B
Brawin Jack
Guest
ஓர் இனிய ரம்மியமான குளிர்ச்சியூட்டும் மாலைப்பொழுது,
சிற்றாறு அணையின் மேல் முகப்பில்லிருந்து பார்த்தாலே தெரிகிறது இயற்கை அன்னையின் சேலையின் வேலைபாடுகள் சோலைகளின் வடிவில்...,
பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போல நீள நீளமாக படர்ந்திருந்த அந்த மரங்களின் எழில்மிகு காட்சியே பிரம்மிப்பூடுகிறது .....
'சல சல'-வென எங்கோ தூரத்தில் இலைச் சருகுகளின் கசமுசா சத்தங்களும்,
'கீச் கீச்-சென மழலைப் பறவைகள், தாய்ப் பறவையைக் கண்டதாலோ என்னவோ ஆரவாரமிட்டு கத்திக் கொண்டிருந்தது......
எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த 'மகரந்த மணமே' பக்கதிலேதோ மலர்ச்சோலை இருப்பதை எடுத்துச் சொன்னது,,,,,,
ஜோடி ஜோடியாய் பறவைகளும் கோர்வையாய்ப் பறந்து தாங்களும் 'மகிழ்ச்சிக்குத் தளைத்தவர்கள் அல்ல' என காட்டி மாலைப்பொழுதைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
காற்றில் பெண்களின் கூந்தல் அசைவதைப் போல அணையின் நீர் அசைந்தாடி இயற்க்கை அன்னையின் கண்ணீரில் சோகமில்லை என மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது........
இத்தனைக்கும் எதிர்மாறாக என் அலைபாயும் சோகமனதை ஒருநிலையாக நிலைநிறுத்த தத்தளித்துப் போராடிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ விதவிதமான வித்யாசமான மனநிலைகளையும், மனங்களையும் படித்த எனக்கு 'ஏன் என்னவளின் மனதைப் படிக்க முடியவில்லை' என நினைத்ததாலோ என்னவோ லேசாக இதயம் சோகத்தால் கனத்தது,...
என் உயிரினும் மேலாக நேசித்த என் காதலியின் கடைசி வார்த்தைகளை நினைக்கும்போதே, சோகம் வந்து மனதைத் தைத்தது......
'குற்றுயிராய்க் கிடந்து பாலைவனாகிப் போன என் இதையத்திற்கு தெம்பூட்டும் உறவாய் கடைசி வரை என் வாழ்வில் வருவாள்' என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்......
என் காதல் உணர்வை துச்சமெனத் தூக்கிப்போட்டுப் போனவளைத் திட்டக் கூட மனமில்லாமல் சகித்திருந்த எனக்கு, எங்கோ வலிக்கிறது என நினைத்த என் கண்களுக்கு தனக்கே சொந்தமான கண்ணீரைத் தான் ஆறுதல் பரிசாய்த் தர முடிந்தது போல.......
மெதுவாக ஓரமாய்க் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே அமைதியாய் அருகில் அமர்ந்திருந்த நண்பனைப் பார்க்க,......
அவனும் இயற்க்கை அன்னையின் அழகை ரசித்து , ருசிக்கிறான் என்றே தோன்றியது.....
'அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான் என் வலிகள்..., 'ஐந்து வருடங்களாக அவளையே என் மனதின் 'காதல் ராணியாய்' வீற்றுருக்கச் செய்து அவளையே மனதில் நினைத்து வாழ்கிறேன்' என்று சொன்னால், 'எங்கே என்னை கேலி செய்து என் காதலை கிண்டல் செய்து விடுவானோ' என்ற பயம் ....
........................................................................
"நம் காதலால் நான் அழிந்தாலும்
அவப்பெயர்கள் உன்னைத் தீண்டாமல்
வாழ வைக்குமடி பெண்ணே...."
........................................................................
"டேய்...!! கிளம்பலாமா ... நேரம் ஆய்டுச்சு." என்று சரத் கேட்க..,
"ம்ம்" என்று மெதுவாக சொல்லிவிட்டு என் எண்ணமெனும் போர்க்குதிரைக்குக் கடிவாளமிட்டு நிறுத்திவிட்டு,
ஓரமாய் நின்றிருந்த என் Yamaha -R 15 பைக் அருகே வந்தோம்.
என் நண்பனைப் பற்றி,
'சரத்' - இது தான் அவன் பெயர். L .K .G -யிலிருந்தே இணைபிரியாமல் இருக்கும் நண்பர்களில் ஒருவன்.
+2 வரை இணைந்தே படித்தோம். பின்னர் பிரிந்து வேறு வேறு கல்லூரிகளில் பிற்கால எதிர்காலத்திற்காக காலடி எடுத்து வைத்தவர்கள் தான். அவன் SVCET , SV நகர், புளியங்குடி, திருநெல்வேலியில் நான்கு வருடம் EEE படித்து முடித்து சென்னையில் " Energy Meter " எனும் "EB Project "-இல் ஒரு அங்கத்தினராக பணியிலிருக்கிறான். இப்போது அக்காவின் திருமணத்திற்காக மூன்று மாத விடுமுறையாக வந்திருக்கிறான்.
நவம்பர்(08-11-2014, 09-11-2014)- திருமணம் முடித்தே வேலையில் மறுபடியும் சேர வேண்டும்.
"என்னடா திடீன்னு எதுமே பேசாம வர" என சரத் கேட்டதும் தான் சுயநினைவே வந்தது.
"அதெல்லாம் ஏதுமில்ல மச்சான்" என்று இயந்திரத்தனமாகவே பதிலும் சொன்னேன்.
"சரி பைக்ல ஏறு, இல்லேனா நேரமாய்டும்" என்று விட்டு என்னிடம் சாவியை வாங்கி பைக்கை முடுக்கினான்.....
"ம்ம்" என்று விட்டு பின்னால் ஏறி அமர்ந்து விட்டேன்.
நானும் பேசாமல் அமர்ந்து வேறு சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போனவன் 'பக்கக் கண்ணாடியில்' பார்த்திருப்பான் போல,
"என்னடா என் முதுகையே பாத்துட்டுருக்க" என்றவன் சிற்றாறு சாலையிலிருந்து களியல் சாலையை தொட்டிருந்தான்.
"எதுமில்லடா .. , லேசா தலைவலி அவ்ளோதான்" என்று விட்டு மீண்டும் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தை கழற்றி விட்டிருந்தேன்...
இப்போது 'திற்பரப்பு அருவி" சாலையில் பைக்-இல் போய்க் கொண்டிருந்தோம்.
'மூண்டு வரும் மேகத்தைப் பார்த்த போதே தெரிந்தது அதுவும் சோகம் தான் என்னைப் போல' என எண்ணி விட்டு மேலே வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன்.
அத்தோடு நில்லாமல் அது தனது முதல்த் துளிக் கண்ணீரைத் என் நெற்றியில் பட்டென்று துளிர்த்தது....
பட்டென்று துடித்ததும் கோபமானது போல, 'பொல பொல' வென்று அள்ளித் தெளித்தது தனது சோகமானக் கண்ணீரை....
"ரொம்ப மழை கொட்டும் போல, அருகில எங்கயாச்சும் ஒதுங்கிடலாம்" என்று விட்டு ஒதுக்கப் போனான்.
அப்போது,.......
.........................................................
"எத்தனையோ முறை
தடம் மாறியும்...
உன்னை பிரிந்ததைப்
போல வருந்தி
அழுதவனில்லையடி நான் ..."
.........................................................
(தொடரும்......)
சிற்றாறு அணையின் மேல் முகப்பில்லிருந்து பார்த்தாலே தெரிகிறது இயற்கை அன்னையின் சேலையின் வேலைபாடுகள் சோலைகளின் வடிவில்...,
பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போல நீள நீளமாக படர்ந்திருந்த அந்த மரங்களின் எழில்மிகு காட்சியே பிரம்மிப்பூடுகிறது .....
'சல சல'-வென எங்கோ தூரத்தில் இலைச் சருகுகளின் கசமுசா சத்தங்களும்,
'கீச் கீச்-சென மழலைப் பறவைகள், தாய்ப் பறவையைக் கண்டதாலோ என்னவோ ஆரவாரமிட்டு கத்திக் கொண்டிருந்தது......
எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த 'மகரந்த மணமே' பக்கதிலேதோ மலர்ச்சோலை இருப்பதை எடுத்துச் சொன்னது,,,,,,
ஜோடி ஜோடியாய் பறவைகளும் கோர்வையாய்ப் பறந்து தாங்களும் 'மகிழ்ச்சிக்குத் தளைத்தவர்கள் அல்ல' என காட்டி மாலைப்பொழுதைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
காற்றில் பெண்களின் கூந்தல் அசைவதைப் போல அணையின் நீர் அசைந்தாடி இயற்க்கை அன்னையின் கண்ணீரில் சோகமில்லை என மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது........
இத்தனைக்கும் எதிர்மாறாக என் அலைபாயும் சோகமனதை ஒருநிலையாக நிலைநிறுத்த தத்தளித்துப் போராடிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ விதவிதமான வித்யாசமான மனநிலைகளையும், மனங்களையும் படித்த எனக்கு 'ஏன் என்னவளின் மனதைப் படிக்க முடியவில்லை' என நினைத்ததாலோ என்னவோ லேசாக இதயம் சோகத்தால் கனத்தது,...
என் உயிரினும் மேலாக நேசித்த என் காதலியின் கடைசி வார்த்தைகளை நினைக்கும்போதே, சோகம் வந்து மனதைத் தைத்தது......
'குற்றுயிராய்க் கிடந்து பாலைவனாகிப் போன என் இதையத்திற்கு தெம்பூட்டும் உறவாய் கடைசி வரை என் வாழ்வில் வருவாள்' என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்......
என் காதல் உணர்வை துச்சமெனத் தூக்கிப்போட்டுப் போனவளைத் திட்டக் கூட மனமில்லாமல் சகித்திருந்த எனக்கு, எங்கோ வலிக்கிறது என நினைத்த என் கண்களுக்கு தனக்கே சொந்தமான கண்ணீரைத் தான் ஆறுதல் பரிசாய்த் தர முடிந்தது போல.......
மெதுவாக ஓரமாய்க் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடியே அமைதியாய் அருகில் அமர்ந்திருந்த நண்பனைப் பார்க்க,......
அவனும் இயற்க்கை அன்னையின் அழகை ரசித்து , ருசிக்கிறான் என்றே தோன்றியது.....
'அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான் என் வலிகள்..., 'ஐந்து வருடங்களாக அவளையே என் மனதின் 'காதல் ராணியாய்' வீற்றுருக்கச் செய்து அவளையே மனதில் நினைத்து வாழ்கிறேன்' என்று சொன்னால், 'எங்கே என்னை கேலி செய்து என் காதலை கிண்டல் செய்து விடுவானோ' என்ற பயம் ....
........................................................................
"நம் காதலால் நான் அழிந்தாலும்
அவப்பெயர்கள் உன்னைத் தீண்டாமல்
வாழ வைக்குமடி பெண்ணே...."
........................................................................
"டேய்...!! கிளம்பலாமா ... நேரம் ஆய்டுச்சு." என்று சரத் கேட்க..,
"ம்ம்" என்று மெதுவாக சொல்லிவிட்டு என் எண்ணமெனும் போர்க்குதிரைக்குக் கடிவாளமிட்டு நிறுத்திவிட்டு,
ஓரமாய் நின்றிருந்த என் Yamaha -R 15 பைக் அருகே வந்தோம்.
என் நண்பனைப் பற்றி,
'சரத்' - இது தான் அவன் பெயர். L .K .G -யிலிருந்தே இணைபிரியாமல் இருக்கும் நண்பர்களில் ஒருவன்.
+2 வரை இணைந்தே படித்தோம். பின்னர் பிரிந்து வேறு வேறு கல்லூரிகளில் பிற்கால எதிர்காலத்திற்காக காலடி எடுத்து வைத்தவர்கள் தான். அவன் SVCET , SV நகர், புளியங்குடி, திருநெல்வேலியில் நான்கு வருடம் EEE படித்து முடித்து சென்னையில் " Energy Meter " எனும் "EB Project "-இல் ஒரு அங்கத்தினராக பணியிலிருக்கிறான். இப்போது அக்காவின் திருமணத்திற்காக மூன்று மாத விடுமுறையாக வந்திருக்கிறான்.
நவம்பர்(08-11-2014, 09-11-2014)- திருமணம் முடித்தே வேலையில் மறுபடியும் சேர வேண்டும்.
"என்னடா திடீன்னு எதுமே பேசாம வர" என சரத் கேட்டதும் தான் சுயநினைவே வந்தது.
"அதெல்லாம் ஏதுமில்ல மச்சான்" என்று இயந்திரத்தனமாகவே பதிலும் சொன்னேன்.
"சரி பைக்ல ஏறு, இல்லேனா நேரமாய்டும்" என்று விட்டு என்னிடம் சாவியை வாங்கி பைக்கை முடுக்கினான்.....
"ம்ம்" என்று விட்டு பின்னால் ஏறி அமர்ந்து விட்டேன்.
நானும் பேசாமல் அமர்ந்து வேறு சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச தூரம் ஓட்டிக் கொண்டு போனவன் 'பக்கக் கண்ணாடியில்' பார்த்திருப்பான் போல,
"என்னடா என் முதுகையே பாத்துட்டுருக்க" என்றவன் சிற்றாறு சாலையிலிருந்து களியல் சாலையை தொட்டிருந்தான்.
"எதுமில்லடா .. , லேசா தலைவலி அவ்ளோதான்" என்று விட்டு மீண்டும் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தை கழற்றி விட்டிருந்தேன்...
இப்போது 'திற்பரப்பு அருவி" சாலையில் பைக்-இல் போய்க் கொண்டிருந்தோம்.
'மூண்டு வரும் மேகத்தைப் பார்த்த போதே தெரிந்தது அதுவும் சோகம் தான் என்னைப் போல' என எண்ணி விட்டு மேலே வானத்தை அண்ணாந்துப் பார்த்தேன்.
அத்தோடு நில்லாமல் அது தனது முதல்த் துளிக் கண்ணீரைத் என் நெற்றியில் பட்டென்று துளிர்த்தது....
பட்டென்று துடித்ததும் கோபமானது போல, 'பொல பொல' வென்று அள்ளித் தெளித்தது தனது சோகமானக் கண்ணீரை....
"ரொம்ப மழை கொட்டும் போல, அருகில எங்கயாச்சும் ஒதுங்கிடலாம்" என்று விட்டு ஒதுக்கப் போனான்.
அப்போது,.......
.........................................................
"எத்தனையோ முறை
தடம் மாறியும்...
உன்னை பிரிந்ததைப்
போல வருந்தி
அழுதவனில்லையடி நான் ..."
.........................................................
(தொடரும்......)