ஓரமாய் கிடந்த
ஒற்றைக் கல்லொன்று
ஆடிக் காற்றில் அசைந்தாடி
வீதி நடுவில் வந்தது
பாழாய் போன காற்றென்று
அதை ஓரமிட்டுச் சென்றனர்
அவ் வழி சென்ற
ஒரு குருவும் அவர் சீடனும்
மீண்டுமடித்த காற்றில்
மீண்டும் நடு வீதி சேர்ந்தது அக்கல்
மீண்டும் அதையெடுத்து
ஓரத்தில் மீட்டனர்
மீண்டும் அதே வழி வந்த
அதே குருவும் அவர் சீடனும்
பாழாய் போன காற்றென்று
மீண்டும் நொந்த படி.
ஆடி கழிந்த ஆவணியில்
அதே வழி வந்தான்
அதே குருவின்
அதே சீடன் மட்டும் ஒரு நாள்
ஓரமாய் ஒதுங்கி கிடந்த கல்லை
உருட்டிப் புரட்டி நடு வீதி சேர்த்து
பின் அதை ஓரமிட்டுச் சென்றான்
வீணாய் போன காற்று நமகவென்று
மூன்று தரம் சொல்லியபடி.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com
Bookmarks