shivasevagan
New member
சிவமணி, அக்குமணிமாலை, கண்டிகை, தாழ்வடம் என்று உருத்திராக்கத்திற்கு பல பெயர்கள் உண்டு. திருஅடையாள மாலை என்பதும் இதுவே.
உருத்திராக்க மரம் கிழக்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது. இந்தியாவை ஓட்டிய நேபாளத்திலும் இவை இருக்கின்றன. இந்தியாவில் பீகார், வங்காளம், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றிலும் உருத்திராக்க மரம் இருக்கிறது.
செந்நெறியின் உடல், உண்மை உணர்த்தலாகிய திருவெண்ணீற்றுப்பூச்சு, உள்ளம், அனைத்துயிர்கள் மாட்டும் வைக்கும் கண்ணோட்டத்தின் அடையாளமாகிய சிவமணி. மணி என்பது கடவுள் மணி இதனையே கடவுள் கண்மணி என்பர். உயிர், மெய்யுணர்வு கைவரச் செய்துய்ய சிவனடியார்க்குச் சேர்ப்பிக்கும் 'சிவாய நம' என்னும் ஐந்தெழுத்து.
நீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்னும் மூன்றனுள் நடுவாகக் காணப்படும் சிவமணி காந்த ஆற்றலையும், மின் ஆற்றலையும் ஒருங்குடையது. அம்மணியினை அணிபவர்க்கு அவ்விருவகையாலும்
உயிர் ஆற்றல் பெருகும்
நோய் அணுகாது
உடற்பொலிவும் வளரும் பெருகும்
உடல் வலுவுண்டாகும்
உடல் வலுவுண்டாகவே உள்ளத்துரன் உண்டாம்
உள்ளத்துரன் உண்டாக நல்லொழுக்கம் பெருகும்
நல்லொழுக்கம் பெருகுதலால் நன்மையே புரிவர்.
அக்குறிப்புத் தோன்றும் உருவகமாகக் கடவுள் கண்மணி என்றனர்.
உருத்திராக்க மரம் கிழக்கு ஆசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் ஆகியவற்றில் நிறைய இருக்கிறது. இந்தியாவை ஓட்டிய நேபாளத்திலும் இவை இருக்கின்றன. இந்தியாவில் பீகார், வங்காளம், அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றிலும் உருத்திராக்க மரம் இருக்கிறது.
செந்நெறியின் உடல், உண்மை உணர்த்தலாகிய திருவெண்ணீற்றுப்பூச்சு, உள்ளம், அனைத்துயிர்கள் மாட்டும் வைக்கும் கண்ணோட்டத்தின் அடையாளமாகிய சிவமணி. மணி என்பது கடவுள் மணி இதனையே கடவுள் கண்மணி என்பர். உயிர், மெய்யுணர்வு கைவரச் செய்துய்ய சிவனடியார்க்குச் சேர்ப்பிக்கும் 'சிவாய நம' என்னும் ஐந்தெழுத்து.
நீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்னும் மூன்றனுள் நடுவாகக் காணப்படும் சிவமணி காந்த ஆற்றலையும், மின் ஆற்றலையும் ஒருங்குடையது. அம்மணியினை அணிபவர்க்கு அவ்விருவகையாலும்
உயிர் ஆற்றல் பெருகும்
நோய் அணுகாது
உடற்பொலிவும் வளரும் பெருகும்
உடல் வலுவுண்டாகும்
உடல் வலுவுண்டாகவே உள்ளத்துரன் உண்டாம்
உள்ளத்துரன் உண்டாக நல்லொழுக்கம் பெருகும்
நல்லொழுக்கம் பெருகுதலால் நன்மையே புரிவர்.
அக்குறிப்புத் தோன்றும் உருவகமாகக் கடவுள் கண்மணி என்றனர்.