ரங்கராஜன்
New member
வணக்கம் உறவுகளே...
தலைப்பை பார்த்தவுடன் பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்து இருப்பீர்கள்.. நீங்கள் எந்த பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்தீர்களோ, அதைவிட அதிகமான பதட்டத்துடன் தான் இந்த திரியை நான் தொடங்கியுள்ளேன். இந்த பதட்டத்திற்கு காரணம் பயம் அல்ல, மற்றவர்களின் இறை நம்பிக்கையை நோகடித்து விடுவோமோ என்ற பதட்டமும், உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற பதட்டமும் தான். நாம் விஷயத்திற்கு போகும் முன்பு.. சில வேண்டுகோள்...
முன்குறிப்பு : இந்த திரியை கண்ணியமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் தொடங்கியுள்ளேன். இதை படிப்பவர்கள் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் இந்த விஷயங்களை பார்க்கவும், அணுகவும் வேண்டிக் கொள்கிறேன். நான் இந்த திரியில் யார் மதத்தையும் குற்றம் சொல்லவோ, கிண்டல் செய்யவோ போவதில்லை... நம்மை ஆட்டிப் படைக்கு அந்த சக்தி இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது... சோ, இந்த திரியை அணுகும் நீங்கள்... உங்களுக்குள் இருக்கும் அனைத்து விதமான முகமூடியையும், மத உணர்வையும், மூடநம்பிக்கைகளையும் கழட்டி விட்டு வந்தால், நாம் விவாதித்து உங்களின் உண்மைகளை நானும், என்னுடைய உண்மைகளை நீங்களும் புரிந்துக் கொள்ளவும் தெரிந்துக் கொள்ளவும் உபயோகமாக இருக்கும். இந்த திரி யாருக்கு முக்கியமோ இல்லையோ, எனக்கு மிக முக்கியம் காரணம் நான் பல ஆண்டுகளாக தேடும் கேள்வி இது... சோ அனைத்து உறவுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... தேவைப்பட்டால் இந்த திரியை பண்பட்டவர் பகுதிக்கும் மாற்றலாம்.
இந்த திரியை நான் தொடங்கியவுடன், நான் எதோ நாத்திகவாதி என்று எண்ணி விடவேண்டாம். பைக்கில் போகும் போது எதிரிலோ, பக்கவாட்டிலோ கோவிலைப் பார்த்தால் என்னை அறியாமல் கையை விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளம் அளவிற்கு நான் சுத்தமான ஆத்திகவாதி,.......... ஆனால் யோக்கியமான ஆத்திகவாதியா, நம்பிக்கையான ஆத்திகவாதியா என்றால் இல்லை...... இந்த இல்லை என்ற பதிலை சொல்லும் அந்த இடைவெளியில் தான் என்னுள் சில நாத்திக சிந்தனைகள் ஒலிந்து இருக்கிறது... இவை எங்கிருந்து என்னுள் வந்தது, புத்தக வாசிக்கும் பழக்கத்தில் இருந்தா, கண் எதிரே அம்மா விபத்தில் பலியானாலே அதிலிருந்தா, என்னை பார்த்து எழுதிய பையன் தேர்வில் தேர்ச்சி பெற்று, நான் தோல்வியை தழுவினேனே அதிலிருந்தா, ஒவ்வொரு முறை கோவிலுக்கு போகும் போதும் ஒரு 90 வயது கிழவி பசியில் துடித்தபடி பிச்சை கேட்பாளே அதிலிருந்தா........ தெரியவில்லை...
இந்த குழப்பத்தின் விளைவு தான் இந்த திரி. கடவுள் உண்மையா? கட்டுக்கதையா?... எவ்வளவு பெரிய கேள்வியை இப்படி சாதாரண கேட்டு இருக்கேனே என்று என்னை பார்த்தால் உங்களுக்கு சிரிப்புக் கூட வரலாம். ஆண்டு ஆண்டுகாலமாக பல ஞானிகளும், பல அறிஞர்களும், பல பெரியவர்களும் தேடி அலைந்த கேள்வி இது.... இப்படி சாதாரணமா இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் தளங்களில் ஒன்றான இந்த மன்றத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் நான் இதை தொடங்கினேன் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
விடை கிடைக்காவிட்டாலும், தெளிவு கிடைக்கும் இல்லையா... இந்து, கிறித்துவன், இஸ்லாமியன், புத்த மதம், ஜென், சீக்கிய மதம், இப்படி உலகத்தில் எத்தனையோ மதங்கள்... அதற்குள் பல உட்பிரிவுகள், அதிலும் பல கடவுள்கள்... ஒரு சாமிக்கு நெய் பருப்பு சாதம் படையல் என்றால் இன்னோரு சாமிக்கு சாராயம் பச்சை ரத்தம் படையல், ஒரு சாமிக்கு அப்பமும் திராட்சை ரசமும் என்றால், இன்னோரு சாமிக்கு படையலே கிடையாது. என்னுடைய முதல் சந்தேகம் எந்த சாமி இப்படி உலக மக்களை குழுகுழுவாக பிரித்தது. இரண்டாவது சந்தேகம் ஏன் பிரித்தது. கடவுள் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே, இதில் எங்கிருந்து வந்தது இந்த பாகுபாடுகளும், வரைமுறைகளும்.
இயற்கையாக அமைந்த தட்பவெட்பத்திற்கு தகுந்த மாதிரி குளிர்பிரதேச மனிதர்கள் வெள்ளையாகவும், அதுக்கு தகுந்த தடிமனான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர், வெட்பம் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் கருப்பு நிறத்திலும் மெலிதான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர். இப்படி மக்களின் உருவ அமைப்பு, உடல் அமைப்பு, வாழ்க்கை முறை இவை அனைத்தும் இயற்கை அளித்த தட்பவெட்பத்தின் வழியாக இயற்கையாக அமைந்தது என்பது ஏற்றுக் கொள்ள முடிகிறது... ஆனால் கடவுள் எப்படி தனிதனியாக பிரிக்கப்பட்டு இந்த குழுவினர் இந்த மதத்தை கும்பிடுங்கள், இந்த தேசத்து மக்கள் இதனை கும்பிடுங்கள்... என்று தனிதனியாக பிரித்தது யார்....
கர்த்தர் பிறந்த காலத்திலோ, கிருஷ்ணர் பிறந்த காலத்திலோ, அல்லா தோன்றிய காலத்திலோ கண்டிப்பாக உலகத்தில் மற்ற மனிதர்கள் இருந்து இருப்பார்களே அவர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருப்பார்கள்... சரி அப்படி அவர்கள் பின் பற்றி இருந்தால், அப்புறம் ஏன் அதன் பின் இந்த மதங்கள் தோன்றின..... சரி தோன்றி விட்டது பரவாயில்லை, பிற்காலத்தில் இந்த மதங்கள் அழிந்து வேறு மதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கா..... அப்போ, இதுக்கு முன்பு இருந்த மதத்தின் நம்பிக்கை பொய்ப்பிக்கப்பட்டு தானே, நாம் அடுத்த மதத்திற்கு போகிறோம்.....
சில நாட்களுக்கு முன்பு ஆதனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்காவின் சீக்ரெட் மிஷின் பற்றி பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கெங்கோ சென்று கடைசியில் மதத்தில் முடிந்தது. அப்போது நான் ஆரம்பித்தில் கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதை கொள்கையாகவே எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று, மதத்தை பரப்புவதே தங்களின் வாழ்நாள் சேவையாக செய்தார்கள், இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி, சில பல சலுகைகள் மூலமாக மக்களை இவ்வாறு மதம் மாறச்சொல்வது தப்பில்லையா என்று கேட்டேன்... கேட்டு சில நிமிடங்களுக்கு அப்புறம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது... ஆதன் ஒரு கிறித்துவன் என்று, எனக்கு மிகவும் சங்டமாப் போச்சு... இதுவரை அவன் பலமுறை அவனுடைய உண்மையான பெயர் சொல்லி எனக்கு அது நினைவில் இல்லை... இப்போ கூட எனக்கு அவன் பெயர் தெரியாது.... ஏன் மன்றத்தில் இருக்கும், மதி, அமரன், விகடன், நாரதர் இப்படி நிறைய பேரின் உண்மையான பெயர் எனக்கு தெரியாது... காரணம் நாம் தமிழால் இணைந்தோம், மன்றத்தால் நட்புக் கொண்டோம், அந்த அடையாளமே போதும் என்று இருந்து விட்டேன். இப்பக் கூட சில போன் செய்து எனக்கு அவர்களின் உண்மையான பெயரை சொல்லி ஹலோ சொன்னால் சில நிமிடம் நான் தெனறி விடுவேன்.
அப்படி ஆதனிடம் அந்த கேள்வியை தெரியாமல் கேட்டுவிட்டேன்... அவன் கோபப்படுவான் என்று நான் நினைத்தேன், அவன் கோபப்படவில்லை, மாறாக... கிறித்துவத்தின் தோற்றம் முதற்கொண்டு வரலாறையே எனக்கு பொறுமையாக சொன்னான். அதில் என்னை கவர்ந்தது ஒரு விஷயம் அவன் சொன்னான்.
"மதமாற்றுவது ஏன் கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதில் இருக்கும் அர்த்தம் புரியும்,... நம் இந்து மதத்தில் (இந்து மதத்தை கூட அவன் நம் இந்து மதத்தில் என்று கூறினான்.. நடுநிலையானவன்) ஆரம்பித்தில் இருந்து ஒரு பிரச்சனை இருந்தது, அதாவது மக்கள் பல பிரிவுகளாக ஆதி காலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன, இவன் கோவிலுக்கு போலாம், அவன் போகக்கூடாது, இவன் எதிரே வரலாம், அவன் வரக்கூடாது, இவன் தொடலாம், அவன் தொடக்கூடாது இப்படி நிறைய கட்டுப்பாடுகள்....மீறினால் அடி உதை, கொலை, இப்படி இருக்கும் போது, புதிதாக கிறித்துவம் என்று ஒரு மதத்தை சிலர் கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வரும் போது அவர்கள் சொன்னது, எல்லாரும் வாங்க, கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார்கள், உங்களுக்காக தான் கடவுள் பிறந்து இருக்கிறான் என்றார்கள்........ நீ கடவுளைப் பார்க்க கூட அருகதையில்லாதவன், கீழ் ஜாதி என்று துரத்தப்பட்ட அவனுடம், உனக்காக தான் கடவுள் பிறக்கிறான் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்.......... சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்" என்று கூறினான். அதன்பின்னர் அவன் கூறிய சில நியாயமான நடுநிலையான விஷயங்களை இங்கு நான் இப்போ கூறமுடியாது காரணம், அது ஒரு கிறித்துவனாகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ அவன் பேசவில்லை... அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனாக அவன் பேசினான்.... அப்படி அவன் பேசுவதை கேட்க நானும் நம்முடைய முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு ஆராயத்துடிக்கும் மனிதனாக வந்தால் அதைப் பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்...
அவன் சொன்னதில் தப்பில்லை, யாராக இருந்தாலும், தன்னை மதிப்பவர்களை தான் நாம் திரும்ப மதிப்போம், அது கானா இருந்தாலும் சரி, கந்தசாமியாக இருந்தாலும் சரி, கர்த்தராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி...... மனிதனின் ரத்தத்தில் எழுதப்படாத சட்டம் அது, மதிப்பவர்களையும், முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் திரும்பவும் மதிக்க வேண்டும் என்பது. சோ, மனிதனை மேம்படுத்த மனிதனால் தான் முடிகிறது, கடவுளை நம்பவைக்கவும், மறுக்கவைக்கவும் மனிதனால் தான் முடிகிறது... தானாக உருவான கோவிலும், சர்ச்சும், மசூதியும் இதுவரை இல்லையே, அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே.... கடவுளின் உருவத்தையும், புகைப்படத்தையும் அவன் தானே உருவாக்குகிறான்.
ஆக்ரோஷமாக கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கவலைப்படாதே உனக்கு ஒன்று என்றால் நான் வருவேன், தற்காப்போடு என்பது போல புகைப்படங்கள், சிலைகள். அல்லது சாந்த சொரூபமாக, வாழ்க்கையில் அனைத்தையும் பொறுமையாக தான் டீல் பண்ணவேண்டும் என்று ஒரு பக்கம். இன்னோரு பக்கம் எனக்கு உருவமே இல்லை, ஜோதி வடிவம் தான் கடவுள் என்றார்கள்... இவை அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனநிலைக்கும், மனக்கட்டுப்பாடுக்கும் படைக்கப்பட்டன, கொஞ்சம் அனைத்து மதத்தில் உள்ள தெய்வங்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஹார்ஷாக சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு, என்னிடம் இது இருக்கிறது உன்னிடம் அது இல்லை என்பது போல தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.... இவை தெய்வத்தின் மீது நான் சாடுவதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். தெய்வங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப சித்தரித்தார்களே அவர்களை தான் நான் சாடுகிறேன்..
நம்முடைய தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, பாட்டிக்கு பாட்டி எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு தெரியாது, அதற்கு முன்பு வாழ்ந்த ராஜராஜசோழன் எப்படி இருப்பார்னு தெரியாது, இப்படி வரலாறு இருப்பவர்களையே நாம் திரித்து சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில், வரலாறும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் எப்படி கடவுள் மட்டும் இப்படி தான் இருப்பார், இப்படித்தான், அவர் அசுரர்களை கொன்றார், இப்படி தான் சிலுவையில் அரையப்பட்டார் என்று நாம் கூறுகிறோம்..... கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா, இல்லை... அப்படி பார்த்தால் அவர் பார்த்ததுக்கு என்ன அத்தாட்சி, மற்றொருவரும் நானும் பார்த்தேன் என்று கூறினால், அவர் பொய் சொல்லவில்லை என்பதற்கு அத்தாட்சி என்ன???? இப்படி கேள்விகள் சங்கிலிப் போல சென்றுக் கொண்டே தான் இருக்கும் இதற்கு காரணம் நம்பிக்கையின்மை....
இந்த நம்பிக்கை நமக்கு எதி்ல் இருந்து வருகிறது ஒன்று ஆன்மீகத்தின் மூலமாக, அல்லது விஞ்ஞானத்தின் மூலமாக... உலகம் இத்தனை மாற்றங்களை கண்டுக் கொண்டு இருப்பதற்கு சாட்சி யார், நீயும் கிடையாது நானும் கிடையாது உன் பரம்பரையும் கிடையாது என் பரம்பரையும் கிடையாது... நமக்கு இருக்கும் ஒரே சாட்சி அந்த சூரியன் மட்டும் தான்... (தேர்தல் நேரம் என்பதால் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம்)நான் சொல்வது தி சன், அது மட்டும் தான் நம்முடைய பூமி வரலாற்றின் சாட்சி, நிலாக்கூட தேய்ந்து தேய்நது லீவு எடுத்து வருகிறது. ஆனால் சூரியன் எதோ ஒரு பக்கத்தில் மறைந்தாலும், மற்றொரு பக்கத்தில் பூமியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது... நம் பூமியின் அனைத்து உயிர்களும் தோன்றியதற்கு காரணம் அது மட்டும் தானே, அதனால் தானே, மாயன் கலாச்சாரத்தில் இருந்து, ஹரப்பா, மொஹன்ஜிதாரோ போன்ற கலாச்சாரங்கள் வரை அனைத்து மக்களும் சூரியனையே கடவுளாக வழிபட்டனர். அப்போ நம்முடைய சாமிகள் எல்லாரும் எங்கே சென்றனர், இன்று நம் சூரியன் இருக்கிறானே, ஆனால் எத்தனை கடவுள்கள் தோன்றி மறைந்துள்ளனர்.
நம் அண்டசராசரத்தில் சூரியனைப் போல பல கோடி மடங்கு பெரிய தான நட்சத்திரம் ஒன்று இருக்கிறதாம், அப்போ சூரியனை நாம் இத்தனை நாளாய் கடவுளாக வழிபட்டோமே, அதுவும் பொய்யா,.... சரி விஞ்ஞானமும், அறிவியிலும் தான் உண்மை என்று அதை நம்பினால், அறிவியல் கண்டுபிடிப்பிலே மிக முக்கியமான கண்டுபிடிப்பு, புவியீர்ப்பு விசை தான். ஆனால் அதையும் பொய்யாக்கி, அண்டசராசரத்தில் மிதக்கும் செயற்கைகோளையே கண்டுபிடித்து இருக்கோமே, காரணம் கேட்டால் அங்கு புவியீர்ப்பு விசை வேலை செய்யாது என்று சொல்கிறோமே, அப்போ பூமி தன்னுடைய ஆதர்சன வாட்டில் இருந்து கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பினால் என்ன ஆகும், நிலம் எல்லாம் கடலாகும், கடல் எல்லாம் நிலமாகும்.. புவியீர்ப்பு விசை அதிகரிக்கலாம், குறையலாம், அல்லது முற்றிலும் அனைத்தும் மறைந்து அனைத்தும் வெடித்து சிதறலாம்...
அதற்கும் விஞ்ஞானம் விடை சொல்லும், இது இப்படி இருந்ததால, அது அப்படி வந்ததால, இப்படி ஆச்சி இதன் பெயர் தான் இந்த தியரி, இதை இந்த ஆண்டில் இவன் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டான்... என்று. அவன் பொய் சொல்லி இருந்தால், கூட இருந்தவனும் பொய் சொல்லி இருந்தால், ஆன்மீகத்தில் மட்டும் அத்தனை கேள்வி கேட்கிறோமே, விஞ்ஞானத்தில் மட்டும் ஏன் கேட்பதில்லை... ஜூரோ என்ற எண்ணுக்கு முன், வேறு ஒரு நெகட்டிவ் இல்லா எண் இருக்கிறது என்று யாராவது இப்போ கண்டுபிடித்தால் என்ன ஆவது, நம்முடைய நூற்றாண்டுகால கணக்கு எல்லாம் இப்போ, தப்பாகிப் போகுமே... அண்டசராசரமே தப்பாகி போகுமே...
இல்லை ஆகாது,
ஏன் ஆகாது..
கண்டிப்பாக ஆகாது..
ஏன்னு விளக்கமா சொல்லு
விளக்க தெரியாது, ஆனால் ஆகாது
எதை வச்சிட்டு அப்படி சொல்ற
தொணுது சொல்றேன்...
அப்போ இந்த நம்பிக்கை தான் கடவுளும், விஞ்ஞானமுமா??????
(உறுப்பினர்கள் அனுமதி அளித்தால் இன்னும் பேசலாம்...)
தலைப்பை பார்த்தவுடன் பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்து இருப்பீர்கள்.. நீங்கள் எந்த பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்தீர்களோ, அதைவிட அதிகமான பதட்டத்துடன் தான் இந்த திரியை நான் தொடங்கியுள்ளேன். இந்த பதட்டத்திற்கு காரணம் பயம் அல்ல, மற்றவர்களின் இறை நம்பிக்கையை நோகடித்து விடுவோமோ என்ற பதட்டமும், உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற பதட்டமும் தான். நாம் விஷயத்திற்கு போகும் முன்பு.. சில வேண்டுகோள்...
முன்குறிப்பு : இந்த திரியை கண்ணியமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் தொடங்கியுள்ளேன். இதை படிப்பவர்கள் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் இந்த விஷயங்களை பார்க்கவும், அணுகவும் வேண்டிக் கொள்கிறேன். நான் இந்த திரியில் யார் மதத்தையும் குற்றம் சொல்லவோ, கிண்டல் செய்யவோ போவதில்லை... நம்மை ஆட்டிப் படைக்கு அந்த சக்தி இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது... சோ, இந்த திரியை அணுகும் நீங்கள்... உங்களுக்குள் இருக்கும் அனைத்து விதமான முகமூடியையும், மத உணர்வையும், மூடநம்பிக்கைகளையும் கழட்டி விட்டு வந்தால், நாம் விவாதித்து உங்களின் உண்மைகளை நானும், என்னுடைய உண்மைகளை நீங்களும் புரிந்துக் கொள்ளவும் தெரிந்துக் கொள்ளவும் உபயோகமாக இருக்கும். இந்த திரி யாருக்கு முக்கியமோ இல்லையோ, எனக்கு மிக முக்கியம் காரணம் நான் பல ஆண்டுகளாக தேடும் கேள்வி இது... சோ அனைத்து உறவுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... தேவைப்பட்டால் இந்த திரியை பண்பட்டவர் பகுதிக்கும் மாற்றலாம்.
இந்த திரியை நான் தொடங்கியவுடன், நான் எதோ நாத்திகவாதி என்று எண்ணி விடவேண்டாம். பைக்கில் போகும் போது எதிரிலோ, பக்கவாட்டிலோ கோவிலைப் பார்த்தால் என்னை அறியாமல் கையை விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளம் அளவிற்கு நான் சுத்தமான ஆத்திகவாதி,.......... ஆனால் யோக்கியமான ஆத்திகவாதியா, நம்பிக்கையான ஆத்திகவாதியா என்றால் இல்லை...... இந்த இல்லை என்ற பதிலை சொல்லும் அந்த இடைவெளியில் தான் என்னுள் சில நாத்திக சிந்தனைகள் ஒலிந்து இருக்கிறது... இவை எங்கிருந்து என்னுள் வந்தது, புத்தக வாசிக்கும் பழக்கத்தில் இருந்தா, கண் எதிரே அம்மா விபத்தில் பலியானாலே அதிலிருந்தா, என்னை பார்த்து எழுதிய பையன் தேர்வில் தேர்ச்சி பெற்று, நான் தோல்வியை தழுவினேனே அதிலிருந்தா, ஒவ்வொரு முறை கோவிலுக்கு போகும் போதும் ஒரு 90 வயது கிழவி பசியில் துடித்தபடி பிச்சை கேட்பாளே அதிலிருந்தா........ தெரியவில்லை...
இந்த குழப்பத்தின் விளைவு தான் இந்த திரி. கடவுள் உண்மையா? கட்டுக்கதையா?... எவ்வளவு பெரிய கேள்வியை இப்படி சாதாரண கேட்டு இருக்கேனே என்று என்னை பார்த்தால் உங்களுக்கு சிரிப்புக் கூட வரலாம். ஆண்டு ஆண்டுகாலமாக பல ஞானிகளும், பல அறிஞர்களும், பல பெரியவர்களும் தேடி அலைந்த கேள்வி இது.... இப்படி சாதாரணமா இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் தளங்களில் ஒன்றான இந்த மன்றத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் நான் இதை தொடங்கினேன் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
விடை கிடைக்காவிட்டாலும், தெளிவு கிடைக்கும் இல்லையா... இந்து, கிறித்துவன், இஸ்லாமியன், புத்த மதம், ஜென், சீக்கிய மதம், இப்படி உலகத்தில் எத்தனையோ மதங்கள்... அதற்குள் பல உட்பிரிவுகள், அதிலும் பல கடவுள்கள்... ஒரு சாமிக்கு நெய் பருப்பு சாதம் படையல் என்றால் இன்னோரு சாமிக்கு சாராயம் பச்சை ரத்தம் படையல், ஒரு சாமிக்கு அப்பமும் திராட்சை ரசமும் என்றால், இன்னோரு சாமிக்கு படையலே கிடையாது. என்னுடைய முதல் சந்தேகம் எந்த சாமி இப்படி உலக மக்களை குழுகுழுவாக பிரித்தது. இரண்டாவது சந்தேகம் ஏன் பிரித்தது. கடவுள் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே, இதில் எங்கிருந்து வந்தது இந்த பாகுபாடுகளும், வரைமுறைகளும்.
இயற்கையாக அமைந்த தட்பவெட்பத்திற்கு தகுந்த மாதிரி குளிர்பிரதேச மனிதர்கள் வெள்ளையாகவும், அதுக்கு தகுந்த தடிமனான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர், வெட்பம் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் கருப்பு நிறத்திலும் மெலிதான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர். இப்படி மக்களின் உருவ அமைப்பு, உடல் அமைப்பு, வாழ்க்கை முறை இவை அனைத்தும் இயற்கை அளித்த தட்பவெட்பத்தின் வழியாக இயற்கையாக அமைந்தது என்பது ஏற்றுக் கொள்ள முடிகிறது... ஆனால் கடவுள் எப்படி தனிதனியாக பிரிக்கப்பட்டு இந்த குழுவினர் இந்த மதத்தை கும்பிடுங்கள், இந்த தேசத்து மக்கள் இதனை கும்பிடுங்கள்... என்று தனிதனியாக பிரித்தது யார்....
கர்த்தர் பிறந்த காலத்திலோ, கிருஷ்ணர் பிறந்த காலத்திலோ, அல்லா தோன்றிய காலத்திலோ கண்டிப்பாக உலகத்தில் மற்ற மனிதர்கள் இருந்து இருப்பார்களே அவர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருப்பார்கள்... சரி அப்படி அவர்கள் பின் பற்றி இருந்தால், அப்புறம் ஏன் அதன் பின் இந்த மதங்கள் தோன்றின..... சரி தோன்றி விட்டது பரவாயில்லை, பிற்காலத்தில் இந்த மதங்கள் அழிந்து வேறு மதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கா..... அப்போ, இதுக்கு முன்பு இருந்த மதத்தின் நம்பிக்கை பொய்ப்பிக்கப்பட்டு தானே, நாம் அடுத்த மதத்திற்கு போகிறோம்.....
சில நாட்களுக்கு முன்பு ஆதனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்காவின் சீக்ரெட் மிஷின் பற்றி பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கெங்கோ சென்று கடைசியில் மதத்தில் முடிந்தது. அப்போது நான் ஆரம்பித்தில் கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதை கொள்கையாகவே எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று, மதத்தை பரப்புவதே தங்களின் வாழ்நாள் சேவையாக செய்தார்கள், இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி, சில பல சலுகைகள் மூலமாக மக்களை இவ்வாறு மதம் மாறச்சொல்வது தப்பில்லையா என்று கேட்டேன்... கேட்டு சில நிமிடங்களுக்கு அப்புறம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது... ஆதன் ஒரு கிறித்துவன் என்று, எனக்கு மிகவும் சங்டமாப் போச்சு... இதுவரை அவன் பலமுறை அவனுடைய உண்மையான பெயர் சொல்லி எனக்கு அது நினைவில் இல்லை... இப்போ கூட எனக்கு அவன் பெயர் தெரியாது.... ஏன் மன்றத்தில் இருக்கும், மதி, அமரன், விகடன், நாரதர் இப்படி நிறைய பேரின் உண்மையான பெயர் எனக்கு தெரியாது... காரணம் நாம் தமிழால் இணைந்தோம், மன்றத்தால் நட்புக் கொண்டோம், அந்த அடையாளமே போதும் என்று இருந்து விட்டேன். இப்பக் கூட சில போன் செய்து எனக்கு அவர்களின் உண்மையான பெயரை சொல்லி ஹலோ சொன்னால் சில நிமிடம் நான் தெனறி விடுவேன்.
அப்படி ஆதனிடம் அந்த கேள்வியை தெரியாமல் கேட்டுவிட்டேன்... அவன் கோபப்படுவான் என்று நான் நினைத்தேன், அவன் கோபப்படவில்லை, மாறாக... கிறித்துவத்தின் தோற்றம் முதற்கொண்டு வரலாறையே எனக்கு பொறுமையாக சொன்னான். அதில் என்னை கவர்ந்தது ஒரு விஷயம் அவன் சொன்னான்.
"மதமாற்றுவது ஏன் கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதில் இருக்கும் அர்த்தம் புரியும்,... நம் இந்து மதத்தில் (இந்து மதத்தை கூட அவன் நம் இந்து மதத்தில் என்று கூறினான்.. நடுநிலையானவன்) ஆரம்பித்தில் இருந்து ஒரு பிரச்சனை இருந்தது, அதாவது மக்கள் பல பிரிவுகளாக ஆதி காலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன, இவன் கோவிலுக்கு போலாம், அவன் போகக்கூடாது, இவன் எதிரே வரலாம், அவன் வரக்கூடாது, இவன் தொடலாம், அவன் தொடக்கூடாது இப்படி நிறைய கட்டுப்பாடுகள்....மீறினால் அடி உதை, கொலை, இப்படி இருக்கும் போது, புதிதாக கிறித்துவம் என்று ஒரு மதத்தை சிலர் கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வரும் போது அவர்கள் சொன்னது, எல்லாரும் வாங்க, கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார்கள், உங்களுக்காக தான் கடவுள் பிறந்து இருக்கிறான் என்றார்கள்........ நீ கடவுளைப் பார்க்க கூட அருகதையில்லாதவன், கீழ் ஜாதி என்று துரத்தப்பட்ட அவனுடம், உனக்காக தான் கடவுள் பிறக்கிறான் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்.......... சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்" என்று கூறினான். அதன்பின்னர் அவன் கூறிய சில நியாயமான நடுநிலையான விஷயங்களை இங்கு நான் இப்போ கூறமுடியாது காரணம், அது ஒரு கிறித்துவனாகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ அவன் பேசவில்லை... அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனாக அவன் பேசினான்.... அப்படி அவன் பேசுவதை கேட்க நானும் நம்முடைய முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு ஆராயத்துடிக்கும் மனிதனாக வந்தால் அதைப் பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்...
அவன் சொன்னதில் தப்பில்லை, யாராக இருந்தாலும், தன்னை மதிப்பவர்களை தான் நாம் திரும்ப மதிப்போம், அது கானா இருந்தாலும் சரி, கந்தசாமியாக இருந்தாலும் சரி, கர்த்தராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி...... மனிதனின் ரத்தத்தில் எழுதப்படாத சட்டம் அது, மதிப்பவர்களையும், முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் திரும்பவும் மதிக்க வேண்டும் என்பது. சோ, மனிதனை மேம்படுத்த மனிதனால் தான் முடிகிறது, கடவுளை நம்பவைக்கவும், மறுக்கவைக்கவும் மனிதனால் தான் முடிகிறது... தானாக உருவான கோவிலும், சர்ச்சும், மசூதியும் இதுவரை இல்லையே, அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே.... கடவுளின் உருவத்தையும், புகைப்படத்தையும் அவன் தானே உருவாக்குகிறான்.
ஆக்ரோஷமாக கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கவலைப்படாதே உனக்கு ஒன்று என்றால் நான் வருவேன், தற்காப்போடு என்பது போல புகைப்படங்கள், சிலைகள். அல்லது சாந்த சொரூபமாக, வாழ்க்கையில் அனைத்தையும் பொறுமையாக தான் டீல் பண்ணவேண்டும் என்று ஒரு பக்கம். இன்னோரு பக்கம் எனக்கு உருவமே இல்லை, ஜோதி வடிவம் தான் கடவுள் என்றார்கள்... இவை அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனநிலைக்கும், மனக்கட்டுப்பாடுக்கும் படைக்கப்பட்டன, கொஞ்சம் அனைத்து மதத்தில் உள்ள தெய்வங்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஹார்ஷாக சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு, என்னிடம் இது இருக்கிறது உன்னிடம் அது இல்லை என்பது போல தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.... இவை தெய்வத்தின் மீது நான் சாடுவதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். தெய்வங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப சித்தரித்தார்களே அவர்களை தான் நான் சாடுகிறேன்..
நம்முடைய தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, பாட்டிக்கு பாட்டி எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு தெரியாது, அதற்கு முன்பு வாழ்ந்த ராஜராஜசோழன் எப்படி இருப்பார்னு தெரியாது, இப்படி வரலாறு இருப்பவர்களையே நாம் திரித்து சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில், வரலாறும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் எப்படி கடவுள் மட்டும் இப்படி தான் இருப்பார், இப்படித்தான், அவர் அசுரர்களை கொன்றார், இப்படி தான் சிலுவையில் அரையப்பட்டார் என்று நாம் கூறுகிறோம்..... கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா, இல்லை... அப்படி பார்த்தால் அவர் பார்த்ததுக்கு என்ன அத்தாட்சி, மற்றொருவரும் நானும் பார்த்தேன் என்று கூறினால், அவர் பொய் சொல்லவில்லை என்பதற்கு அத்தாட்சி என்ன???? இப்படி கேள்விகள் சங்கிலிப் போல சென்றுக் கொண்டே தான் இருக்கும் இதற்கு காரணம் நம்பிக்கையின்மை....
இந்த நம்பிக்கை நமக்கு எதி்ல் இருந்து வருகிறது ஒன்று ஆன்மீகத்தின் மூலமாக, அல்லது விஞ்ஞானத்தின் மூலமாக... உலகம் இத்தனை மாற்றங்களை கண்டுக் கொண்டு இருப்பதற்கு சாட்சி யார், நீயும் கிடையாது நானும் கிடையாது உன் பரம்பரையும் கிடையாது என் பரம்பரையும் கிடையாது... நமக்கு இருக்கும் ஒரே சாட்சி அந்த சூரியன் மட்டும் தான்... (தேர்தல் நேரம் என்பதால் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம்)நான் சொல்வது தி சன், அது மட்டும் தான் நம்முடைய பூமி வரலாற்றின் சாட்சி, நிலாக்கூட தேய்ந்து தேய்நது லீவு எடுத்து வருகிறது. ஆனால் சூரியன் எதோ ஒரு பக்கத்தில் மறைந்தாலும், மற்றொரு பக்கத்தில் பூமியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது... நம் பூமியின் அனைத்து உயிர்களும் தோன்றியதற்கு காரணம் அது மட்டும் தானே, அதனால் தானே, மாயன் கலாச்சாரத்தில் இருந்து, ஹரப்பா, மொஹன்ஜிதாரோ போன்ற கலாச்சாரங்கள் வரை அனைத்து மக்களும் சூரியனையே கடவுளாக வழிபட்டனர். அப்போ நம்முடைய சாமிகள் எல்லாரும் எங்கே சென்றனர், இன்று நம் சூரியன் இருக்கிறானே, ஆனால் எத்தனை கடவுள்கள் தோன்றி மறைந்துள்ளனர்.
நம் அண்டசராசரத்தில் சூரியனைப் போல பல கோடி மடங்கு பெரிய தான நட்சத்திரம் ஒன்று இருக்கிறதாம், அப்போ சூரியனை நாம் இத்தனை நாளாய் கடவுளாக வழிபட்டோமே, அதுவும் பொய்யா,.... சரி விஞ்ஞானமும், அறிவியிலும் தான் உண்மை என்று அதை நம்பினால், அறிவியல் கண்டுபிடிப்பிலே மிக முக்கியமான கண்டுபிடிப்பு, புவியீர்ப்பு விசை தான். ஆனால் அதையும் பொய்யாக்கி, அண்டசராசரத்தில் மிதக்கும் செயற்கைகோளையே கண்டுபிடித்து இருக்கோமே, காரணம் கேட்டால் அங்கு புவியீர்ப்பு விசை வேலை செய்யாது என்று சொல்கிறோமே, அப்போ பூமி தன்னுடைய ஆதர்சன வாட்டில் இருந்து கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பினால் என்ன ஆகும், நிலம் எல்லாம் கடலாகும், கடல் எல்லாம் நிலமாகும்.. புவியீர்ப்பு விசை அதிகரிக்கலாம், குறையலாம், அல்லது முற்றிலும் அனைத்தும் மறைந்து அனைத்தும் வெடித்து சிதறலாம்...
அதற்கும் விஞ்ஞானம் விடை சொல்லும், இது இப்படி இருந்ததால, அது அப்படி வந்ததால, இப்படி ஆச்சி இதன் பெயர் தான் இந்த தியரி, இதை இந்த ஆண்டில் இவன் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டான்... என்று. அவன் பொய் சொல்லி இருந்தால், கூட இருந்தவனும் பொய் சொல்லி இருந்தால், ஆன்மீகத்தில் மட்டும் அத்தனை கேள்வி கேட்கிறோமே, விஞ்ஞானத்தில் மட்டும் ஏன் கேட்பதில்லை... ஜூரோ என்ற எண்ணுக்கு முன், வேறு ஒரு நெகட்டிவ் இல்லா எண் இருக்கிறது என்று யாராவது இப்போ கண்டுபிடித்தால் என்ன ஆவது, நம்முடைய நூற்றாண்டுகால கணக்கு எல்லாம் இப்போ, தப்பாகிப் போகுமே... அண்டசராசரமே தப்பாகி போகுமே...
இல்லை ஆகாது,
ஏன் ஆகாது..
கண்டிப்பாக ஆகாது..
ஏன்னு விளக்கமா சொல்லு
விளக்க தெரியாது, ஆனால் ஆகாது
எதை வச்சிட்டு அப்படி சொல்ற
தொணுது சொல்றேன்...
அப்போ இந்த நம்பிக்கை தான் கடவுளும், விஞ்ஞானமுமா??????
(உறுப்பினர்கள் அனுமதி அளித்தால் இன்னும் பேசலாம்...)
Last edited: