தமாசு : சூடான செய்திகள்
வணக்கம்.
இன்றைய மன்றத்து முக்கிய தமாசுகள்..
தமாசுகளை வாசிப்பது பூரோஸ் டாட்டர் டயானா..! (பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமியை போல் கற்பனை செய்து படிங்க.. )
மன்றத்தின் முக்கிய இதயம் சிறிது நாட்களுக்கு முன் காணாமல் போனது பற்றி துப்புத் துலக்கி, இரவும் பகலும் வேலை செய்த நம் மன்றத்து பூமகள் வெற்றிகரமாக இதயத்தை அவரது இரண்டாயிரமாவது பதிவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து வெளியுலகிற்கு காட்டினார். அந்த சிறந்த துப்பறியும் மூளையை பாராட்டி, நம் மன்றம்.. அவருக்கு ஆயிரம் கரகோசங்களை அன்போடு வழங்கியது.
ஆதவா போடாத ஆம்லட்டை எப்படி காப்பி அடிச்சி சோப்பால் போடுவது என்று மன்றத்து கண்மணிகள் தீராத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் ரகசியத் துறையிடமிருந்து வந்துள்ளது. இந்த ரகசியத்தை அண்டை திரிகள் காப்பியடிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப் போவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னி தெரிவித்துள்ளார்.
மன்றத்தில் வசந்தமாய் வந்து பதிவில் எங்கும் தமிழ் மணக்கும் ஒரு காதல் ஜோடியைப் பற்றி கிசு கிசு எழுதிவிட்டு, அவர்களிடம் எந்த நேரமும் அடி வாங்க நான் தயார் என்று மார்தட்டி தைரியமாக அறைகூவல் விடுக்கிறார் மன்றத்து கிசுகிசு நாயகர்.
இத்துடன் முக்கிய தமாசுகள் நிறைவு பெறுகின்றன.
மீண்டும் தமாசுகள் அடுத்தடுத்து வரும் திரிகளைப் பொறுத்தும், இ-பணங்களைப் பொறுத்தும் விரைவில் தயாராகும்.
வணக்கம்.
தமாசுகள் வாசித்தது பூரோஸ் டாட்டர் டயானா.
தமாசு செய்தி - 2
Bookmarks