மதுரை மைந்தன்
New member
எனது பிறந்த நாள் பரிசாக எனது மகள் அளித்த சர்ப்ரைஸ் புத்தகம் டாக்டர் டி.எஸ். நாராயணசுவாமியின் " சிவாஜி கணேசன் ஒரு சுய சரிதம்" என்ற ஆங்கில மொழி புத்தகத்தை நான் அறிந்த தமிழில் மொழி பெயர்த்து இங்கு அளிப்பதில் பெரும் உவகை அடைகிறேன். சுவாரஸ்யம் தடைப் படாமல் இருக்க நீண்ட பகுதிகளை சுருக்கி இருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் இந்த புத்தகத்திலிருந்து சில புகைப் படங்களையும் தர இருக்கிறேன்
புத்தகம் முழுக்க திரு. டி.எஸ் என். கேள்விகள் கேட்க அதற்கு நடிகர் திலகம் பதிலளித்திருக்கிறார்.
சிவாஜியின் பூர்வீகம்
டி.எஸ்.என்.: உங்கள் பூர்வீகம மற்றும் பெற்றோர் மூதாதையர் இவர்களைப் பற்றி கூறுங்களேன்.
சிவாஜி: எனது பூர்வீகம் வேட்டைத்திடல் என்ற தஞசாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு வளமான கிராமம். இங்கு தான் எனது தகப்பனாரின் குடும்பம் வசித்து வந்தது. நான் பெரும்பாலும் எனது தாயாரால் வளர்க்கப் பட்டதால் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கறிவேன். எனது தாயார் ராஜாமணி அம்மாள் எனது பாட்டனார் சின்னசாமி கலிங்கராயரின் பதினோராவது குழந்தை. பாட்டனார் இந்திய ரயில்வேயில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மதுரை திருச்சி ஆகிய ரயில்வே லயன்களுக்கு பொறுப்பாளரக இருந்தாரென நினைக்கிறேன்.
டி.எஸ்.என்.: நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதியைக் கூறமுடியுமா?
சிவாஜி: நான் பிறந்த நாளை சரியாகத் தெரியாது. பிறந்த ஆங்கில தேதி அக்டோபர் 1 1928. அன்று எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் கைதானார் அது எனது நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.
டி.எஸ்.என்.: உங்கள் பிறந்த தேதி பத்தாம் மாதமான அக்டோபரின் முதல் தேதி யாக இருப்பதாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியாக இருப்பதாலும் நீங்கள் எல்லா துறைகளிலும் முதலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சிவாஜி: எனக்கு திருமணம் ஆனது மே மாதம் முதல் தேதி என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் வாழ்க்கையில் முதல் இடத்தில் இருக்கிறேனோ இல்லையோ எனது வாழ்க்கையின் மிக முக்கியான நிகழ்வுகள் முதல் தேதியில் நிகழ்ந்துள்ளன.
டி.எஸ்.என்.: உங்களது உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
சிவாஜி: எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. அனைவருக்கும் மூத்தவர் திருஞான சம்பந்த மூர்த்தி இரண்டாமவர் கனக சபா நாதன் மற்றும் மூன்றாமவர் தங்கவேலு. எனக்கு கணேச மூர்த்தி என்று முதல் பெயர் இருந்தது. எனது தந்தையார் கைதானயுடன் எனது பாட்டனார் காலமானார். அதன் பின்னர் நாங்கள் திருச்சி பொன்மலைக்கு அருகிலிருந்த சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திலிருந்த எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம்.
வளர்ந்த பருவம்
டி.எஸ்.என்.: திடீரென்று உங்கள் தந்தை கைதாகி பாட்டனாரும் காலமான பின் எப்படி உங்களது தாயார் ஒருவர் உதவியும் இன்றி குடும்பத்தை சமாளிக்க முடிந்தது?
சிவாஜி: அதைப் பற்றி கேட்காதீர்கள். நான் பட்ட கஷ்டங்களைப் போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது தந்தையார் கைதானவுடன் எனது தாயார் சில பசுக்களை விலைக்கு வாங்கி பாலை விற்று எங்களை வளர்த்தார். எனது தாயாரின் பெயர் ராஜாமணி அம்மாள். ஆனால் அனைவரும் அவரை பால்காரம்மா என்று தான் கூப்பிட்டார்கள்.
எனக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும் போது எங்களது வீட்டின் எதிர் புறம் இருந்த கிருத்தவ மிஷன் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்கு நாலரை வயது இருக்கும்போது எனது தந்தையார் விடுதலை செய்யப் பட்டார். அப்போது தான் எனது தாயார் எனக்கு அவரை அறிமகம் செய்து வைத்தார். நான் எப்படி அந்த நிகழ்ச்சியை வருணிப்பது? அது ஒரு மிக உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.
நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒருவரின் கஷ்டங்களையும் வேதனைகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. தாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று கேட்காமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்ததா? தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை. கண்ணீர் விட்டல்லவா நாம் அதை வளர்த்தோம்? நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனை குடும்பங்கள் கஷ்டப் படடிருக்கின்றன. எங்கள் குடும்பம் ஒரு உதாரணமாக திகழ வில்லையா?
நாடக பிரவேசம் தொடரும்.........
புத்தகம் முழுக்க திரு. டி.எஸ் என். கேள்விகள் கேட்க அதற்கு நடிகர் திலகம் பதிலளித்திருக்கிறார்.
சிவாஜியின் பூர்வீகம்
டி.எஸ்.என்.: உங்கள் பூர்வீகம மற்றும் பெற்றோர் மூதாதையர் இவர்களைப் பற்றி கூறுங்களேன்.
சிவாஜி: எனது பூர்வீகம் வேட்டைத்திடல் என்ற தஞசாவூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு வளமான கிராமம். இங்கு தான் எனது தகப்பனாரின் குடும்பம் வசித்து வந்தது. நான் பெரும்பாலும் எனது தாயாரால் வளர்க்கப் பட்டதால் அவரது குடும்பத்தைப் பற்றி நன்கறிவேன். எனது தாயார் ராஜாமணி அம்மாள் எனது பாட்டனார் சின்னசாமி கலிங்கராயரின் பதினோராவது குழந்தை. பாட்டனார் இந்திய ரயில்வேயில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மதுரை திருச்சி ஆகிய ரயில்வே லயன்களுக்கு பொறுப்பாளரக இருந்தாரென நினைக்கிறேன்.
டி.எஸ்.என்.: நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள்? உங்கள் பிறந்த தேதியைக் கூறமுடியுமா?
சிவாஜி: நான் பிறந்த நாளை சரியாகத் தெரியாது. பிறந்த ஆங்கில தேதி அக்டோபர் 1 1928. அன்று எனது தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் கைதானார் அது எனது நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது.
டி.எஸ்.என்.: உங்கள் பிறந்த தேதி பத்தாம் மாதமான அக்டோபரின் முதல் தேதி யாக இருப்பதாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினியாக இருப்பதாலும் நீங்கள் எல்லா துறைகளிலும் முதலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சிவாஜி: எனக்கு திருமணம் ஆனது மே மாதம் முதல் தேதி என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் வாழ்க்கையில் முதல் இடத்தில் இருக்கிறேனோ இல்லையோ எனது வாழ்க்கையின் மிக முக்கியான நிகழ்வுகள் முதல் தேதியில் நிகழ்ந்துள்ளன.
டி.எஸ்.என்.: உங்களது உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
சிவாஜி: எனக்கு மூன்று மூத்த சகோதரர்கள் உண்டு. அனைவருக்கும் மூத்தவர் திருஞான சம்பந்த மூர்த்தி இரண்டாமவர் கனக சபா நாதன் மற்றும் மூன்றாமவர் தங்கவேலு. எனக்கு கணேச மூர்த்தி என்று முதல் பெயர் இருந்தது. எனது தந்தையார் கைதானயுடன் எனது பாட்டனார் காலமானார். அதன் பின்னர் நாங்கள் திருச்சி பொன்மலைக்கு அருகிலிருந்த சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திலிருந்த எங்களது சொந்த வீட்டிற்கு வந்தோம்.
வளர்ந்த பருவம்
டி.எஸ்.என்.: திடீரென்று உங்கள் தந்தை கைதாகி பாட்டனாரும் காலமான பின் எப்படி உங்களது தாயார் ஒருவர் உதவியும் இன்றி குடும்பத்தை சமாளிக்க முடிந்தது?
சிவாஜி: அதைப் பற்றி கேட்காதீர்கள். நான் பட்ட கஷ்டங்களைப் போல் வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது தந்தையார் கைதானவுடன் எனது தாயார் சில பசுக்களை விலைக்கு வாங்கி பாலை விற்று எங்களை வளர்த்தார். எனது தாயாரின் பெயர் ராஜாமணி அம்மாள். ஆனால் அனைவரும் அவரை பால்காரம்மா என்று தான் கூப்பிட்டார்கள்.
எனக்கு மூன்று அல்லது நான்கு வயதாகும் போது எங்களது வீட்டின் எதிர் புறம் இருந்த கிருத்தவ மிஷன் பள்ளியில் என்னை சேர்த்தனர். எனக்கு நாலரை வயது இருக்கும்போது எனது தந்தையார் விடுதலை செய்யப் பட்டார். அப்போது தான் எனது தாயார் எனக்கு அவரை அறிமகம் செய்து வைத்தார். நான் எப்படி அந்த நிகழ்ச்சியை வருணிப்பது? அது ஒரு மிக உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி.
நாட்டின் விடுதலைக்காக போராடிய ஒருவரின் கஷ்டங்களையும் வேதனைகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லை. தாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று கேட்காமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் எளிதாக கிடைத்ததா? தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை. கண்ணீர் விட்டல்லவா நாம் அதை வளர்த்தோம்? நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனை குடும்பங்கள் கஷ்டப் படடிருக்கின்றன. எங்கள் குடும்பம் ஒரு உதாரணமாக திகழ வில்லையா?
நாடக பிரவேசம் தொடரும்.........
Last edited: