P
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • பூவுக்கும் எனக்கும் உண்டான உறவு கொடியறுந்திடா துளிருக்கும் செடிக்கும் உண்டான உறவு.

    உணர்வுகளைக் கவிதையில் காட்டமுடியும் என்பதை உணர்த்தியவர்.. எனக்கு ஒருவகையில் இவர் துரோணர் ஆவார்.. ஏகலைவனாக நான்.

    ஓவியாவுக்கு அடுத்து யாரிடம் அதிகம் பேசியிருப்பேன் என்றால் அது பூ அண்ணாவோடுதான். அவர் பதிவுகளால் மீண்டெழுந்த சமயத்தில் புதியவனாக நானிருக்க, பகிர்ந்துகொண்டோம் எண்ணங்களை..

    ஃபீனிக்ஸ் பறவை பற்றி கேள்விப்பட்டதோடு சரி.. அதன் குரல் கேட்டது பூ வழியாகத்தான்.. புதுச்சேரியில் பாரதி இருந்ததால்தான் என்னவோ அவனது மிச்சத்தைத் தொடர்ந்தெழுதுகிறாரோ பூ என்று எண்ணவைக்கும் கவிதைகள் இவருடையது....

    மிகச்சிறந்த உணர்வாழ்ந்த கவிதைகள் சொரியும் கவிஞர். கனமிகுந்த கதை படைக்கும் கதாசிரியர். நகைச்சுவை தெறிக்கும் நகைச்சுவைகளும் இந்தக் கவிஞர் எழுதுவார் என்பது ஆச்சரியப்படும் விசயம்..

    எல்லா வகையிலும் மேன்மை பெற்றிருக்கும் பூவின் தரிசனம் என்றேனும் ஒருமுறை வாய்க்க, எனக்கு ஆசைதான்...
    உணர்ச்சி கவிஞன்... சமுதாய கவிதைகள் என்றால் அது பூ தான்... கவிதையால் சிறந்த சமுதாயம் கொடுத்த என் அன்புநண்பர், தன் புத்ஹிய பதவிகளாலும் நல்ல சமுதாயத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன்....
    ஆரம்பத்தில் ஒரு செடியாக வந்த என்னை மன்றத்தில் வளர்த்த அன்பு அண்ணன்களில் ஒருவர்...

    நிதர்சனம் நிறைந்த சமூகக் கவிதைகளின் படைப்பாளி...
    இளசு அண்ணன் சொல்வது போன்ற்ற கவிஞன். ஒவ்வொரு கவிதையும் எழுதத் துடிப்பவர்களுக்கான பட்டறை. கதைகளுக்கு உணர்ச்சியை ஊட்டி உயிரோடு உலவவிடும் வித்தகர்.
    என் அன்புத்தம்பி. உணர்ச்சிக் கவிஞன். உண்மை(யான)க் கவிஞன்.

    காலம் அரிக்காத பாசக்கோட்டை எங்கள் உறவு.
    மன்றத்து மூத்த சொந்தங்களில் ஒருவர்.. பூவின் கவிதையும் கதையும்.... மன்றத்தை ஒரு காலத்தில் நிறைத்தது. வாழ்க்கையில் பல செழிப்புக்களை காண வாழ்த்துக்கிறேன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top