♔. ஆ! 10! ♔. - முதல் சுற்று

Status
Not open for further replies.

ராஜா

New member
வணக்கம் நண்பர்களே..!

இதோ இன்னொரு திரி.. உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடி.. உங்கள் அனைவரது பங்கேற்பையும் வேண்டி.. இதுவும் நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

நம்மில் ஒரு உறுப்பினர் மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கேள்வி கேட்கவேண்டும்.எப்படிப்பட்ட கேள்வி என்றால், நாம் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் ஒரு கற்பனை வடிவம் வைத்திருப்போம். அவரது செயல்பாடுகளில் சில நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தரும். அவரை நேரில் பார்த்தால் இதுபற்றி கேட்கவேண்டும் என்று நினைத்திருப்போம்.. அந்த கேள்விகளாக இருந்தால் நலம்..!

ஒவ்வொரு கேள்வியும் கேட்கப்படும் உறுப்பினரைப் பற்றியதாக இருக்கலாம்.. [உ-ம். ராஜா சார்.. இவ்ளோ ஜோக் போடறீங்களே எங்கேருந்து இதையெல்லாம் சுடறீங்க.?]

அந்த உறுப்பினரின் வசிப்பிடம் குறித்ததாக இருக்கலாம்.. [உ-ம். அறிஞர் அய்யா.. அமெரிக்காவிலே உங்க பொழுது எப்படிப் போகுது..?]

அந்த உறுப்பினரின் தனித்திறமை குறித்ததாக இருக்கலாம்..[உ−ம். வாத்தியாரே.. எல்லா டாபிக்குலேயும் பொளந்து கட்டறீங்களே.. அதுவா வருதா.. இல்லே இதுபற்றி பக்காவா வீட்டுப்பாடம் செஞ்சுட்டு வருவீங்களா..?.]

அந்த உறுப்பினரின் நண்பர் குறித்த ஜாலியான் கேள்வியாக இருக்கலாம். .[ உம். அன்புரசிகருக்கு ஒரு பட்டப்பெயர் வைக்கச் சொன்னா, என்ன பேர் வைப்பீங்க ஓவியன்..?]

இப்படி எண்ணற்ற கேள்விகள்.. வானமே எல்லை.. ஆனால் ஒன்று .. கேள்விகள் சுவையாக இருக்க வேண்டும்.. !

விதிமுறைகள்..

1. ஒவ்வொருவரிடமும் வேறு வேறு கேள்விகள் கேட்கவேண்டும்..குறைந்தது 10 உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்..

2. ஒரு சுற்று கேள்வி-பதில்கள் 24 மணி நேரத்துக்குள் முடிந்தால் நன்று.

3. கேள்வியாளரைத் தேர்ந்தெடுப்பது திரி ஆசிரியரின் பொறுப்பு.[ முதலில் கேள்வியாளர் சம்மதத்தை தனிமடலில் பெற வேண்டி இருப்பதால் இந்த ஏற்பாடு.]

4. பதில் அளிப்போரில் ஒருவரே அடுத்தக் கேள்வியாளராக இருப்பார்.

5. சிறப்பான கேள்வியையும், பதிலையும் மற்ற உறுப்பினர்கள் மனமாரப் பாராட்டலாம்.. பரிந்துரைக்கலாம்.

வழக்கம்போல இந்தத் திரியிலும் உதவிபுரிய அமரை அழைக்கிறேன்.

முதன் முதலில் கேள்வி கேட்கும் பொறுப்புக்கு [தொட்டது துலங்கும்.. வைத்தது விளங்கும்.. .] மரியாதைக்குரிய நண்பர் இளசு அவர்களை அழைக்கிறேன்.

வாருங்கள் இளசு.. 10 உறுப்பினர்களிடம் கேட்கக்கூடிய ஒரு 10 கேள்விகளுடன்..1
 
Last edited by a moderator:
ஆ பத்து!
அசத்தட்டும்...........!!!

ஆவலுடனும் நம்பிக்கையுடனும்
ஓவியன்........!
 
ஆ பத்து போலத்தான் இருக்கிறது...
சிறப்பான சுவாரசியமான திரிகளைத் தொடங்கும் ராஜா அண்ணாவுக்கு பாராட்டுதல்கள்...
ஊக்கத் தொகையாக 500 iCash.
 
Last edited:
ஆகா..ராஜா அண்ணா அருமை...
ஆ பத்து சீக்கிரம் வரட்டும்
 
அசத்தலான திரிகளை ஆரம்பித்து வெற்றிக்கனியை லாவகமாக எட்டிப்பறிக்கும் ராஜா அண்ணாவின் இன்னொரு திரி. வெற்றி பற்றி இருகருத்து இல்லை. வெற்றி நடை ஆரம்பமாகட்டும் அண்ணா. தொடர நான் தயாராக உள்ளேன்.
 
ஆ....பத்து....
சுடர் போல இதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
ராஜாண்ணா...எங்கிருந்து இப்படி உங்களுக்கு தோணுது...?
 
வித்தியாசமான உருப்பினர்களை கவரும் போட்டிகளை நடத்துவதில் ராஜா ராஜா தான். இளசு அவர்களே சீக்கிரம் வந்து உங்கள் ரவுசை ஆரம்பியுங்கள்
 
ஆளுக்கொரு கேள்வி..!

கஷ்டமா இருந்தால் குறைச்சுக்கலாம்..! ஆனா கஷ்டம் இருக்காது..!

ஒவ்வொருத்தர் பண்ற அழும்பையும், குறும்பையும் அவர்கள் திறமையையும் மனசுல வச்சுகிட்டு கேட்டா 10க்கு மேலேயே கேட்கலாம்..!
 
அறிஞர்;261637 said:
10 உறுப்பினர் கொஞ்சம் அதிகமாக இருக்கே... ராஜா அண்ணா...

ஆமாம் ஆனாலும் விதியை மாற்ற வேண்டாம். அப்புரம் ஆளாளுக்கு ஒரு நம்பர சொல்ல ஆரம்பிச்சுருவாங்க*
 
இளசு : ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..... ராஜாவின் திருவிளையாடல்களில் மற்றொன்று இனிதே ஆரம்பம்...

ரவுசு: தெய்வீகச் சிரிப்பய்யா உமது எனப் புகழப்போவதில்லை..இளசு..
ஏன்னா மயங்கி இங்கேயே நின்னுட்டிருப்பீங்க... கேள்விகளை எப்போ தரப்போறீங்க?

இளசு : இன்னும் கொஞ்ச நேரத்தில் .....

அற்புதமான எண்ணங்களை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ராஜா அவர்கள் திரிகளாக்க..

செயல் நெய் ஊற்றி அன்பு அமர் வளர்க்க...

பாசவெளிச்சமும் வெற்றி வெப்பமும் எங்கும் என்றும் பரவ

வாழ்த்துகள்!


நம்பி, என்னை முதலில் களமிறக்கிய தைரியத்துக்கு சபாஷ் ராஜா !!!
 
ராஜா கையவச்சா அது ராங்கா போறதில்ல..ஆம்..ஆ.பத்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்
 
அனைவரும் மன்னிக்கவும்.. நேற்று அவசர பணி அழைப்பு.. அதனால் தாமதம்..
இப்போதும் பணிக்குக் கிளம்பும் அவசரம்.. ஆனாலும் தள்ளிப்போடாமல்...

கேள்விகளை அள்ளிப்போடுகிறேன்.. (அஜீஸ் பண்ணிக்குங்க மக்கா)


(ரவுசு: பெருசா சிரிச்சு பில்டப் குடுக்கும்போதே நெனச்சேன்... சரிசரி...
கேள்விகளைப் பதிங்க..)


1) அண்ணல் கரிகாலன் : பெரிய அறிவாளிகளுக்குத்தான் ஒற்றைத்தலைவலி வரும் என்பார்கள் − உங்களால் அதை நம்புகிறேன் அண்ணலே... அடிக்கடி பயணம், நனையல் என படிக்கும்போது உங்கள் மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், உங்கள் உடல் நலம் பற்றி கவலையும் உள்ளுக்குள்...

அதனாலேயே நீங்கள் கொஞ்சநாள் மன்றம் வரவில்லை என்றாலும் மனது அலைகிறது...
உடலும் உள்ளமும் நலந்தானா அண்ணலே..

2) தலை மணியா −

தலை, உங்களிடம் சில லட்ச ரூபாய் (வட்டியில்லாக்) கடனாய் வாங்கிய ஒருவர் ( நானாய்க்கூட இருக்கலாம்) பலகாலம் டபாய்க்கிறார். உங்களுக்கும் நெருக்கடி.. தேவை... திரும்ப வராத கடனால், நீங்கள் புதிதாய் கடன் வாங்கி (வட்டி கட்டி) அல்லாடுகிறீர்கள்..

அந்த கொடாநண்பர் ஒருமுறை உங்கள் எதிரில்... நல்ல உணவு+ நீர் விடுதியில்.. அப்போதும் உங்களால் ஜோக்(குகள்) அள்ளி வீசாமல் இருக்க முடியுமா????

3) இனியவள்:


நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் இனியவள்? சரியான நேரம் தூங்குகிறீர்களா? உங்கள் தட்டச்சு வேகம் எவ்வளவு? (உங்கள் கற்பனை வேகம் மன்றம் அறியும்)


4) வாத்தியார்:

உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!

ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?


4) இதயம் :

உங்கள் காதல் மணச் சேதி அறிந்து மிகப் பூரித்தவன் நான்..

உங்கள் வாரிசு(கள்) எதிர்காலத்தில் காதல் + கலப்பு மணம் புரிய நேர்ந்தால் உங்கள் நிலை?


5)ராஜா −

சன், விஜய் அசத்தல், கலக்கல் மன்னர்கள் எல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜூனியர் குறுநில ராஜாக்கள்தாம் என் பார்வையில்!

இத்தனை திறமையை இன்னும் பெரிய அளவில் ''ஷோகேஸ்'' பண்ணவேண்டும் நீங்கள் என விரும்புகிறேன்... உங்கள் எண்ணம்?

6) அன்பின் ஆரென் −

நல்ல படைப்பாளிகள் ( கிரியேட்டிவ்) நல்ல வியாபாரிகளாய் இருக்க முடியாது... உங்கள் மூதாதையர் கதையே சொல்லும் பாடம் இது..

கவிதைகள் உட்பட படைப்பாளியாய் பரிமளிக்கும் நீங்கள், வியாபாரத்திலும் ஜெயிக்க வேண்டும்.. தொழில் நலமாய்ப் போகிறதா?

இந்த ஊர்ப்பக்கம் அடுத்த விஜயம் எப்போது?


7) அறிஞர் :


ஆராய்ச்சிகள் பணி, ஊதியம் தந்தாலும், கூடவே திருப்தியும் அளிக்கின்றன..

இதுவரை அதிக திருப்தி தந்த ஆராய்ச்சி எது?

8)லியோமோகன் −

அஷ்டாவதானி, தசாவதானி என மல்டி=டாஸ்க் திறன் உள்ளவர் நீங்கள்.. சரிதானே? உங்கள் மூதாதையரில் யாரிடம் இந்தத் திறன் இருந்தது/ இருக்கிறது?


9) ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?


10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?



−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


அவசரக்கேள்விகள்.. தவறுகளைப் பொறுத்தருளுங்கள் மக்களே!
 
அண்ணா அவிழ்த்து போட்ட ஆ பத்து அருமை − விடைகளுடன் ஓடி வாருங்களேன் அன்பு உறவுகளே..............!!! :nature-smiley-003:
 
கேள்விகனைகளை தொடுத்து விட்டார் இளசு அவர்கள். இந்த திரியின் முதல் போட்டியாளர். மன்றத்தில் மூத்த உறுப்பினர் என்னை நியாபகம் வைத்து கேள்வி பட்டியலில் என்னையும் தேர்ந்தெடுத்ததுக்கு மிகவும் பூரிப்பு அடைகிறேன். நன்றி இளசு. அடுத்தது கேள்விக்கு போவோம்

இளசு;261828 said:
4) வாத்தியார்:
உணவுப்பழக்கம் எல்லாம் சரிதான்.. அதிலும் தயிர்சாதம் +மாதுளம்பழம் சூப்பர்!
ஆனாலும் வயதாகும் பருவம் − சிகரெட்டை விலக்க நாள் குறிக்க எண்ணமில்லையா?

நெத்தியடி கேள்வி. எனது சிகரேட் பழக்கம் விடும் எண்ணம் எப்போது.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் நீண்டகாலமாக ஒரே சீராக இருக்கும் இந்த பழக்கம் தினமும் 4 சிகரேட். அதுவும் முழுவதும் அடிக்க மாட்டேன் கால் வாசி தான் அடிப்பேன். 4 தானே என்ற எண்ண*மே அதை விட மறுக்கிறது. நாள் குறித்து நிறுத்தி பார்க்கலாம் என்றால் அடுத்த நாள் அதிகரிக்கிறது.

அம்மா அப்பா திட்டி, நண்பர்கள் விட சொல்லி, மனைவி சண்டைபோட்டும் விடாமலே இருகிறேன்.
நான் சிகரெட் அடிக்கும் போது என் மனைவி அதை குறைக்கலாமல்ல என்று கேட்கும் போது. தம் இழுக்க இழுக்க சிகரெட் நீளம் குறைஞ்சுட்டுதானே இருக்கு. அடிச்சு குறைக்கிறேன் என்று நக்கல் பண்ணியே பழக்க பட்டு விட்டேன்.

இளசு கேட்டது போல் விடும் நாள் குறிக்கமாலே இருகிறேன்.
ஒருவேளை என் மகள் என்னை பார்த்து ஏன் டாடி நீங்க சிகரெட் குடிக்கறீங்க என்று கேட்டாலோ. அல்லது என் மகன் சிகரேட் அடிக்கும் செய்தி கேட்டாலோ நிறுத்த நாள் குறிப்பேன் என்று நம்புகிறேன்.

மனற நண்பர்களே, களவும் கற்று மற என்பார்கள். ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிகரெட் கற்று கொள்ள மட்டுமே முடியும் மறக்க முடியாது. ஆகையால் பழக்கமில்லாதவர்கள் பழகாமல் இருப்பதே நல்லது. எனக்கு கன்ட்ரோல் இருக்கு நான் நிறுத்தனும்னு நினைச்சா நிறுத்திடுவேன் என்ற வீராப்பு எல்லாம் வேண்டாம்.

நன்றி
 
Last edited by a moderator:
நெத்தியடி கேள்விக்கு அசத்தலான பதில்.
ஒரவேலை என் மகள் என்னை பார்த்து ஏன் டாடி நீங்க சிகரெட் குடிக்கரீங்க என்று கேட்டாலோ. அல்லது என் மகன் சிகரேட் அடிக்கும் செய்தி கேட்டாலோ நிறுத்த நாள் குறிப்பேன் என்று
நம்புகிறேன்.

இது சூப்பர் வாத்தியாரே. கடைசியாய் சொன்னது கனகச்சிதம்.வாழ்த்துக்கள்.
 
வாத்தியார் சொன்னதைப்போல மன்றத்தின் நிஜமான தூண்..மதிப்பிற்குரியவரின் கேள்விப்பட்டியலில் நானும் இடம் பெற்றதை நினைத்து மனம் நெகிழ்கிறது.

இளசு;261828 said:
10) சிவா.ஜி:

சொல்லின் செல்வராய் உலாவரும் சிவா..

கருத்து மாறுபாடுகள் இருப்பினும் நட்பு இறுகி வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர்தானே நீங்கள்?

கருத்து மாறுபாடுகள் என்பது என்னைப் பொறுத்தவரை அறிவை வளர்க்கும் ஒரு காரணி.ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.
என்னுடைய மிகச்சிறந்த ரொம்பவும் நெருக்கமான நன்பர்களோடுதான் நான் நிறைய கருத்து வேறுபட்டிருக்கிறேன்.அடித்துக்கொள்ளாத குறையாக எங்கள் வாக்குவாதமிருக்கும்.எல்லா கூத்தும் முடிந்து யாரோ ஒருவர் அந்த இடத்தை விட்டு போன பிறகு இருவருமே நினைத்துக்கொள்வோம்...
"அவன் சொன்னதும் சரிதான்"
பிறகென்ன விஷயம் தெரிந்த ஒருவரோடுதான் நாம் நட்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியதும் அந்த நட்பு மேலும் இறுகும்.

ஆ'பத்தில் ஆபத்தை கடந்துவிட்டதாக ஒரு எண்ணம்...சரியா இளசு.....?
 
சிவா.ஜி;261841 said:
ஒத்த கருத்தில் புதிதான மாற்று சிந்தனை வெளி வராது.எதிராளியின் மாறுபட்ட கருத்து நமக்கும் பல புது விடயங்களை கற்றுத்தரும்.

மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் சிவா ஜி. எனக்கு இதே குணம் தான்.
 
ஷீ−நிசி :

அழகுணர்ச்சி உங்களுக்கு மிக மிக அதிகம் ஷீ! உங்கள் உடை, அறை எல்லாம் நேர்த்தியாக இருக்கும் என மனக்காட்சி... சரியா?

நன்றி இளசுஜி...

உங்கள் கூற்று சரியானதுதான்...

சுத்தம் என்பது என்னோடு கலந்துவிட்ட ஒன்று.. நான் இருக்கும் அறை, வேலை செய்யும் என் இடம் எப்பொழுதும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்..

ஆனால் கொஞ்சம் சோம்பேறியும் கூட... மூன்று நாள் தாடியை எடுக்கவும் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுவேன்... :) :)
 
Status
Not open for further replies.
Back
Top