மாறும்........காதல்
மனங்கள் ஒன்றாய், நன்றாய்
மலர்ந்து விரிந்து மகிழ்ச்சியில்
துள்ளித்திரிந்து இன்பத்தில் உழன்று
உறவினில் கலந்து
உச்சத்தைஅடைந்து
உரசல்கள் இன்றியும்
பிரிவினில் அடையவே
மலருக்கு வந்தது மோகம் மாறியது தேன்
அடுத்துவந்த அழகியவண்டு
அடித்துசென்று மகிழ்ந்தது
முதல்வண்டுக்கு மனம் உண்டு மார்க்கமில்லை
உண்மையை உணர்ந்தது
அன்பு பெற்றோரில் கலந்தது
ஒரு கணம் மீறினும் உலகில் நீ இல்லையே
மனதினில் கொண்ட உறுதியே
நின்று நிலைத்து வாழவே
இறைவா கொடுத்த உறுதியில்
நிலைக்க செய் என்றுமே
Bookmarks