could try to search for you, but that would "spill the beans" so to speak. After 10 years of no contact, however, the bank has a legal obligation to search for you. If they can't find you, or if they learn you have died, they will search for your heirs. If they can't find any heirs, they will report the account to the Swiss banking ombudsman, an official who represents the public by investigating complaints made by individual citizens.

Therefore, it's important to take some measures to make sure your money goes to people you want it to. For example, give the banker another contact person that he can contact if he doesn't hear from you for a specific period of time (that person still doesn't have to know about the account). Or, you could have information about the account stored in a special envelope to only be opened when you die [Source: Swiss-Bank-Accounts.com].
 
சுறுசுறுப்பாய்...விறுவிறுப்பாய்....கலகலப்பாய் போகும் கதைக்கு வாழ்த்துக்கள் கலை...தொடருங்க....அசத்துறீங்க...!!!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 13

பார்வதி அம்மாளின் நடுக்கமான பயந்த கேள்வி விக்னேஷின் மனதை உலுக்கிவிட்டது.

தெரிந்து கொண்ட செய்திகளை விட தெரியாத பல சம்பவங்கள் நீலமேகம் குடும்பத்தை மிகவும் உலுக்கியுள்ளது என்பதை உணர்ந்த விக்னேஷ், ‘’ இல்லை அம்மா.. நான் நீலமேகம் ஐயாவால் பயனடைந்த ஒருவரது மகன். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வந்துஇருக்கிறேன். ‘’ என்றான்.

’’ உள்ளே வாங்க தம்பி..’’ - அன்புடன் அழைத்த பார்வதி அம்மாள் அவனை அமரவைத்து குடிக்க சூடான காபி கொண்டு வந்து தந்தார்.

‘’ சொல்லுங்க தம்பி.. உங்களுக்கு என்ன தெரியனும்..? ‘’ - பார்வதியம்மாளும் இன்னொரு சேரில் உட்கார்ந்து கொண்டு நிதானமாகக்கேட்டார். விக்னேஷின் குற்றமற்ற முகம் அவருக்குள் நம்பிக்கை வளர்த்திருந்தது.

‘’ நீங்க நீலமேகம் ஐயா பத்தி விவரமா சொல்லுங்கம்மா...’’ - கனிவுடன் விசாரித்தான்.

‘’ அவர் ஒரு பத்து வருடம் சிங்கப்பூர்ல இருந்து நிறைய சம்பாதித்து கும்பகோணத்தில் செட்டில் ஆகனும்னு தான் திரும்பி வந்தார் தம்பி.ஆனா இங்கே வந்ததும் அவரைத் தேடி நிறைய பேரு வர ஆரம்பிச்சாங்க.. பெரிய பெரிய கார்ல அரசியல்வாதிங்க அண்டர்வேர்ல்ட் டானுங்க மும்பையில இருந்தும் தேடி வர ஆரம்பிச்சாங்க. நான் ஓரளவு தெரிஞ்சுகிட்டது என்னன்னா அவர்களுக்கும் வெளி நாட்டு வங்கிக்கும் இவர் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார் என்பது தான்.’’ - கொஞ்சம் நிறுத்தினார் பார்வதி அம்மாள்.

‘’ மும்பையில இருந்து என்றால் தமிழர்களா இல்லை வட நாட்டாரா..? ‘’ - விக்ரம் கிடைத்த இடைவெளியில் கேட்டான்.

‘’ எல்லாம் கலந்து இருந்தாங்க தம்பி.. இங்கே வசதிப்பட்டு வரலைன்னு சென்னைக்கு இவரே அடிக்கடி போயிடுவார். அங்க நட்சத்திர ஹோட்டலில் அவருக்கு தங்குறதுக்கு வசதி எல்லாம் செய்து கொடுத்தாங்க.. என்ன வேலையோ தெரியலை தம்பி ... ஆனா அவர் கையில் காசு நிறைய புழங்கிச்சு.. லட்சக்கணக்கில் சில சமயம் கோடிக்கணக்கில் கூட புரண்டுச்சு. அப்போதான் கும்பகோணத்திலயும் திருச்சியிலும் வீடுகள் ஃபார்ம் ஹவுஸ் எல்லாம் வாங்கிப்போட்டார்.’’ - அவரது குரலில் ஏக்கப்பெருமூச்சு காணப்பட்டதை அறிந்து விக்னேஷ் குறுக்கிட்டான், ‘’ ஏன்ம்மா... இப்ப அந்த சொத்துகள் எல்லாம் இல்லையா...? ‘’

‘’ இல்லைப்பா... எல்லாம் இந்த திருமுக அரசாங்கத்துல கேஸ் போட்டு எல்லாம் பறிமுதல் செய்துட்டாங்க.. அப்ப இடிஞ்சு போனவர் தான்.. அப்புறம் எழவே இல்லை.. எழவு தான் இருந்திச்சு..! ‘’ - அவரது குரலில் அளப்பரிய சோகம் இருந்தது.

ஆக இந்த அரசின் திட்டமிட்ட பறிமுதல் அதான் அவை என்பதும், அதற்கு முக்கிய காரணம் ஆற்காடு ஆறுமுகம் போன்றோர் என்பதையும் புரிந்து கொண்டான் விக்னேஷ்.

‘’ இந்த வீடு அப்பறம் என் அக்கவுண்ட்ல அவர் போட்டுவைச்சு இருந்த 25 லட்ச ரூபாய் மட்டும்தான் மிஞ்சிச்சு தம்பி.. அதுல வரும் வட்டியில தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு குழந்தைகளும் இல்லை. என் காலம் வரை வாழ்ந்துட்டு என் வழிபார்த்து போயிடுவேன். ஆனா எங்களை இந்த கதிக்கு ஆளாக்கி என் கணவர் சாவுக்கு காரணமா இருந்தவங்களை கடவுள் தான் தண்டிக்கனும் தம்பி..’’ - முடித்த பார்வதி அம்மாள் தனது கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

‘’ அம்மா , அவர் உபயோகித்த கணிணி மற்றும் அவரது டைரி எதாவது இருக்கா ? ‘’ என்று கேட்டான் விக்னேஷ்.

’’ அவர் போனபின் அவர் அறை எதையும் கலைக்காம அவரது நினைவா வைச்சு இருக்கேன் தம்பி..கொஞ்சமெல்லாம் போலீஸ் அள்ளிக்கிட்டு போச்சு.. மிச்சம் இருப்பதை பூட்டி வைச்சு இருக்கேன் தம்பி ‘’ - என்றவள் எழுந்து அந்த அறையைத் திறந்து விட்டாள்.

அறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஒரு உயர் தர லேப்டாப்பும் நூற்றைம்பது சிடிக்கள் அடங்கிய சிலிண்டர் வடிவ சிடி கேஸும் சில பல காகிதங்கள் மட்டுமே அவரது மேஜை மேல் இருந்தது.

‘’ என்னமோ தெரியாது தம்பி .. இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் மட்டும் போலீஸ் சோதனைககு கண்ல தென்படாம மறைச்சு வைக்கச்சொல்லி என்னிடம் தந்தார். சுவாமிலையில் என் தங்கை வீட்டில் கொஞ்சநாள் மறைச்சு வைச்சு இருந்தேன். அவர் இறக்கும் முன் அந்த லேப்டாப்பில் தான் என்ன என்னமோ டைப் செய்துகிட்டு இருந்தார். அப்படியே இடிஞ்சு போய் சாய்ந்தவர் தான்... மிஞ்சலை தம்பி. ‘’ - அவரது கண்களில் இமாலய சோகம் இருந்தது.

’’அது என்னமோ தம்பி உங்களைப்பாத்தாஎனக்கு ஒரு பிள்ளை இருந்து இருந்தா எப்படி இருப்பானோ அப்படி தோணுது. உன் கிட்ட எல்லாம் சொல்லி அழனும் போல இருந்திச்சு..’’ - கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘’ கண்டிப்பா ... இனி என் வாழ்நாள் முழுக்க உங்க பிள்ளையாவே என்னை நினைச்சுக்கோங்க அம்மா.. எனக்கும் தாயில்லை. உங்கள் மேல் எனக்கும் தாய்ப்பாசம் ஏற்பட்டுடுச்சு.. ‘’ - விக்னேஷின் வார்த்தைகளில் சத்தியம் நிறைந்திருந்தது.

‘’ அம்மா .. நான் இந்த லேப்டாப்பையும் சிடிக்களையும் கொஞ்ச நாள் என்னுடன் வைச்சு இருக்கப்போறேன். ஒரு மாதத்தில் நான் மீண்டும் வந்து எல்லாம் திருப்பித்தரேன். அனுமதிப்பீங்களா..? கண்டிப்பா என் செயல்களால் நீலமேகம் ஐயாவின் ஆதமா சாந்தி அடையும். என்னை நீங்க நம்பித் தரலாம் ..’’ என்று அன்புடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ எடுத்துக்கோங்க தம்பி.. நான் உங்களை நம்பறேன். என் பிள்ளை எனக்கு துரோகம் செய்யமாட்டான் என்னும் நம்பிக்கை இருக்கு..’’ - என்றவள் அவனை லேப்டாப்பை கவனிக்கச்சொல்லிவிட்டு அவசரமாக தோசையும் சட்டினியும் மணக்க மணக்க தயாரிக்கச் சென்று விட்டார் பார்வதி அம்மாள்.

லேப்டாப்பைத் திறந்த விக்னேஷ் அதில் பொதிந்திருந்த சாரங்களை - நீல மேகத்தின் குறிப்புகளை - சுரங்கத்தை - புதையல்களை - இந்தியாவின் தலைவிதியை - ஒவ்வொன்றாய்ப் பார்த்து வியந்தான்.


துடிப்புகள் தொடரும்..!
 
கொல்லத் துடிக்குது மனசு – பகுதி -14

குறைந்த நேரத்தில் பார்வதி அம்மாளுக்கு விக்னேஷை மிகவும் பிடித்ததற்கான காரணம் விக்னேஷுக்குத் தெரியவில்லை.

மனிதமனத்துக்கு ஒரு விசித்திரமான குணமுண்டு. யாரையாவது முதல் முறை பார்த்த பின் சட்டென்று மனதுக்கு மிகவும் பிடித்துவிடும். அதற்குக் காரணம் என்ன என்பதைஉணர முடியாது. அதே சமயம் ஒரு சிலரை முதல் பார்வையிலேயே சுத்தமாகப் பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.

பார்வதி அம்மாளுக்கும் அதே மனநிலைதான் எனினும் அவளின் ஆழ்மனதில் பதிந்து விட்ட இளம்வயது நண்பன் ( இவள் மட்டும் மனதுக்குள் காதலித்திருந்தாள். ) ஒருவனுடைய முகச்சாடையில் விக்னேஷ் இருந்ததால் தானோ என்னவோ அவனிடம் மிகவும் அன்புடன் பேசிப் பரிவுடன் உபசரித்தாள்.

பரபரப்பாய் அவனுக்காக தோசையும் தேங்காய்ச்சட்டினியும் மணம் மிக்க தோசைப்பொடியும் வைத்து அன்புடன் பரிமாறினாள். நீலமேகத்தைப் பற்றி மேலும் பேசிக்கொண்டே விக்னேஷும் தமது சொந்த இல்லத்தில் பழகுவது போலப் பேசிப்பழகினான்.

சிற்றுண்டியை முடித்ததும் ’’ சரிம்மா நான் கிளம்புகிறேன். இனி அடிக்கடி கும்பகோணம் வருவேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று மனதில் எந்த கவலையும் வேண்டாம். நான் இருக்கேன்.’’ என்று கூறிப்புறப்படும் சமயம், ‘’ தம்பி உங்கள் போன் நம்பரும் முகவரியும் குறிச்சுக் கொடுங்க ‘’ என்ற பார்வதி அம்மாள் ஒரு காகிதத்துண்டைஎடுத்து விக்னேஷிடம் நீட்டினாள்.

'என்னிடம் விசிட்டிங் கார்ட் இருக்கும்மா '' -என்றவன் தனது பர்சில் இருந்து கார்டை எடுத்துக் கொடுத்தவன் பார்வதி அம்மாள் நீட்டிய காகிதம் வித்தியாசமாய் இருக்கவே கையில் வாங்கிப் பார்த்தான்.
அது ஒரு கொரியர் கம்பெனியின் மெமோ ரசீது.

ஃப்ளாஷ் ஃபாஸ்ட் கொரியர் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்து இல்லம் தாழிட்டு இருந்ததற்கான நினைவுறுத்தும் காகிதம்.

’’ ஏன்மா..? நாலைந்து மாதம்முன் எதுவும் கொரியர் வந்ததா..? ‘’ – விக்னேஷ் கேட்டான்.

‘’ தெரியாதுப்பா.. நான் மனம் சரியில்லாம அவங்க போயிட்ட வேதனையில என் தங்கை வீட்டுக்கு திருச்சிக்குப்போயிருந்தேன். அங்க ஒரு மாதம் இருந்துட்டு வந்தப்ப. வீட்டுக்குள் இந்த காகிதம் கிடந்தது. கதவு இடுக்கு வழியா போட்டு இருந்தாங்க.’’ – சோகமுடன் பார்வதி அம்மாள் கூறினாள்.

’’ இது கொரியர் டெலிவரிக்கு வந்து வீடு பூட்டி இருந்ததாக ரிமைண்ட் செய்யும் நோட்டீஸ் அம்மா. நீங்க வந்தபின் அந்த கொரியர் பத்தி விசாரிக்கலையா..? ‘’ – எதையோ யோசித்தவாறு விக்னேஷ் கேட்ட கேள்வி பார்வதி அம்மாளுக்கு மீண்டும் தன் கணவன் நினைவைக் கொண்டு வந்து கண்ணீர் திரண்டது.

‘’ ஹூம் .. அவரே போயிட்ட பின் எது பத்தியும் கவலைப்பட என்ன இருக்குப்பா..? ‘’ – என்றவள் அவன் காபி குடித்துவைத்த கப் சாசரைக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.
அந்த கொரியர் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டு இருந்ததைக் கண்டறிந்த விக்னேஷ் அந்த மெமோ காகிதத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

‘’ சரிம்மா நான் புறப்படறேன் ’’ என்று பார்வதி அம்மாளை வணங்கிப் புறப்பட்டவனை பார்வதி அம்மாள் ’’ ஏன்ப்பா லேப்டாப் கொண்டு போவதாக சொன்னாயே ‘’ என்று நினைவு படுத்தினாள்.

‘’ இல்லைம்மா.. தேவையான தகவல்களை நான் சேகரித்துக்கொண்டு விட்டேன். ‘’ என்றவன் தன்னிடமிருந்த பாக்கெட் ஹார்ட் டிஸ்கைக் காட்டினான்.

’’ சரிப்பா அடிக்கடி வந்துபோங்க தம்பி ‘’ என்று விடைகொடுத்தாள் பார்வதி அம்மாள்.

தனது அறைக்கு வந்தவன் தனது லேப்டாப்பில் அனைத்துத் தகவல்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு வசந்தியைத் தொடர்பு கொண்டு தான் அடுத்த நாள் காலை சென்னை வருவதைக் கூறிவிட்டு அவளிடம்சில விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டான்.

தான் மிகவும் எதிர்பாராத பல வியப்பான தகவல்கள் கிடைத்த திருப்தியில் நிம்மதியாக உறங்கிய விக்னேஷ் அதிகாலையில் ஹோட்டலைச் செக் அவுட் செய்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு காலை எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்தான்.

தனது அறைக்குச் சென்று குளித்து ஃப்ரெஷ் ஆகி தனது அலுவலகத்திற்கு வந்தவன் என்றும் இல்லாத பேரழகுடன் புதிய உடையில் நாணமும் புன்முறுவலும் அழகு சேர்க்க வசந்தி இவனை வரவேற்றாள்.

’’என்ன இன்னைக்கு எதுவும் விசேஷமா வசந்தி..? ’’ - அவள் அழகைக் கவனித்தும் கவனியாத பாவனையுடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ இன்னைக்குஎன் பிறந்த நாள்னு தெரியாதா விக்னேஷ் ..? ‘’ - ஏமாற்றம் வசந்தியின் குரலில் தெரிந்தது.

‘’ ஓ ஐயாம் சாரி வசந்தி...மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே .. ‘’ - என்றவன் அவள கன்னத்தைத் தட்டி கண்ணடித்துப் புன்னகைத்தான்.

‘’ அவ்வளவு தானா ...? பரிசெதுவும் இல்லையா ...? ‘’ - வசந்தியின் குரல் சன்னமாக ஒலித்தது.

தான் விரும்பும் ஒருவன் தன் பிறந்த நாளை மறந்து விடும் சோகமும் அறிந்த பின்னும் ஒரு சின்ன மலராவது பரிசாக அளிக்க மறந்தால் பெண்ணின் மனம் எத்தனை வேதனைப்படும் என்பதை நாமும் ஒரு பெண்ணாகப் பிறந்தால் தான் உணரமுடியும்..

ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டாள் வசந்தி.

‘’ அட என் செல்லம் வசந்தி... நான் நினைச்சால் உனககு நாற்பதினாயிரம் கோடி ரூபாய் உன் பிறந்த நாள் பரிசாகத்தரமுடியும் .. தெரியுமா ..? - என்ற விக்னேஷ் அவளைப்பார்த்து மீண்டும் கண் சிமிட்டினான்.

வியப்பால் அதிர்ந்தாள் வசந்தி.

துடிப்புகள் ..தொடரும்..!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 15

‘’ என்ன விக்னேஷ் சொல்லுறீங்க..? நாற்பதினாயிரம் கோடியா..? பயமா இருக்கே... விவரமா சொல்லுங்க விக்னேஷ் ‘’ - படபடப்பு அடங்காமல் விம்மிய மார்புகள் ஏறி இறங்க திகிலுடன் விக்னேஷைப்பார்த்தாள் வசந்தி.

‘’ சொல்றேன்.. சொல்றேன்.. பொறுமையா கேளு..’’ - என்றவன் கும்பகோணம் சென்றது முதல் நடந்தது ஒன்றுவிடாமல் விலாவாரியாகக் கூறினான்.

‘’ வசந்தி, என்னை சென்னை அனுப்பிய மந்திரி அல்லது மாணிக்கம் இரண்டு பேரில் யாரோ ஒருத்தர் என்னை கண்காணிக்க ஆளும் அனுப்பி இருந்தாங்க.. நான் ஹோட்டலில் செக் இன் செய்த நிமிடம் முதல் நான் எங்கே போகிறேன் வருகிறேன் என்பதை எனக்குப் பின்னாலேயே ஒருவன் ஃபாலோ செய்து என்னை கண்காணிச்சான். பார்வதி அம்மாள் வீட்டுக்குப் போகும் போதுகூட தெருமுனையில் இருந்து நோட்டமிட்டான். ஆறுமுகமும் மாணிக்கமும் நம்மை நம்பவில்லை என்பது மட்டும் அல்ல.. என்னிடம் எதையோ மறைக்கவும் செய்கிறார்கள்.. எல்லாத்தையும் கண்டுபிடிக்கனும். சரி வசந்தி வா நாம் இப்ப ஒரு இடத்துக்கு போறோம் ‘’ - என்று கூறிய விக்னேஷ் அவளது பதிலை எதிர்பாராமல் அவளை இழுத்துக்கொண்டு பைக்கைநோக்கி விரைந்தான்.

அந்த நேரம் அவனது செல்போன் ‘’ ஓம் பூர்புவஸ்ய..’’ என்று இனிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்தது.

அடுத்த முனையில் மாணிக்கம்.

‘’ என்ன விகெனேஷ் .. போன காரியம் என்னாச்சு.. எதுனா தகவல் கிடைச்சுதா..? ‘’

‘’ ஓரளவுக்கு ... இல்லை இல்லை... நிறைய தகவல்கிடைச்சு இருக்கு மாணிக்கம் சார்.. ஆனா சிக்கல் இன்னும் விரிவா போகுது.. மந்திரிக்கு மும்பைல தெரிஞ்ச யாரும் இருக்காங்களா ... சொல்லுங்க..’’ - சாவதானமாக கொக்கி போல் கேள்வி போட்டான் விக்னேஷ்.

மறுமுனை கொஞ்சம் மென்று விழுங்கியது விக்னேஷுக்கு புரிய வந்தது. எதையோ சொல்ல தயங்குவது போலவும் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போலவும் குரல் தடுமாறியது.

‘’ நீங்க எப்ப இங்கே வர்றீங்க விக்னேஷ்.. நாம நேர்ல பேசுவோம் சொல்ல விஷயங்கள்நிறைய இருக்கு. போன் ல வேண்டாம்..’’ - ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் மாணிக்கத்தின் பதில் தெரிந்தது.

‘’ சரிங்க மாணிக்கம் .. இப்போ நான் ஒரு வேலையாக போய்க்கிட்டு இருக்கேன்.. மதியம் மூனு மணிக்கு உங்களை வந்து சந்திக்கிறேன்.’’ கூறியதும் போனை அணைத்து பாக்கெட்டில் போட்ட விக்னேஷ் தனது பைக்கை உதைத்துக் கிளப்பினான்.

சுவற்றில் ஒட்டும் பல்லியைப்போல் வசந்தியும் அவனது முதுகை ஒட்டி அமர்ந்து கொண்டாள். இது போன்ற வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை வசந்தி.

விக்னேஷின் பைக் அந்த புறநகரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் உள்ளே நுழைந்தது.

எல்லாமே மூன்று மாடிக்குடியிருப்புகள். உள்ளே சிறிய மார்க்கெட்டும் அதைச்சுற்றிலும் படை சூழ்ந்தது போல வீடுகளும் பார்க்க அழகாக இருந்தன.

மார்க்கெட் இடத்தில் பைக்கை நிறுத்தியவன் தனது பாக்கெட்டிலிருந்த கொரியர் ரிமைண்டர் தாளின் அனுப்புதல் முகவரியில் இருந்த ஃப்ளாஷ் ஃபாஸ்ட் கொரியரின் அந்த சென்னை முகவரியைச் சரிபார்த்துக்கொண்டு நேராக அந்த கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான்.

’’ நீ பைக் கிட்ட நில்லு நான் இப்ப வரேன்..’’ - என்று கூறி விக்னேஷ் அந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்றான். அந்த கடையும் ஒரு குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அமைந்த ஒன்றுதான்.

கடையில் இருந்த பையனிடம் தான் கொண்டு வந்திருந்த மெமோவைக் காட்டினான்.

‘’ இந்த கொரியர் எங்களுக்கு மூனு மாதம் முன்னால வந்தது.அந்த சமயம் எங்க அப்பா நீலமேகம் இறந்து ஒருமாதமாயிருந்ததால எல்லாரும் காசிக்குப் போயிருந்தோம். வீடு பூட்டி இருந்தது. அந்த சமயம் இந்த கொரியர் கையில கிடைக்காம போச்சு.. இப்ப அந்த கொரியர் வாங்கிப்போக வந்தேன்.. இதுக்காகவே கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கேன்.. பார்த்து தேடி கொஞ்சம் எடுத்துத்தரீங்களா ’’ என்று அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு கேட்ட விக்னேஷை ஏற இறங்கப்பார்த்த கடைக்காரப் பையன் கொரியர் பதிவு ரிஜிஸ்தரில் குறிப்பிட்ட மாதத்தில் தேடினான்.

’’ இது ரொம்ப நாள் ஆனதால தேடிக்கண்டு பிடிக்க கஷ்டமா இருக்கும். நீங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன்.. தேடிக்கண்டு பிடிச்சு வைக்கிறேன். ’’ - எந்திரத்தனமான பதில் கடைக்காரப்பையனிடம் இருந்து வந்தது.

‘’ என்ன நீங்க ... நிலைமை புரிஞ்சுக்காம பேசறீங்க..? இதுக்காக கும்பகோணத்துல இருந்து வந்து இருக்கேன். நான் கொரியர் கம்பெனில ஹெல்ப் லைன்ல கேட்டேன்..நீங்க தான் ஏஜண்ட்ன்னும் உங்ககிட்டதான் டாக்கெட் இருக்குன்னும் சொன்னாங்க... நான் வேணும்னா அவங்ககிட்டயே கேட்டுக்கவா மீண்டும்..? ‘’ - மிகச்சரியான அஸ்திரம் எங்கு பாயும் என்பதை உணர்ந்த விக்னேஷ் அந்தப் பையனைக் கூர்ந்து கவனித்தான்.

இவர்களது உரையாடலைக் கண்டுகொண்டிருந்த கடையின் முதலாளி தனது சேரிலிருந்து எழுந்து இவர்களிடம் வந்தார்.

அவரிடம் விவரம் கூறிய விக்னேஷ் ;; நான் வேணும்னா ஒரு மணி நேரம் காத்திருக்கேன். கொஞ்சம் தேடிக்கண்டுபிடிங்க.. இது முக்கியமான டாக்கெட். ப்ளீஸ் ‘’ - என்றான்.

தனது மூக்குக்கண்ணாடியை கீழிறக்கி பதிவு ரிஜிஸ்தரில் தேடிய முதலாளி ‘’ உங்க அப்பா பேரு என்ன சொன்னீங்க..’’ என்று கேட்டார்.

‘’ நீலமேகம்.’’

’’ லிஸ்ட்ல கிடைச்சுடுச்சு..கொஞ்சம் இருங்க .. டாக்கெட் டீட்டெயில் பார்க்கிறேன்.. சதீஷ்.. நீ போய் பின்னாடி கொரியர் ஸ்டோர் பாக்ஸ்ல தேடி டெலிவரி ஆகாத பாக்கெட் இருக்கான்னு தேடிப்பாரு. பேரு நீலமேகம்னு போட்டு இருக்கும்.. ‘’ - விக்னேஷிடமும் பையனிடமும் மாறி மாறிச் சொன்ன முதலாளி ’’ கொஞ்சம் பொறுங்க சார் பையன் கொண்டு வருவான்.. எதுனா ஐடி ப்ரூஃப் வைச்சு இருக்கீங்களா..? ‘’ - முதலாளி அனுசரனையாகப் பேசினார்.

’’ இருக்குங்க..சரிங்க நான் காத்திருக்கேன் ‘’ - என்ற விக்னேஷ் வசந்தியை ஜாடை காட்டி அழைத்தான்.

‘’ கொஞ்ச நேரம் காத்திருக்கனுமாம்.. வா வசந்தி .. எதுனா கோல்ட்ரிங்க் குடிச்சு வரலாம் ’’ என்றவன் கடைக்காரரிடம் ‘’ இங்கே கோல்ட்ரிங் எங்கே கிடைக்கும் ?’’ என்று கேட்டான்.

’’ இதோ கடைக்குப் பின்புறமும் நாலைந்து கடைகள் இருக்கு பாருங்க .. ’’ என்று கூறிவிட்டு முதலாளி அடுத்த கஸ்டமரைக் கவனிக்க விரைந்தார்.

வசந்தியை அழைத்துக்கொண்டு அந்த கடையின் பக்கவாட்டில் சென்று பின்பக்கம் இருந்த கடைகளைப் பார்வையிட்டான்.

மூன்று திசைகளிலும் முகப்பு இருக்கும் படியும் ஒரு பக்கம் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் பார்க்கிங் வசதி இருப்பதையும் நெரிசலான குறுகிய பார்க்கிங் முன்புறம் ஜெராக்ஸ் கடையின் வீண் தளவாடங்கள் இடப்பட்டு இருந்ததையும் விக்னேஷின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

இரண்டு கோல்ட்ட்ரிங்க் சொல்லிவிட்டு அந்த குடியிருப்பைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது பார்க்கிங்கிலிருந்து தனது பைக்கை சிரமத்துடன் வெளியில் எடுக்க முயன்றுகொண்டு இருந்தான் ராகவன்..!


துடிப்புகள் ...தொடரும்..!
 
மிக்க நன்றி சர்சரண்..

தனியா பதிய பயமா இருந்தது. நல்லவேளை துணைக்கு வந்தீங்க.. :lachen001:
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி * 16


” என்னங்க. இன்னும் எவ்வளவு நேரம் சாப்பிடாம காத்திருப்பது..? சாப்பிட்டுட்டு தான் போய் அந்த கம்ப்யூட்டரைக் கட்டி அழுங்களேன்.’’

மங்களத்தின் திடுக்கென்ற இடையூறினால் சற்றே கலவரப்பட்ட ராகவன் , ‘’ மாடே.. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ? திடீர்னு பின்னால வந்து கத்தி பயமுறுத்தாதேன்னு..? உனக்கு பசின்னா நீ போய் சாப்பிட்டு தூங்கு. சின்ன வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன் ‘’ என்று கூறிவிட்டு தன் வேலையில் கவனமாக ஈடுபட்டான் ராகவன்.

இதுக்குமேல் அவனிடமிருந்து ஒற்றை வார்த்தை வராது என்பதை உணர்ந்த மங்களம் அப்படி என்னதான் கம்ப்யூட்டர்ல செய்வாரோ எதும் கேர்ள்ஃப்ரெண்ட் கிடைச்சு இருப்பாளோ..? அவகிட்ட ஓயாம சாட் செய்கிறானோ என்று பெண்களுக்கே உரிய சந்தேகப்புத்தியுடன் நகர்ந்தாள் மங்களம்.

தன் பணியில் ஆழ்ந்திருந்த ராகவன் மிகவும் கவனமாக மாஸ்கிங் இண்டர்னெட் முறையுடன் இந்தியாவில் இருந்து துல்லியமாக இருநூறு இருநூறு கோடிகளாக வெளிநாட்டு வங்கிகளின் தேர்ந்தெடுத்த கணக்குக்கு அனுப்பிக்கொண்டு இருந்தான்.

கோடிங் டிகோடிங் முறைகளில் கைதேர்ந்த ராகவன் ஆ ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக்கணக்கில் இருந்த கொள்ளைப்பணத்தை மிக கவனத்துடன் கையாண்டு கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு முறையின் ட்ரான்சாக்ஷனிலும் கோடிங் மாற்ற மறக்கவில்லை.

அவன் ஏற்றிவைத்த வங்கிக்கணக்குகள் விவரங்களை தனியாக ஒரு ஃபோல்டரில் குறித்துவைத்துக்கொள்ள தவறவில்லை.

1. Oversea-Chinese Banking Corporation அக்கவுண்ட் ( யுனிசெஃப் ) எண் : ***********************************

2. Deutsche Bank அக்கவுண்ட் ( ஈழம் ஃபெடரேஷன் ஆஃப் லண்டன் ) எண் : ****************************************

3.Amana Bank அக்கவுன்ட் ( ஈழமக்கள் மறுவாழ்வு இயக்ககம் ) எண் : *******************************************

4. HDFC THE RAMAKRISHNA MISSION INSTITUTE OF CULTURE ( முதியோர் மறுவாழ்வுத்திட்டம் ) எண் : ********************

WHAT NEXT..?

அவனது குறிப்பேட்டில் அனைத்தையும் குறித்துக்கொண்டே வந்தவன் அடுத்து இணையத்தில் சமூக சேவை நிறுவனங்கள் பற்றிய விவரங்களைத் தேடும் முன் மங்களத்தின் குரல் மீண்டும் ஒலிக்கவே, ’’ இதோ வந்துட்டேன் சாப்பாடு எடுத்துவை.’’ என்றவன் கணிணியை உறக்கநிலையில் வைத்துவிட்டு மனத்திருப்தியுடன் எழுந்தான்.

சாப்பிடுகையில் மங்களம் கூறிய ‘’ என்னங்க பையன் ஸ்கூலில் எக்ஸ்கர்ஷன் போறாங்களாம்..1250 ரூபாய் வேணும்னு கேட்டான்.. ‘’ என்ற வார்த்தைகளுக்கு எந்திரம் போல் பதிலளித்தான் ராகவன்.

‘’ நாளை என் கலீக் யாரிடமாவது கைமாற்று வாங்கித்தரலாம். மாதக்கடைசி இல்லையா மங்களம் ? ‘’


ங்கே மாணிக்கம் விக்னேஷின் போனில் அழுதுகொண்டே சொன்னான்.

‘’ விக்னேஷ் இதுவரைக்கும் 800 கோடிகள் துடைத்தெடுத்தாச்சு.. எதுவும் செய்ய முடியாதா..? ‘’


துடிப்புகள் தொடரும்...
 
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி - 17

கொரியர் ஏஜண்ட்டிடம் எத்தனை போராடியும் விக்னேஷ் அந்த காணாமல் போன கொரியர் டாக்கெட் கிடைக்கப்பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டி வந்தது.

அரைமணி பொறுக்கச்சொன்ன முதலாளி ஒரு மணி ஆகியும் தகவல் கூறவில்லையே என்று விக்னேஷ் அவரை அணுகிக் கேட்டபோது ‘’ சாரி சார். பையன் எவ்வளவோ தேடியும் அந்த டாக்கெட் கிடைக்கலை. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.. எப்படியாச்சும் தேடிக்கண்டுபிடிச்சு ஒப்படைக்கிறேன்..’’ என்று பணிவுடன் தன் இயலாமை வியர்வையாய் வழியக் கூறினார்.

’’ பரவாயில்லை சார்.. எங்கே அந்த டாக்கெட் இருந்தது நான் கொஞ்சம் பார்க்கலாமா ? ‘’

இதோ என்றவர் விக்னேஷை உள்ளே அழைத்தார். வசந்தியை கடை வாசலில் இருக்கச்சொல்லிவிட்டு விக்னேஷ் உள்ளே நுழைந்தான்.

கடையின் பின்புறம் அந்த கட்டிடத்தின் வாகன பார்க்கை நோக்கி திறந்ததால் அங்கே இருந்த தட்டுமுட்டு சாமான்கள் கவனக்குறைவாகவே வைக்கப்பட்டு இருந்தது.

கடையின் உடனடிப் பின்பக்கம் ஏழெட்டு பைக்குகள் பார்க் செய்யப்பட்டு இருந்தன.

கடைக்காரப்பையனை உதவிக்கு அழைத்த விக்னேஷிடம் பையனை ஒப்படைத்துவிட்டு கடையைக் கவனிக்க விரைந்தார் முதலாளி.

‘’ உன் பேர் என்னப்பா..?’’ விக்னேஷ் அவனிடமிருந்து தகவல்களை வரவழைக்கும் நோக்கில் அன்பாகத் தொடங்கினான்.

‘’ மாரிமுத்து சார்..’’

’’அது சரி.. இத்தனை அலட்சியமா எல்லா தளவாடங்களும் போடப்பட்டு இருக்கே ..? திருட்டு போகாதா..? ‘’

’’ இல்ல சார்.எல்லாம் பழைய ஜெராக்ஸ் மெஷின். பொண கனம் கனக்கும். இத்தை எடுத்துக்கினு போய் என்னா செய்யமுடியும்..? ‘’

’’ அது சரி .. டெலிவரி ஆகாத கொரியரை இப்படித்தான் இங்கே குப்பையாக கொட்டிவைப்பீங்களா..? ‘’

‘’ ஐயோ இல்ல சாரே.. தப்பித்தவறி உங்க கொரியர் டாக்கெட் மட்டும் எப்படியோ இங்க விழுந்து இருக்கும் போல.. கிடைச்சுடும் சார்.. நான் தேடித்தரேன்.. ‘’

விக்னேஷ் புன்னகைத்தான்.

‘’ வேண்டாம் மாரிமுத்து. விடுங்க.. சரி இதைச் சொல்லுங்க .. இங்கே நிறுத்தி இருக்கும் பைக்குகள் எல்லாம் தினம் தினம் அதே இடத்தில் நிறுத்துவாங்களா இல்லை மாற்றி மாற்றி நிறுத்துவாங்களா..? ‘’

‘’ இல்ல சார்.. எல்லாருக்கும் தனி இடம் இருக்கு.. மாத்தி நிறுத்த மாட்டாங்க.. ‘’

‘’ ஓ.. உங்க கடையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருக்கே ஒரு டிவிஎஸ்.. அது யாருதுன்னு தெரியுமா..? ‘’

‘’ சரியா தெரியாது சார்.. அனேகமா டாப் ஃப்ளோர்ல இருக்காரு ஒருத்தர். ராகவன்னு பேருன்னு நினைக்கிறேன். ‘’

‘’ ஓ .. என்ன வேலை செய்றார்..? ‘’

‘’ அது தெரியாது சார்.. ஆனா ஸ்கேன் எடுக்க.. சில சமயம் பிரிண்ட் எடுக்க எங்க கடைக்கு வருவார்..லோனுக்கு டாகுமெண்ட் ஜெராக்ஸ் எடுக்க அடிக்கடி வருவாரு.. அப்படிதான் பழக்கம்.. ‘’ - ஏதோ குற்றம் செய்தவனைப்போல் அவன் குரல் சன்னமாக ஒலித்தது.

சன்னமாக சீட்டி அடித்தான் விக்னேஷ்.

’’கமான் அவர் என்ன வேலை செய்றார்னு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கனும். சும்மா சொல்லுப்பா.. உன்னை ஒன்னும் போலீஸ் விசாரணை செய்யலை. பயப்படாதே..’’

‘’ சரி சார்... அது வந்து... அவர் சி ஐ டி எஸ் ல வேலை செய்றார். சாஃப்ட்வேர் எஞ்சினியர். ரொம்ப நல்லவர் சார்..’’ இப்போது மாரிமுத்து குரலில் தயக்கமேதும் இல்லை.

கண்களை லேசாக இடுக்கிக்கொண்டு ஒரு கணம் யோசித்த விக்னேஷ் , ‘’ சரி சரி .. ரொம்ப நன்றிப்பா.. முடிஞ்சா அந்த டாக்கெட்டை சீக்கிரம் தேடிக்கண்டுபிடிச்சு எனக்கு கால் பண்ணு ‘’ என்றவன் தனது எண்ணைக் குறித்துக்கொடுத்துவிட்டு முன்பக்கம் விரைந்தான்.

கடைமுதலாளியிடமும் அதையே சொல்லிவிட்டு வசந்தியின் கைகளை இறுகப்பற்றியவண்ணம் விரைவாக தனது பைக்கை நோக்கி விரைந்தான் விக்னேஷ்.

அவன் பிடித்த இடம் கன்றிச்சிவந்து வலி எடுத்தாலும் வசந்திக்கு அது இன்பவேதனையாக இருந்தது என்பது அவள் கண்ணில் தெரிந்த பளபளப்பு காட்டியது.

தனது ஹெல்மெட்டை மாட்டிய விக்னேஷ் , ’’ வசந்தி, நான் கொஞ்சம் ஃபாஸ்டா பைக் ஓட்டப்போறேன். நீ பயப்படாமல் என்னை பிடிச்சுக்கோ .. சரியா..? ‘’ என்றவனின் குரலில் கண்டிப்பாக காதல் இல்லை.

ஆனால் வசந்திக்கு அந்த வார்த்தைகள் சொர்க்கத்துக்கே கொண்டு சென்றன.

உணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் அவன் பின்னால் அமர்ந்து அவனுடன் பல்லி போல் ஒட்டிக்கொண்டாள்.

சென்னையின் இரவு நேர இதமான சில்லென்ற காற்றும் விக்னேஷின் முதுகு வசந்தியின் மார்புக்கு அளித்த கதகதப்பும் அவளுக்கு தன்னை இழக்கவைத்தன.

இதை ஒன்றும் அறியாத விக்னேஷ் விரைவாகச் செல்லவேண்டிய அவசியம் உணர்ந்து பைக்கை வேகமாகச்செலுத்தி தனது அலுவலகம் வந்து சேர்ந்தான்.

அங்கே காரில் ஆ ஆறுமுகமும் மாணிக்கமும் கப்பல் கவிழ்ந்தாற் போல இவனுக்காகக் காத்திருந்தனர்.


துடிப்புகள் தொடரும்..
 
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 18

னது டி வி எஸ் மூச்சிரைக்க நிறுத்தி ஸ்டான்ட் போட்ட விக்னேஷின் பார்வை அமைச்சர் மற்றும் மாணிக்கத்தின் கவலையை அறிந்தே இருந்திருந்தான்.

கிட்டத்தட்ட ஆறுமுகத்தின் ஸ்விஸ் கணக்கு வழித்தெறியப்பட்டு இருக்கலாம் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியது தானே..?

இருவரையும் தனது அலுவலகத்துக்குள் வரவழைத்த விக்னேஷ் வசந்தியிடம் குடிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்யும்படி பணித்துவிட்டு அமைச்சரை கூர்ந்து நோக்கினான்.

அமைச்சரின் முகம் செத்த பிணத்தை விட மிகமோசமாக வெளுத்துப் போயிருந்தது. அடித்துப்பிடித்து கொள்ளையடித்த அத்தனை பணமும் பறிபோன வெறி முகத்தில் தாண்டவமாடியது.

'' தம்பி, உங்களை ரொம்ப நம்பி இந்த வேலையை ஒப்படைச்சோம். ஆனா பயனே இல்லாம போயிடுச்சே.. என் கணக்கு முழுக்க முடக்கப்பட்டுடுச்சு. முடக்கப்படுமுன் நான் பார்த்த பேலன்ஸ் ஜஸ்ட் 700 கோடி தான். இப்ப அதுவும் இல்லாம அக்செஸே போயிடுச்சு.. இதான் உங்க திறமைக்கு அழகா..? ''

அமைச்சரின் வயிற்றெரிச்சல் குரலில் பரிபூரணமாக பிரதிபலித்தது.

'' ஐயா, நீங்க என்னை இல்லை, ஸ்காட்லாந்த்யார்ட் போலீசைக் கான்டாக்ட் செய்து இருந்தாலும் இது தான் நடந்து இருக்கும். நல்லா யோசிங்க.. ஒரு கஜானா சாவி ஒருத்தனுக்கு கிடைச்சுடுச்சு. அவன் என்ன கொஞ்சம் வழித்தெடுத்துக்கிட்டு மிச்சம் உங்களுக்காக விட்டு வைப்பானா..? '' விக்னேஷின் குரலில் தனது திறமையின் மீது அவர் செய்த விமரிசனம் குறித்த எரிச்சல் தென்பட்டது.

மேலும் கூறினான். '' ஐயா நான் ஒன்னும் கண்டு பிடிக்கலைன்னு நினைக்காதீங்க. நீலமேகம் உங்களுக்கு உங்க கணக்கை செட் செய்து கொடுத்தபின் நீங்க அவருக்குக் கொடுத்த டார்ச்சரில் எரிச்சலாகி அனைத்து விவரங்களையும் நீங்க அப்ப வகிச்ச அமைச்சகத்தின் கலைநிகழ்ச்சிகள் பற்றிய சிடியில பதிஞ்சு தனது கும்பகோணம் முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பிவைத்தார். அது போய் சேருமுன் அவர் ஊருக்குச் சென்று சேர்ந்து அதைக்கைப்பற்றிவிடலாம்னு நினைச்சப்ப விதி வேறமாதிரி விலையாடிடுச்சு. அவர் மன இறுக்கத்தில் ஹார்ட் அட்டாக்ல இறந்தும் போயிட்டார்..'' என்று கூறி நிறுத்தினான் விக்னேஷ்.

அமைச்சரின் முகத்தில் பதட்டத்தின் சாயலும் இவன் எப்படி துல்லியமாக எல்லாம் விசாரித்தறிந்திருக்கிறான்னு வியப்பும் படர்ந்தது.

மாணிக்கத்தின் நிலைமையும் கிட்டத்தட்ட அதே தான்.

மேலும் விக்னேஷ் கூறினான், '' ஐயா துரதிருஷ்டவசமாக அந்த கொரியர் அமைச்சகத்திலிருந்து சென்னை சென்று சேர்ந்தபோது அதைப் பெற்றுக்கொள்ள யாருமில்லாத நிலையில் அந்த கொரியர் திரும்பிவிட்டது. ஆனால் அதை லாவகமாக யாரோ கைப்பற்றி இருக்காங்க.. இது வரை நான் கன்டறிந்த சுருக்கம் இது தான். அதை யார் கைப்பற்றினாங்கன்னு கண்டு பிடிப்பது தான் அடுத்த கட்ட நடவடிக்கை.. ''

அமைச்சரின் முகத்தில் கோபம் ரத்தமெனப்பாய்ந்தது.

'' அந்தத் ....... மவனைக் கண்டுபிடிச்சு என் கண்முன்னால நிறுத்து விக்னேஷ். அவனைக் கொல்லத்துடிக்கிது என் மனசு.. அவனைக் கண்டம் துண்டமாக வெட்டி கடல்ல வீச வைக்கிறேன்... '' என்றவர் நற நறவெனப்பல்லைக்கடித்தார்.

மாணிக்கம் சொல்லவொண்ணா சோகத்தில் இருந்தாலும் அவனது மனநிலையும் அமைச்சரையே ஒத்திருந்தது.

அமைச்சரது ஆவேசம் கண்ட வசந்தி இடிமின்னலைக்கண்ட புள்ளிமானாகத் திடுக்கிட்டாள்.

இதுதான் அமைச்சரின் அசலான முகம் என்பதை அறிந்திருந்த விக்னேஷுக்கு மட்டும் வியப்பேதும் ஏற்படவில்லை.

'' சொல்லு விக்னேஷ், உன் ஃபீஸ் எவ்வளவுன்னாலும் தரத்தயாரா இருக்கேன். எனக்கு அவன் மட்டும் என் கைக்கு கிடைக்கனும் '' என்று மேலும் புலி போல உறுமினார் அமைச்சர்.

'' அதைக்கண்டுபிடிக்கத்தான் இப்போது முயன்றுகொன்டு இருக்கிறேன்.. அனேகமாக நாளை மாலைக்குள் கண்டிப்பாக நான் கண்டுபிடிச்சுடுவேன். உங்கள் பணத்தை என்னால் மீட்கமுடியவில்லை. அதன் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். காரணம் நாம் காலத்தின் இயக்கத்தில் செயல்படுகிறோம். அவனோ கணிணியின் வேகத்தில் செயல்படுகிறான். இப்போது அந்த வித்தியாசம் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன்..'' என்று அமைதியாகக் கூறினான் விக்னேஷ்.

'' இதுவரைக்கும் யார் மேலாவது சந்தேகம் இருக்கா சொல்லு விக்னேஷ்.. நம்ம ஆளுங்களை விட்டு அவனை அலாக்காகத் தூக்கி வரச்சொல்றேன்..''

அமைச்சரின் குரலில் இருந்த ஆத்திரத்தில் தொடர்புடையவன் கிடைத்தால் அப்படியே கடித்தே தின்றுவிடுவார் போலிருந்தது.

''பொறுங்க ஐயா.. நாளை மாலை தெளிவாக எல்லாம் தெரியவந்துடும். '' விக்னேஷின் குரலில் எச்சரிக்கை உணர்வு தொனித்ததை வசந்தி மட்டுமே உணர்ந்து கொன்டாள். மீதி இருவரும் தான் ஆத்திரத்தின் ஆதிக்கத்தில் இருந்தார்களே..

அமைச்சரும் மாணிக்கமும் புறப்பட்டுச்சென்றதும் புலியிடமிருந்து தப்பித்த புள்ளிமானைப்போல் நடுக்கம் நிற்காதிருந்த வசந்தியை அன்புடன் பார்த்தான் விக்னேஷ்.

'' சாரி வசந்தி, உன்னை இது போன்ற ராட்சதர்களுக்கிடையில் இருக்கவிட்டிருக்கக்கூடாது தான் ..'' விக்னேஷ் குரலில் தெரிந்த நிஜமான கரிசனத்தில் எல்லாம் மறந்தாள் வசந்தி. அவள் மனம் ரெக்கை கட்டிப்பறந்தது.

அவளை ஆதரவுடன் கையைப்பற்றிய விக்னேஷ் , '' எனக்கு நீ இன்னொன்னு செய்யனுமே வசந்தி..'' என்றான்.

'' சொல்லுங்க விக்னேஷ் என்ன செய்யனும்..? '' அலாதீனிடம் பவ்யமாகக் கேட்ட பூதம் போலிருந்தது அவளது பாவனை.

’’ இன்னைக்கு இரவு எனக்கு கணிணியில் கொஞ்சம் நிறைய வேலை இருக்கு. களைப்பாகிவிடக்கூடாது நான். அதுக்கு உன் பேச்சுத்துணையும் தேனீர்ச்சேவையும் வேணும். நீ அலுவலகத்தில் இன்றிரவு தங்க இயலுமா..? என் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே.. '' விக்னேஷின் குரலில் தயக்கமும் லஜ்ஜையும் தெரிந்தது. உண்மையில் அவன் இன்றிரவுக்குள் நிறைய கண்டுபிடித்தாகவேண்டும்..!

'' அடடா மழைடா அடைமழைடா '' என்று கார்த்திக்கும் தமன்னாவும் வசந்தியின் மனதுக்குள் ஆடத்தொடங்கினார்கள்..!

‘’ பரவாயில்லை விக்னேஷ், நான் வீட்டில் சொல்லிடறேன். உங்களுக்கு துணையா இருக்கேன் ..’’ என்று உற்சாகம் பொங்க பதில் அளித்தாள் வசந்தி..!

துடிப்புகள் ... தொடரும்..!
 
கொல்லத்துடிக்குது மனசு..! பகுதி * 19

ரவு முழுக்க கண்விழித்து லேப்டாப்பில் கவிழ்ந்திருந்த தலையை அவ்வப்போது வசந்தி கொடுத்த அருமையான டீ பிஸ்கட்டுக்காக மட்டும் நிமிர்ந்துவிட்டு வசந்தியின் சேவைக்கு மெல்ல புன்முறுவல் மட்டுமே செய்து நிறைய விடயங்களைக்கண்டறிந்தான் விக்னேஷ்.

அவன் வேலை செய்யும் நேர்த்தியை கண்கொட்டாமல் அருகில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வப்போது உறக்கம் கண்களைச் சுழற்றினாலும் விக்னேஷுக்கு துணையாக விழிக்கவேண்டிய கடமைகளை நிரைவேற்றினாள் வசந்தி.

விக்னேஷ் மிகவும் லாஜிக்காக பிரச்சினைகளைக் கண்டறிந்தான்.

ஆறுமுகமும் மாணிக்கமும் கொடுத்த அக்செஸ் தரவுசொற்களின் மூலம் அவர்களின் கணக்கினை துல்யமாக ஆராய்ந்த விக்னேஷுக்கு நிறைய செய்திகள் அறியவந்தன.

அவற்றை அவ்வப்போது வசந்தியிடமும் விவாதித்தான். அவன் சொன்ன விவரங்களைக் கேட்டு வசந்தி வியந்து மூக்கில் விரலை வைத்து அழகாக திகைத்தாள்.

அனைத்து ட்ரான்சாக்ஷனும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் அனாதை இல்லங்களுக்கும் தொன்டு நிறுவனங்களுக்கும் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக தமிழர்களின் நல்வாழ்வு குறித்த அனைத்து ப்ராஜக்ட்களுக்கும் தலா 200 கோடிகளை வாரி வழங்கியிருந்தான் அந்த முகமறியா சமூக சேவகன்.

ஒரு பைசாகூட தனிப்பட்ட நபர் கணக்கில் செலுத்தப்படாத நேர்மையை விக்னேஷ் கண்டு மனதுக்குள் அந்த தயாளனை சல்யூட் செய்தான்.

விடிய மூன்றுமணி நேரம் இருக்கும் போது வசந்தியை சற்று உறங்கச்செய்துவிட்டு விக்னேஷும் கண்ணயர்ந்தான்.

காலை ஆறுமணிக்கு காபியின் அருமையான மணத்துடன் வசந்தி அன்று பூத்த நிலவாக விக்னேஷ் முன் வந்தாள்.

காபியைக்குடித்துவிட்டு மிகவும் சுறுசுறுப்பாக தன்னைத் தயார் செய்துகொண்டு வசந்தியை அவளது வீட்டில் கொண்டுவிட்ட விக்னேஷ் அந்த சாகர் அபார்ட்மென்ட்ஸை நோக்கி விரைந்தான்.

கொரியர் மற்றும் டாகுமென்ட்ஸ் கடைப்பையன் சொன்ன மூன்றாம் டாப் ஃப்ளோரில் அந்த வீட்டுக்கு முன் நின்று காலிங் பெல்லை விக்னேஷ் அழுத்தும் போது காலை மணி 8.

இரண்டாம் முறை அழுத்த எத்தனிக்கும் முன் கதவு திறந்தது.

கதவை லேசாகத் திறந்த எளிமையான நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் விக்னேஷைக் கண்டு முறுவலித்து கதவை முழுமையாகத்திறந்து

'' வாங்க விக்னேஷ். இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும். '' என்ற ராகவனை வியப்புடன் பார்த்தான் விக்னேஷ்.

உள்ளே நுழைந்த விக்னேஷ் ராகவனைக் கைகுலுக்கி '' ஐ யாம் விக்னேஷ். பிரைவேட் டிடெக்டிவ் '' என்றான்.

'' தெரியும் விக்னேஷ்.சென்னையின் லீடிங் டிடெக்டிவை அறியாதவர் இருக்காங்களா என்ன..? அதிலும் இத்தனை பெரிய குற்றத்தைச் செய்த நான் உங்களைக் கவனிக்காமல் இருப்பேனா..? நேற்று இரவே எதிர் பார்த்தேன் உங்களை. ''

இப்போது விக்னேஷ் மேலும் வியந்தான்.

''அது எப்படி ? '' என்று தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் கேட்ட விக்னேஷை அடக்கி , '' வாங்க அந்த ரூமுக்கு போய் பேசுவோம். மங்களம். சாருக்கு எதுனா குடிக்க கொண்டுவா '' என்று மங்களத்திடம் கூறிய ராகவன் விக்னேஷைத் தன் தனியறைக்கு அழைத்துப்போனான்.

அங்கே இருந்த பிளாஸ்டிக் சேரில் விக்னேஷை அமரவைத்த ராகவன் தானும் ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.

'' கோடிக்கணக்கான பணத்தை அங்கும் இங்கும் மாற்றிக்கொடுத்த வள்ளல் இத்தனை எளிமையா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை ராகவன் ..'' விக்னேஷின் குரலில் நிஜமாகவே வியப்பு இருந்தது.

'' ம்ம்ம்... சொல்லுங்க விக்னேஷ்.. உங்களுக்கு என்ன தெரியனும்..? '' என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் ராகவன்.

'' அதுக்கும் முன்னால நானே சில விவரங்களைச் சொல்கிறேன். சொல்லி முடித்தபிறகு எதுவும் சந்தேகம் இருந்தா மட்டும் கேளுங்க.. '' என்று சொல்லத்தொடங்கிய ராகவனின் குரலில் தடுமாற்றமோ குற்ற உணர்ச்சியோ எதுவுமே இல்லை.

துடிப்புகள் தொடரும்..
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 20

‘’ தினந்தோறும் செய்திகளைப் பார்க்கும் போதும் நடப்பினைக் கூர்ந்து கவனிக்கும் போதும் எந்த ஒரு சராசரி இந்தியன் மனதில் எழும் கேள்விகளை நானும் கேட்டுக்கொண்டதுண்டு விக்னேஷ்.

அம்பானிகளும் விஜய் மல்லையாக்களும் இன்னும் பல தொழில் முதலைகளும் இந்திய வங்கிகளில் கடனைப்பெற்றுக்கொண்டு நட்டக்கணக்கைக் காட்டி அந்த கடன்களில் இருந்து தப்பிக்க அரசியல் வாதிகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்வதை கவனிக்கலையா நீங்க..?

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் பத்தாயிரம் இருபதாயிரம் கடன் இருந்தால் அவனை வங்கிகள் கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்துகின்றனதானே..? ஏன் மேற்சொன்ன பணமுதலைகளைக் கண்டுக்காம இருக்காங்க..?

இன்றைய தேதிக்கு உலக வங்கியின் இந்தியக்கடன் லட்சக்கணக்கான கோடிகள்..!

அதேசமயம் இந்திய பணம் வெளிநாட்டுவங்கிகளில் பல லட்சக்கணக்கான கோடிகளில் முடங்கிக்கிடங்கின்றன.. இது வினோதமாக இல்லையா..?

அரசாங்கம் * அது ஆண்ட அரசாங்கமா இருந்தாலும் ஆளும் அரசாங்கமா இருந்தாலும் ஆளப்போகும் அரசாங்கமா இருந்தாலும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஏன் ..? திருடர்கள் ... அனைவருமே திருடர்கள்..

இதோ ஆற்காடு ஆறுமுகம் மந்திரி ஆவதற்கு முன் அல்லது எம் எல் ஏ ஆவதற்கு முன் எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருந்தார்..?

இப்போது நமக்கு தெரிய வந்த ஒரே கணக்கில் மட்டும் 3300 கோடிரூபாய்கள்.. !

இவை எல்லாம் யாருடையது..? அந்த ஆளுடைய பரம்பரைசொத்தா..? உழைத்து ரத்தமாய் வியர்வை சிந்தி உண்டாக்கிய பணமா..?

இல்லை விக்னேஷ்,, இவை எல்லாம் நம் உழைப்பு..

ஒருபக்கம் விவசாயிங்க எலிகளை சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இன்னொரு பக்கம் இந்த கொள்ளையர்களின் ஆர்ப்பாட்டம்..கேட்கவே வேதனையா இல்லையா..? ‘’

ராகவன் சொல்ல சொல்ல விக்னேஷின் மனம் அவன் பால் கொண்டிருந்த மதிப்பை பலமடங்காக்கியது.

ராகவனுக்கு சில ஆயிரங்கள் கடன் இருப்பதை ஓரளவுக்கு அறிவான் விக்னேஷ். ஆயினும் தனக்காக அந்த பெரும் தொகையில் இருந்து ஒற்றை பைசாகூட பயன்படுத்திக்கொள்ளாத அசாத்திய நேர்மை ராகவனை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி இருந்தது. இப்போது அவன் சொன்ன ஒவ்வொரு உண்மையும் பொட்டில் அறைந்தாற்போல இருந்ததால் அமைதியாக அவன் சொன்னவற்றை ஆமோதிக்கும் விதமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

ராகவன் தொடர்ந்தான்.

‘’ விக்னேஷ், நானாக எதையும் தேடிப்பிடித்து திட்டமிட்டு இறங்கவில்லை. எனது பைக் பார்க்கிங்கிலிருந்து பைக்கை எடுக்கும்போது இடையில் சிக்கிய ஒரு பழைய கொரியர் பாக்கெட் என் சிந்தனைகளை தீவிரமாக்கி இறங்க வைத்தது.

அந்த பாக்கெட்டில் நீலமேகம் என்பவர் அமைச்சகம் ஒன்றின் விழாக் காட்சியை பதிய வைத்து அதில் சில கோடிங் மூலம் ஆற்காடு ஆறுமுகத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்களையும் அதை அணுகும் அனைத்து விதங்களையும் குறித்து வைத்திருந்தார்.

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த நான் இதற்காக நிறைய வாசித்தேன். ஒரு கவிதை எழுத பல நாள் சிந்தித்து பலமுறை திருத்தி எழுதி பதிப்பிக்கும் கலைவேந்தன் என்பவரை நான் இணையத்தில் அறிவேன். அந்த அக்கறையும் கவனமும் என்னை இந்த சிடியில் ஈடுபடுத்த ஊக்கிகளாய் உதவின. நிறைய கண்டுபிடிச்சேன்.

நான் நினைத்திருந்தால் எனக்கும் ஒரு வெளிநாட்டு கணக்கை உருவாக்கி அனைத்து கோடிகளையும் என் கணக்கில் பெற்றுக்கொண்டிருக்க முடியும். அந்த அளவுக்கு விவரங்கள் கிடைத்தன. ஆனால் நான் அப்படி செய்யவில்லை. ஏன்..?

பிறகு எனக்கும் இந்த திருடர்களுக்கும் என்ன வித்தியாசம்..?

ஆம் நானும் திருடனாய் மாறினேன். ராபின் ஹூடைப்பற்றி படிச்சிருப்பீங்க.. யெஸ். நானும் தமிழக ராபின் ஹுட் ஆக என்னை நினைத்துக்கொண்டேன்.

ஒரே நாளில் அனைத்து பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு மாற்ற முடிந்தாலும் அதற்கு என் உழைப்பு கடந்த 20 நாட்கள்..!

இந்தாங்க விக்னேஷ்.. இந்த சிடியில் நான் செய்த அனைத்துமே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

என்னைக்காவது நான் மாட்டுவேன் என்பது தெரியும். அதிலும் ஆறுமுகம் போன்ற முதலை வெளிப்படையா இறங்காவிட்டாலும் மறைமுகமா இறங்கி விசாரிப்பார்னு தெரியும். அவர் உங்களை அணுகியது அறிந்து கொண்டேன். எப்படின்னு கேக்கறீங்களா..?

ரெண்டு நாள் முன்பு உங்க லேப்டாப்பிலிருந்து அக்சஸைப் பார்த்தேன். உங்க ஐபி முகவரி தேடி நீங்க இதில் விசாரிக்க இறங்கி இருப்பதையும் அறிந்தேன்.

உங்களையும் ஃபோலோ செய்து பாத்து நிலைமையைக் கண்டறிந்தேன்.

இனி தப்பிக்க இயலாதுன்னு தெரிஞ்சு உங்களை எதிர்பார்த்தேன். நேற்று நீங்கள் கீழே இருக்கும் கொரியர் கடையில் விசாரித்ததையும் பார்த்தேன்.

நேற்று இரவு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க முழுவிவரம் தெரிஞ்சுக்காம வரவிரும்பலைன்னு புரிஞ்சுகிட்டேன்.

காலிப்பானையைச் சுரண்டிப்பார்ப்பது போல் நேற்று இரவு நீங்க ஆறுமுகம் அக்கவுண்ட்டை அக்செஸ் செய்து முயன்றதையும் கண்டுபிடிச்சு இதோ இப்ப உங்களை எதிர்பார்த்து தான் காத்திருந்தேன்.

என்னை நீங்க போலீஸில் ஒப்படைக்கலாம் விக்னேஷ்.

அட்லீஸ்ட் என் செயல்கள் இந்தியா முழுக்க வெளிவந்தா... என்னைப்போல பல ராகவன்கள் உருவாகலாம். எல்லா கறுப்புப்பணங்களும் அம்பலமாகலாம். நான் ரெடி விக்னேஷ். ‘’

கொஞ்ச நேரம் ராகவனையே உற்றுப்பார்த்த விக்னேஷ்..

அமைதியாக ‘’ என்னை உங்க நெருங்கிய நண்பரா ஏற்பதில் உங்களுக்கு மறுபரிசீலனை இருக்குமா ..? ‘’ என்று துல்லியமான ஆங்கிலத்தில் கேட்டான் ..


துடிப்புகள் விரைவில் அடங்கும்..!
 
Back
Top