கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 22 (நிறைவுப்பகுதி)

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 1


’’ என்னங்க, நீங்க வெளியில போயிருந்தப்ப மகேந்திரன் வந்து இருந்தான். இன்னும் எத்தனை வருஷத்துக்கு கடனை திருப்பித் தராம இழுத்து அடிப்பார்னு கத்திட்டுப் போறான். ‘’

மனைவி மங்களத்தின் வரவேற்புரையில் மனம் வெறுத்தான் ராகவன். இது ஒன்றும் புதிதில்லை அவனுக்கு. மாதம் நான்கைந்து பேர் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்கேட்டு கத்திவிட்டுப் போவதும் வட்டியை வாங்கிப்போவதும் வழக்கமாகிப்போய் விட்டது.

வெயிலில் அலைந்து திரிந்து ஞாயிற்றுக் கிழமையின் சுகத்தைக் கூட அனுபவிக்க இயலாமல் ஒரு வங்கியின் லோன் மேனேஜரை வீட்டில் சந்தித்துப் பேசிவிட்டு களைத்துப்போய் வந்திருந்தான். எப்படியாவது குறிப்பிட்ட தொகையை லோன் போட்டுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து அனுப்பி இருந்தார். உபசாரத்திற்குக் கூட ஒரு காபி குடிக்க விசாரிக்க வில்லை. அதைப் பெரிது படுத்தும் மன நிலையிலும் அவன் இல்லை. ஒருவர் சம்பளத்தில் குடும்பம் ஓட்டும் பலரது நிலைமை இது தான்.

சட்டென்று வங்கிக்கணக்கின் பாஸ்புக் அப்டேட் செய்து வரவேண்டும் என்ற நினைவு வந்தது. வங்கிக்கு திங்கள் விடுமுறை என்பதால் இன்றே சென்று வருவது நல்லது என்று நினைத்தான்.

கழட்டிய சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்ட ராகவன் பேங்க் பாஸ்புக்கை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூன்றாம் மாடியில் இருந்து கீழிறங்கினான்.மூன்றுமாதக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குடியிருப்பில் மாத வாடகைக்கு குடியிருக்கும் 35 வயதான ராகவன் பிசிஏ முடித்து ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் அவனது குடும்பப் பொறுப்பின் - இரண்டு தங்கைகள் ஒரு தம்பி இவர்களைக் கரையேற்றும் முயற்சிகளின் - காரணமாக அளவுக்கதிகமாக கடன் வாங்கி இன்று அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறான்.

கீழே பைக் பார்க்கிங் மிகவும் நெரிசலான ஒன்று. சென்னையின் புற நகர்ப்பகுதியில் அமையும் பல அடுக்குமாடிக் கட்டடங்களின் அவதி நிலை போல் தான் இதுவும். பைக்குகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக்கொண்டு குறுகலான இடத்தில் ஒழுங்கற்று இருக்கும். இதற்கிடையில் கீழ்த்தளத்தில் கொரியர் மற்றும் ஜெராக்ஸ் கடையின் பழுது பட்ட ஜெராக்ஸ் மெஷின்கள் வேறு தாறுமாறாக போடப்பட்டு பார்க்கிங்குக்கு இருக்கும் குறைந்த இடத்தையும் ஆக்கிரமித்து நின்றன.

தனது பைக்கை எடுக்க முயன்ற போது அது மிகவும் சிக்கலாக மாட்டிக்கொண்டு இருப்பதை அறிந்தான். அடுத்திருந்த ஒரு பைக்கை முக்கி முயன்று ஒதுக்கி கொஞ்சம் இடைவெளி ஏற்படுத்தி தனது பைக்கை எடுகக் முயன்ற போது பழைய ஜெராக்ஸ் மெதின்களுக்கிடையில் சிக்கி இருந்த பழுப்பு நிறக்கவரின் சிதைந்த பகுதி பைக்கின் மட்கார்டில் சிக்கிக்கொண்டு இருந்ததை கவனித்தான். மெல்ல அதை கையால் அசைத்து நீக்க முயன்றபோது அது பழைய கொரியர் ஒன்றின் அழுத்தமான உறையின் ஒரு மூலை சிதைந்து மாட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டான்.

அதை வெளியில் எடுத்து கவரைப் பரிசோதித்த போது அதற்குள் சிடி போன்று கடினமாகத் தென்பட்டது. ஈரத்தில் சிதைந்து கலைந்திருந்த கவரில் இருந்த முகவரியைக் கவனமாக ஊகித்து படிக்க முயன்ற போது முகவரி இவ்வாறு இருந்தது.

க. நீலமேகம் எண் : 3/ 19, தெற்கு வீதி, கும்பகோணம்.

தேதி முதலானவை கலைந்து போயிருந்த நிலையில் மறுபக்கம் பார்த்ததில் பலமுறை டெலிவரி செய்ய முயன்று ‘ டோர் லாக்ட் ‘ முத்திரைகள் பதியப்பட்டு இருந்தன.

கேட்பாரற்று சிதிலமடைந்து விட்ட அந்த பழுப்பு நிற கவரைப்பிரித்துப் பார்த்த போது ஒரு கடிதமும் ஒரு சிடி பிளாஸ்டிக் பாக்ஸுடன் இருந்தது தெரிந்தது.

கடிதத்தைப் பிரித்து பார்த்த போது அது மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககத்திலிருந்து அனுப்பப் பட்ட கடிதமென்றும் ‘’ மாற்றுத்திறனாளிகள் - மறுவாழ்வு முறைகள் ‘’ என்னும் தலைப்பிலான ஒரு சிடி அத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதாக அரசாங்க விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி அரசாங்க எந்திர வார்த்தைகளுடன் எழுதப்பட்டு இருந்தது.

ராகவனுக்கு அதில் ஏதோ வினோதம் தட்டுப்பட்டது. என்னதான் இருக்கும் அந்த சிடியில் என்ற ஆர்வம் அவனுக்குள் எழுந்தது விதியின் வினோத விளையாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும்.


துடிப்புகள்... தொடரும்..!
 
Last edited:
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 2


மைச்சர் ஆற்காடு ஆறுமுகத்தின் ஒரே முகத்தில் எள்ளும் கொள்ளும் பொரிந்து கொண்டு இருந்தது. அன்று காலைமுதலாகவே அனைவருடனும் சிடுசிடுப்புடன் பேசியது கண்டு அவரது மனைவி விசாலத்துக்கு வியப்பும் பயமும் ஒரு சேர அலைக்கழித்தது.

ஏற்கனவே எழுபதை நெருங்கிக்கொண்டு இருந்த ஆ ஆறுமுகத்துக்கு இரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் ஏகத்துக்கு எகிறி இருந்த நிலையில் இப்படி அதிகப்படியான சிடுசிடுப்பும் சுள்ளென்ற பேச்சும் ( காபி தயாரா இருக்குங்க.... அப்படியா...? என் தலையில் கொட்டு..) நிலைதவறிய நிதானமும் விசாலத்துக்கு சொல்லவொண்ணா பீதி அளித்தது.

இத்தனைக்கும் வசதிக்கும் சொத்துக்கும் ஒரு குறைவும் இல்லை.ஆளும் கட்சியின் அசைக்கமுடியாத பிரமுகரும் சீனியர் மந்திரியுமான ஆ ஆறுமுகத்துக்கு சென்ற இடமெல்லாம் செல்வம். தொட்டதெல்லாம் தோட்டம். சுட்டதெல்லாம் சொத்து. திரும்பின திசைஎங்கும் திருவின் ஆசி.

பல உறவினர்களின் பெயர்களில் பினாமி சொத்தும் மைத்துனன் முதல் மாமனாரின் சகலையின் மைத்துனனின் ஒன்று விட்ட சகோதரன் வரையிலும் எல்லார் பேரிலும் சொத்துகள் குவித்து இருந்தார்.

அரசாங்க அராஜக ஆளும் கட்சியின் தொண்டு கிழத் தலைவரும் எக்கச்சக்கமான திரு விளையாடல்களைச் செய்து வந்ததால் கேட்க ஆளில்லாமல் ஆ ஆறுமுகம் தறிகெட்டுப் பறந்ததில் சகல சுகபோகத்துக்கும் குறைவில்லை. கண் காட்டினாலே ஆளைச் சாய்த்துவிடும் ஆட்படைகள். இத்தனை இருந்தும் இன்று என்ன நேர்ந்தது அவருக்கென்று அனைவரும் வியந்து நின்றனர்.

மாடியிலிருந்து கீழிறங்கிய ஆறுமுகம் அங்கு தென்பட்ட வேலையாளிடம் ‘’ மாணிக்கம் வந்தானா ‘’ என்று 12 ஆவது முறையாகக் கேட்டார்..எங்கு போய் தொலைந்துவிட்டான் மாணிக்கம் என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

மாணிக்கம் - ஆறுமுகத்தின் நிழலிலும் மேம்பட்டவன். நிழல் கூட இருட்டினில் கைவிட்டுவிடும் என்பதால் நிழலுக்கும் மேலானவன் தான்.

ஆறுமுகத்தின் அத்தனை விடயங்களும் ஏன் ஆறுமுகம் அறியாத விடயங்களும் மாணிக்கம் அறிவான். சொத்து விவரம் பங்குச்சந்தையில் அவரது முதலீட்டு விவரம். ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் இருக்கும் தொகையின் முழுவிவரம் ஆக அனைத்தையும் அறிவதோடல்லாமல் திறம்பட நிர்வகித்தும் வருகிறான்.நெய்யெடுக்கும் அவன் புறங்கை நக்காமல் இருக்க இயலுமா..? அதை ஆறுமுகமும் அறிவார். ஆனால் ஆறுமுகத்துக்கு அத்தகையவன் தேவைப்பட்டான். மிகப்பெரிய தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை இடிந்து விடாமல் காப்பாற்றி வரும் மாணிக்க்ம் என்னும் தளபதிக்கு கிடைகக் வேண்டிய ஊழியம் இது அல்லவா..?

இத்தனைக்கும் பி ஏ என்னும் பதவிக்காக மாதம் குறிப்பிட்ட கணிசமான சம்பளம் மாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இது வெளியார் கண்ணில் மண் தூவுவது தான். மற்றபடி மாணிக்கம் தனக்குரிய ஊதியத்தை தானே எடுத்துக்கொள்வது ஆ ஆறுமுகத்துக்கும் நன்கு தெரியும்.

எல்லாமே ஒரு வித கருத்துமேவல் தானே..?

ஐயா மாணிக்கம் ஐயா வந்துட்டாருங்க என்று வேலைக்காரன் வந்து சொல்லும் முன் மாணிக்கம் உள்ளே வந்து ஆறுமுகத்தின் கால் தொட்டு வணங்கினான். இது அவனது வழக்கம். ஆறுமுகத்துக்கு இந்த பணிவு மிகவும் பிடிக்கும்.

வா மாணிக்கம் என்று காலையில் இருந்து இருந்த பரபரப்பின் சுவடறியாமல் அவனை வாஞ்சையுடன் வரவேற்ற ஆறுமுகம் வேலையாட்களிடம் ஒரு மணி நேரத்துக்கு யார் வந்தாலும் போன் வந்தாலும் நான் இல்லை என்று சொல்லிவிடு. என் அறைக்கு யாரையும் வர விட்டுவிடாதே என்று கட்டளையிட்டு விட்டு அமைதியாக நின்ற மாணிக்கத்தின் தோளை அணைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

வேலையாட்களுக்கு இது தெரிந்த விடயம் தான். மிக முக்கிய ஆலோசனையில் மாணிக்கமுடன் அறையில் நுழைந்தார் என்றால் அங்கே முதலமைச்சருக்கு கூட இடமில்லை என்பது அறைந்து வைக்கப்பட்ட மாற்ற முடியாத சட்டம்.

சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அந்த அறைக்குள் சென்றதும் மாணிக்கத்தை ஷோஃபாவில் அமரச்செய்து தனது பர்சனல் லேப்டாப்பை ஆன் செய்து மாணிக்கத்துக்கு சில விடயங்களைக் காட்டினார்.

அதைக்கண்டதும் மாணிக்கம் பேயறைந்தாற் போலானான்.

குறிப்பு : கருத்து மேவல் * = காம்ப்ரமைஸ்

துடிப்புகள் ... தொடரும்..!
 
முதல் பகுதியில் ஒரு சாமான்யனின் அறிமுகம். இரண்டாம் பகுதியில்தான் கதை சூடுபிடிக்கிறது. அமைச்சர் பெயரில் ஊரையும் பேரையும் பார்த்ததும் அடிவயிற்றில் சிறு பகீர். அரசியல் நுட்பங்களை அதிரடியாய் விளக்குகிறீர்கள். கதை நன்றாகப் போகிறது. தொடருங்கள் கலைவேந்தன் அவர்களே.
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 3

ந்த சிடியில் என்ன தான் இருக்கும் என்று உடனே பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் ராகவனது நெருக்கடிகளைச் சமாளிக்க அவசியமான வங்கிக்கணக்கு அப்டேஷன் முக்கியம் என்பதால் சிடி அடங்கிய அந்த கொரியர் கவரை தனது பைக்கில் பாக்ஸில் வைத்துவிட்டு அதை முடித்துவிட்டு வந்து மதிய உணவை உண்டபின் களைப்புடன் படுத்தான்.

பலவித குழப்பங்கள் மனதில் சுழன்றாலும் உண்ட களைப்பும் காலையிலிருந்து அலைந்ததால் உடல் சோர்வும் அயர்ந்து உறங்க வைத்தன.

ஒரு மணி நேரத்தில் விழித்தெழுந்த ராகவன் கணினியை ஆன் செய்து ஈமெயில் முதலானவற்றை சோதனை செய்த பின் தமிழில் தலை சிறந்த விவாதக்களமான தமிழ் மன்றத்தில் சற்று நேரம் பார்வையிட்டுக்கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று தனது பைக்கில் வைக்கப்பட்டு இருந்த கொரியர் கவர் நினைவுக்கு வந்தது..!

அட.. இதை எப்படி மறந்துவிட்டேன் என்று தன்னைத்தானே நொந்த படி மூன்று மாடிகள் கீழிறங்கி தனது பைக்கின் பாக்ஸில் இருந்த கவரை எடுத்துக்கொண்டு மேலே வந்தவன் அந்த சிடி கவரைப்பிரித்து லேசாக ஈரப்பதம் பதிந்திருந்த சிடியை உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட்டு அதை கண்ணியில் செலுத்தினான்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககம் என்னும் அரசின் லோகோவுடன் மிக எளிமையாக வடிவமைக்கப் பட்ட விஷுவல் டிசைனுடன் பக்கங்கள் விரிந்தன. ஃப்ளாஷ் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களுடன் பல வித தகவல்கள் புள்ளி விவரங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் நிவாரணங்கள் முதலான அரசின் தற்பெருமைகள் அழகான பொய்களுடன் விரிந்தன. ஆளும் கட்சியின் கொட்டுப்பறையாக மிகச்சாதாரண நடைமுறை நடவடிககைகளைக்கூட மிகப்பெரிய சாதனைகளாக புள்ளிவிவரப் பொய்களுடன் புளுகப்பட்டு இருந்தன.

எப்படி இருந்தாலும் நாம் இந்த சிடியை வடிவமைத்திருந்தாலோ அல்லது நம் உடன் பிறவாதம்பி செல்வமுரளி வடிவமைத்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இந்த சிடி வந்திருக்கும் என்பதை எண்ணியவாறே மேற்கொண்டு பார்த்துக்கொண்டு போனான்.

நாள் பட்ட சிடி என்பதாலோ என்னவோ ஃப்ளாஷ் கோடிங் டெக்னிகல் பிரசண்ட்டேஷனுக்கு இடையில் ஹெச் டி எம் எல் கோளாறுகள் சில தென்பட்டன. அது போன்ற கோளாறுகள் வெளிப்பட்ட நேரத்தில் சில குறியீடுகளும் எண்களும் கீழ்க்கண்டவாறு விரிந்தன..


<html>

<head>
<meta http-equiv="Content-Language" content="en-us">
<meta name="GENERATOR" content="Microsoft FrontPage 5.0">
<meta name="ProgId" content="FrontPage.Editor.Document">
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title>New Page 1</title>
</head>

<body>

<p>ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3 </p>
<p> </p>

</body>

</html>

ராகவன் ஜாவா டிகோடிங் மற்றும் எச்டி எம் எல் கோடிங் ஃபார்மட்டிங் ரைட்டிங் என்று சகலமும் அறிந்திருந்தாலும் சி டியின் இடையில் ஃப்ளாஷ் ப்ரசெண்டேஷன் தடைப்படுவதையும் இடை யிடையே ஓரிருமுறை இது போன்ற ஹெச்டிஎமெல் எர்ரர் மெசேஜ் வந்ததையும் கவனித்தும் அது எந்தக் காரணத்தால் என்பதை அறிய முயலவில்லை.

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் விதமாக ரிசோர்ஸ் பர்சன்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற குறிப்பிடுகைகளும் குறியீடுகளும் இன்ஸ்ட்ரக்*ஷன்களும் நிறைந்த மொத்தம் 45 நிமிடங்கள் ஓடிய அந்த சிடியின் இடையில் மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் அதற்கான சிறப்புப்பள்ளிகள் செய்து வரும் பிரயத்தனங்கள் வீடியோ க்ளிப்புகளாக இணைக்கப்பட்டு இருந்தது. எதையோ எதிர்பார்த்து சிடியைத் துழாவிய ராகவன் கண்களுக்கு மிகச்சாதாரணமான அரசாங்க தற்பெருமை சிடியாகவே தென்பட்டது.

வேறெதுவும் புரியாத நிலையில் அந்த சிடியை வெளியே எடுத்தவன் அசுவாரசியமாக அந்த சிடியை திரும்பவும் கவரில் போட்டு கணினி மேசைக்குக் கீழே வைக்கப்பட்டு இருந்த சிடி கூடையில் போட்டான்.

மிகப்பெரிய அளப்பரிய புதையலை அலட்சியமாக எறிகிறோம் என்பதை அறியாத ராகவன் மீண்டும் தமிழ் மன்றத்தின் அழகான கவிதைகளில் ஆழ்ந்தான்..!

துடிப்புகள் தொடரும்..!
 
பார்த்ததுமே படிக்கத்தூண்டும் தலைப்பு. ஆரம்ப அத்தியாயமும் அதையே சொல்கிறது. ஒரு சாதாரண ராகவனின் கையில் சிக்கியிருக்கும் அசாதாரண மென் தகடால்...விளையப்போவது நன்மையா தீமையா...?

ஆ. ஆறுமுகம்+ மாணிக்கம் கூட்டணியின் அதிரடி அரசியலில் இன்னும் நிகழப்போவது என்னென்ன....காத்திருந்து வாசிக்க ஆவல்.

ஆறுமுகத்தின் ஒரு முகம், அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் இடத்தின் அமைப்பு விளக்கம் என எல்லாமே இது வித்தியாச எழுத்து என்பதைக் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் கலை. தொடருங்கள்...தொடர்ந்து வருகிறேன்.
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 4

மைச்சர் ஆற்காடு ஆறுமுகம் நிதானமாக மாணிக்கத்திடம் தனது பர்சனல் லேப்டாப்பைத் திறந்து காண்பித்த சில விடயங்கள் மாணிக்கத்துக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.

ஆ ஆறுமுகத்துக்கு தனது ஸ்விஸ் வங்கிக்கணக்கில் இருக்கும் அப்டேஷனை அறியும் விதத்தை சிறுபிள்ளைக்கு போதிப்பதைப் போல கற்றுக்கொடுத்ததே மாணிக்கம் தான். அத்தனை எளிதான வேலையல்ல அது.

பல அடுக்குகளையும் சில சிக்கலான கேள்விகளையும் கேட்டு அதன் சரியான பதிலை அளித்தும் வாய்ஸ் ரெககனைசிங் மூலம் வெரிஃபை செய்தும் நிறைய இடியாப்ப அடுக்குகளுக்குப் பின் தான் தனது பெயரில் இருக்கும் கணக்கு வழக்கை காண்பிக்கும்.

இந்த செயல் முறை இருவருக்கு மட்டுமே அத்துபடி. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் மாணிக்கத்திற்கும் ஆறுமுகத்துக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள் இவை.

ஒரு வேளை தனக்கு எதுவும் நேர்ந்தாலும் தமது பணத்தை தம் சந்ததியருக்கு பெற்றுத் தரும் பொறுப்பை மாணிக்கத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். இருபத்தைந்து சதவீதம் அதற்கான கட்டணமாக எடுத்துக்கொள்ளலாம் என்பதான ஒரு மறைமுக ஒப்பந்தம் கூட இருக்கிறது.

இப்போது ஆறுமுகம் மாணிக்கத்திடம் அர்த்த பூர்வமாக அதே சமயம் நிதானம் தவறாமல் பேசினார்.

‘’ என்ன தெரியுது மாணிக்கம் .. ? ‘’ - அவனது பிரமிப்பைக் கலைக்கும் விதமாக கேட்டார்.

‘’ ஐயா.. ஐயா.. நான் இதை செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா....? ‘’ - குரல் தழு தழுத்தது மாணிக்கத்துக்கு.

‘’ அடடா... இல்லடா மாணிக்கம்... இந்த உலகத்துல உன்னைத் தவிர யாரை நம்பப்போறேன்..? ஆனா திடீர்னு இப்படி 200 கோடி ரூபாய் நம்ம அக்கவுண்ட்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்கு.. என்ன ஏதுன்னு விவரம் தெரிஞ்சுக்க முடியலை.. நம்ம ரெண்டு பேரைத் தவிர இது சம்பந்தமா யாருக்கும் தெரியாது... தெரிஞ்ச மூனாவது ஆளைக்கூட... ‘’’ - இந்த இடத்தில் நிறுத்தினார் ஆறுமுகம். அவரது நினைவுகள் பின்னோக்கிச் சென்றதை அறிய முடிந்தது மாணிக்கத்துக்கு.

‘’ ஆமாம் .. ஐயா.. நீலமேகம்... ‘’ - என்ற வாறு இழுத்தான் மாணிக்கம்.

‘’ ஸ்ஸ்ஸ்... அதைப்பத்தி இப்ப ஏன் பேச்சு... இப்ப இது எப்படி எங்கே யாரால நடந்ததுன்னு கண்டு பிடிக்கனும்டா.. இல்லைன்னா இருக்கும் எலலா பணமும் இப்படி கைவிட்டு போயிடுமே... ‘’ - கவலை மற்றும் பதட்ட ரேகைகள் ஆறுமுகத்தின் முகத்தில் பரவின.

அவரது கவலைகள் முழுக்க முழுக்க நியாயமானதாக மாணிக்கத்துக்கு பட்டது. அவனுக்கே இது பற்றி ஒன்றும் யூகிக்க முடியவில்லை.

‘’ஐயா .. நீங்க வேறு யார் மேலாவது சந்தேகப்படறீங்களா..? ‘’ - மாணிக்கம் அவரது முகத்தைப் பார்த்து கேள்விக்குறியுடன் கேட்டான்.

‘’ இல்லடா மாணிக்கம்... உனக்கே தெரியும்... இது சம்பந்தமா என் மனைவி பிள்ளைகள் கிட்ட கூட ஒன்னுமே சொல்லாம வைச்சு இருக்கேன் தானே..? ‘’ - என்று கவலையுடன் கூறினார் ஆறுமுகம்.

’’ அப்படின்னா இது மாயமா இருக்கே ஐயா..இத்தனை பாதுகாப்பை மீறி .இது எப்படி சாத்தியம் ஐயா...? முதல்ல நம் வங்கிக்கணக்கு தெரியனும்..அப்படியே தெரிந்தாலும் அதை ஆபரேட் செய்யும் விதம் கோடிங் டி கோடிங் வாய்ஸ் ரெகக்னிஷன் இது எல்லாமே வேணும்... எப்படி எப்படி...? ’’- மாணிக்கம் வியந்தான்.

‘’ மாணிக்கம் ...இனி என்ன செய்யலாம்...? எதாவது செய்யனும்.. இலலைன்னா எல்லாம் நம்ம கையை விட்டு போயிடும்.. இப்போதைக்கு 200 கோடியோட நிக்கிது ... ‘’ - ஆறுமுகம் கவலை தோய்ந்த முகத்தை மாணிக்கத்தின் பக்கம் பார்த்துவிட்டு லேப்டாப்பை கவனித்தார்.

’’ ஆமாம் ஐயா... எடுத்தவன் நிறைய எடுக்காம 200 கோடி எடுத்து இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா... நம் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு தெரியாம முதல் வாய்ப்பை தவற விட்டா கோடிங் மாறிவிடும் லாக் ஆகிவிடும் என்னும் சூட்சுமம் புரிஞ்சு வைச்சு இருக்கான்..’’ - மாணிக்கம் டெக்னிகலாக யோசித்தது ஆறுமுகத்துக்கு வியப்பளித்தது.

‘’ உண்மைதான்.. ‘’ - ஒப்புக்கொண்டார் ஆறுமுகம்.

‘’ மேலும் அவன் மிக மிக சாமர்த்தியமாக இந்திய வங்கி எதிலும் மாற்றாமல் சிங்கப்பூர் வங்கியில் மாற்றி இருக்கான். அதுமட்டுமே தெரிய வருது. மற்றபடி வேறு எந்த விவரமும் நம்ம வங்கியும் காட்டாது .. இது நாம் ஆப்ரேட் செய்தது போல் தான் காண்பிக்கிறது. அப்படிஎன்றால் நம் சூட்சுமம் அறிந்த ஒருவன் மிக தெளிவாக திட்டமிட்டு செய்து இருககான்...’’ - மாணிக்கத்தின் அலசல் மிகத்தெளிவாக இருந்தது.

‘’ உண்மைதான் மாணிக்கம். நம்ம கண்ணுல மண்ணு தூவறான் ஒருத்தன் அப்படின்னா நம்மை பத்தி நிறைய விவரங்கள் தெரிஞ்சு வைச்சு இருககான். நம்ம ரெண்டு பேரு குரலையும் நகலெடுத்து இருக்கான். நம்ம கோடிங்கை நம்ம பாஸ்வேர்டை ஒன்னு விடாம சுட்டு இருக்கான்... ‘’ - விரக்தி மிகுந்த குரலில் ஆறுமுகம் கூறிவிட்டு ஷோஃபாவில் சாய்ந்தார் ஆறுமுகம்.

’’ ஐயா .. இது நம்மால் கண்டுபிடிக்க முடிகிற விடயம்னு தெரியலை. மிகத் திறமை வாய்ந்த நிபுணர் மூலமா இதைவிசாரிக்க சொல்லலாம் ஐயா.. ஆனால் அவங்க மிகவும் நம்பகமானவங்களா இருக்கனும்.. தப்பித் தவறி எதிர்க்கட்சிக்கு விஷயம் லீக் ஆனா நாம் இழப்பது பணம் மட்டும் இல்லை ஐயா... ‘’ - மாணிக்கத்தின் குரலில் இயலாமையின் குரோதம் தெரிய வந்தது.

’மாணிக்கம் சொல்வதில் இருந்த கசப்பான உண்மை ஆறுமுகத்தையும் கவலையில் தோய வைத்தது.

’’ எதாவது செய்டா மாணிக்கம்.. இனியும் இருப்பதெல்லாம் இழக்கும் முன்னால எதாச்சும் செய்யனும். எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. பர்சண்டேஜ் பேசிப்பாரு. எப்படியாச்சும் செய்டா எதாச்சும்...’’ - மாணிக்கத்தின் மேல் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்க வைத்தது.

திருடனுக்கு தேள் கொட்டும் போது உரக்க கத்தி ஊரை எழுப்பவா முடியும்..?

’’ ஐயா... இந்த வேலைக்கு ரொம்ப நம்பகமான திறமைசாலியான ஆளுன்னு சொன்னா என்னைப்பொறுத்த வரை சென்னையின் லீடிங் டிடெக்டிவ் விக்னேஷ் தான் சரின்னு படுது ஐயா.. ‘’ - மாணிக்கம் உறுதியுடன் கூறினான்.

‘’ அப்படியா..? அவர் திறமைசாலியா..? வயசுல சின்னவர்னு கேள்விப்பட்டு இருக்கேனே...’’ - ஆறுமுகத்தின் முகத்தில் ஐயம் படர்ந்தது.

‘’ இல்லை ஐயா ... விக்னேஷ் கைவைக்கும் கேஸ் எதையும் வெற்றிகரமா முடிக்காமல் விடுவதில்லை.. அவர் பார்வைக்கு எதுவும் தப்புவதுமில்லைன்னு பேரு ஐயா... ‘’ - மாணிக்கம் உறுதி குறையாமல் கூறினான்.

‘’ சரிடா... என்னமோ செய்... ஆனா இதை சும்மா விடக்கூடாது... என்ன ஆனாலும் சரி.. ஆனா விஷயம் கமுக்கமா முடிக்கனும்... ‘’’ - சந்திப்பு முடிவடைந்தது என்பது போல் ஆறுமுகம் எழுந்தார்.

மாணிக்கம் துரிதமாக வெளியேறி விக்னேஷை சந்திக்க அண்ணாநகர் விரைந்தான்.

மாணிக்கம் விக்னேஷைச் சந்தித்தபோது விக்னேஷ் தனது அசிஸ்டண்ட் வசந்தியை கட்டி அணைத்துக்கொண்டு இருந்தான்...

துடிப்புகள் தொடரும்..!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 5

ராகவனுக்கு இருந்த பல பிரச்சினைகளில் அந்த சிடி பற்றி மறந்தே போனான். அந்த பேங்க் மேனேஜரை வங்கியில் சந்தித்து பர்சனல் லோன் ப்ரொசீஜர்களை கவனமாக கேட்டுப் பெற்றான். அவர் தனது வங்கியில் கணக்கு திறந்து அந்த அக்கவுண்ட் நம்பரைக் குறிப்பிடச் சொன்னார். எலலா ஃபார்மாலிட்டிகளையும் முடித்து விடைபெற்ற போது அந்த லோன் மேனேஜர் கூறியது கொஞ்சம் வருத்தம் அடையச்செய்தது அவனை.

‘’ என்னமோ ஸ்விஸ் பேங்க்ல அககவுண்ட் ஓபன் செய்தமாதிரி நினைச்சு சும்மா இருந்துடாதீங்க.. மினிமம் பேலன்ஸ் மெயிண்டெய்ன் செய்யனும். லோனுக்குள்ள ஒரு இ எம் ஐ தொகையாவது விட்டு வைக்கனும்.. ’’ - என்று அவர் சொன்ன விதத்தில் ஏழைகளுக்கு கிடைக்கும் மதிப்பு கூட கடன்காரர்களுக்குக் கிடைக்காது என்னும் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டான்.

‘’ யோவ்.. ஓவரா பேசறே இல்ல...? இரு இரு ...எனக்கும் காலம் வரும்.. எதுனா மிராக்கிள் நடக்கும். எனக்கும் வெளிநாட்டு பேங்க்ல கோடிக்கணக்கா கிடக்கும்... அப்ப பாக்கிறேன்.. உன் மூஞ்சை எங்க கொண்டுபோய் வைச்சுப்பேன்னு..’’ - என்று சத்தமாகக் கத்தினான் மனதுக்குள்.

தலைவலியுடன் வீட்டுக்கு வந்த அவனை நேரம் காலம் தெரியாமல் ‘’ என்னங்க... பையனுக்கு அடுத்த வாரம் பர்த் டே வருது... ட்ரெஸ் எடுக்கவேண்டாமா ’’ - என்று மங்களம் கூறியது அவனது ஆவேசத்தை வெளித்தள்ளியே விட்டது.

’’ ஆமாம்... அது ரொம்ப முக்கியம்... உங்கப்பன் எனக்கு ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணி கோடிக்கணக்குல போட்டு வைச்சு இருக்கான் பாரு... போடி .. போய் உன் வேலையை கவனி.. எல்லாம் நடக்கும்..’’.- எரிந்து விழுந்துவிட்டு தன் அறைக்குள் சென்று கணினியைத் திறந்தான்.

மனம் சரியில்லாத போது அவன் கணினியைத் திறந்து நண்பர்களுடன் சாட் செய்வதும் தமிழ் மன்றத்தில் அமரன் பதிவுகளை கூர்ந்து கவனிப்பதும் வழக்கம்.கண்ணில் விளக்கெண்ணை போட்டுக்கொண்டு நுணுக்கமான விவரங்களைக்கூட விடாமல் அலசி புள்ளி விவரங்களுடன் பதிவு இடும் அவர் வழக்கம் இவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்த்தது இல்லை என்றாலும் மூக்கில் வந்து விழும் கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு அவர் கணிணியைப் பார்த்து பதிவு இடுவது போல கற்பனை செய்துபார்த்து சிரிப்பான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென்று சிவா ஜி என்பவர் இட்டு இருந்த செய்திகளில் ஸ்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இட்டு இருந்த அரசியல்வாதிகளின் விக்கிலீக்ஸ் பட்டியல் பதிவு அவனைக் கவர்ந்தது.

மிக சுவாரசியமாக பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு ஓரிடத்தில் கண்கள் குத்திட்டு நின்றன.

A ARUMUGAM 2800 CRORES ALTERNATE BANK ABS 1 MAIN ACCOUNT.

இந்த இடத்தைப் பார்த்ததும் ஏதோ ஒரு நினைவு சட்டென்று மூளையில் பிரகாசித்தது. எங்கோ ஒரு ஃப்ளாஷ் அடித்தது,.என்ன என்று மூளையைக் கசக்கிப்பிழியும் முன் அடுத்து சிவா இட்டு இருந்த இந்த லிஸ்ட் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தைப் பார்த்ததும் குழப்பத்தை விட்டெறிந்தான் ராகவன்.

ஆயினும் அவனுள் எதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. ஏபிஎஸ் ஏபிஎஸ் என்ற எழுத்துகள் தட்டாமாலை சுற்றி வந்தன..எங்கோ இவ்வெழுத்துகளைப் பார்த்த நினைவும் அது மூளையில் கொடுத்த துடிப்புகளும் அவனை குழம்பச்செய்தன..

ஒரு வேளை லோனுக்காக அப்ளை செய்த வங்கிக்கணக்காக இருக்குமோ என்று யோசித்தான். ஆனால் அது ஓபிஎஸ் அதாவது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் அல்லவா..?

ஏபிஎஸ் ஓபிஎஸ் எஸ்ஓபி பிஓபி எஸ்பிஐ என்று அவனது மூளைக்குள் ஆங்கில எழுத்துகள் பட்டாம்பூச்சிகள் போல பறந்துகொண்டே இருந்தது.

மேற்கொண்டு தமிழ் மன்றத்தில் மனம் லயிக்கவில்லை. கலைவேந்தன் என்பவர் எழுதிய படுத்தலான காதல் கவிதைகள் அவனது எரிச்சலை இன்னும் அதிகமாக்கின. இந்தாளு யாருக்காக கவிதை எழுதறான்..? இங்கே என்ன எலலாரும் தமிழ் இலக்கியம் படிச்சுட்டா இணையத்துக்கு வராங்க... சுத்தமா ஒன்னும் புரியாம அந்த காலத்து ஆதிக்கிரந்த தமிழில் என்னமோ புலம்பித்தள்றான்.. ராகவனது எரிச்சல் அந்த கவிஞனின் மேல் படர்ந்தது..

சரி.. கொஞ்சம் மாலைநேர வாக்குக்காவது போய் வரலாம் என்று கணிணியை அணைக்கப்போகும்முன் அவனது ஜிமெயிலில் வந்து கண்ணடித்த விளம்பரம் அவனைக் கவர்ந்தது.

ஸ்விஸ் வங்கியில் கணக்கு துவக்க வேண்டுமா எளிது எளிது எளிது என்று மிக எளிதாக அந்த எளிது மின்னிக்கொண்டு இருந்தது.

என்னதான் அதுல இருக்குன்னு பார்க்கலாமே என்று கிளிக்கியவன் கண்முன் வெளிநாட்டு ஏஜண்டின் விளம்பரம் அசுவாரசியமாக ஸ்விஸ் வங்கி கணக்கு துவக்குவது எப்படி என்று விலாவாரியாக மூளை சிதறிக் கொட்டிவிடும் போல் புள்ளி விவரங்களை அள்ளித்தெளித்துக் கொண்டே இருந்தது.

அப்போது தான் அந்த ஏபிஎஸ் அல்டர்நேடிவ் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து என்னும் எழுத்து அவனது மூளையில் மீண்டும் ஒரு வெளிச்சத்தைக் கொணர்ந்தது.

ஆ.... ஐ காட் இட்... என்று மனதுக்குள் கத்தியவன் அவசரமாக அன்று அசுவாரசியமாக விட்டெறிந்த அந்த மாற்றுத்திறனாளிகள் இயக்கக விளம்பர சிடியைத் தேடி எடுத்து அதை கணினியில் செலுத்தினான்.

பார்த்துக்கொண்டே வந்தவன் அந்த எச் டி எம் எல் எர்ரர் கோடு வந்ததும் அதை பாஸ் செய்துவிட்டு அதை டிகோடிங் செய்ய முயன்றான்.


<html>

<head>
<meta http-equiv="Content-Language" content="en-us">
<meta name="GENERATOR" content="Microsoft FrontPage 5.0">
<meta name="ProgId" content="FrontPage.Editor.Document">
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title>New Page 1</title>
</head>

<body>

<p>ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3 </p>
<p> </p>

</body>

</html>

என்ற அந்த சிடியின் கோடிங்குகளை டி கோட் செய்த போது கீழ்க்கண்ட விவரம் வந்தது.

ABS CDE 080009379298489030 AA CBS FRMT MULTI SFHEORUUIN 52845038 CNTRY CDE
KEOAUAKDEJOAA 37944009-34949-2949--3930-3-3

மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!


துடிப்புகள் தொடரும்...
 
எனக்கும் தட்டாமாலை சுற்றுவது மாதிரிதான் இருக்கிறது.:mini023: மிகவும் தீவிரமாகவே யோசித்து எழுதுகிறீர்கள். சம்பவங்கள் அனைத்தும் இயல்பாக இணைகின்றன. துப்பறியும் நிபுணரின் வருகையை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். தொடருங்கள், தொடர்கிறேன்.
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 6

ண்மையில் மாணிக்கத்தின் கண்கள் ஏமாந்துதான் போயின.

மாணிக்கம் பின்னாலிருந்து பார்த்த போது விக்னேஷ் வசந்தியைக் கட்டிப்பிடித்து நின்ற மாதிரி தெரிந்தாலும் உண்மையில் அன்று வசந்தி கண்ணில் விழுந்து ரொம்ப நேரமாக அவளைக் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்த தூசியை அவ்வளவு நெருக்கத்தில் நின்று அவள் கன்னத்தை ஏந்தி நின்று ஊதியதால் மாணிக்கம் இருந்த குழப்பத்தில் கட்டிப்பிடித்ததாக எண்ணிவிட்டான். ( அப்பாடா... எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு மு மன்ற வாசிகள் கிட்ட : ) )

மாணிக்கம் தன்னை சுதாரித்துக்கொண்டு கனைத்தான். அப்போது தான் இவனைத்திரும்பிப்பார்த்த விக்னேஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இவனிடம் அங்கே இருந்த சேரைக்காட்டி உட்கார வைத்துவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

கண்ணில் இருந்த தூசி வெளியானதும் ஆசுவாசம் அடைந்த வசந்தி - வயது 27 - கல்வி பி ஏ பி எல். - கல்யாணம் ..? ஊஹூம். இன்னும் இல்லை. ராஜ சக்தி விமல் சிவஹரி போன்ற எளிஜிபில் பேச்சலர்களுக்காகக் காத்திருக்கும் கொள்ளை அழகி வசந்திக்கு ஒரே லட்சியம் விக்னேஷ் போல மிகப்புகழ் பெற்ற டிடெக்டிவாக ஆக வேண்டும் என்பது தான்.வசதி மிக்க பெற்றோரின் செல்ல மகள்.சுருக்கமா சொல்லப்போனால் ஓர் ஆண் பாரதி..!

அவள் விக்னேஷிடம் அசிஸ்டண்டாக சேர்ந்து இரண்டே வருடம் தான் ஆகிறது. அதற்குள் மிக சிக்கலான கேஸ்களில் இருக்கும் முடிச்சுகளைக் கூட அவிழ்க்கும் திறமையை விக்னேஷ் கற்றுக்கொடுத்து இருந்தான்.

விக்னேஷ் போன்ற டிடெக்டிவ் புலியுடன் இணைந்து செயலாற்றுவதில் கர்வம் உண்டு அவளுக்கு.

ஏன் இருக்காது...?

விக்னேஷ் தமிழகத்தின் மிகச்சிறந்த துப்பறிவாளனாக பெயர்பெற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. 35 வயதில் அவன் இத்தனை பேர் பெற்றதுக்கு முக்கிய காரணம் அவனது சுறுசுறுப்பான மூளை. அவனிடம் வருபவர் தரும் சிற்சில நுனிகளைக் கொண்டு உடனேயே ஐம்பது சத விகிதம் என்ன நடந்தது என்பதை ஊகித்துவிடுவான். ஆனால் அதை யாரிடமும் பகிரமாட்டான். அவனுக்குரிய தனிபாணியில் விவரம் சேகரிப்பான்.

இத்தனை தகுதி இருந்தும் மணம் முடிக்காமைக்கு காரணம் - அவன் கல்யாண வாழ்க்கையை நம்புபவன் இல்லை. அது போகட்டும். அது அவன் தனிப்பட்ட பிரச்சினை.

’’ போய் நல்லா முகம் கழுவி கலைஞ்சு போன மேக்கப்பை டச் பண்ணிக்கிட்டு வா வசந்தி’’ - என்று புன்முறுவலுடன் அவளை தன் அலுவலக உள் அறைக்கு அனுப்பிய விக்னேஷ் ‘’ சொல்லுங்க மாணிக்கம் ... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ’’.. - என்றான்.

மாணிக்கம் வியப்பின் உச்சியில் சேரின் நுனிக்கே வந்தான்.

’’ என் பெயர் மாணிக்கம்னு எப்படி உங்களுக்கு தெரியும் ’’ - என்றான்..

’’ அது மட்டுமா ..? நீங்க அமைச்சர் ஆ ஆறுமுகத்தின் அந்தரங்க ஆலோசகர் என்பதும் தெரியும்..’’ - மாணிக்கத்தின் வியப்பை இன்னும் அதிகமாக்கினான் விக்னேஷ்.

என்ன தான் அமைச்சரின் பி ஏ என்றாலும் கூடிய வரை பொது இடங்களில் தன்னைத் தலை காட்டிக்கொள்ளாமல் இருந்தான் மாணிக்கம். அவன் நேரடியாக அரசியலிலும் தலையிடுவது இல்லை. நெருங்கிய சொந்தமான ஓரிருவருக்கு மட்டுமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவி இருக்கிறானே தவிர வேறு எதிலும் தலையிட்டதும் இல்லை.

மாணிக்கம் அப்படி பட்டும் படாமலும் இருக்க வலுவான காரணம் ஒன்றும் உண்டு. என்ன தான் மாணிக்கம் ஆறுமுகத்தின் அந்தரங்க நிழல் என்றாலும் அவன் அவர் சார்ந்த கட்சியையும் அதன் போக்கையும் அறவே வெறுத்தான். நிறைய படித்து அரசியல் ஞானமும் உலகவியலும் மனோதத்துவமும் பொருளாதாரமும் கணிணி அறிவும் நிறைந்த மாணிக்கம் இப்படிப்பட்ட கேடுகெட்ட அரசியலை விரும்பாமல் இருப்பதில் வியப்பில்லை.

தன் அறிவுக்கும் திறமைக்கும் தக்க மேடை கிடைக்காமல் ஏழ்மையில் உழன்ற மாணிக்கத்தை இப்போது கோடியில் புரளும் மனிதனாக மாற்றிய அமைச்சருக்கு அவன் மிகுந்த நன்றியுடன் இருக்கிறான். அவ்வளவுக்குமேல் அவன் யோசிப்பதும் இல்லை. விரும்புவதும் இல்லை.

இப்படி இருக்க இப்போது தன்னை அடையாளம் தெரிந்துகொண்டு விக்னேஷ் அப்படி கேட்டதும் அவன் வியப்பில் ஆழந்தான்.

’’ என்ன யோசிக்கிறீங்க...?நான் சொன்னது தப்பா...? ’’- என்ற விக்னேஷின் கேள்வி அவனைச் சுயத்துக்கு கொண்டு வந்தது.

‘’ நான் கேள்விப்பட்டதை விட நீங்க வெரி ஸ்மார்ட்...’’ - மனம் விட்டு பாராட்டினான் மாணிக்கம்.

’’ஓகே தாங்க் யூ ’’- வெட்கத்துடன் நெளிந்த விக்னேஷ் கேட்டான். ‘’ நான் எப்படி உங்களுக்கு உதவனும்..? ‘’

இதை இங்கே பேசுவது உசிதமான்னு தெரியலை. நீங்க விரும்பினா அமைச்சர் வீட்டுக்கே வரலாம். - என்று கூறிய மாணிக்கம் விக்னேஷைக் கூர்ந்து கவனித்தான்.

அதற்குள் அங்கே வந்த வசந்தியைக் கண்டதும் மாணிக்கம் இவள் முன் பேசலாமா என்பது போல் அர்த்தமுள்ள பார்வையை விக்னேஷ் மேல் வீசினான்.

’’ இவமுன்னால எதையும் நீங்க சொல்லலாம். இவளை விட்டு என்னை விட்டு வெளியில் கசிவதில்லை எதுவும். என் க்ளையண்ட்ஸ் என் மேல் அபரிதமான நம்பிக்கை வைப்பதே இந்த நம்பகத்தன்மை காரணமாத்தான்.. கேரி ஆன் ப்ளீஸ்... - மாணிக்த்தின் மனதை வாசித்தது போல் விக்னேஷ் கூறினான்.

மாணிக்கம் எல்லா விவரத்தையும் விரிவாகக்கூறினான். இந்த பிரச்சினை தீர்த்து வைத்தால் குறிப்பிட்ட சதவீதம் ஃபீஸ் ஆக தருவதாகவும் கூறினான்.

‘’ வாவ்’’ - சத்தமாகவே விசிலடித்தான் விக்னேஷ்.

’’என் ஃபீஸ் என்ன தெரியுமா ..? ‘’ - என்று கண்களில் குறும்புடன் கேட்ட விக்னேஷை சட்டென கூர்ந்து பார்த்தான் மாணிக்கம்.

’’ மொத்த மதிப்பில் நாற்பது சதவீதம்’’. - இப்படி விக்னேஷ் சொன்னதும் அவனை மிரண்டு போய் பார்த்தான் மாணிக்கம்.


துடிப்புகள் தொடரும்...!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 7

கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 7


மூளையில் ஒரு அதிரடி மின்னல் உருவாக , அந்த ஏபிஎஸ் ஏ ஏ மற்றும் சி பிஎஸ் எழுத்துகள் ஒரு வைரச்சுரங்கத்தின் சாவிகளாக மாறி அவனைச்சுற்றி தட்டாமாலை ஆடிக்கொண்டு இருந்தது..!

உடனடியாக தமிழ்மன்றத்தில் பதியப்பட்டு இருந்த விக்கிலீக்ஸின் ஸ்விஸ் வங்கிக் கணக்குப்பட்டியலை மீண்டும் பார்த்தவன் இந்த சிடியில் இருக்கும் கோடிங்குக்கும் அதற்கும் எதோ தொடர்பு இருக்கவேண்டும் என உறுதியாக முடிவெடுத்தான்.

உடனடியாக இணையத்தில் ஸ்விஸ் வங்கிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விவரங்களைப் பற்றி தகவல்கள் சேகரித்தான். வங்கிக்கணக்கு துவக்குவது எப்படி செயல்பாடுகள் எவ்விதம் என்றெல்லாம் முழுக்கவனத்துடன் வாசித்தான்.

இடையில் உணவுக்காக வந்து அழைத்த மனைவியிடம் உணவு பிறகு சாப்பிடுவதாகவும் காபி மட்டும் கொண்டு வரும்படியும் சொன்னான். மிகத்தீவிரமான சிந்தனைகள் அவனை அலைக்கழிக்கும் போதும் தீவிரமாக எதிலும் ஈடுபடும் போதும் காபி அவனுக்கு மிகவும் உபயோகமான உற்சாகமூட்டியாக இருந்து வந்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொன்றுக்கும் தனிவித லாகின் முறைகள் இருப்பினும் பொதுவான வழிமுறைகள் என்னவென்பதை கூர்ந்து அவதானித்தான். அவற்றில் யுபிஎஸ் வங்கியின் நடைமுறைகளில் பயன்பாட்டு விதிகளின் டெமோக்களும் தென்பட்டன.

கிட்டத்தட்ட அனைத்து ஸ்விஸ்வங்கிகளின் நடைமுறைகளைப் படித்த அவன் முக்கிய வழிமுறைகளைத் தொகுத்து கீழ்க்கண்ட பட்டியலை எழுதினான்.

முக்கியமான தேவைகள் மற்றும் குறியீடுகள்.

1.பி ஏ எஸ். ( பர்சனல் அக்ஸசிங் சிஸ்டம்.)

2.காண்ட்ராக்ட் எண்.(ஒவ்வொரு முறைக்கும் இது மாறுபடும். குறிப்பிட்ட நேரம் வரையே செல்லுபடும்.தலை சொரிய அங்கே நேரமில்லை. மிகச்சரியாக ஆறு இலக்கம்.)

3.பி ஐ என். ( பர்சனல் ஐடண்ட்டிஃபிகேஷன் நம்பர்.) யூனிக்.தொலைந்தால் / மறந்தால் கிட்டத்தட்ட கோவிந்தா.

4.அக்செஸ் கார்ட் நம்பர்.கார்ட் ரீடர் மற்றும் அக்செஸ் கீ. மிக மிக முக்கியமானது.

5.வாய்ஸ் ரெகக்னிஷன். ( சில கேஸ்களில் )

6.ரேகை ரெகக்னிஷன். ( ஆப்ஷனல் )

7.எஸ் எஸ் எல். ( செக்யூரிட்டி சாக்கெட் லேயர் ) கோட். உயர்ந்த வகை பாதுகாப்புக்கு.

8. காம்பினேஷன் ஆஃப் அல்காரிதம். ( பொதுவாக அனைத்து ஸ்விஸ் வங்கிகளின் நடைமுறை. மிகவும் உயர்தர பாதுகாப்பு உறுதி.

9. ஐ எஸ் பி காம்பினேஷன் ஐடண்டிஃபிகேஷன். ( ஆப்ஷனல். ஆனால் பாதுகாப்பானது )

10. பிரௌசர் காம்பினேஷன் ஆப்ஷன். ( சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் எனேபில்ட், ஆப்ஷனல்.)

11. இண்டர்னெட் கேஷ் மெமரி எரேசர். ( ஆப்ஷனல் ஆனால் சிபாரிசிக்கப்பட்டது.)

இந்த குறிப்புகளுடன் எச்சரிக்கை விதிமுறைகள் நிறைய கிடைத்தன. லாகின் எளிதென்றாலும் குறிப்பிட்ட பெனிஃபிசரிக்கு பணம் செலுத்தும் போது ட்ரான்சாக்சன் பாதுகாப்புமுறைகள் பக்கங்களாக நீண்டதால் அவற்றை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கிவிட்டு லாகின் முறைகளை வரிசைப்படுத்தி கீழ்க்கண்டவாறு எழுதி தயாரித்தான்.

1.முதலில் லாகின் பக்கம் திறக்க வேண்டும்.

2.அடுத்து அக்செஸ் எண் அல்லது காண்ட்ராக்ட் எண் குறிப்பிட்ட இடத்தில் பதியவேண்டும். காபி பேஸ்டிங் முதலானவை தடை செய்யப்பட்டு இருக்கும். நேரடியாக தவறின்றி தட்டச்சு செய்தல் மிக முக்கியம். அவசியமெனில் விர்ச்சுவல் கீபோர்ட் பயன்படுத்தலாம். இது பாதுகாப்பு மேம்பாட்டின் மிக உயர் தரமான வழிமுறை.

3.உள்நுழை விதிகள் கவனிக்கப்படவேண்டியவை.

அ. சரியான குறியீடுகள்.
ஆ. செக்யூரிட்டி கோடிங் சிஸ்டம் சரி பார்த்தல்.
இ. ஸ்டெப் பை ஸ்டெப் டெமொக்கள். சரியான முன்பயிற்சி.

4. செக்யூரிட்டி கேள்விகள் ( குறைந்த பட்சம் மூன்று ) அவற்றின் சரியான பதில். குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக அளிக்கவேண்டியவை. மூன்று தடவைகளுக்கு மேல் கணக்கு முடக்கப்படும் அபாயம்.

5. தாங்கள் தேர்ந்தெடுத்த வாய்ஸ் மற்றும் ரேகை ரெகக்னிஷன் ப்ரொசீஜர்ஸ்.

6 உள் நுழைந்து விட்டீர்கள்.

ராகவன் மலைத்துப் போனான்.

கணிணித்துறையில் பலவித சவால்களை எடுத்துக்கொண்டு முறியடித்தவன். ஹாக்கிங் டிகோடிங் முதல் வலுவான பாஸ்வேர்ட் க்ராக்கிங் வரை அவனது திறமை அவன் அலுவலகத்தில் மிகப்பிரசித்தம்.

பலமுறை இவன் மங்களத்தின் மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் வேளையிலும் ஹன்சிகா மோத்வானியின் சுகமான கனவு அணைப்பில் இருக்கும் போதும் அவனது மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான கொலம்பியா தலைமை அலுவலகத்திலிருந்து ஹாரிசன் ஸ்டோன்மேன் மற்றும் நிகோலஸ் ஆகியோரின் தொலைபேசி கால்களால் துரத்தப்பட்டு அதிவேக தனது இணைய இணைப்பின் மூலம் அவர்களின் பிரச்சினைகளை மூன்று முறை இடையில் கொட்டாவி விட்டுக்கொண்டே தீர்த்துவைப்பவன்.

எனினும் இது புதுமையானதாகவும் சுவாரசியமாகவும் தென்பட்டது.மேலும் இதுவரை இவன் பணியில் குறுக்கிடாத ஒரு விசிலடிக்க வைக்கும் பணியாகப் பட்டது.

சிடியில் இருந்த கோடிங்குகள் அவனது சிந்தையைக் கிளறியது. மீண்டும் மீண்டும் அந்த சிடியை ஓடவிட்டான். பல வீடியோ கிளிப்புகளை முதன் முறை பார்த்த போது ஸ்கிப் செய்தவன் இப்போது ஒரு கணம் விடாமல் கூர்ந்து கவனித்தான். சில பல ஆளும்கட்சியின் திருமுக மந்திரிகளின் உப்புக்கு மதிப்பு பெறாத உரைகளைக் கவனித்தான். பார்த்துக்கொண்டே வந்தவன் ... அட ... அமைச்சர் ஆ ஆறுமுகம் கூட பேசி இருக்கிறாரே... கேட்டுக்கொண்டு வந்தவன் அமைச்சர் ஆறுமுகம் பேசும் பகுதிகள் மிக அமைதியாக குண்டூசி விழுந்தால் கேட்கும் பின்னணியில் பேசியது வியப்பாக இருந்தது... அட அட... சட்டென அவன் முகம் பிரகாசித்தது... வாய்ஸ் ... வாய்ஸ் ... மைகாட்.. அவன் தனது சேரின் முன் நுனிக்கு வந்தமர்ந்தான்.

‘’ இந்த ஆட்சியில் மனித வளம் பெருகியுள்ளது. ஔவை பாடினார்.. கூன் குருடு செவிடு பேடி நீங்கிப் பிறத்தல் அரிது என்று... ஆயினும் அவ்வம்மையார் இன்று இருந்தால் இந்த திருமுக ஆட்சியில் பிறந்தால் எவ்வித குறைபாடு இருந்தாலும் ஒன்று எட்டு பதினாறு எழுபத்திரண்டு நூற்று ஒன்பது நூறு ஆயிரம் கோடி என்ற வகையில் மக்கள் மிகவும் மேம்பாடு அடைந்து இன்று ஒரு அரசனைப்போல் எல்லா மக்களும் வாழ்கிறார்கள் என்றால் அந்த பெருமை என் யானை பூனை பானை சேனை தானைத் தலைவனுக்கே சென்று சேரும் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.. ‘’

சட்டென்று சில பிரகாசமான பொறிகள் அவனது மூளையில் பறக்கத்தொடங்கின.அதே சமயம் எச்சரிககை உணர்வொன்றும் அவனைத் தொற்றிக்கொண்டது.

இந்த விடயத்தை மிகக்கவனமாக கையாள வேண்டிய அவசியம் அவனுக்கு தென்பட்டது. நெட் மாஸ்கிங் ஏற்படுத்தினான். ஃபேக் ஐ எஸ் ப்ரோட்டோகால் தயார் செய்தான்.இதில் அவன் மிக மிக கைதேர்ந்தவன்.

ஆஹா... இப்போது எந்த கொம்பனாலும் இவனது நடவடிக்கைகளை ட்ரேஸ் செய்ய இயலாது.

’’ மங்கள்ம் இன்னொரு காபி...’’- உள்பக்கம் குரல் கொடுத்தவன் தீவிரமாக அந்த சிக்கல்களில் மூழ்கிப்போனான்.

துடிப்புகள் தொடரும்...!
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 8

’’ நாற்பது சதவீதமா ...? ’’ - வாயைப் பிளந்தான் மாணிக்கம். ‘’ இது பத்தி ஐயாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கனும் விக்னேஷ் சார்..’’ - என்று பரிதாபமாக விழித்தான்.

‘’ அட கவலைப்படாதீங்க சார்... நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன். வேலை முடித்த பிறகு என் ஃபீஸ் என்ன என்பதையும் என்னென்ன வகையில் செலவினங்கள் என்பதையும் பில் அனுப்புவேன். அதை கொடுத்தால் போதும். கோடிக்கணக்கா வாங்கி உங்களைப்போல நெருப்பை வயித்தில் கட்டி அலையனுமா நான்..’’ - குறும்புடன் விக்னேஷ் கூறும் போது அவனைப் பெருமிதமாக விழுங்கிவிடுவதைப் போல பார்த்தாள் வசந்தி.

‘’ சரி சரி ... எனக்கு சில விவரங்கள் வேண்டுமே.. ‘’ - என்று மாணிக்கத்திடம் சீரியசான முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

‘’ கேளுங்க சார்.. ‘’ - உண்மையில் மாணிக்கத்தின் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவிட்டான் விக்னேஷ். இப்போது இருக்கும் நெருக்கடியில் பாதிக்குப் பாதி கிடைத்தாலே கூட சரியென்று சொல்லி இருபபார் ஆ ஆறுமுகம். இந்த நிலையில் முன்பே சொன்னபடி திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல தான் அவர்களின் நிலை இருந்தது.

நினைத்து இருந்தால் போலீசின் உதவியோடும் சைபர் க்ரைம் போலீசார் உதவியோடும் செயலில் இறங்கி பிரச்சினையைத் தீர்த்து இருக்கலாம். ஆனால் இப்போது தேர்தல் நெருக்கத்தில் இருக்கும் நிலையில் போலீசார் இவருக்கு நன்றியுடன் உண்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. மேலும் தேர்தலுக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏற்கனவே இந்தியா முழுக்க கறுப்புப்பணத்திற்கு எதிரான முழ்க்கம்வேறு வலுப்பட்டு இருக்கும் நிலையில் இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலை.

இத்தகைய இக்கட்டில் விக்னேஷ் கேட்ட தொகையைக் கொடுக்க தயாராக இருந்தார்கள் தான். இருப்பினும் விக்னேஷின் இந்த நேர்மையும் பேராசைப்படாத இயல்பும் மாணிக்கத்துக்கு இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வியக்க வைத்தது.

’’ முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க... முதன்முதலில் இப்படி ஒரு தொகை ட்ரான்ஸ்ஃபர் செய்யபப்ட்டதை எப்போ கண்டு பிடிச்சீங்க...? இதுக்கும் முன் இப்படி நடந்து இருக்கா..? - விக்னேஷ்.

‘’ இல்லை சார். இன்னைக்கு காலையில் அமைச்சர் என்னை அழைத்து விவரம் சொன்னப்பதான் எனக்கும் தெரியும். ‘’ - மாணிக்கம்.

‘’ மொத்தம் எத்தனை கோடி கணக்கில் இருந்தது..? ’’ - விக்னேஷ்.

இந்த கேள்விக்கு பதில்சொல்ல சற்று தயங்கினான் மாணிக்கம். அவன் கண்கள் ஒருமுறை வசந்தியைப் பார்த்துவிட்டு தாழ்ந்தன.

‘’ இதோ பாருங்க மாணிக்கம்.. டாக்டர் மற்றும் வக்கீல்கள்கிட்ட மாத்திரம் இல்லை. எங்களைப்போன்ற டிடெக்டிவ் கிட்டயும் எதையும் மறைக்கக்கூடாது. நான் முன்பே சொல்லிட்டேன். ரகசியம் காக்கப்படும்னு. நீங்க நம்பித்தான் ஆகனும். வேற வழியும் இல்லை. ‘’ - விக்னேஷின் வார்த்தைகள் திட்டவட்டமாக வந்தன.

’’ உண்மைதான் சார் ... மொத்தம் 3300 கோடிகள். ‘’ - தயக்கத்துடன் மெல்லிய குரலில் சொன்னான் மாணிக்கம்.

‘உய்ய்ய்ய்ய்’ - வியப்பான சீழ்க்கை ஒலி கிளம்பியது விக்னேஷிடமிருந்து.

வசந்தியோ மயங்காத குறையாய் கண்கள் இடுங்க புன்னகைத்தாள்.

’’ ஓகே ஓகே... இந்த தொகைஅளவும் கணக்கு விவரங்களும் யாருக்கெல்லாம் தெரியும்..? - விக்னேஷ் தொடர்ந்து கேட்டான்.

’’ கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்குத்தான் தெரியும். ‘’ - மாணிக்கத்தின் கண்கள் தாழ்ந்தன.

‘’ கம் ஆன் மாணிக்கம் சார்... கண்டிப்பா நீங்க எதையோ மறைக்கிறீங்க.நீங்க அனுபவிப்பது யாரோ ஒரு கலைநுணுக்க நிபுணர் நிர்மாணித்த எழில் கூடத்தைத் தான். சொல்லுங்க ... அந்த டெக்னீஷியன் - அந்த மூனாவது ஆள் - யாரு..? எங்க இருக்கார்..? ‘’- விக்னேஷின் திறமை மாணிக்கம் சொல்லத்தயங்கிய விஷயத்தைச் சட்டென வெளிக்கொணர்ந்தது.

நாம் லேசுப்பட்ட ஆள்கிட்ட வரலை. மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர் கிட்ட வந்து இருக்கோம் என்பதை உணர்ந்த மாணிக்கத்துக்கு கண்டிப்பா இதைக் கண்டுபிடிச்சு துப்பு துலக்கத்தான் போகிறான் விக்னேஷ் என்பதை நொடியில் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டான்.

‘’’ ஆமாம் விக்னேஷ்.. ( ஓரளவு நட்புணர்வு வந்துவிட்டு இருந்தது. எனவே சாரைத் தவிர்த்தான் மாணிக்கம். ) நீலமேகம்னு ஒருத்தர். அவர் பன்னாட்டு வங்கிகளின் இண்டர்நேஷனல் ஏஜண்ட். அவர் சிங்கப்பூரில் ஒரு வங்கியில் பத்து வருடங்கள் பி ஆர் ஓ ஆக இருந்து விட்டு தமிழகம் வந்துவிட்டார். அவர் சில பல நிழலான அமைச்சர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளின் பி ஆர் ஓ ஆக இருந்து வந்தார். ..’’ - நிறுத்திய மாணிக்கம் ‘’ குடிக்க தண்ணீர் கிடைக்குமா..? ‘’- என்றான்.

உடனே வசந்தி அடுத்த அறையில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

குடித்து ஆசுவாசப்பட்டுக்கொண்ட மாணிக்கத்துக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது.

விக்னேஷ் வியக்கவில்லை. ஏனென்றால் இது போன்ற மல்டிக்ரோர்ஸ் விவகாரத்தில் மனம் பரபரத்ததிலும் வியர்த்ததிலும் வியப்பில்லை தானே..?

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அவர் தான் அமைச்சர் ஆறுமுகத்துக்கு கார்ப்பரேட் அக்கவுண்ட் ஓபன் செய்து கிட்டத்தட்ட 18 நாட்கள் எங்கள் இருவருக்கும் ட்ரெயினிங் கொடுத்தார். கொடுக்கல் வாங்கல் ஹவாலா பணம் மாற்றல் முதலான அனைத்து நுணுக்கங்களும் கற்றுத்தந்தார்.அது நடந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது.’’ - நிறுத்தினான் மாணிக்கம்.

‘’ ம்ம்ம் ... அப்படியானால் உங்கள் மூன்று பேருக்கும் இந்த கணக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களும் தெரியும் இல்லையா..? ‘’ - கேள்வியை கேட்டுவிட்டு மாணிக்கத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் விக்னேஷ்.

‘’ ஆமாம் விக்னேஷ்... இன்ஃபாக்ட் அவர்தான் வாய்ஸ் ரெகக்னிஷன் முறையில் பல லேயர் செக்யூரிட்டியுடன் கணக்கை ஆபரேட் செய்யவைத்தார். ‘’ - இப்போது ஓரளவுக்கு சகஜப்பட்டு விட்டிருந்தான் மாணிக்கம்.

இவர்கள் உரையாடலில் எந்த ருசியும் காட்டாதது போல் சில ஃபைகளை திறந்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் அத்தனையையும் ஒரு தலை சிறந்த உளவாளியைப்போல கவனித்துக்கொண்டு இருந்தாள் வசந்தி.

’’ மிஸ்டர் மாணிக்கம்.. ஒருவேளை இந்த வேலையை அந்த நீலமேகம் செய்து இருக்கலாமில்லையா...? நீங்கள் சொன்னதை வைச்சுப் பார்க்கும் போது இந்த 200 கோடி சிங்கப்பூர் வங்கிக்கு மாற்றப்பட்டு இருக்கு. மேலும் மிகவும் சாதுரியமான முறையில் இந்த வேலை செய்து இருக்காங்க.. நீலமேகம் முன்பே சிங்கையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருக்கீங்க... அப்படி பார்க்கும் போது இது ரெண்டும் ரெண்டும் நாலு என்பது போல் பொருந்தலையா...? ‘’ - விக்னேஷ் இதைக் கூறி தானே அதை நம்பாதவன் போல லேசாக சிரித்தும் கொண்டான்.

’’ இல்லை விக்னேஷ்... கண்டிப்பாக இல்லை.என்னால் நிச்சயம் உறுதியாக கூற முடியும்.. ‘’ - மாணிக்கத்தின் குரலில் உறுதி இருந்தது.

‘’ எப்படி நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுது..?’’ - விக்னேஷின் முகத்தில் கேள்விக்குறி.

‘’ காரணம் ... வந்து ... நீலமேகம் இறந்துட்டார்... ‘’ - மாணிக்கத்தின் குரலில் பதட்டம் துலங்கியது.


துடிப்புகள் தொடரும்..!
 
வித்யாசமான திருப்பத்துடன் ஒரு கதை அருமை தோழர் தொடருங்கள் ..நேரம் கிடக்கும் போது படிக்க முடியாததை தொடர்கிறேன்....
 
சந்தடி சாக்குல ராகவரு கால வாரி விட்டுடீங்க.
 
கதை நல்ல விறு விறுப்புடன் போகிறது. தொடருங்கள் கலை
 
கொல்லத் துடிக்குது மனசு..! பகுதி - 9

மாணிக்கத்தின் அந்த பதிலை எதிர்பார்த்திருந்த விக்னேஷுக்கு அது வியப்பளிக்கவில்லை தான். ஆனால் அவரகளின் உரையாடல்களைக் கண்டு கொள்ளாதது போல் கவனித்துக்கொண்டிருந்த வசந்திக்கு அது அதிர்ச்சியை அளித்தது. பிறந்ததுமுதல் பணப் பற்றாக்குறையைப் பார்த்திராத வசந்திக்கு பணத்தின் மீது பற்றும் இல்லை. அந்த மனநிலையில் இருக்கும் வசந்திக்கு பணத்திற்காக கொலையும் செய்துவிட்டார்களா பாவிகள் என்ற வருத்தம் அவள் முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது.

’’ கொன்றே விட்டீர்களா நீலமேகத்தை..? ‘’ - முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விக்னேஷ் வினவினான்.

‘’ இல்லை விக்னேஷ்.. நாங்கள் கொல்லவில்லை. அவருக்கு மாரடைப்பு வந்தது.இயற்கையான மரணம் தான் ‘’ என்ற மாணிக்கம் நடந்ததை விரிவாகக் கூறலானான்.

‘’ நீலமேகம் எலலா அரசியல் வாதிகளுக்குமே நிழலான குருவாக இருந்து வந்தார். முறைகேடான முறையில் லைசன்ஷியேட் மற்றும் தொழிற்சாலை அனுமதி என்று பலவகைகளில் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் கையூட்டுகள் அன்பளிப்புகள் அதீதமாக இருக்கும். அப்படிப்பட்ட பணத்தை - அதுவும் கோடிக்கணக்கான பணத்தை - இந்திய வங்கிகளிலோ அல்லது இந்திய சொத்துக்களிலோ முதலீடு செய்து வைத்தால் அரசியல் வாதிகளுக்குப் பெரும் பிரச்சினை வரும் என்பதால் பல வருடங்களாக இதற்கு என்ன வழி என்பதை யோசித்துக்கொண்டு இருந்த அரசியல் வாதிகளுக்கு நீலமேகம் போன்ற வெளி நாட்டு வங்கிகளின் ஏஜண்ட்கள் வரப்பிரசாதமாக அமைந்தனர். ’’ - இடையில் குறுக்கிடாமல் அமைதியாகக்கேட்டுக்கொண்டு இருந்தான் விக்னேஷ்.

மாணிக்கம் தொடர்ந்தான்.

’’ இந்தியாவில் இது போன்ற ஏஜண்ட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் பல மாநிலங்களில் பரவலாக இருக்கிறார்கள். இவர்கள் தோற்றத்தில் மிகச்சாதாரணமாக இருப்பார்கள். பெயருக்கு எந்த கம்பெனியிலாவது லீகல் அட்வைசர் அல்லது பொதுஜன தொடபாளர்களாக விளங்குவார்கள். ஏன் இந்தியாவில் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்.’’ - சற்று நிறுத்தி விக்னேஷின் முகத்தைப்பார்த்து ‘’ தயவு செய்து அவங்க எல்லாம் யார் யாருன்னு கேட்டுடாதீங்க.. இது எல்லாம் டாப் சீக்ரெட். நான் இதை வெளியிட்டதாக சந்தேகம் வந்தாலும் என்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள். ’’- என்ற மாணிக்கத்தின் முகத்தில் மரண பயம் தெளிவாகத் தெரிந்தது.

‘’ இல்லை. கேட்கமாட்டேன். தொடருங்க மாணிக்கம். ‘’ - விக்னேஷ் ஊக்குவித்தான். அவனுக்கு இதெல்லாம் அதிக வியப்பைத் தரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வியப்பின் உச்சிக்கு போனவள் வசந்தி மட்டும் தான்.

மாணிக்கம் விவரிக்க விவரிக்க ஏற்கனவே சிவந்த அழகான வசந்தியின் முகம் வியப்பில் இன்னும் சிவந்து அவளது அழகை அதிகரிக்கச்செய்தது. இத்தனை சுவாரசியத்திலும் வசந்தியின் முகத்தில் மாறிமாறி வரும் அழகியல் மாற்றங்களைக் கவனிக்கத் தவறவில்லை விக்னேஷ்.

இதை எல்லாம் கவனிக்காத மாணிக்கம் தொடர்ந்தான்.

‘’ அப்படிப்பட்ட எஜண்ட்களில் ஒருவர் தான் நீலமேகம். இவர் முன்பே பத்து வருடங்கள் சிங்கப்பூரில் இருந்த அனுபவம் இவருக்கு கை கொடுத்தது. ஸ்விஸ் வங்கிகளில் எலலாவற்றிலும் இவருக்கு பரிச்சயம் இருந்தாலும் இவர் அதிகம் டீல் செய்வது என்னவோ ஏபிஎஸ் பேங்க் தான். இவர் நினைத்தால் ஒரே நாளில் வங்கிக்கணக்கு துவக்கவும் உடனடி ட்ரான்சாக்சன் செய்து தரவும் இயலும்.

எங்க மந்திரி ஆறுமுகம் இவரைப்பற்றி கேள்விப்பட்டதும் இவரை தன் வீட்டுக்கே வரவழைத்து இது சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டார். அவரது ஹை டெக் லேப்டாப்பிலேயே நீலமேகத்தை கணக்கு துவக்க வழி கேட்டார். இத்தனைக்கும் அமைச்சர் ஒரு முறை கூட ஸ்விட்சர்லாந்து போனது இல்லை. வீட்டிலிருந்தபடியே எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.பதினெட்டு நாட்கள் அமைச்சர் வீட்டுல தங்கி எல்லா வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்தார்.

ஒரு முறை கணக்கு துவங்குவது தான் கடினம். மேலும் அந்த அக்கவுண்ட்டிலிருந்து பணம் இன்னொரு பெனிஃபிசரிக்கு அனுப்புவதும் கடினம். நீலமேகம் அதில் சில சிக்கலான வாய்ஸ் கீ எண்ட்ரி செய்து வைத்தார். அதன்படி அமைச்சர் அல்லது நான் எங்கள் சொந்தக்குரலால் சில கோடிங்கு களைச் சொல்லி ட்ரான்சாக்ட் செய்ய வேண்டிய முறைப்படி அமைத்து தந்தார்.

அதற்குப்பிறகு தாராளமாக பல லைசன்ஷியேட் கார்ப்போரேட் பர்மிட்கள் மூலம் கிடைத்த நூறு இருநூறு கோடிகள் எல்லாம் அமைச்சர்கணக்கில் போடப்பட்டு வந்தது.’’’ - கொஞ்சம் நிறுத்தி நிதானித்துக் கொண்டான் மாணிக்கம்.

எல்லாவற்றியும் கவனமாகக் கேட்டுக்கொண்ட விக்னேஷ் .’’ அதெல்லாம் சரி ..நீலமேகம் எப்படி இறந்தார்..? ‘’ - என்று கேள்வி போட்டான்.

’’ இப்படி எல்லாம் நீலமேகம் செய்து தந்தாலும் ஆறுமுகம் அவரை நம்பவில்லை. எங்கே தனது ரகசியங்களை வெளியிட்டு விடுவாரோ என்று அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மறுத்தார். நீலமேகம் எவ்வளவொ சத்தியம் செய்தும் அவரை வெளியில் விட மறுத்தார். நானும் சொன்னேன் இது கிட்நாப்பிங் கேஸ் ஆகிடும் ஐயா... வேண்டாம் அவரை விட்டு விடுஙக்ள். அவர் அப்படி எதுவும் செய்ய நினைத்தால் அவரை நாம் கவனித்துக்கொள்ளலாம் என்று ஆசுவாசம் தந்த பிறகு வெளியில் விட சம்மதித்தார்.’’

‘’ இப்படி மிரட்டப்பட்டதால் நீலமேகம் மனதளவில் மருண்டு போய் ஆறுமுகம் ஐயா கொடுத்த இரண்டு கோடி ரூபாய் கேஷைக்கூட ( அவருக்கு ஃபீஸ் ) வாங்க மறுத்து தன் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு சென்றுவிட்டார். பிறகு அவரிடமிருந்து சில மாதங்கள் தகவலும் இல்லை. கடந்த மூன்று மாதங்கள்முன் சென்னைக்கு வந்து சென்றதாகவும் ஹார்ட் அட்டாக் வந்து சில நாட்களில் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் செய்தி வந்தது. ஆனால் எங்க ஐயாமேல் பத்திரிகைகளின் சந்தேகங்கள் கறுப்புப்பண விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளி வந்த சமயம் என்பதால் அவரைப்போய் பார்க்க பயந்து நாங்கள் செல்லவில்லை. இதான் விக்னேஷ் நடந்தது. இதில் எந்த பொய்யும் நான் கூறவில்லை ’’ - என்று மாணிக்கம் கூறினான்.

‘’ சரி மாணிக்கம் .. எனக்கு நீங்க கண்டுபிடிச்ச டிரான்சாக்*ஷன் ரெஃபரென்ஸ் நம்பர் இதெல்லாம் கொஞ்சம் தர முடியுமா..? - விக்னேஷ் கேட்டுக்கொண்டு இருந்தபோது மாணிக்கத்தின் மொபைல் ஒலித்தது.

‘’ ம்ம்ம் சொல்லுங்கய்யா.. நான் விக்னேஷ் ஆபீசில் தான் பேசிக்கிட்டிருக்கேன்... என்னது ...? ஐயோ... இது எப்போ ஐயா...? அடக்கடவுளே...நீஙக் கவலைப்படாதீங்கய்யா.. உடல் நலம் கவனம்.. ‘’

- பேசிமுடித்த மாணிக்கம் , ‘’ விக்னேஷ், இன்னொரு 250 கோடி ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்குதாம்... இம்முறை லண்டன் கணக்குக்கு .. ’’ - என்று பதட்டத்துடன் கூறினான்..!

துடிப்புகள் தொடரும்..!
 
Back
Top