13
டாக்டர் முதல்ல நீங்க கயல்விழி கிட்டே விபரமா பேசி கதிரை எந்தெந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிக் கிட்டு போனாங்கன்னு பட்டியல் தயார் பண்ணுங்க. அவரோட போன கம்பெனியில் எல்லாரையும் சந்திச்சு விபரங்கள் சேகரிங்க. அவங்க வீட்டு பக்கத்துவீடு எதிர்த்த வீடு இப்படி எல்லாரையும் சந்திச்சு அவரைப்பத்தின கருத்துக்களை சேகரிங்க. நான் அரசியல்வாதி பக்கத்து கதை, கொலை விபரங்கள், போலீஸ் இன்வால்மென்ட் இப்படி கோணத்துல விபரங்களை சேகரிக்கிறேன். ஆமாம் போன தடவை அவரு போலீஸ்ல மாட்டும்போது கேஸ் ஏதாவது புக் ஆச்சா?
அவரு மேல எந்த கேஸூம் புக் ஆயிருக்காது. அதுக்கு முன்னாடியே நான் போயிட்டேன்.
இந்த வாட்டி பொய் கேஸ் தான் போடனும் அவங்க. அப்படி ஆயிருந்தா அதை பொய் கேஸூன்னு நிருபிச்சிடலாம். வேணும்னா இன்னும் ரெண்டு மூணு பொய் கேஸூகளை அந்த போலீஸ் ஸ்டேஷன்லே போட வச்சிட்டு இப்படித்தான் பொய் கேஸூகள் உருவாக்கறாங்கன்னு உடைச்சிடலாம்.
சுரேஷ் அவரு பைத்தியமாக இருக்காருன்னு நீதபதி நினைச்சா அவரு கொலை கேஸூலேர்ந்து தப்பிக்கவாவது வழி இருக்கு. ஒரு வேளை அவர் நல்ல மனநிலையிலதான் இருக்காருன்னு அவங்க நம்பினா அவருக்கு ஆபத்து இல்லையா. ஏன்னா இந்த அரசாங்க தரப்பு வக்கீலை நம்ப முடியாது. கோர்ட்டுக்கு போன பிறகு கொலை நிரூபணம் ஆன பிறகு கதிரை காப்பாத்தாமா விட்டுட்டா?
இல்லை டாக்டர். இதை அவங்க வழியில் போய் பிடிக்கறதுங்கறது புலி வால பிடிச்சிகிட்டு போற மாதிரி. ரொம்ப டேஞ்சரஸ். நாம கேஸை உடைக்கறது மட்டுமில்லாம நிஜ குற்றவாளியையும் பிடிச்சுக் கொடுக்கனும். ஆனா பயப்படாதீங்க நாம எது செஞ்சாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்வோம். உங்க இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வராது. அரசியல் பிரச்சனையில் நானும் மாட்டிக்க விரும்பலை.
அப்ப அவங்களுக்கு உதவுங்கன்னு நீங்க சொன்னது?
முதல்ல ஒரு அநாமத்து பேர்ல உங்களுக்கு ஒரு ப்ரீபெய்ட் சிம் வாங்கித் தரேன். அது மூலமா அவங்க கிட்ட பேசுங்க. கட்டாயம் அவங்க ரிக்கார்ட் செய்வாங்க. நீங்களும் ரிக்கார்ட் செய்யுங்க. அவங்க கிட்டே அவங்க எதிர்பார்த்த மாதிரியே அவங்களுக்கு ஒத்துழைப்பு தர்றதா சொல்லுங்க. மோகன் நீங்க அவங்க எதிர்பார்த்த மாதிரியே கதை எழுதுங்க. கையால வேண்டாம். கம்ப்யூட்டரில் எழுதுங்க. இமெயில்ல யாருக்கும் அனுப்ப வேண்டாம். பிரிண்ட் எடுத்துக் கொடுங்க. பிரிண்ட் வீட்டுப் பிரிண்டர்ல வேண்டாம். வெளியேர்ந்து எடுங்க. நீங்க போகாதீங்க. எழுதி முடிச்சோன்னே லாப்டாப்பில் சேஃப் ஏரேஸ் பண்ணிடுங்க. நான் சொல்றமாதிரி எழுதுங்க. ஆனா அவங்க சொன்ன மாதிரி எழுதின மாதிரி இருக்கனும். நான் உங்க இரண்டு பேரையும் சந்திக்கப் போறது இங்கே இல்லை. ஒகே?
அவன் பேசியதை எல்லாம் கண் இமைக்காமல் இருவரும் கேட்டனர். ஒரு மனோதத்துவ நிபுணர். ஒரு கணிணி நிபுணர். இருவரும் சட்டத்திற்கு முன் நெடுஞ்சான்கிடையாக விழுந்திருந்தார்கள். ஆனாலும் இருவரின் ஆர்வத்திற்கு குறைவில்லை. அப்பாவி கதிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். கதையாசிரியருக்கு பல கருக்கள் கிடைத்துக் கொண்டே வந்தன. கதை தொழிற்சாலை 24 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருந்தது.
14
கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள்.
என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க.
மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ அவர் அரசியலில் எல்லாம் சுத்த சைவம் மாதிரி.
ரத்தீஸன் இடைமறித்தார். சார் கதிர் கொலை பண்ணும்போது அவர் அந்த புத்தகத்தின் பிடியில் இருந்தார்னு சொல்றிங்க. சரி. ஆனா அந்த தொகுதி பிரச்சனையில் அவரு எம்எல்ஏ கிட்ட சண்டை போட்டது கதிர் என்கிற மனுஷனா இருக்கும் போது. இது இடிக்கிறதே. அவரு சண்டையும் கதையில வர ஒரு பாத்திரமா செய்யனும். கொலையும் அந்த பாத்திரமாகவே செய்யனும். ஒன்னும் முழு சுவாதீனத்திலும் இன்னொன்னு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் செஞ்சதா பேசினா கேஸ் உடைஞ்சிடும்.
என்ன சொல்ல வரீங்க டாக்டர் என்றார் அரசியல்வாதி.
சார் கதிரால உங்களுக்கு பிரயோசனம் இல்லை. நீங்க வேற வழியை பாருங்க.
அதை விடுங்க டாக்டர். நீங்க சொல்ல வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க.
சார். கதிர் சாதாரணமா இருக்கும் போது எம்எல்ஏ கிட்டே சண்டை போட்டு அதே கோபத்துல அவரை கொன்னுட்டாரு. இப்படி போச்சின்னா உங்க ஆளு கொலைலேர்ந்து தப்பிச்சிடுவாரு. கதிரு மாட்டிப்பாரு.
மாட்டிகிட்டு போகட்டுமே. அவரு ஒரு பைத்தியம். அவரால யாருக்கு பிரயோசனம். அவங்க குடும்பத்துக்கு வேணா ஒரு பெரிய தொகை கொடுக்கறோம்.
அது முடியாது சார். அவர் என்னோட பேஷண்ட். அவருக்கு குணப்படத்த முடியாத வியாதி ஒன்னும் இல்லை. அவரு சீக்கிரம் குணமாகி பழைய படி ஆராய்ச்சியில் இறங்குவாரு. இது உறுதி. ஒருத்தரோட வாழ்கையை அழிக்க நான் ஒப்புக்க மாட்டேன்.
சரி விடுங்க. பைத்தியம் சொல்லி கேஸூலேர்ந்து காப்பாத்திட்டா?
அதுக்கு நீங்க சொல்ற வழி சரியாகாது. அவரு புத்தகம் படிச்சதால இன்ஃபூளுயன்ஸ் ஆகி எம்எல்ஏவை கொலை பண்ணதா இருந்தா மட்டுமே அவரை விடுவிக்கலாம்.
சரி அப்படியே பண்ணிடுங்க. அவருக்கு முன் விரோதம் இருந்த மாதிரி சொன்னது வேண்டாம். அவரு ஏதோ ஒரு புத்தகத்தை படிச்சிருக்காரு. அதுல இருந்த எம்எல்ஏவோட பெயரும் இப்ப கொலையான ஆளோடே பெயரும் ஒரே மாதிரி இருக்கட்டும். அவரு மனநிலை சரியில்லாம கொலை பண்ணதா இருக்கட்டும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு நானே அவரை ரீலீஸ் பண்ணித் தரேன் என்றார் முடிவாக.
இப்போது மோகன் – அதுல ஒரு பிரச்சனை சார் என்றான்.
என்ன சார் இப்போ பிரச்சனை என்றார் அ.வா. கடுப்புடன்.
கோர்ட்ல நாம சொல்ல போற கதையில் வர புத்தகம் ஏற்கனே பிரசிரிச்ச புத்தகமா இருக்கனும். அதை படிச்சி தான் அவரு கொலை பண்ணியிருக்காருன்னா அதை இனிமே எழுதின புக்கா எப்படி காண்பிக்கிறது. அப்படியே நான் அந்த கதையும் எழுதினா பேக் டேட்டடா இணையத்துல வெளியிடனும். இப்ப இருக்கற தொழில்நுட்பத்துல என்னிக்கி அப்லோட் பண்ணினேன்னு சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதுமட்டமல்ல கதிரு அன்னிக்கு இணையத்திலேர்ந்து எடுத்தாரு அப்படிங்கறதுக்கும் ஆதாரம் உருவாக்க வேண்டியிருக்கும். அதெல்லாம் பிரச்சனை. நீங்க முதல்ல அது மாதிரி ஏற்கனவே பப்ளீஷ் ஆன ஒரு புக்கை தேடுங்க, நான் கோர்ட் ஸீன் எழுத ஆரம்பிக்கறேன். நாங்க வரோம்.
ஒரு நிமிஷம் என்று அவர்கள் சொன்னதை காதில் கேட்காத மாதிரி நகர்ந்தார்கள் இருவரும்.
அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா
ஆமாம்.
எதுக்காக வெட்டினீங்க.
இந்த மாதிரி அரசியல்வாதியால ஒரு பிரயோசனமும் இல்லை. சொந்த தொகுதிக்கு கூட ஒரு நல்ல காரியம் செய்யலை. இவங்களையெல்லாம் நடு ரோட்ல வெட்டனும்.
உங்களுக்கு மனநிலை சரியில்லையா
ஏன் சார் என்னை பாத்தா மனநிலையில்லை சரியில்லாத மாதிரியா இருக்கு.
நீங்க ஏன் உங்க ஆபீஸ் பொருட்களை போட்டு உடைச்சீங்க.
சம்பள உயர்வு கேட்டிருந்தேன். கொடுக்கலை. அதனால கோபிசிகிட்டு உடைச்சிட்டேன்.
உங்க மனநிலை சரியில்லாதற்காக நீங்க ஏதாவது மருத்துவம் பாத்தீங்களா.
சார் எனக்கு மனநிலை சரியாதான் இருக்கு. நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை. வேணும் என் குடும்பத்தாரை கேட்டுப் பாருங்க. என் காதலி கயல்விழியை கேட்டுப்பாருங்க.
சரி. சரி. இந்த கொலைக்கு உங்களுக்கு மரண தண்டனை கிடைக்கலாம் இல்லையா.
ஆமாம் சார்.
அப்ப குற்றத்தை ஒப்புக்கறீங்களா.
இத்தனை நேரம் அதைத்தானே சார் செஞ்சிகிட்டு இருக்கேன்.
நீதிபதி நடுவில் குறுக்கிட்டு நீங்க அநாவசியமா ஏன் நேரத்தை வீண் பண்றீங்க. அவரே குற்றத்தை ஒத்துகிட்டாரு. நீங்க போலீஸ் தரப்பு விபரங்களை போஸ்ட் மார்டம் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் FIR எல்லாம் விபரமா கொடுங்க. யாரும் கண்டஸ்ட் பண்ணாத கேஸூக்கு ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் என்றார்.
இல்லை. அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி அரசாங்க வக்கீல் இழுத்தார்.
என்ன சொல்றீங்க. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு சொல்லி எக்ஸம்ஷன் கேட்க போறீங்களா. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு ஏதாவது எவிடன்ஸ் இருக்கா? அதை செய்யுங்க. கேஸை தள்ளி வைக்கிறேன்.
வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.
வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.
ஆமாம். இதுவும் நீங்க எழுதற கதை தானே. என்ன பெயர் வைச்சிருக்கீங்க.
ஒரே ஒரு வாசகன். எடிட்டர்ஸ் பல பேர். இதுக்கு என்ன பெயர் வைக்கறது. இன்னும் பெயர் வைக்கவில்லை அப்படின்னு வேணா பெயர் வைக்கலாம்.
ஹா ஹா. இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவே புதுமையான டைட்டில் தான். கொடுங்க படிக்கலாம்.
ஒரு நிமிடம் அந்த நீதி மன்ற காட்சியை படித்து பார்த்தார். ம்ம். இப்படியே போனா கதையில வர கதிரும் நிஜ கதிரும் இணைஞ்சிருவாங்க. அவரு மன நிலை திடமானவன்னு நீதிபதி நம்பினாருன்னா கொலையும் அவரு தான் செஞ்சாருன்னு ஆயிடுமே. அப்புறம் அந்த அரசியல்வாதி வேற படிச்சி இதை அப்ரூவ் செய்யனுமே என்றார் குழப்பத்துடன்.
அப்போது தான் உள்ளே நுழைந்த சுரேஷ் என்னை மிஸ் பண்றீங்களா என்று கேட்டான் ஆர்வத்துடன். மோகன் டாக்டரிடமிருந்த தன்னுடைய கதை தாட்களை எடுத்து அவனிடம் நீட்டினான்.
தானும் அதை ஆமோதித்தவாறே, டாக்டர் சொல்றது சரிதான். அப்புறம் இவரை மனநிலை சரியில்லாதவன்னு நிரூபிக்க நான் உள்ளே நுழைய வேண்டி வரும்.
சரி அப்படியா இந்த அடுத்த அத்தியாத்தை பாருங்க என்று மேலும் சில காகிதங்களை நீட்டினான். ஒரு பிரதியானதால் இருவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினர்.
நீதிபதி வந்து அமர்ந்தவுடன் அரசாங்க தரப்பு வக்கீலை பார்த்து நீங்க அவரை மனநிலை சரியில்லாதவர் அப்படின்னு சொன்னீங்க போன ஸிட்டிங்கல. அங்கேர்ந்து கண்டின்யூ பண்ணுங்க என்றார்.
அரசாங்க தரப்பு வக்கீல் தொடர்ந்து பேசினார்.
கதிர் நீங்க நல்ல மன நிலையில் தான் இருக்கீங்கன்னு நீங்களும் இந்த நீதி மன்றமும் ஒப்புக்கிட்டா நீங்க பண்ண கொலைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும். இல்லையா
ஆமாம்.
எனக்கு வேலை சுலபமாயிடும். இத்தோட என் வாதத்தையும் நான் முடிச்சிக்கலாம். ஆனா நீங்க மன நிலை திடமில்லாதவர்னு எனக்கு தெரியும். உங்களுக்கு உதவி செய்யத் தான் நான் இருக்கேன். ஒன்றும் அறியாமல் நீங்க செய்த கொலைக்கு உங்களுக்கு தண்டனை வாங்கித் தரதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால நான் கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியா பதில் சொல்லுங்க. அதுக்கப்புறமும் நீங்க உங்க நிலையில் திடமா இருந்தீங்கன்னா நாமை வழக்கை முடிச்சிடலாம். சரியா
சரி சார். கேளுங்க.
உங்க பெயர் நிஜமாகவே கதிரா அல்லது நீங்க சமீபத்துல படிச்ச கதையில் வந்த கதாபாத்திரமா.
நீங்க என்ன கேள்வி கேட்கறீங்க என்று நீதிபதி கேட்டார்.
லார்ட்ஷிப் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர் மனநிலை சரியில்லாதவர். அவர் சமீபத்தில் இந்த நான்கு வைத்தியர்களிடம் தன் பிரச்சனைக்காக வைத்தியம் பார்த்துள்ளார். இவர் தான் படிக்கும் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதால் பல தவறுகள் அவர் அறியாமலேயே நடந்துள்ளன. அதனால் இவருடைய மன நிலையை கருதி இவரை விடுதலை செய்து இவருக்கு முறையான மருத்துவம் கிடைக்க வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவரு சென்று வந்த மருத்துவமனைகளும் அவர் உட்கொண்ட மருந்து விபரங்களும் இதோ.
இப்படி கொலை செய்யறவங்க எல்லாருமே மனநிலை சரியில்லாதவங்கன்னு வாதாடினா கோர்ட் எதுக்கு நீதி மன்றம் எதுக்கு என்று கேட்டார் நீதிபதி காட்டமாக. வேறு ஏதாவது ஆதாரம் இருக்கா?
இவர் சமீபத்தில் சென்று வந்த மனோதத்துவ நிபுணர் ரதீஸனை சாட்சியாக அழைக்கிறேன் என்றார் அ.சா.த வழக்கறிஞர்.
டாக்டர் ரதீஸன்.
ஆமாம்.
இவருடைய நிலைமையை விளக்க முடியுமா.
முடியும் சார் என்று சொல்லி குறைந்த வார்த்தைகளில் கதிரின் நிலையை விளக்கினார்.
அதுக்கு ஆதாரம் இருக்கா.
இருக்கு சார். அவரு வக்கீலா நினைச்சு போலீஸ்ல போனது. அந்த விபரங்கள் இதோ. அவரு என் கிட்ட வந்த செஸஷன்ஸ் விபரம். ஆடியோ பதிவுகள் என்று அனைத்து விபரங்களை தந்தார்.
நன்றி டாக்டர். லார்ட்ஷிப் உங்கள் பார்வைக்கு என்று அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம் சேர்த்தார். அவர பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்துவிட்டு, சரி தீர்ப்பு வர திங்கட்கிழமை என்று ஒத்திவைத்தார்.
குற்றவாளி கொலை செய்தது காவல்துறை சரியான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. கதிரவனுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இல்லாவிட்டாலும் அரசாங்க தரப்பே சிரத்தையாக அவரை பற்றி விபரங்களை சேகரித்ததற்கு எனது பாராட்டுக்கள். கொலையாளி மாட்டிவிட்டான் என்று வழக்கை மூடித்தள்ளாமல் மனித நேயத்துடன் இதை அணுகியிருக்கிறார்கள். கதிரவன் தான் படிக்கும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஆகையால் அவருக்கு தக்க சிகிச்சை அளிக்க உத்தரவு இடுகிறேன். ஆனால் இதுபோன்ற ஆபத்தான வியாதியுள்ளவரை சுகந்திரமாக நடமாடவிட்டதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கிறேன். மேலும் உயிர் இழந்த குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எச்சரிக்கிறேன். கதிரவனை பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்து மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு ஈடுகிறேன் என்று தீர்ப்பை படித்து முடித்து கையெழுத்திட்டார்.
ஐயோ இந்த போக்கில் பார்த்தா கொலையிலேர்ந்து கதிர் தப்பிச்சாலும் மனநோய் மருத்துவமனைக்கு நிரந்தர விருந்தாளி ஆகிடுவாரு போலிருக்கே என்று வருந்தினார் ரதீஸன்.
வேற வழியில்லையா என்று கேட்டான் மோகன். இருந்தா சொல்லுங்க எனக்கு நிஜ குற்றவாளி தப்பிக்கறதுல ஆர்வம் இல்லை. அதே சமயம் கதிரவன் நிரந்தர நோயாளியாக மாறுவதற்கும் விடக்கூடாது என்றான் உறுதியாக.
அடுத்த நாள் அந்த காபி கபே டேயில் ஒரு ஓரமான இடத்தில் மூவரும் அமர்ந்தனர்.
சொல்லுங்க டாக்டர்.
கதிர் எந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாரோ அவரு என்கிட்ட வந்தது உட்பட அந்த பட்டியல் தயார்.
பலே. ரொம்ப ஃபாஸ்ட்.
சரி டாக்டர். ஒன்னு சொல்லுங்க மோகன் எழுதி தர கதைப்படி அவரு தானே சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ததா ஏத்துக்கறாரு. அவருக்கு மனநிலை கோளாருன்னு நிரூபிச்சு ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லி ஜட்ஜ் உத்தவிடராரு. ஒரிஜனல் கொலையாளி தப்பிச்சிடரான். இவரும் மரண தண்டனையிலேர்ந்து தப்பிச்சிடராரு. இது தானே அவங்க திட்டம்.
ஆமாம்.
உங்க பேஷண்ட எவ்வளவு புத்திசாலி. நான் பாக்கனுமே.
பார்க்கலாம் சுரேஷ் நான் ஏற்பாடு பண்றேன். எவ்வளவுன்னா?
அவரு கதையில் வர மாதிரியே மாறிடராரா.
ஆமாம் என்றான் மோகன் நீண்ட நேர அமைதிக்கு பின்பு.
இல்லை என்றார் ரதீஸன்.
என்ன என்று ஆச்சர்யமாக கேட்டான் மோகன். அவனிடம் சொன்னது அப்படித்தானே. இதென்ன புதுக் கதை. நீங்க என்கிட்ட சொல்லாம விட்டது ஏதாவது இருக்கா டாக்டர் என்று நம்பிக்கை இழந்தவாறே.
இல்லை மோகன். உங்க கிட்ட சுரேஷ்கிட்ட சொன்னதெல்லாம் உண்மை. ஆனால் அதில் ஒரு அநாலிஸிஸ் இருக்கு. நல்லா ஆழ்ந்து பார்த்தோம்னா கதிர் ஒரு ஜீனியஸ். அவரு எக்கச்சக்கமா புத்தகங்களை படிச்சிருக்காரு. அதில் படிச்ச விஷயங்களை ஆழமா உள்வாங்கியிருக்காரு. அப்படி இல்லைன்னா நீ ஒரு வக்கீல் அப்படின்னு புக் சொன்னதை வைச்சிகிட்டு அவரு கறுப்பு அங்கி வேணா போட்டுத் திரியலாம். ஆனா சட்ட நுணுக்கங்கள் எப்படி தெரியும் அவருக்கு. நீங்க போலீஸ்ன்னு நான் சொல்றேன். அட்லீஸ்ட் எப் ஐ ஆர்ன்னா என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா.
அப்படின்னா?
அப்படின்னா கதையோட இம்பாக்ட்-தாக்கம் அவரு மேலே போட்ட சட்டை மாதிரி. அவரோட அறிவு அந்த கதாபாத்திரமா அவரை மாற வைக்குது. நாளைக்கு அவரை ஒரு மீனவனா சித்தரிச்சா அவரு மீனவனா மாறலாம். ஆனால் கடல்ல தூக்கிப்போட்டா நீச்சல் தெரியாததால அவரு செத்துடுவாரு.
ஓஹோ. அப்படின்னா ஹி கேன் ரீட் பிட்வீன் த லைன்ஸ். கதையை படிச்சாலும் அதன் உள் அர்த்தம் மூலமா அவருடைய உள் மனதில் தாக்கம் ஏற்படுத்த முடியும் அப்படித்தானே.
அமேஸிங்க சுரேஷ். எக்ஸாக்டலி. நீங்க ஒரு புத்திசாலி. ஆமாம். அப்படி செய்ய முடியும்.
மோகன் முடியை பிய்த்துக் கொள்ளாத குறையாக என்ன சார் பேசிக்கிறீங்க இரண்டு பேரும் என்றான்.
அது பாலாவோட திறமையா இல்லை வைரமுத்துவோட வரிகளா. எதை எழுதினா மூச்சுவிடமா பாட முடியும்?
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா
என்று ஜோராக பாடினான்.
மோகன் உங்களுக்கு ஒரு சவால். நீங்க எழுத வேண்டிய கதை சமுதாய அக்கறை கொண்ட வேலையில்லாத ஒரு இளைஞன் ஒரு எம்எல்ஏவை கோபத்தினால் கொலை செய்துவிட்டான் – அப்படிங்கற கதை. ஆனா அதுல ஊடுருவியிருக்க வேண்டிய செய்தி அந்த இளைஞனை வேறு ஒரு கும்பல பயன்படுத்தி மாட்டி விடப்பாக்கறாங்கன்ற செய்தி. படிச்சா கதிர் மாத்திரம் தான் புரிஞ்சிக்கனும். இது விசு படத்துல வர மாதிரி என் பொண்டாட்டி என் கண்ணுக்கு மாத்திரம் அழகா இருக்கனும் மத்தவன் கண்ணுக்கு அழகா இருகக்ககூடாது. புரிஞ்சுதா?
ஆக நான் எழுதிய இரண்டும் கோர்ட் ஸீன்லேயும் அவனுக்கு வைத்தியத்தை புகுத்தனும்னு சொல்றீங்க இல்லையா என்றான் வாத்தியார் கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரிந்துவிட்டது என்று உற்சாகம் அடையும் மாணவன் போல.
பிரஸைஸ்லி என்றான் சுரேஷ்.
அப்படி எழுத முடியுமா மோகன் என்று அப்பாவியாக கேட்டார் ரதீஸன்.
ஒரு பெரிய விஷயத்தை சகஜமாக சொல்லி விட்டான் சுரேஷ். பிரம்மிப்பாக இருந்தது. சவாலாகவும் இருந்தது. யெஸ் முடியும் என்றான் மோகன் நிறைவாக.
மற்றவை நீதி மன்றத்தில் என்றான் செய்தி வாசிப்பாளரை போல. பிறகு வெளியில் ஐந்து ரூபாயில் குடித்திருக்க வேண்டிய காப்பிக்கு 210 ரூபாய் தண்டம் அழுதுவிட்டு சென்றார்கள்.
19
கதிரவன் அவன் பெற்றோர் காதலி கயல்விழி மோகன், சுரேஷ் அனைவரும் டாக்டர் ரதீஸனின் வீட்டில் குழுமியிருந்தன். கதரிவனின் அப்பா சங்கீதா உணவகத்திலிருந்து அனைவருக்கும் பலகாரங்கள் தரவைத்திருந்தார். எங்கும் மகிழ்ச்சி மயம்.
கதிரவன் ரதீஸன் முன் நெடஞ்சாணிக்கிடையாக விழுந்து எழுந்தான். ரொம்ப நன்றி சார் எனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து மட்டுமல்லாமல் என்னுடைய வியாதியையும் குணப்படுத்திட்டீங்க. நீங்க மட்டுமில்லாட்டா என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியலை. உங்களுக்கு வாழ்
நாள் முழுசா கடமை பட்டிருக்கேன் என்றான் நெகிழ்ச்சியுடன்.
அடேடே அதக்கு நான் மட்டும் காரணமில்லைப்பா. அங்க பாரு சுரேஷ் கோர்டுக்கே போகாம திறமையா வெளியிலேர்ந்தே வழக்காடிய வக்கீல். பிரசுத்திற்கே அனுப்பாம தந்திரமா கதை எழுதிய மோகன், அப்புறம் கயல்விழியோட காதல் உன் மேல வைச்ச நம்பிக்கை உங்க அப்பா அம்மாவோட வேண்டுதல் இப்படி பல காரணங்களும் சேர்ந்து தான் இந்த சாதனையே என்றார் தன்னடக்கத்துடன்.
சார் நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒரு திரி பிடிச்சு கொடுத்தேன், மோகன் சார் தான் அற்புதமா ஒரு கதையை எழுதினாரு. டாக்டர் தான் உங்களை குணப்படுத்த எல்லாம் முயற்சியும் செய்தாரு என்றான் சுரேஷ் அவன் பங்கிற்கு தன்னடக்கமாக.
மோகனும் இல்லை கதிரவன் அரசியல் பிரச்சனையின்னு சொன்னதும் நான் பயந்த்து என்னவோ உண்மைதான். ஆனால் சாதாரணமா கதை எழுதிகிட்டு இருந்த என்னை ஒரு மருத்துவ கதாரியனாக மாத்தினது இவங்க இரண்டு பேரும் தான் என்றான்.
கயல்விழியின் கைபிடித்தவாறு அமர்ந்திருந்த கதிரவன் அது சரி சார் இந்த மாதிரி அரசியல் பிரச்சனை வந்த்தும் பயந்து என்னை கைவிடாம எல்லாரும் சேர்ந்து போராடி என்னை காப்பாதிவிட்டதற்கு என்ன சொல்ல என்றான் நன்றியுணர்ச்சியுடன்.
அதெல்லாம் சரிப்பா முக்கியமான வேலையால நான் இன்னிக்கு கோர்டுக்கு வரமுடியலை என்ன நடந்த்துன்னு யாராவது சொல்லுங்களேன். எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு. நிஜ கொலையாளி யார். எப்படி நீங்க குணமானீங்க. நீங்க விடுதலையானதை அவங்க அந்த அரசியல்வாதிங்க எப்படி சுலபமா ஏத்துகிட்டாங்க. எனக்கு எல்லாம் சொல்லுங்க என்றார் ரதீஸன்.
ஹாஹா அதுக்குத்தான் ஒரு கதாசிரியரை கூட வச்சிருக்கோம்ல. அவரு சொல்வார் கதையை என்று சுரேஷ் மோகனை பார்த்து சமிக்கை செய்ய மோகன் வழக்கமான கதை சொல்லும் பாணியில் தொடங்கினான்.
அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா
இல்லை.
என்ன இல்லையா. அப்ப போலீஸ் எதுக்கு உங்களை கைதி பண்ணியிருக்கு.
அதை அவங்க கிட்டே தான் கேட்கனும்.
நீங்க அவரை கொன்னதை பார்த்த சாட்சி இதோ உங்க முன்னே நிற்கிறாரு. வாங்க சரவணன் என்று ஒருவரை அழைத்தார்.
இவரா நான் கொலை செய்யும் போது பார்த்தது ஆச்சர்யமா இருக்கே.
சரவணன் நீங்க கதிரவன் சட்ட மன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டும் போது பாத்தீங்களா.
ஆமாம் சார்.
என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.
அவரு வேகமா ஓடி வந்து எம்எல்ஏ சட்டையை பிடிச்சிகிட்டாரு. கையிலே அரிவாள் வேற இருந்தது. .... ஒரு சாதி பேரை சொல்லி நாம ஒரு சாதிக்காரன் தானேடா உன்னால நம்ம சாதிக்கு என்ன லாபம்னு கத்தினாரு.
அப்புறம்...
அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு.
அப்புறம்...
அவரை ஓங்கி வெட்டிட்டு நான் கதிருடா. மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். ஒவ்வொரு செல்லையும் ஒவ்வொரு மிருகத்துக்கு இரையாக்கிடுவேன்னு சொல்லிட்டு
ஓடிட்டாரு.
எதுக்காக வெட்டினீங்க கதிர் சொல்லுங்க என்றார் சற்றே குரலை உயர்த்தி.
சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான் கதிரவன். சில நிமிடங்கள் சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் கயல்விழி தெரிந்தாள். அவளருகில் சில நபர்கள். யாரும் தெரிந்த முகம் இல்லை. அப்பா அம்மா இன்னும் தூரத்தில் தென்பட்டனர். கயல்விழி உதடுகள் குவித்து ஓசையில்லாமல் கைகள் இரண்டையும் பிரித்தும் இணைத்தும் காட்டினாள். அவன் தன் கையில் இருந்த சிறிய காகித்தை எடுத்துப் பார்த்தான். மெதுவாக படித்தான். பிறகு மீண்டும் மௌனமான்.
சொல்லுங்க கதிர் எதுக்காக கொன்னீங்க.
ஐயா கொஞ்சம் தண்ணி வேணும் என்றான். அவனுக்கு குடிநீர் கொடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக சரவணனை காண்பித்து நீங்க சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள் என்றான்.
சரவணன் பொய் சாட்சி தானே. சொன்னதையே மீண்டும் வெட்டி ஒட்டினான்.
நீதிபதி அவர்களே இது ஒரு பொய் வழக்கு. சோடிக்கப்பட்ட வழக்கு என்றான் தீர்க்கமாக.
அரசியல்வாதியின் கையாள் சட்டென்று முகம் மாறினார். மோகனை பார்த்து என்ன நடக்குது என்பது போல சைகை காட்டினார். எழுதியதை பேசாமல் வேறு ஏதாவது உளறப்போகிறானோ என்கிற பயம் அவருக்கு. மோகன் அமைதியாக உதட்டை பிதுக்கி என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியிவில்லை என்று செய்கை செய்தான்.
அவன் மீண்டும் பேசத்துவங்கினான்.
ஐயா என் பெயர் கதிரவன்.
அதை தான் சொல்லிட்டீங்களே.
நீதிபதி இடைமறித்து அவரை பேச விடுங்கள் என்றார்.
ஐயா என் பெயர் கதிரவன். நான் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். இந்த எம் எல் ஏவை நான் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை.
என்ன இப்பத்தானே பார்த்திருக்கேன்னு சொன்னீங்க – வக்கீலும் தடுமாறிப்போனார்.
சொல்றேன் சார். எனக்கு மன நிலை சரியில்லை. நான் எந்த புத்தகம் படிச்சாலும் அந்த கதாபாத்திரமா மாறிடுவேன். அதனால சில வைத்தியமும் செஞ்சிகிட்டு வரேன். இப்போ கூட பாருங்க இந்த கோர்ட்ல நடக்க வேண்டியதை எனக்கு கதையா எழுதி கொடுத்திருக்காங்க. கதையில வர முக்கிய பாத்திரத்தோட பெயரும் கதிரவன். அவனும் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கான். என்னோட வீக்கனஸ் தெரிஞ்ச யாரோ தான் இந்த மாதிரி கதையை எழுதி என்னை மாட்டிவிட பார்த்திருக்கனும் என்றான் தெளிவாக.
என்ன சொல்றீங்க. அப்ப ஆரம்பத்துல நீங்க பேசின அஞ்சு நிமிஷம் சுயநினைவில் இல்லையா.
ஆமாம் ஐயா.
இப்ப எப்படி சுயநினைவுக்கு வந்தீங்க.
ஐயா, இவரு சாட்சியம் சொல்லும்போது நாம ரெண்டு பேரும் ஒரு சாதிக்காரங்க அப்படின்னு சொன்னாரு. செத்துப்போன எம்எல்ஏ ... சாதி. நான் வேற ... சாதி. – இது எனக்கு அடிச்ச முதல் அலாரம்.
என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு....ன்னு அவரு சொல்லும் போது எனக்கு இரண்டாவது மணி அடிச்சுது. அப்ப தான் அந்த இடைவெளி கிடைச்சுது. கையில் இருந்த பக்கங்களை படிச்சேன். கோட்ல் நடக்கற கதையாக இருந்தது. அதுல என் பேரையை பார்த்தோன்னே எனக்கு புரிஞ்சுது. என்னையே நானாக மாத்தி ஏதோ நடக்கதுன்னு நினைச்சேன். அதனால தான் அவரை மறுபடியும் பேச சொன்னேன்.
நீங்க மனநிலை சரியில்லாதவர்னு எங்களுக்கு தெரியும். அதை சொல்லித்தான் நான் உங்களுக்கு விடுதலை வாங்கிதரதா இருக்கேன். ஆனா கொலை நீங்க தான் செஞ்சீங்க என்றார் வக்கீல் மிகவும் தளர்ந்து போய்.
சார் நான் மன நிலை தெளிவாக இருந்து அந்த கொலை செஞ்சிரந்தேன்னா நான் அந்த சாதிக்காரன்னு சொல்லி கொன்னு இருக்க மாட்டேன். அப்படி ஏதோ கதையின் பாதிப்புல இருந்தேன்னா இப்ப இந்த கதையை எழுதி கொடுத்தது யாரு? என்று கேட்டான் சற்றே வலிமையுடன்.
நீதிபதி குறுக்கிட்டு என்ன நடக்குது இங்கே. பொய் கேஸா. சாட்சியை மேனிபுலேட் பண்றீங்களா. ஹை ஃப்ரோபைல் கேஸூன்னு சொன்ன உடனே சந்தேகம் வந்தது. எப்படிப்பா இவ்வளவு சுலபமா முடியும்னு. கதிரவன் நீங்க மனநிலை சரியில்லை அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்.
சுமார் 20 நிமிடம் கழித்து நீதிபதி, நீங்க கொலை செய்யலை. யாரோ உங்களை இந்த கொலையில் மாட்டிவிட பார்த்திருக்காங்க. யாரு என்றார் யோசனையுடன்.
வக்கீல் தடுமாற்றமாக இருந்தார்.
சார் அதுக்கும் என்கிட்டே பதில் இருக்கு என்றான் கதிரவன்.
வக்கீல் கடுப்புடன் ஏம்பா மனநிலை சரியில்லாதவன்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு கொலையாளி யாருன்னு போலீஸ் பாத்துக்கும் என்றார்.
சார் கவலை படாதீங்க. கொலையாளி யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த பொய் சாட்சி யாருன்னு சொல்றேன். இவரு 13ம் வாடு செயலாளர். போன மாசம் இவங்க கட்சி தலைவர் வந்தப்ப ஆளுயர மாலையோட தெருத் தெருவா போஸ்ட்ர் ஒட்டிக்கிடாரு. இவரு ஆளுங்கட்சி. செத்தது எதிர் கட்சி எம்எல்ஏ. சாட்சி சொல்ல வேற வந்திருக்காரு. இந்த நிலைமையில இருக்கு கதை என்றான் கதிரவன் முற்றும் தெளிந்தவனாக.
அப்புறம் கோர்டு ரொம்ப நேரம் நடந்தது. அதெல்லாம் நமக்கு தேவையா. நம்ம ஆளு வெளியே வந்தாச்சு. நீதிபதி காவல்துறைக்கு நிஜ குற்றவாளியை தேடுங்கப்பான்னு உத்தரவு போட்டுட்டாரு. எல்லாம் சுபமே என்று சொல்லி முடித்தான் மோகன்.
அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள்.
மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன் சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன்.
அப்புறம்..
ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா.
ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் “அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு” இந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.
மத்தக் கதை...
மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியும் புத்திசாலித்தனும் தான். நான் கூட இப்படி ஆளுங்கட்சியை போட்டு துவைப்பாருன்னு எதிர்பார்க்கலை. எதுக்கும் நீங்க எல்லாரும் கொஞ்ச ஜாக்கிரதையாகவே இருங்க என்று முடித்தான்.
இருங்க இருங்க அந்த கதை பேப்பர்ஸ் மறுபடியும் கதிரவன் கைக்கு எப்படி போச்சு என்றார் ரதீஸன் இன்னும் புதிரிலிருந்து விடுபடாதவராக.
டாக்டர் சட்ட நுணக்கங்கள் தெரிஞ்ச ஒரு வக்கீல் நான் இங்கே இருக்கேன் மறந்துட்டீங்களா. சட்டமும் தெரியும் நீதிமன்றத்தோடு சந்து பொந்துக்களும் தெரியுமே என்றான் நகைச்சுவையுடன்.
அது சரி கயல்விழிக்கு என்ன ரோல் இதில் என்றான் மோகனும் அவனுக்கும் சில புதிர்கள் இருந்தன போலும்.
அட மோகன் சார், நானும் டாக்டரும் கயலுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி வைச்சோம். ஒரு வேளை கதிரவனுக்கு நல்ல நினைவு திரும்பிட்டா அவரால அவங்களையும் அவரோட அப்பா அம்மாவையும் தான் சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியும்.
அது சரி ஆனால் எனக்கு இன்னொரு டவுட் டாக்டர் என்றாள் கயல்விழி கண்களை அகலப்படுத்திக் கொண்டே.
சொல்லும்மா.
மோகன் சார் எழுதின ஸ்கிரிஃப்டை கதிரவன் தான் ஜெயில்லே படிச்சிட்டாரே. அப்பவே ஏன் அவருக்கு தெளிவு ஏற்படலை.
முதல்ல கதிரவன் எந்த கதை படிச்சாலும் அதோட முக்கிய பாத்திரமாக மாறராரு. அதனால அவருக்கு மத்த பாத்திரங்களோட தாக்கம் இல்லை. இரண்டாவது அவரு ஒரு கதாபாத்திரமாக முழுசா மாறனும்னா அந்த சூழ்நிலையும் அதுக்கு தக்கமாதிரி இருந்தா சுலபமா இருக்கும். இப்ப ஒருத்தும் இல்லாத இடத்துல அவரு மாறினா அந்த மாற்றம் அவராலேயே உணர முடியாது. மூணாவது இது என்னோட கணிப்பு தான் ஏன்னா நான் கோர்ட்டுக்கு வரலையே – சரவணன் சாட்சி சொல்லும் போது அவரோட பேச்சால அவருக்கு மனமாற்றம் டிரிகர் ஆயிருக்கு. படிக்கும் போது அவரு கதிர் கதாபாத்திரத்தோட அதிகமா நூல்பிடிச்சு போனதால அப்ப அந்த மாற்றம் ஏற்படலை. அதுக்கும் மேலே இன்னும் சில நாட்கள்ல நாங்க முன்னாடி யோசிச்சு வைச்ச வைத்தியத்தை செஞ்சிருந்தாலே அவரு குணமாகியிருப்பாரு. ஏன்னா இயற்கையாகவே அவர் ஒரு ஜீனியஸ். ஆனா இப்படியெல்லாம் நடந்து போச்சு என்று சொல்லி முடித்தார்.
அது என்ன வைத்தியம் டாக்டர் என்று ஆர்வமாக கேட்டாள் கயல்விழி.
அது வேண்டாம்மா. அது இன்னொரு பெரிய கதையாயிடும்.
எது எப்படியோ எனக்கு வண்டி நிறைய கதைகள் கிடைச்சிடுத்து என்றான் மோகன். எனக்குதான் இந்த வழக்கால ஒரு வழக்கும் வரலை என்றான் சுரேஷ் பொய்யாக கோபித்துக் கொண்டே.
கவலைப்படாதீங்க சுரேஷ் உங்களை பத்தி கதை எழுதிய பிரபலமாக்கிடறேன் என்றான் மோகன்.
கதிரவன் மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தான்.
சுரேஷ் புன்னகையுடன் மறுபடியும் ஒரு கேஸ் வந்தா என்கிட்டே வாங்க. கோட்டுக்கு போகாமலேயே சால்வ் பண்ணிடலாம் என்றான்.
ஆமாம்பா என் பேஷண்ட் எனக்கு ஃபீஸே கொடுக்க வேண்டாம். வக்கீலுக்கு மாத்திரம் கொடுத்தா போதும் என்றார் ரதீஸன் மன நிறைவுடன்.