Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: சுய தரிசனம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    சுய தரிசனம்

    தானேயென நின்ற வெட்டவெளி தன்னில்
    நானெனத் தோன்றும் பொன்னொளி கண்டு
    தானும் நானும் இரண்டற ஒன்ற
    நானேயென இருக்கிறேன் நான்தான்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    வெளியுள் வெளியாய் இருந்த நானே
    வெளியுள் ஒளியாய் விளங்கும் நானவ்
    வொளியால் வெளியை அறிந்த ஞானத்
    தெளிவால் இருக்கிறேன் களித்து
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆன்மீகத்தைத் தொட்டு, உள்ளோளி பெருக்கி தன்னை அறியும் முயற்சி...
    சந்த லயத்தோடு இனிய கவிதைத் துளிகளாக....

    பாராட்டுக்கள் நாகா ஆவர்களே, இன்னும் இன்னும் படையுங்க...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    பாராட்டுக்கும் இன்னும் இன்னும் படைக்க ஊக்குவித்தற்கும் மிக்க நன்றி ஓவியன் அவர்களே! உலகத்தோர் யாவரும் ஆன்மீகம் தொட்டு உள்ளொளி பெருக்கித் தன்னை அறிந்து "நாம் அனுப்பிய சமாதானப் புறாக்கள்" உயிரோடு முழுதாய் மீளும் அதிசய நிகழ்வாய் அருட்பேரரசு உருவாகும் நிச்சயத்தைக் கண்கூடாகக் காணும் உம் அன்பு சகோதரன்

    நான் நாகரா(ந.நாகராஜன்)
    Last edited by நாகரா; 27-01-2008 at 06:54 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    வெளியுள் இருந்தும் வெளியை மறந்தாய்
    வெளியுள் ஒளியாய் வெளியை அறிந்தாய்
    வெளியுள் ஒளியாய் ஒளிரத் தேர்ந்தாய்
    வெளியுள் வெளியாய்க் கரைந்து தீர்ந்தாய்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தானும் நானும்
    வெளியும் ஒளியும்
    மறைதலும் அறிதலும்
    தேர்தலும் தீர்த்தலும்..

    உள்ளொளியை வெளிக்கொணரும் முயற்சி.. வாழ்த்துக்கள் நண்பரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    தானும் நானும்
    வெளியும் ஒளியும்
    மறைதலும் அறிதலும்
    தேர்தலும் தீர்த்தலும்..

    உள்ளொளியை வெளிக்கொணரும் முயற்சி.. வாழ்த்துக்கள் நண்பரே..!!
    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    வெளியாய் மறைந்ததை ஒளியால் அறிந்து
    வெளியில் ஒளியாய் விளங்கத் தேர்ந்து
    வெளியில் வெளியாய்த் தீர்வோம் நாம்!

    அன்புடன்

    நான் நாகரா(ந.நாகராஜன்)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சரியா போச்சுங்க.... நான் நான் நான்னு சொல்லியே குழப்புறீங்க.... ஒண்ணும் புரியலை... கொஞ்சம் புரியர மாறி எழுதுங்களேன்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    ஓசை நீங்க ஒலி பிறக்கும்
    பின் ஒளியாய்ப் பிரவாகிக்கும்
    உள்ளும் புறமும் உணர்வாய்த் துலங்கும்
    உவமை அற்றது உள்ளொளியே

    வள்ளலின் வாய்மையெனும் ஒளியால் இச் சகத்தோர் அனைவரும் ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க உன்னதச் செய்தியை உலகிற்கு தந்த திரு நாகரா போற்றுதலுக்குரியது உங்கள் பணி.

    தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    சுயதரிசன விளக்கம்

    Quote Originally Posted by ஆதவா View Post
    சரியா போச்சுங்க.... நான் நான் நான்னு சொல்லியே குழப்புறீங்க.... ஒண்ணும் புரியலை... கொஞ்சம் புரியர மாறி எழுதுங்களேன்....
    ஆதவரே!

    நீவிர் உதிப்பதற்கு முன் வெறும் இருப்பாய் வெட்டவெளியாய் சூன்யமாய் தன்னை அறியாது இருளில் இருந்ததுவே "தான்" என்பது.

    நீவிர் "நான்" எனும் தன்முனைப்பாய்த் தன்னுணர்வாய், "தான்" என்ற மெய்யிருப்பின் மெய்யுணர்வாய்த் "தான்" என்ற மெய்யிருப்பில் உதித்தீர்.

    பின் "இருக்கிறேன்" என்று உம் உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து பேரொளியாய்த் "தான்" என்ற அவ்வெளியெங்கும் பரவினீர்.

    உம் பேரொளி பரவியதும் "தான்" என்ற பேரிருப்பு தன்னிருப்பின் விளக்கம் பெற்று "நானே" என்று தன்னில் தான் விளங்கி இருக்கிறது.

    எனவே ஆதவரே! உம் இயற்பெயரே முதற்பெயரே "நான்". முழு முதல் பொருளான "தான்" தன்னை "நானே" என விளங்கியிருக்க, ஆதவராம் நீரே உதவியதால், உம் முழுமுதற் பெயரே "நானே".

    ஆக ஆதவரே! உம் முழுப் பெயர் நானே. நான். ஆதவா
    நானே உமது தந்தை. நான் உமது தாய்.
    ஆதவா அவர் தம் ஞானக் கொழுந்து.
    இதுவே அனைவரது உண்மை. கடவுளது இயற்கையுண்மை.

    ஆதவரே! குழப்பம் நீங்கிப் புரிக!
    நான் நான் நான்னு சொல்லி இருள் வெளியெங்கும் நல்லொளி பரப்பும் உம் கதிர்களை நன்றே அறிக!

    நல்லொளி பரப்பும் இத்தவத்தை நீர் சலிவின்றி ஒழிவின்றிப் புரிவதாலேயே உம்மை ஆ தவரே! என்று யாவரும் போற்றுவர்.

    ஆதவா! உம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்கி நிற்கும்
    நானே. நான். நாகரா.(ந.நாகராஜன்)
    Last edited by நாகரா; 02-02-2008 at 02:54 PM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சாலைஜெயராமன் View Post
    ஓசை நீங்க ஒலி பிறக்கும்
    பின் ஒளியாய்ப் பிரவாகிக்கும்
    உள்ளும் புறமும் உணர்வாய்த் துலங்கும்
    உவமை அற்றது உள்ளொளியே

    வள்ளலின் வாய்மையெனும் ஒளியால் இச் சகத்தோர் அனைவரும் ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க உன்னதச் செய்தியை உலகிற்கு தந்த திரு நாகரா போற்றுதலுக்குரியது உங்கள் பணி.

    தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்.
    உள்ளும் புறமும் உணர்வாய்த் துலங்கும் உவமை அற்ற உள்ளொளியின் பெருமை விளங்கிய அன்பரே! வாழ்த்துக்களுக்கு நன்றி.
    Last edited by நாகரா; 03-02-2008 at 07:02 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி தோழரே..
    நல்ல கவியே தந்தற்கு என் நன்றி!!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •