இன்னும் பெயர் வைக்கவில்லை....-புதிய தொடர்கதை

ஆமாம். எனக்கும் கதை இப்போதுதான் தெளிவாகப்புரிந்தது. இடையிடையே வரும் மனைவி கேரக்டர் தான் கதையை ஜாலியாக்குகிறார். அறுவைச் சிகிச்சை= கதை = கட்டிடம் உங்கள் ஒப்பீடு சரி தான் எனினும் கதைக்கு சீக்கிரம் வாருங்கள். கதை சுவாரசியமாகச் செல்கிறது மோகன். அடுத்த பாகம் எங்கே? (இந்தக்கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டுமா? இல்லை மருத்துவரிடமா??)

நன்றி கவிதா அவர்களே. சற்றே வேலை பளூ. விரைவில் மற்ற அத்தியாயங்களை பதிக்கிறேன். ஆதரவிற்கு நன்றி.
 
9

எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள குறையால். அடுத்து என்னை சுற்றி இருப்பவர்களின் கண்டிப்புகளால். இப்போது இந்த மருத்துவரின் பரிசோதனைகள். என்னையும் என்னுடைய சமுதாயத்தில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த மரியாதையையும் வைத்து.

எனக்கு ரதீஸனின் மேல் மிகவும் கோபமாக வந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். என்னை தேட வேண்டாம். மனம் அமைதியானதும் திரும்பி வருகிறேன். தற்கொலை செய்துக் கொள்ள மாட்டேன். கவலை வேண்டாம் என்று எழுதிவிட்டு கொஞ்சம் பணமும் சில துணி மணிகளும் எடுத்துக் கொண்டு அன்றே இரவோடு இரவாக புறப்பட்டேன்.

கயலை நினைத்து வருத்தமாக இருந்தது. அம்மா அழுது புலம்புவாள். ஆனால் எனக்கு வேறு வழி தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவு எடுக்கும் சக்தியை இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

டில்லிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு ரயிலில் வந்து அமர்ந்தேன். சுற்றும் முற்றம் அனைவரும் என்னை பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. நேராக கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டேன். சாதாரணமாக தான் இருந்தது. யாரும் என்னை பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டேன். எனக்கு உள்ளே இருக்கும் பிரச்சனை வெளியே தெரிய வாய்ப்பில்லை என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எனக்கு எதிரே ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பழுத்துப் போன தாடி, 70 வயது மேலிருக்கும் போல் இருந்தது. காவி உடைகள் ஏதோ ஒரு சாமியார் என்பதை உறுதிபடுத்தியது. ஒரு ஜோல்னா பையில் ஏதோ வைத்திருந்தார். கையில் ஒரு ஆங்கில புத்தகம். கண்ணாடி இல்லை.

ரயில் பயணம் துவங்கி இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை பார்க்கிறார் என்பதை அறிந்ததும் நான் அவருடைய பார்வைகளை தவிர்த்தேன்.

ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் பார்க்கிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். என் மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அவரை உற்றுப் பார்த்தேன்.

தம்பி உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்று பேச்சை துவக்கினார்.

என்னையா கேட்கறீங்க பெரியவரே என்றேன் தெரியாதது போல.

ஆமாம் பா. உன்னைத்தான்.

ஒன்னும் பிரச்சனையில்லையே.

ஓ அப்படியா. எங்கே போயிகிட்டு இருக்கே.

இந்த டிரயினும் டெல்லி தானே போகுது. எல்லாரை மாதிரியும் நானும் டெல்லி தான் போறேன் என்றேன் காட்டமாக.

ஹா ஹா. இந்த டிரெயின் டெல்லி தான் போகுது. ஆனால் எல்லோரும் டெல்லி போகலை. வழியில பல தடவை நிக்கும். அங்கெல்லாம் மக்கள் இறங்குவாங்க தெரியுமா என்றார் அவரும் விடாமல்.

இலக்கில்லா பயணம் என்பது அவர் சொன்னதும் உறைத்தது.

டெல்லி தான் போறேன் என்றேன்.

அப்படியா டெல்லில எங்கே என்றார்.

அட இவர் விடமாட்டார் போலிருக்கிறதே.

டெல்லில எங்கே போனா என்ன உங்களுக்கு பெரியவரே என்றேன் மிகவும் காட்டமாக.

அட ஏம்பா கோவிக்கறே. 30 மணி நேர பயணம். பேசிக்கிட்டே போலாம் தான் என்றார் சற்றே என்னை அமைதிப்படுத்தும் முயற்சியுடன்.
தெரியலை என்றேன். எனக்கும் யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது.

எங்கிருந்து வரே

மெட்ராஸ்.

என்ன வேலை பாக்கறே

வேலையில்லை

அப்ப வேலை தேடி போறியா

ஆமாம்

அங்கே உனக்கு யாரையாவது தெரியுமா

தெரியாது.

எனக்கு அங்கே நிறைய பேரை தெரியும். வேலை வாங்கித் தரட்டுமா.

அவருடைய ஆர்வத்தை ஏன் கெடுப்பானேன் என்று நினைத்துக் கொண்டே, ஓ தாராளமா. அட்ரஸ் போன் தாங்க நான் போய் பாக்கறேன்.

ஓ. அவசியம் தரேன். அங்கே போய் எங்கே தங்கப்போறே.
தெரியலை.

ம்ம். சரி. எனக்கு தெரிஞ்ச ஆசிரம்ம் ஒன்னு இருக்கு. நான் அங்கே தான் போறேன். என்னோட வரியா.

ம் என்றே என்ன செய்வது என்று தெரியாமல்.

வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா

அடப்பாவி. என் முகத்துல எல்லாம் எழுதி ஒட்டியிருக்கும் போல என்று முகத்தை துடைத்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா

இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

அப்ப அம்மா அப்பாவோட சண்டையா.

பெரியவரே நீங்க ரொம்ப குடைஞ்சி குடைஞ்சி கேள்வி கேட்கறீங்க. என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. ஏதோ பேச்சுத் துணைக்குன்னு சொல்லிட்டு ரொம்ப ப்ர்ஸனலா பேசறீங்க என்றேன் கடுகு வெடிப்பது போல்.

கோச்சிக்காதேப்பா என்றார் மீண்டும். நடு நடுவில் அவர் எழுந்து செல்வதும் பல நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமருவதுமாக இருந்தார். அதுவும் எனக்கு எரிச்சலாக இருந்தது.

அவருடைய கண்களில் ஒரு ஒளி இருந்தது. அவருடைய குரலில் என்னை தாலாட்டும் அன்னையின் அரவணைப்பு இருந்தது. அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஆனால் அவர் கேட்கும் கேள்விகள் தான் எனக்கு கோபத்தை தந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்விகளில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி நானே கேள்விகளை கேட்க ஆரம்பிப்பது தான். அப்பாடா என் புத்தி இன்னும் மழுங்கவில்லை என்று என்னுடைய சாமார்த்தியத்தை பாராட்டிக் கொண்டே அவரை துளைக்க ஆரம்பித்தேன் என் கேள்விகள் மூலம்.

உங்க பேரு என்ன பெரியவரே.

ஹாத்தீம்

என்ன ஹாத்தீமா. முஸ்லீம் பெயரா இருக்கே.

ஆமாம். அதுல என்ன இப்போ.

இல்லை. பார்த்தா...

பார்த்தா ஹிந்து சாமியார் மாதிரி இருக்கா

ஆமாம். மதம் மாறிட்டீங்களா

இன்னொரு மதத்தை பின்பற்றனும்னா அந்த மதத்துக்கு மாறனும்னு
அவசியமா. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று போட்டியில் அவரே இன்னும் வென்றுக் கொண்டிருந்தார்.

இல்லை. ஆனா...

ஆனா என்ன.

ஹிந்து முஸ்லீமாகி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முஸ்லீம் ...

தம்பி நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி எடுத்துக் கனும். இது ஒரு
தேடல். அந்த தேடல் இன்னும் முடிவாகலை

என்ன தேடறீங்க

அது தெரியலை

என்ன தொலைச்சீங்க

அதுவும் தெரியலை

என்ன தொலைச்சீங்கன்னும் தெரியலை என்ன தேடறீங்கன்னும் தெரியலை உங்களுக்கு.

உனக்கு தெரியுமா. எங்கே போறேன்னும் தெரியலை எதுக்கு போறேன்னும் தெரியலை என்றார் என்னை மடக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டே.

சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம்.

நீங்க புரியாத புதிரா இருக்கீங்க. இல்லாட்டி என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க என்றேன் ஹாத்தீம் காவி உடையை அணிந்துக் கொண்டு என் முன்னால் அமர்ந்திருக்கும் குழப்பம் தீராமல்.

இப்பதானே பார்த்தே. அதுக்குள்ளே என்னை எப்படி புரிஞ்சிக்க முடியும். அதை விடு. எனக்கு வாழ்கை முடிவுல இருக்கு. இப்பவோ அப்பவோ. நீ வாழ வேண்டிய வயசு. உனக்கு என்ன பிரச்சனையின்னு சொல்லு. என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கறேன். எனக்கும் கொஞ்சம் வாழ்கையில் அனுபவம் இருக்கு.

டாக்டர் ரதீஸனிடம் சொன்னது போல் முதலில் இருந்து ஆரம்பித்து வக்கீலான கதை வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். யமுனாவின் மீது வண்டி சென்றுக் கொண்டிருந்தது.

அவர் தன்னுடைய பொருட்களை ஒரு பாலீத்தீன் கவரில் கட்டினார். எனக்கும் ஒரு பாலீத்தீன் உறையை கொடுத்து என்னுடைய பொருட்களையும் கட்டச் சொன்னார். பிறகு என்னுடன் வா என்று என்னை அழைத்தார், என்னவென்று கேட்கத் தோன்றாமல் அவர் பின்னால் நடந்து வண்டிப் பெட்டியின் கதவின் அருகில் வரைச் சென்றோம்.

வண்டி பாலத்தின் மீது சற்றே மெதுவாகச் சென்றது. என்ன நடக்கிறது என்பதை நான் உணருவதற்குள் என்னை ஆற்றில் சட்டென்று தள்ளிவிட்டு அவரும் பின்னாலேயே குதித்தார். கத்துவதற்கு கூட தெரியாமல் நீரின் ஆழத்தில் கலந்தேன்.

தொடரும்.....
 
பரபரன்னு போகுது. எல்லா சம்பவங்களும் முடிச்சுகளும் சேருவது எப்போ?
 
ஆ......ஹா.... எனக்கென்னவோ....சின்ன பைத்தியம், பெரிய பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது.
 
ஆ......ஹா.... எனக்கென்னவோ....சின்ன பைத்தியம், பெரிய பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது.

ஐயோ பைத்தியம்னு சொல்லக்கூடாதும்மா அது சட்டப்படி குற்றம். மனநோயாளி அப்படின்னு சொல்லனும்.

செவிடு - காது கேளாதவர்
குருடு - கண் தெரியாதவர்
நொண்டி - கை கால் செயலிழந்தவர்

Mentally Challenged, Physically Challenged, Visually Challenged, Hearing impaired அப்படில்லாம் தான் சொல்லனும் இப்பவெல்லாம்.
 
ஐயோ பைத்தியம்னு சொல்லக்கூடாதும்மா அது சட்டப்படி குற்றம். மனநோயாளி அப்படின்னு சொல்லனும்.

செவிடு - காது கேளாதவர்
குருடு - கண் தெரியாதவர்
நொண்டி - கை கால் செயலிழந்தவர்

Mentally Challenged, Physically Challenged, Visually Challenged, Hearing impaired அப்படில்லாம் தான் சொல்லனும் இப்பவெல்லாம்.
__________________
அன்புடன்,

லியோமோகன்

சரி சாரி. கதை யின் பிடியில் ஏதோ உளரி விட்டேன். அடுத்த பாகம் எங்கே?
 
சரி சாரி. கதை யின் பிடியில் ஏதோ உளரி விட்டேன். அடுத்த பாகம் எங்கே?

ஐயோ தப்பா எடுத்துக்காதீங்க. நானும் சும்மா தான் சொன்னே :) அடுத்த பாகம் விரைவில். நன்றி.
 
தொடர் கதை படிப்பது எனக்கு பிடிக்காது.
பிறகென்ன..
இப்படி பரபரவென்று கதை போய் கொண்டிருக்கையில் திடுமென ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டால்....
அடுத்த அத்தியாயம் எப்போது வருமென்று படக்படகென்று நெஞ்சு அடித்துக் கொண்டு.... முடியலை சாமி...

ஆனாலும் காத்திருக்கிறேன். முழுவதும் எழுதிய பிறகு,மொத்தமாய் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
 
நானும் முடியட்டுமென்று காத்திருந்தேன்.. ஆனாலும் ஆர்வக் கோளாரில் ஒரே மூச்சில் இதுவரை வந்த அனைத்து பாகங்களையும் படித்து விட்டேன்..

கதைக்கான விமர்சனம் இறுதியில்... இப்போது ஒரே கேள்வி.. எப்போது எல்லா பாகத்தையும் அளிப்பீர்கள் என்பதே..

லியோமோகன் அண்ணாவுக்கு ஒரு ஜே..!! :)

பாராட்ட வார்த்தைகள் இல்லை.. தொடருங்கள்.. கதை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது.
 
அட... நாளாச்சே... இத்தனைக்கும் லியோமோகன் முடிச்சிருப்பாருன்னு பார்த்தால்,
முடிச்சோட கதை நிற்குதே...

முடிச்சவிழக் காத்திருக்கின்றேன் நானும்...
 
என்ன மோகன் இது! இப்படி அந்தரத்தில் தொங்க விட்டுடீங்களே! சீக்கிரம் தொடருங்கள்.
 
மன்னிக்க வேண்டும் நண்பர்களே. சில டென்டர் வேலைகளால் அடுத்த பகுதிகள் எழுத முடியவில்லை. சில நாட்களில் தொடர்கிறேன்.

நன்றி
 
முன்பே அவ்வப்போது படித்திருந்தாலும், இன்று மீண்டும் எல்லா அத்தியாயங்களையும் படித்தேன். நன்றாக இருக்கிறது மோகன்.
உங்கள் வேலைகள் நிறைவு பெற்று, விரைவில் இந்த கதையைத் தொடர்வதைக் காண காத்திருக்கிறேன்.
 
முன்பே அவ்வப்போது படித்திருந்தாலும், இன்று மீண்டும் எல்லா அத்தியாயங்களையும் படித்தேன். நன்றாக இருக்கிறது மோகன்.
உங்கள் வேலைகள் நிறைவு பெற்று, விரைவில் இந்த கதையைத் தொடர்வதைக் காண காத்திருக்கிறேன்.

உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி பாரதி. 23ம் தேதி வரை தலை எங்கே கால் எங்கே என்ன சாப்பிட்டோம் என்று தெரியாமல் சுத்த வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன்.

விரைவில் தொடர்கிறேன். நன்றி.
 
அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றத்தில் பதிக்கிறேன். பல காரணங்களால் எழுதவதை விட்டிருந்தேன். முடிக்காத இந்த கதை என்னை துரத்திக் கொண்டிருந்தது. அதனால் மீண்டும் வருகை.

மீண்டும் இதனை தொடரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.

நான்கு ஆண்டுகாலம் பெரிய இடைவெளி. அதனால் நீங்கள் ஏற்கனவே பதித்த 9 அத்தியாயங்கள் படித்து வாருங்கள். மீதி தயாராகிறது.

நன்றி.

அன்புடன்
மோகன்.
 
மோகன் சார்,

முதலில் இந்த கதையை படித்ததும் எனக்கு தோன்றியது, நல்ல வேளை இந்த கதையை இப்போதுதான் படித்தோம். இந்த கதை வெளிவந்த போதே படிக்க ஆரம்பித்திருந்தால் இவ்வளவு நல்ல கதையின் அடுத்த பாகத்திற்காக இந்த 4 வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருக்குமே!

ஆனால் அதே நேரத்தில் மனதிற்குள் தோன்றிய எண்ணம் இப்போதாவது முழுவதும் வருமா? இல்லை இதுபோல் இன்னும் ரெண்டு மூணு பகுதிகள் எழுதிவிட்டு இன்னும் சில வருடங்கள் காத்திருக்கவைத்துவிடுவாரோ?!

எது எப்படியோ நல்ல கதை என்பதால் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்க தயார்.

அது சரி சார், அந்த பெரியவர் யார்? அவர் ஏன் கதிரை ஆற்றில் தள்ளி தானும் குதித்தார்? இது உண்மையில் நடக்கிறதா? அல்லது டாக்டரின் கதையில் வருகிறதா? தெரிந்துகொள்ள ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்...
 
10

அந்த புது சுவாமிஜி ஆங்கிலத்திலும் தமிழிலும் தத்துவங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பலரும் அவர் பேசுவதை உன்னிப்புடன் கவனித்தாலும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த புது சுவாமிஜி வேறு யாரும் இல்லை நான் தான். என்னை அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் என்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டிருந்தார். சும்மா இல்லாமல் பல புத்தகங்களையும் என் அறைக்குள் வைத்துச் சென்றிருந்தார். நானும் புது அவதாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தேன்.

நீரில் குதித்து எத்தனை நாட்களுக்கு பிறகு எனக்கு விழிப்பு வந்ததென்றே தெரியாது. ஏதோ நாட்டு வைத்தியம் செய்திருந்தார்கள் எனக்கு.

பல நாட்களுக்கு பிறகு என்னை இரண்டு பேர் பார்க்க வந்திருந்தார்கள்.

“வணக்கும் சுவாமிஜி நாங்க இரண்டு பேரும் தமிழ் நாட்டிலேர்ந்து வந்திருக்கோம். எங்க ஊரில் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பேரவை நடத்தறோம். அதுல தமிழ் தெரிஞ்ச உங்களை மாதிரி மஹான் வந்து பேசனா நல்லா இருக்கும்னு நினைக்கறோம். நாங்களே உங்களுக்கு போற வர செலவு எல்லாம் செஞ்சி அழைச்சிகிட்டு போறோம். சம்மதமா?”

அவர் என்னை மஹான் என்று அழைத்தது எனக்கே விநோதமாக இருந்தது, சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர்கள் இருவரும் என்னை அழைத்து வந்த பெரியவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட எத்தனித்தார்கள். அந்த பெரியவர் என் கையில் சிறிய விபுதி பொட்டலதை கொடுத்தார். என்னை ஆழமாக பார்த்தார்.

“உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா மறுபடியும் என்னை வந்து பாரு. இங்கே எத்தனை நாள் வேணும்னாலும் நீ தங்கலாம்” என்றார்.

எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. இருந்தாலும் நன்றாக இருந்தது. நானே முற்றும் துறந்தவன் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது. ஏதோ லெக்சர் செய்ய அழைக்கிறார்கள். திரும்பவும் கொண்டு வந்து விடப்போகிறார்கள் அதெற்கு ஏதற்கு இந்த பெரியவர் இவ்வளவு பீடிகையுடன் பேசுகிறார் என்று நினைத்தபடியே புறப்பட்டேன்.

தொடரும்..
 
11
கதிரை தேடிச் சென்று பல இடங்களில் தேடிய பிறகு அவனை ஊருக்கு அழைத்து வந்தனர் மோகனும் ரதீஸனும்.
தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம், காவல் துறை செய்ய வேண்டிய வேலை என்று இருவரும் நினைத்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு உந்துதலில் காரியத்தில் இறங்கி விட்டனர்.

மோகனுக்கு அலுவலத்தில் விடுப்பு சொல்லி விட்டு இறங்கியிருந்தான்.

இருவரும் களைப்பாறிய பின் மாலையில் சந்தித்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

டாக்டர் கதிரவனுக்கு எப்படி இருக்கு.

இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு மோகன். சீக்கிரம் நம்ம நாவலை அவரை படிக்க வைக்கனும்.

உங்க திட்டம் என்ன டாக்டர்?

நீங்க எழுதின என்னோட கதையை படிக்க வைக்கப் போறேன். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போது அவருக்குள்ள ஏற்படற மாற்றங்களை ஊர்ந்து கவனிக்கப் போறேன். அவரு என்னை மாதிரி மனோதத்துவ மருத்துவரா மாறனும். அதுக்கப்புறம் நிஜமான என்னோட நோயாளிகளை அவருக்கு அனுப்பப் போறேன். அதுக்கப்புறம் நீங்க புது நோயாளியா அவர் கிட்டே வரீங்க.

என்ன நான் நோயாளியாகவா எதுக்கு டாக்டர்?

சொல்றேன். இப்ப அவரு தன்னை ஒரு பெரிய மருத்துவரா நினைச்சிகிட்டு இருப்பாரு இல்லையா?

ஆமாம்.

அப்ப நீங்க நோயாளியா வந்து அவருக்கு என்ன வியாதி இருக்கோ அதே வியாதி உங்களுக்கு இருக்கறதா சொல்லப் போறீங்க.

அப்படியா? என்று வியப்பாக கேட்டான் மோகன். நம் மாதிரி எழுத்தாளர்களை விட இவரு மாதிரி மருத்தவர்களிடம் பல கதைகள் இருக்கும் போலே என்று நினைத்துக் கொண்டான்.

ஆமாம். இப்ப கதிருக்கு வந்திருக்கிற வியாதிக்கு அவரிடமே தான் வைத்தியமும் இருக்கு. அவர் உங்களுக்கு கொடுக்கபோற ட்ரீட்மென்ட் தான் அவருக்கு நான் கொடுக்கப் போற மருந்தும் குணம் செய்யற வழியும்.
பலே டாக்டர். நோயாளிகிட்டேயே மருந்தும் கண்டுபிடிச்சி அவருக்கே கொடுக்கப் போறீங்களா. பலே என்றான் மோகன்.
அது மட்டுமில்ல மோகன். உங்களுடைய வியாதிக்கு குணமாகிற வழி சொல்லும் போதே அவருக்கு குணமாயிடலாம். ஏன்னா இப்ப நமக்கு தேவை அவருடைய செல்ஃப் ரியலைசேஷன் தான். அவரே உணர்ந்தா தான் அவருடைய மாய வலையிலேர்ந்து வெளியே வரமுடியும் என்றார் சற்றே களைப்புடன்.

கேட்க நல்லா இருக்கு டாக்டர். இது மாதிரி நடந்துட்டா அற்புதமாக இருக்கும். அப்புறம் உங்க கிட்ட வந்து நான் இதை கதையா எழுதறக்கு அனுமதி கேட்பேன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றபோது அவருடையை மனைவி உங்கள பார்க்க போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று படபடப்புடன் சொன்னாள்.

மறுபடியும் போலீஸா, கதிர் இங்கே இருக்கும்போது வேறு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்தவாறே எழுந்தார். மோகனும் பின் தொடர்ந்தான்.

சென்ற முறை வக்கீலாக நினைத்து நடந்த கூத்தில் மாட்டிக் கொண்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் இன்னொருவருடன் வந்திருந்தார்.

வணக்கம் சார். வாங்க. என்ன வேணும் என்றார் ரத்தீஸன்.

வணக்கம் சார். கதிரவன் விஷயமா கொஞ்சம் பேசனும் என்றார் காவல் அதிகாரி சற்றே தயக்கத்துடன்.

மோகன் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக நான் கிளம்பறேன் டாக்டர். அப்புறமாக பார்க்கலாம் என்றவாறே நடக்க முயன்றான்.

காவல் அதிகாரியுடன் வந்திருந்தவர் நீங்களும் இருங்க மோகன் உங்க இரண்டு பேர்கிட்டேயும் தான் பேசனும் என்றார் பீடிகையுடன்.

ரத்தீஸனும் மோகனும் குழப்பத்தில் சொல்லுங்க என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தனர்.

பிறகு அவர்கள் பேசிய விஷயம் இவர்கள் இருவரையும் வேர்க்க செய்திருந்தது.

தொடரும்...
 
12
அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசினர். நடுவில் ரதீஸனின் மனைவி இருமுறை வந்து காபி சாப்டறீங்களா என்று கேட்க தண்ணி மட்டும் கொடுத்துட்டு உள்ளே போ என்ற காட்டமாக கூறியிருந்தார். அவருடைய மனைவியும் என்ன பிரச்சனையோ என்று குழப்பத்துடன் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

அவர்கள் சென்ற பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர்.

என்ன சார் ஏதோ உங்களுக்கு உதவி பண்ண வந்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கிட்டேன என்றான் மோகன்.

இருங்க மோகன் பதட்டப்படாதீங்க. இது மாதிரியெல்லாம் வரும்னு யாரு ஏதிர் பார்த்தது. நம்ம இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சுவாதீனம் இருக்கும்போதே நாம இந்த பிரச்சனையை பார்த்து கலங்கறோமே, பாவம் கதிர் அவரு இருக்கும் நிலையில் எப்படி இதை சமாளிப்பாரு? சொல்லுங்க.

மன்னிக்கனும் சார். நான் என்னோட வேலை பளுவில் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்க வேண்டாம்னு சுயநலமா பேசிட்டேன். நீங்க சொல்லறது சரிதான். கதிருக்கு உதவி பண்ணனும். ஆனா இந்த கட்சிக்காரர் அவங்க ஆளுங்க செஞ்ச கொலையை கதிரை ஏத்துக் வைக்கனும்னு சொல்றாரே. அதவும் அவங்க கொலை பண்ணது ஒரு எதிர் கட்சி எம்எல்ஏவை. இது பெரிய விவகாரம் சார். எத்தனை நாள் நாம வேலை வெட்டியில்லாம சுத்தனுமோ என்றான் பதட்டத்துடன்.

கொஞ்சம் அமைதியா இருங்க மோகன். நாம தான் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கோமே. ஏதாவது யோசிக்கலாம் என்றவாறே ஒரு எண்ணை தொலைபேசியில் தட்டி பேசத்துவங்கினார்.

வணக்கம் சுரேஷ். நான் ரதீஸன் பேசறேன். ஒரு சின்ன பிரச்சனை. வர முடியுமா. லேட்டாயிடுத்தே பரவாயில்லையா. மன்னிக்கனும். ரொம்ப நன்றி. வாங்க. காத்திருக்கோம் என்று சொல்லி வைத்தார்.

ஐயோ இன்னும் எத்தனை நேரம் இங்கு இருக்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டு மோகன் யோசனையில் ஆழ்ந்தான். அவன் கணினி தொழில் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவனில் இருந்த எழுத்தாளன் இன்னும் ஆழமாக போய் பார்க்கலாமே என்று தூண்டிக் கொண்டிருந்தது. கதையில் மர்மங்களை போட்டுத் தாக்கலாம். நிஜத்தில் சந்திக்க எத்தனை துணிவு வேண்டும் என்று உணர்ந்துக் கொண்டிருந்தான்.

சுரேஷ் – சங்க கால வழக்கறிஞர்களை போல இல்லாமல் இளைமையாக சுறுசுறுப்பாக தென்பட்டான். வெள்ளை நிற போலோ மேல் சட்டை. நீல நிற ஜீன்ஸ் ஒரு மாற்றமாக வெளுத்துப் போகாமல் இருந்தது. காபி பொடி நிறத்தில் ஒரு காலணி. இடது கையில் ஒரு காஸியோ ஜீஷாக் கடிகாரம். அடே பார்த்தவுடன் நான் எழுதும் கதைகளில் வரும் ரமேஷ் போல இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

ரத்தீஸன் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டான். பேசுவதை பொறுமையாக கேட்கும் மனிதர்களும் இன்னும் இருக்கின்றார்களா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டான் மோகன்.

ஸோ நீங்க முடியாதுன்னு சொல்லிப் பார்த்திட்டீங்க ஆனா அவங்க விடறதா இல்லை. அப்படித்தானே.

ஆம். என்றார் ரத்தீஸன்.

ஜென்டிலா மிரட்டிட்டும் போயிருக்காங்க. இல்லையா

ஆம்.

இன்ஸ்பெக்டரும் துணை போறாரு அப்படித்தானே.

ஆம்.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு தெளிவாக பேசினான் சுரேஷ். பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துவிடும் அளவிற்கு அவனுடைய பேச்சு மற்றும் பாவனைகள்.

அவங்க மோகனை ஒரு கதை எழுத சொல்றாங்க. அதுல அந்த எம்எல்ஏ மேலே கதிருக்கு கோபம் வர மாதிரி செய்யனும். அவேரே அந்த எம்எல்ஏவை கொலை பண்ணதா ஒத்துக்கனும். அப்படித்தானே.

ஆமாம்.

அப்புறம் கேஸ் கோர்டுக்கு போகும். அங்கே அவரை மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி விடுவிச்சிடலாம் அப்படின்னு உறுதியளிக்கறாங்க இல்லையா.

ஆமாம்.

இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்னு இந்த கேஸ் கோர்டுக்கு போயி அவங்க நினைக்கிறமாதிரி முடிவு வந்துட்டா கதிர் நிரந்தரமா கொலையாளின்ற பட்டத்தோட அப்புறம் பைத்தியக்காரன்ற பட்டத்தோடவும் வாழ வேண்டியிருக்கும். அவரை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காப்பாத்தனும்.
இரண்டாவது நிஜமான குற்றாவாளி தப்பிக்காம பார்த்துக்கனும். இல்லையா.

ரத்தீஸன் சற்றே ஆசுவாசத்துடன் இல்லை சுரேஷ். முதல் பாயிண்ட் சரி. இரண்டாவது நிஜமான குற்றாவளியை பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அது அரசியல் விவகாரம். அந்த சகதிக்குள்ள மாட்டிக்க நாங்க விரும்பலை. இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த அரசியல்வாதிங்க கிட்டேர்ந்து எங்க இரண்டு பேரை காப்பாத்தனும். ஏன்னா எனக்கும் பிராக்டீஸ் இருக்கு குடும்பம் இருக்கு. மோகனும் பிஸியான ஆள். அவருக்கும் குடும்பம் இருக்கு. எங்க குடும்பத்தினரும் தொழிலும் பாதிக்காம இருக்கனும். அவங்களுக்கு உதவனாலும் பிரச்சனை உதவாட்டாலும் பிரச்சனை.

அப்ப அவங்களுக்கு உதவுங்க என்றான் சகஜமாக.

என்ன என்று இருவரும் கண்களை விரித்துக் கேட்டனர்.

தொடரும்....
 
மோகன் சார்,

முதலில் இந்த கதையை படித்ததும் எனக்கு தோன்றியது, நல்ல வேளை இந்த கதையை இப்போதுதான் படித்தோம். இந்த கதை வெளிவந்த போதே படிக்க ஆரம்பித்திருந்தால் இவ்வளவு நல்ல கதையின் அடுத்த பாகத்திற்காக இந்த 4 வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருக்குமே!

ஆனால் அதே நேரத்தில் மனதிற்குள் தோன்றிய எண்ணம் இப்போதாவது முழுவதும் வருமா? இல்லை இதுபோல் இன்னும் ரெண்டு மூணு பகுதிகள் எழுதிவிட்டு இன்னும் சில வருடங்கள் காத்திருக்கவைத்துவிடுவாரோ?!

எது எப்படியோ நல்ல கதை என்பதால் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்க தயார்.

அது சரி சார், அந்த பெரியவர் யார்? அவர் ஏன் கதிரை ஆற்றில் தள்ளி தானும் குதித்தார்? இது உண்மையில் நடக்கிறதா? அல்லது டாக்டரின் கதையில் வருகிறதா? தெரிந்துகொள்ள ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்...

நன்றி ஸ்ரேயன். மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக. அவசியம் இம்முறை நடக்காது என்று நம்புகிறேன். விரைவில் முழுவதும் பதிக்கப்படும். ஆதரவுக்கு நன்றி.
 
Back
Top