நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

நடிகர் திலகத்தின் சுயசரிதை(86): முதல் மரியாதை


டி.எஸ்.என்.: சமீபத்தில் உங்களுடைய சிறந்த படங்களில் ஒன்றான பாரதி ராஜாவின் முதல் மரியாதை படம் வெளியானது. அந்த படத்தில் உங்களுடைய அனுபவங்கள் என்ன?

சிவாஜி: எனக்கு பாரதி ராஜாவை அவரின் சிறு வௌஅது முதல் தெரியும். அவர் எனக்கு நெருக்கமானவர். அவருடைய படம் ஒன்றில் நடிக்க அவர் என்னை வேண்டினார். எனக்கு உடல் நிலை அப்போது சரியில்லை. இருந்தும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படம் தான் முதல் மரியாதை.

எங்களை படப்பிடிப்பிற்காக மைசூர் அழைத்துச் சென்றார் அவர். அங்கு காவிரி நதிக்கரையில் சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சிக்கருகில் ஒரு மரத்தடியில் அமரச்சொன்னார்கள். பாரதி ராஜா எனக்கு ஒரே ஒரு செட் ஆடையை மட்டும் தந்தார். காலில் அணிய செருப்பு கிடையாது. அப்படி அங்கு ஒரு மாதம் வரை அமரச்செய்தார்கள். கிராமத்து சூழ்னிலையில் படமாக்கப்பட்ட அந்த படம் வசூலில் சாதனை படைத்தது.

சில வருடங்கள் கழித்து அவர் என்னை வைத்து பசும் பொன் என்ற படத்தை பண்ணினார். ராதிகா அதில் என்னுடன் நடித்தார். நாங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கும் மைசூர் சென்றோம். படத்தை முடிக்க இரவு பகலாக உழைத்தோம். படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் திடீர் என்று நோய் வாய் பட்டேன். எனது நாடித்துடிப்பு குறந்தி என்னை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றார்கள். அங்கு அறுவை சிகிச்சை மூலம் எனக்கு மார்பில் பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினார்கள். அதற்கு உறுதுணையாக இருந்தவர் பாரதி ராஜா. அந்த பேஸ் மேக்கர் இருக்கும்வரை பாரதி ராஜா எனது உள்ளத்தில் வாழ்வார்.


டி.எஸ்.என்.: முதல் மரியாதை படத்தின் ஒரு சிறப்பு அதில் இடம் பெற்ற அழகான நாட்டுப் புற பாடல்கள். உங்களுடைய எண்ணங்கள்?

சிவாஜி: ஒரு படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்துவிட்டால் அந்த பெருமை இசை அமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும், பாடகர்களுக்கும் மட்டுமே சேரும். பல கவிஞர்கள் படங்களுக்கு பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். அந்த காலத்தில் பாப நாசம் சிவன். அதற்கப்புறம் கே.எம்.ஷெரீப், மருதகாசி, உடுமலை நாராயண சுவாமி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் என்று பலர். கவிஞர் கண்ணதாசன் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

கவிஞர் வாலி பல நல்ல பாடல்களை எழுதினார். அவருக்கு பிறகு கவிஞர் வைரமுத்து. அது போல பல நல்ல பாடலாசிரியர்கள் திரையுலகிற்கு வந்தனர். தற்போது தமிழ் திரை பாடல்களில் அர்த்தம் புரியாத ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவதை பார்க்கிறோம். இதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் போல இருக்கு.

எனது நண்பர் கண்னதாசன் எனது பல படங்களுக்கு பாடல்கள் இயற்றியிருக்கிறார். நான் அவரை புகழாத நாள் இல்லை. " ஓ கவியே! அன்பு கண்ணதாசா! நீ புகழ் பெற்ற கம்பர், காளிதாசர் இவர்களை மிஞ்சி விட்டாய்!". அதே மாதிரி நான் கவிஞர் வைரமுத்துவை கண்னதாசனை மிஞ்சி விட்டதாக மனதார பாராட்டியிருக்கிறேன். நான் இதை எதற்காக கூறுகிறேன் என்றால் அவரும் கண்ணதாசனை போல் புகழ் பெற வேண்டும் என்பதால் தான்.

எனது சிறு வயதிலிருந்தே எனக்கு கவிதைகளில் ஈடுபாடு உண்டு. அதனால் தான் நான் கலம் கண்ட கவிஞன் என்ற நாடகத்தை அர்ங்கேற்றினேன். முதல் மரியாதை படத்தின் நாட்டு புற பாடல்களைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். அந்த படத்தின் இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா. பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இவர்களின் பாடல்கள் மக்களை பெரிதும் கவர்ந்தது.

அந்த காலத்து இசை அமைப்பாளர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அது ராஜகோபால ஐயர், எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, ஜி. ராமனாதன் ஆகியோர். அவர்கள் இசையுலகில் ஜாம்பவான்கள். அதைப்போல விஸ்வனாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் பல ஆயிரக்கணக்கான சுவையான பாடல்களை தந்திருக்கிறார்கள். சங்கர் கணேஷ் ஜோடியும் இவர்களில் சேர்ந்தவர்கள்.

இவர்களில் இளையராஜா நாட்டு புற பாடல்களை பிரபல படுத்திய பெருமையை சேர்ந்தவர். தஞ்சாவூர் ஜில்லாவை சேர்ந்த சூரக்கோட்டை கிராமத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது. ஒரு தடவை நான் அங்கு தங்கியிருந்த போது காலையில் பாட்டு சத்தம் கேட்டது. நான் அங்கு சென்று பார்த்த போது நாட்டு நட்டுக் கொண்டிருந்த சுமார் 50 பெண்கள் இளையராஜாவின் பாட்டை பாடிக்கொண்டே நாட்டு நாட்ட்தை பார்த்தேன். அவருடைய இசை பலரை கவர்ந்தது குறுத்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்காலத்தில் ஏ.ஆர். ரெஹமான், தேவா போன்ற இசை அமைப்பாளர்களின் ஆயிரக் கணக்கான பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

இசையை பற்றி பேசும் போது பிண்ணனி பாடகர்களை நினைவு கூர்கிறேன். அந்த காலத்தில் சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி என்று பலர். அடுத்த கால கட்டத்தில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா என்று பலர். எல்லோரும் தங்களுடைய இனிமையான குரலால் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர்கள். தற்போது பல இசைக்குழுக்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பல திறமையான கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். இது இசை உலகின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.



தொடரும்...
 
கலைத்தாயின் முதல் மரியாதையைப் பெற்ற மகாகலைஞனைப் பற்றி படிக்கப்படிக்கத் தெவிட்டாது..

தொடருங்கள் அண்ணா..!
 
கலைத்தாயின் முதல் மரியாதையைப் பெற்ற மகாகலைஞனைப் பற்றி படிக்கப்படிக்கத் தெவிட்டாது..

தொடருங்கள் அண்ணா..!

இந்த திரியின் முதல் பதிவிலிருந்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இட்டு என்னை ஆதரித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ராஜா ஐயா!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(87): இயக்குனருக்கு முதல் மரியாதை​


டி.எஸ்.என்.: முதல் மரியாதை படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் உங்களிடம் அதே வார்த்தைகளைக் கொண்டு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். படங்களில் நடிக்கும்போது யூனிட்டில் நீங்கள் முதல் மரியாதை யாருக்கு செய்வீர்கள்?

சிவாஜி: நான் இயக்குனருக்கு தான் அதிக மரியாதை தருவேன். அவர் தான் கப்பலின் காப்டென். அவருக்கு என்னை எப்படி இயக்கணும் என்று தெரியும். அவர் என்னுடைய திறமையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்ட முயற்சிக்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரிந்திரிந்தாலும் கூட இயக்குனர் தான் எனக்கு வழி காட்டுவார்.

ஒரு படம் தோல்வியுற்றால் சிவாஜி நன்றாக நடித்தார் ஆனால் இயக்குனர் சரியாக தன் வேலையை செய்யவில்லை என்பார்கள். ஒரு படம் வெற்றி அடைந்தால் சிவாஜி கணேசனுக்கு தான் பாராட்டுகள் போய் சேரும். இயக்குனருக்கு இல்லை. படம் ஓடாவிட்டால் அவரைத் தான் குறை கூறுவார்கள்.

ஒரு இயக்குனர் தனது தோள்களில் பெரும் பொறுப்பை சுமக்கின்றார். ஒரு ப்ராஜெக்டை செய்வதில் உள்ள கஷ்டங்களை நான் அறிவேன். அதனால் தான் நான் இயக்குனர்களை பெரிதும் மதிக்கிறேன்.

உங்களுடைய கேள்விக்கு பதில் கூறவேண்டுமென்றால் நான் திரையுலகில் இயக்குனர்களுக்கு என் முதல் மரியாதையை செலுத்துகிறேன்.


இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடுவுடன் மரகதம் பட செட்டில்

டி.எஸ்.என்.: உங்களை விட பின்னல் வந்த நடிகர்கள் ஒரு கால கட்டத்தில் படங்களை இயக்க முயலுகின்றனர். நீங்கள் ஏன் அவ்வறு செய்யவில்லை?

சிவாஜி: ஒரு இயக்குனருக்கு உள்ள பொறுப்புகளையும் கடமைகளையும் நன்கு அறிந்திருந்ததால் தான் படங்களை இயக்க முயற்சிக்கவில்லை. ஒரு வேளை நான் ஒரு நல்ல உதவி இயக்குனராக இருந்திருக்க முடியும். என்னால் நடிகர்களுக்கு நல்ல நடிப்பையும் மேலும் நன்றாக செய்ய அறிவுரைகளையும் தந்திருக்க முடியும். ஆனால் என் மந்திற்கு தெரியும் நான் ஒரு நல்ல இயக்குனராக முடியாது.

நான் ஒரு படத்தை இயக்கினால், என்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு என்னைப் போல தோற்றம் இருக்க விரும்புவேன். என்னைப் போல நடிக்க விரும்புவேன். இதற்கு சற்றும் குறைவாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை தராமல் என்னை காப்பி அடிக்க கற்றுக் கொடுப்பேன். இதனால் காட்சிகளை திரும்ப திரும்ப படமாகவேண்டியிருக்கும். மேலும் அனைவரும் எனது மறு பிம்பங்களாக தெரிவார்கள். ஒரு காட்சியில் எட்டு சிவாஜி கணேசன்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது ஒரு படத்தில் எல்லா பாத்திரங்களையும் சிவாஜி கணேசனே செய்தால் அது ஒப்புக்கொள்ளப் படுமா?. நான் அந்த தவறை செய்ய விரும்பவில்லை. அதனால் படங்களை இயக்குவதிலிருந்து விலகி இருந்தேன். மேலும் நான் கையாள முடியாத துறைகளில் நான் ஈடுபடுவதில்லை.

இருந்தும் என்னை சாதனை என்ற படத்தில் ஒரு பட இயக்குனராக நடிக்க வைத்தார்கள். ஒரு திறமையான இயக்குனர் ஒரே நேரத்தில் ஒரு படத்தை தான் இயக்குவார். ஆனால் நடிகனோ ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியும். நான் இயக்குனர் ஆகாத்தற்கு இதுவும் ஒரு காரணம்.


சாதனை படத்தில் இயக்குனராக நடிகர் திலகம்

டி.எஸ்.என்.: நீங்கள் திரையுலகில் 50 வருடங்களை பூர்த்தி செய்து 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள். இந்த படங்களின் இயக்குனர்கள் கதாசிரியர்கள் இவர்களில் மிக புகழ் வாய்ந்தவர் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜி: நாம் இதுவரை பேசிக்கொண்டிருந்ததில் நான் பல இயக்குனர்களைப் பற்றி பேசியிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி பேசுகையில் நான் அந்த படத்தின் இயக்குனரைப் பற்றி பேசியிருக்கிறேன். பல சமயங்களில் இயக்குனரே திரைக்கதையையும் வசங்களையும் எழுதியிருக்கிறார்கள். இயக்குனர்கள் ஏ.பி.னாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தற்கு சிறந்த உதாரணங்கள். இவர்களுடன் இயக்குனர்கள் மாதவன், தாதா மிராஸி, கே.ஷங்கர் போன்றோர் என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்து மக்கள் விரும்பிய படங்களை உருவாகினார்கள். 300 படங்கலையும் அதன் இயக்குனர்களையும் நினைவு கூர்வது கடினம். என்னைப் பொறுத்தவரை என்னுடன் ஒரு படத்தில் உழைத்திருந்தால் கூட அந்த இயக்குனருக்கு எனது மரியாதைகளை செலுத்துவேன்.

திரைக்கதாசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டால் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணானிதியும் தான் எனது நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் எழுதிய அற்புதமான தமிழ் வசனங்களை நான் திரையில் பேசியிருக்கிறேன். அதன் மூலம் தான் நான் புகழ் பெற்றேன். வசனகர்த்தா ஆருர்தாஸ் எனது " பா " சீரீஸ் படங்களுக்கு வசனங்களை எழுதினார். கதாசிரியர் குகனாதன் ராஜபார்ட் ரங்கதுரை படக்கதையை எழுதி படத்தை தயாரித்தார். இதே மாதிரி பல நல்ல கதாசிரியர்கள் எழுதிய கதைகளிலும், வசனகர்த்தாக்கள் எழுதிய அழகான வசனங்களை பேசி நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நான் நறிக் கடன் பட்டவன்.


தொடரும்..
 
தான் இயக்குநராகாமைக்கு நடிகர் திலகம் குறிப்பிடும் காரணங்கள் அனைத்துமே மிகச் சரியானவை. ஒரு நல்ல நடிகருக்கான முன்னுதாரணம் அவரே.

ஆயிரம் படங்களுக்கு மேல் வசனமெழுதிய திரு. ஆரூர்தாஸ் அவர்களின் 'கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்' என்னும் புத்தகம் வெளிவந்திருக்கும் வேளையில் அவரைப் பற்றிய இப்பதிவு வந்திருப்பது பெரும் ஆச்சர்யம்.

தொடர்ந்து தரும் அருமையான தகவல்களுக்காகவும் அரிய படங்களுக்காகவும் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.
 
மரகதம் படத்தில் நடிகர்திலகம் குதிரையில் வரும் காட்சி மிக நன்றாக இருக்கும்.. ஒரு ராஜகுமாரனைப்போன்ற கம்பீரத்துடன் ஆரோகணித்து வருவார்.. அத்தகைய பாணியை எம்மொழி நடிகரிடத்தும் நான் கண்டதில்லை..

முழுமைக்கு மறுபெயர்தான் சிவாஜியோ..?

அற்புதத் தொடருக்கு நன்றி பாராட்டுகிறோம் அண்ணா..!
 
நேற்றைக்கு கர்ணன் படம் பார்த்தேன்...ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் இந்தத் திரியைப் படிக்கப் படிக்க ஏனோ இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல் இருந்தது..என்னவொரு நடிப்பு!! என் கண்கள் நடிகர் திலகத்தை விட்டு அகலவே இல்லை படம் முழுக்க..எத்தனை விதவிதமான உணர்ச்சிக்குவியல்கள் அவர் முகத்தில்..அப்பப்பா..மலைத்தே விட்டேன்...அன்பு, கருணை, வீரம், ஆங்காரம், அவமானம் எத்தனை எத்தனை மாறுபட்ட உணர்ச்சிகள் ஒரே காட்சியில்...இன்றைய தலைமுறை நடிகர்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டும் நடிப்பை அவரிடத்தில்...அவர் நடிப்பு பிடித்தவர்களுக்கோ, பிடிக்கதவர்களுக்கோ - கர்ணன், சிவாஜி, கட்டபொம்மன் என்றாலே அனைவருக்கும் மனக்கண் முன் வருவது நடிகர் திலகத்தின் பிம்பம் தான்..அந்தப் படத்தில் அனைவரும் பிச்சு உதறியுள்ளார்கள்..சிறு சிறு கதாப்பாத்திரங்கள் உட்பட..இத்தனை தலைமுறை கழித்தும் அவர் நடிப்பை ரசிக்க முடிகிறது..இதை விட என்ன வெற்றி வேண்டும் ஓர் நடிகனுக்கு!!

தொடருங்கள் ஐயா..வாழ்த்துக்கள்..
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(88): (1980 - 1990) படங்களிலிருந்து

நடிகர் திலகத்தின் சுயசரிதை(88):(1980 - 1990) படங்களிலிருந்து


வீர பாண்டியன் (1987) படத்தில் விஜய் காந்துடன்


ரெஹமான், நதியா இவர்களுடன் அன்புள்ள அப்பா (1987) படத்தில்


புதிய வானம் (1988) படத்தில் சத்யராஜுடன்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை (89): நடிகர் சங்கம்

டி.எஸ்.என்.: ஏழு வயதிலிருந்து இன்று வரை பல நடிக, நடிகையருடன் நீங்கள் நடித்திருக்றீர்கள். அவர்களில் சிறந்தவர்களை நீங்கள் குறிப்பிட முடியுமா?

சிவாஜி: நானும் ஒரு நடிகன் என்பதால் சக கலைஞர்களை பற்றி விமரிசப்பது முறையாகாது. நடிக, நடிகையர்களின் நல்ல நடிப்பை மற்றும் நான் கூறுவேன். அவர்களுடைய மோசமான நடிப்பை நான் கூற மாட்டேன்.

ஏழு வயது முதல் எழுபது வயதான கலைஞர்களை எனக்கு மூன்று தலைமுறைகளாக தெரியும். அவர்களில் சிலரை நான் குறிப்பிடுகிறேன். 1950 முதல் 1970 வரை பிரபலமாக இருந்த கலைஞர்கள் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., பாலையா, சந்திரபாபு, வி.கே.ராமசாமி, நம்பியார், முத்துராமன், ஜெமினி கணேசன், மனோஹர், தங்கவேலு, நாகேஷ் மற்றும் பலர். என்.டி.ராமாராவ், பிரேம் நசீர் ஆகியோருடனும் நான் நடித்திருக்கிறேன். நடிகையர்களில், அஞ்சலிதேவி, பானுமதி, சாவித்திரி, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, மனோரமா, ராஜம், கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, சுஜாதா, லக்ஷ்மி மற்றும் பலரின் பெயர்கள் நினைவுக்கு வருகிறது. நான் அவர்களுடன் நடித்த சில படங்களைப் பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

1970 முதல் 1990 வரை அடுத்த தலைமுறை நடிகர்களில் பிரபலமானவர்கள் சிவக்குமார், கமல ஹாஸன், ரஜனி காந்த், விஜய்காந்த், சத்யராஜ், பாக்யராஜ், விஜயகுமார், கார்த்திக், பிரபு, மஹேந்திரன், அர்ஜுன், சரத் குமார் போன்றவர்கள். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா, ராதா, ரேவதி, நதியா ஆகியோர் பிரபல நடிகைகள். இவர்களில் பெரும்பாலோர் என்னுடன் நடித்திருக்கிறார்கள்.

1990க்கு பிறகு ஒரு புதிய தலைமுறை நடிகர்கள் திரையுலகில் வந்துள்ளார்கள். அவர்களில் விஜய், அஜீத், பிரஷாந்த் தங்களுடைய முத்திரையை பதித்துள்ளார்கள். மேலும் பல புது கலைஞர்கள் வந்துகொன்டிருப்பது சினிமா துறையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டூ கிறது. இவர்கள் அனைவரும் நன்றாக நடித்து மக்களின் பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார்கள் என கருதுகிறேன். பொதுவாக இவர்கள் அனைவரும் தங்களுடைய கடின உழைப்பாலும் சிரத்தையாலும் முன்னேறுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தனி பாணி இருக்கிறது. நடிப்பில் இவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியும் இருக்கிறது. என்னுடன் நடித்த அனைவருக்கும் என் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஒரு சிலர் என்னை பாசத்துடன் அப்பா என்று அழைக்கிறார்கள்.

நடிக, நடிகையர்களை மட்டுமில்லாமல் கணக்கற்ற சக கலைஞர்களையும் நான் கூறுகிறேன். அவர்களின் பெயர்கள் படங்களின் பெயர் பட்டியலில் இடம் பெராமல் போகக்கூடும். இருப்பினும் ஒரு படத்தின் வெற்றிக்கு இவர்களின் பங்கும் ஒரு பெரிய காரணமாகும். வெற்றிகரமாக ஒரு படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாள்ர், இயக்குனர், கதாசிரியர், இசை அமைப்பாளர், நடிக நடிகையர்களை தவிர கணக்கற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் திரைக்கு பின்னால் பாடு படுகின்றனர். நூற்றுக்கணக்கான டப்பிங் கலைஞர்களும் திரையுலகில் தங்களின் திறமைகளால் பணியாற்றுகின்றனர். அவர்களும் கலைஞர்களே.

இந்த கலைஞர்கள் அனைவரும் பேரும் புகழும் பெற்று நன்றாக வாழ்ந்து சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் தொண்டு செய்ய வேன்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.


நடிகர் சங்கத் தலைவராக சிவாஜி எம்.ஜி.ஆர், தங்கவேலுவுடன்

டி.எஸ்.என்.: தனிப்பட்ட முறையில் கலைஞர் சமூகத்திற்கு நீங்கள் ஏதாவது செய்ததுண்டா?

சிவாஜி: ஒரு தனி மனிதனாக நான் அவ்ர்களுக்கு எதுவும் செய்ததாக கூற முடியாது. எனக்கு சில கட்டுபாடுகள் உண்டு. அவ்ற்றுடன் நான் வாழ்கிறேன். நடிகர் சங்கத்தை நிறுவயதில் எனக்கு சிறு பங்கு உண்டு. அதை இங்கு விவரிக்கிறேன்.

திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்தார். நடிகர் சங்கத்திற்கு யாரை தலைவராக அமர்த்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். அண்ணா என்னை நடிகர் சங்க தலைவராகும் படி வேண்டிக்கொள்ள உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். " அவர் ஒருவர் தான் இந்த பொறுப்பை சரியாக கவனிக்க முடியும். சிவாஜி மறுத்தாலும் அவருடைய மறுப்பை ஏற்றுக்கொள்ளாதீர்கள்" என்றார் அண்ணா எம்.ஜி.ஆர்.

அவருடைய கோரிக்கையை ஏற்று பலர் என்னை நடிகர் சன்கத்தின் தலைவராகும்படி வேண்டினர். நான் சகோதரர் எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒப்புக் கொண்டேன்.

பதவியை ஏற்றுக்கொன்டவுடன் நான் கலைஞர்களுக்கு விசேடமாக ஏதாவது செய்ய விரும்பினேன். சங்கத்திறகாக ஒரு அலுவலக கட்டிடமும் நாடக்ங்களை நடத்த ஒரு மேடையையும் நிறுவ எண்ணினேன். இதை தவிர வசதியற்ற கலைஞர்களுக்கு குடியிருப்புகளும், ஒரு சிற்றுண்டி விடுதியும் உருவாக்க வங்கியிலிருந்து கடன் வாங்கினேன். சங்கத்தின் வருமானத்திலிருந்து சிறுக சிறுக இந்த கடனை அடைக்க ஏற்பாடு செய்தேன்.

கீர்த்தி வாய்ந்த எம்.ஏ.எம்.ராமசாமி, ராஜ்குமார், நாகேஸ்வர்ராவ் மற்றும் பலர் என்னை ஆதரித்தார்கள். அவர்களுடைய ஆதரவுடன் கடன் வாங்கி சங்கத்தின் அலுவல கட்டிடத்தை கட்டி முடித்தேன். அந்த பணி முடிந்தவுடன் சிலர் என்னை பதவியிலிருந்து நீக்க திட்டம் தீட்டினர். அவர்கள் என்னை அச்சுறுத்தி பயமும் காட்டினார்கள்.

என்னுடைய சேவைகளை பயன் படுத்திய பிறகு அவர்கள் என்னை வெளியேற்றினார்கள். அன்றிலிருந்து நான் சங்கத்தை விட்டு விலகி அலுவலக் கட்டிடத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவர்கள் எல்லா துறைகளிலும் என்னிடைய சேவைகளை எடுத்துக் கொண்டு எனது முயற்சிகள் பலனிளிக்கும் வேலையில் என்னை ஓரம் கட்டினார்கள்.

சமீபத்தில் தம்பி விஜய்காந்த் சங்கத்தின் பொறுப்புகளை ஏற்று சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும் பாடு படுகிறான். சங்கம் வளர்ந்து நல்ல பயனளிக்க எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறேன்.

தொடரும்....
 
நடிகர் திலகம் பற்றி படிக்க படிக்க சுவாரஷ்யமாக இருக்கிறது.தொடருக்கு நன்றி
 
தொடருக்கு நன்றி மைந்தரே...தொடரை தொடர்ந்து தொடருங்கள்...
 
சக நடிகர்கள்பால் நடிகர் திலகம் வைத்திருக்கும் மரியாதை, நன்மதிப்பு, நேசம் போன்றவற்றை இப்பதிவால் அறிய முடிகிறது. அரிய நிழற்படங்களுக்கும், அறியாத் தகவல் பகிர்வுக்கும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
 
இதுவரையில் நான் பார்த்திராத மரகதம் புகைப்படம், நடிகர் சங்க புகைப்படம் வெளியிட்டமைக்கு நன்றி! தங்களின் அரிய முயற்சியைத் தொடரவும். பாராட்டுக்கள் மதுரை மைந்தன்.
 
நடிகர் திலகத்தின் சுயசரி***தை(90): தென்னிந்திய கலைஞர்களுடன்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(90): தென்னிந்திய கலைஞர்களுடன்


எம்.ஜி.ஆர் உடன் சிவாஜி


என்.டி.ஆர் மற்றும் நாகேஸ்வரராவுடன்


கன்னட நடிகர் ராஜ் குமாருடன்


ஏ.வி.எம். ஸ்டூடியோவில் கமல ஹாசன், சிவக்குமார், ஏ.வி.எம். சரவணன், வைரமுத்து, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோருடன்



தொடரும்...
 
அந்நாளையப் புகைப்படங்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா. கலையுலக ஜாம்பவான்கள் அனைவருடனும் நட்பு பாராட்டும் தன்மை அவரது நல்லியல்பைக் காட்டுகிறது.
 
அபூர்வப் புகைப்படங்கள்..

மது, நஸீருடனும் நடிகர் திலகத்தின் நட்பு இறுக்கமாகவே இருந்தது..

தொடருங்கள் மதுரையண்ணா..!
 
அந்நாளையப் புகைப்படங்களின் பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா. கலையுலக ஜாம்பவான்கள் அனைவருடனும் நட்பு பாராட்டும் தன்மை அவரது நல்லியல்பைக் காட்டுகிறது.

நன்றி சகோதரி!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(91): தென்னிந்திய கலைஞர்களுடன்-2


காப்டன் விஜய காந்துடன் சிவாஜி



சரத் குமார், விஜய குமார், கமல ஹாசன், நெப்போலியன் இவர்களுடன் சிவாஜி

தொடரும்...
 
Back
Top