Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: பிரபஞ்ச பிரயாசை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post பிரபஞ்ச பிரயாசை


    பூலோகம் தாண்டி
    ஓசோன்
    ஓட்டை வழியே..
    பிரபஞ்சம்
    பார்க்கிறேன்...


    சொல்லவொண்ணா
    எண்ணச்சிதறல்களாய்
    நட்சத்திரங்கள்.. - விண்வெளியில்
    சிறு துகளின் துகளாய்
    மானுடம்..


    உலகிற்கு உரைக்கப்படாத
    நம் நேசத்தைப் போலவே..
    உணரப்படாத உன்னத உண்மைகள்
    ஊழியின் கையில்
    பிரபஞ்ச மிச்சங்களாய்...!
    Last edited by பூமகள்; 07-09-2007 at 02:09 PM. Reason: for adding picture
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    துகள்களின் துகள்கள்தானே அகல..அகல...கால் பரப்பி அண்டத்தை ஆள ஆசைப்படுகிறது. அதைப்பார்த்து அண்டம் புன்முறுவல் பூக்கிறது...பாவம் இந்த துகள்கள்.. பிரபஞ்ச மிச்சங்கள் சொல்லும் கோடானு கோடி உண்மைகளில் ஒன்றையாவது,என்றைக்கு மானிடன் அறிந்து கொள்கிறானோ அன்று இந்த அண்டம் சொல்லும்...அட...!
    உயர்ந்த சிந்தனை பூமகள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    துகள்களின் துகள்கள்தானே அகல..அகல...கால் பரப்பி அண்டத்தை ஆள ஆசைப்படுகிறது. அதைப்பார்த்து அண்டம் புன்முறுவல் பூக்கிறது...பாவம் இந்த துகள்கள்.. பிரபஞ்ச மிச்சங்கள் சொல்லும் கோடானு கோடி உண்மைகளில் ஒன்றையாவது,என்றைக்கு மானிடன் அறிந்து கொள்கிறானோ அன்று இந்த அண்டம் சொல்லும்...அட...!
    உயர்ந்த சிந்தனை பூமகள். வாழ்த்துக்கள்.
    நன்றிகள் சகோதரரே...!
    மானுடம் அறியா பல விடயங்கள் அண்டத்தாயின் கருவறையில்! அறிந்துவிட துடிக்கும் ஆவலில் மனிதனின் வாழ்வு கரையும்...!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உணரப் படாத
    உண்மைகள் ஊழியின்
    கைகளில் மட்டுமல்ல
    எம் சமூகத்தின்
    பார்வையிலும் தான்......

    உறைக்காது உணராதவரை
    மன்னித்து விடலாம்
    ஆனால்.....
    நன்றே உறைத்தும்
    உணராதது போல்
    நடிப்போரை என்ன செய்ய?

    ஓசோனின் துளை வழி பிரபஞ்சம் நோக்கும் உங்கள் கற்பனையில் எனை இழந்தேன் - பாராட்டுக்கள் பூமகள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post

    Quote Originally Posted by ஓவியன் View Post
    உணரப் படாத
    உண்மைகள் ஊழியின்
    கைகளில் மட்டுமல்ல
    எம் சமூகத்தின்
    பார்வையிலும் தான்......

    உறைக்காது உணராதவரை
    மன்னித்து விடலாம்
    ஆனால்.....
    நன்றே உறைத்தும்
    உணராதது போல்
    நடிப்போரை என்ன செய்ய?

    ஓசோனின் துளை வழி பிரபஞ்சம் நோக்கும் உங்கள் கற்பனையில் எனை இழந்தேன் - பாராட்டுக்கள் பூமகள்!.

    அருமையாக உமது ஆதங்கத்தை கவித்துவத்தோடு இயம்புனீர்கள். பாராட்டுதலுக்கு நன்றி தோழரே...! தொடரட்டும் உமது சாதனைகள்...!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஒரு கவிதையில் இரு கருத்துகளை புதைத்துள்ளார் பூமகள்.
    உலகிற்கு உரைக்கப்படாத
    நம் நேசத்தைப் போலவே..
    புடவையில் என்னதான் வர்ணங்கள் இருந்தாலும் ஜரிகை (பார்டரை புடவையில் எப்படி சொல்வது என்று தெரியாதே) எடுப்பாக இருக்கவேண்டும். அதுபோல இங்கே மானுடம் பரந்த புடவையாக ஜரிகையாக காதல். பாராட்டுக்கள் பூமகள். தொடருங்கள்.
    ஓவியரே..பின்னுகின்றீர்.


    உன்னில் என்னை
    காண்பாயா..?
    காதலிக்க மட்டுமல்ல
    மானுடமும் பெருக்க.
    Last edited by அமரன்; 13-08-2007 at 06:18 PM. Reason: எழுத்துரு வர்ணம் மாற்ற

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    பூமகளின் கவிதையும்
    அதற்கு பின்னூட்டமாய் வந்த
    ஓவியரின் பதில் கவிதையும் அருமை
    வாழ்த்துக்கள் இருவருக்கும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    புது உறுப்பினர்
    பூமகள்
    புதுமைப்பெண்ணாக
    அசத்துக்கிறார்
    அதற்கு
    ஓவியனின்
    பின்னுட்டம்
    மெருகேற்றுகின்றது.

    பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    நம் மன்றத்தின் கவிமகளாக வருகை தந்த பூமகளின் கவிதைகள் மனதை கொள்ளை கொள்கின்றன. குறிப்பாக இந்த கவிதையில் அண்டவெளி அறிவியலும், மானுட தத்துவமும் சொன்ன பூமகளுக்கு பாராட்டு மாலைகள்..!
    அன்புடன்,
    இதயம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான எண்ணம், காவிதை சிந்தனையை ஓஷோனுடன் இணைத்து பார்பதர்க்கே திறமைகள் பல வேண்டும். பாராட்டுக்கள்.
    Last edited by ஓவியா; 13-08-2007 at 10:44 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  11. #11
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    புதுமையாக கவிதைகள் படைக்கும் பூமகளுக்கு வாழ்த்துக்கள்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பிரபஞ்சம் ஓர் நாள்
    வெல்லப்படலாம்...
    ஆனால், அன்று...
    மானுடம் பஞ்சமாக,
    தேடலாய் போய்விடுமோ...
    இன்று இங்கிருந்து தேடல்.
    நாளை அங்கிருந்து நாடல்.
    தொடரும்... என்றும்...
    இன்று, நேசம் உணராவிட்டால்...

    பாராட்டுக்கள் பூமகள்...
    புதுமையான பார்வையில் விரியும் பூவாக உங்கள் வரிகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •