மணலில் நடக்கும் போது சதக் சதக்
என்ற சத்தமும் இலைகளில்
படர்ந்திருக்கும் தண்ணீர்த் துளிகளும்
அனல் காற்று குளிர் காற்றாய் மாறி
மழை வந்து விட்டுச் சென்றதை
அறிவிக்கின்றன...
கண்களில் சிரிப்பும்
முகத்தில் பொலிவும்
செய்யும் குறும்புத் தனங்களும்
தனிமையை விரும்பும் உள்ளமும்
உனக்குள் காதல் வந்து விட்டதை
சொல்லாமல் சொல்கின்றன...
Bookmarks