எப்போதோ படித்தது.
வகுப்பில் மனித உடலில் குருதி ஓட்டத்தைப்பற்றி ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
மாணாக்கர்களுக்கு நன்றாக விளக்க வேண்டும் என்பதற்காக ” உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நான் தலைகீழாக நின்றால் குருதி தலையில் பாய்ந்து முகமெல்லாம் சிவப்பாக மாறும். இல்லையா..?” என வினவினார்.
மாணவர்களும் “ஆமாம்” என்றனர்.
ஆசிரியர் வினவினார் : - “அப்படியென்றால் உங்களிடம் ஒரு வினா கேட்கிறேன். பதில் சொல்லுங்கள். நான் சாதாரணமாக நேராக நிற்கும் போது ஏன் குருதி என் கால்களில் பாய்ந்து கால்கள் சிவப்பாவதில்லை...?”
ஒரு மாணவன் விடை கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கத்தினான். ”ஏனெனில் உங்கள் கால்கள் காலியாக இல்லை!”
ஆசிரியர்......!!????
Bookmarks