நிலவு என்று
சொல்ல மறுத்தேன்
தேய்ந்தும் வளர்ந்தும்
வருவதால்....
வானம் போன்ற எம்
காதல் எல்லையற்றது
கண்கள் கொண்டு
அளக்க முற்படாதே...
கனவில் கூட உன்னைக்
காண மறுத்தேன்
கண்விழித்தால் நீ
கலைந்து போவதால்...
நிலவு என்று
சொல்ல மறுத்தேன்
தேய்ந்தும் வளர்ந்தும்
வருவதால்....
வானம் போன்ற எம்
காதல் எல்லையற்றது
கண்கள் கொண்டு
அளக்க முற்படாதே...
கனவில் கூட உன்னைக்
காண மறுத்தேன்
கண்விழித்தால் நீ
கலைந்து போவதால்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நிலவு..வானம்
எழுதாத கவி இல்லை
எழுத எழுதக குறையவுமில்லை.
ஒவ்வொரு தடவையும்
புதிதாக தெரிகிறது−புதிது
புதிதாகவும் தோன்றுகிறது...
நிலவை பார்க்கையில்
நிரந்தமில்லாதிருக்கிறது..காதல்
வானத்தை பார்க்கையில்
நிறைந்திருக்கிறது....காதல்
காதல் புதிர் மட்டுமல்ல
முரண் தொடர் கூட..
கனவில் பார்த்தால்
முற்றுப்பெறாது...காதல்
கவிகூட அப்படித்தான்
தோன்றுகிறது...
பாராட்டுக்கள் இனியவள்.
Last edited by அமரன்; 26-07-2007 at 09:24 AM.
நிலவு!
வானம்!
தேவதை!
இவையில்லாமல்
கவி எழுது
என்றாள்!
எழுதினேன்
ஓர் கவிதையை
அவள் பெயராக............!
Last edited by ஓவியன்; 26-07-2007 at 09:29 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
மூன்றுமே மூன்று குறுங்கவிகள்.. வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அள்ளிப்போவதல்ல..
அள்ளிப்பருகுவது காதல்.
சொல்லித்தெரிவதே காதல்-பலர்
சொல்லித் தெளிவதே வாழ்க்கை.
தன்னுடையவன்
என நினைத்தால்
எடுத்துச் செல்லாள்..
விட்டுச் செல்வாள்
உடைமைகளை.
டம்..டம்..டம்... இதனால் சகலோருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால்.... இனியவள் என்பவரால் பரப்பப்பட்ட காதல் வைரஸ் எங்கெங்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
அமரனும்,ஓவியனும் இப்போது பாவம் காதல் காதல் என்று அனத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே நன்பர்களே எச்சரிக்கையாக இரூங்கள். இனியவள் நிலவையும்,வானத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு இந்த காரியத்தை செய்து வருகிறார். வைரஸ் மிக அழகாக வேறு இருக்கிறது.ஜாக்கிரதை.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி அமர்
பதில் கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்
கவிதை என்னும்
சுரபியில் அமுதம்
போன்றவை நிலவும் வானமும்
அள்ள அள்ள குறையாதது
போல் எழுத எழுத
குறையாது சுவைகளையும்
அள்ளி வழங்கிச் செல்கின்றது....
நிரந்தரமற்ற எம்மில்
நிரந்தரமானவை காதல்
மட்டுமே....
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என்ன சிவா இப்படிச் சொலிட்டீங்க...காதல் கவிதைகள் எனக்கு சிக்குவதில்லை...சும்மா ஒரு ட்ரெயிலர் பார்கிறேன். வரவேற்பைப் பார்த்து படமே போட்டுடுவேன்..அத*ற்கான* முய*ற்சி இது..
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks