Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: உயிர் தவிக்கின்றது

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    உயிர் தவிக்கின்றது

    கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல்
    உனக்குள்ளும் பாசம் இருப்பதை
    நானறிவேன் அன்பே.....

    கோபத்தை வேலியாக்கி அன்பை
    வெறுப்பாக மாற்றி கைதேர்ந்த
    கலைஞரைப் போல் நடித்து
    என்னை ஏமாற்றுகின்றாயே
    உன்னால் மட்டும் எப்படி
    முடிகின்றது இப்படி....

    உன் கண்களில் தெறிக்கும் கோபம்
    எனக்கு எனக்கு மட்டும் உன் மனதினை
    படம் போட்டுக் காட்டுகின்றதெ வெட்ட
    வெளி வானம் போல்....

    உன் சுடு சொல்லால் கோபம்
    வருவதற்கு பதில் ஏன் அன்பே இன்னும்
    உன் மேலான காதலை அதிகரிக்கின்றதே....

    அந்தி மாலை வேளையின் − உன்
    நினைவோடு யன்னலோரம் நிற்கையில்
    மின்னலாய் உன் விழிகள் என்னைத்
    தீண்டிச் சென்றதைக் கண்டு என் மனம்
    ஆகாயத்தில் துள்ளிக் குதித்த*தனை − நீ
    அறிவாயா....

    முன்பை விட இப்பொழுது கண்ணாடியில்
    என்னை நான் அதிகம் பார்க்கின்றேன்
    என்னுருவத்தில் உன்னுருவைக் காண்பதற்காய்....

    ஆசையாய் பேணி வளர்த்த நிகவிரலை
    வெட்டுகின்றேன் கரங்களை நீ தழுவும் போது
    நிகம் கீறி உனக்கு வலிக்குமே என்றெண்ணி.....

    உன் நினைவோடு சேர்ந்து − நான்
    சிரிக்கையில் அதனைக் கண்ட தோழிகள்
    உனக்கென்ன பயித்தியமா என கோபக்
    குரலில் பேசுவது கூட என் காதில்
    விழவில்லையே உன் குரலே காற்றாய்
    என் காதில் விழுந்து கொண்டிருக்கின்றதே.....

    உனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச்
    சேமிக்கின்றேன் யாருக்கும் தெரியாமல்
    உனக்கு பிடிக்காதவைகளை நானும்
    வெறுக்கின்றேன்
    வெறுத்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றேன்
    உனக்கு பிடிக்குமே என பிடித்த உணவுகளை
    வெறுக்கின்றேன் உனக்கு பிடிக்காதே என...

    இன்னும் எத்தனை நாட்களுக்கு − இந்த
    இன்ப அவஸ்தை அன்பே வாய் திறந்து
    கூறி விடு நான் உன்னைக் காதலிக்கின்றேன் என
    உயிர் தவிக்கின்றதே உன் உயிரோடு கலக்க...
    Last edited by இனியவள்; 14-07-2007 at 04:41 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13

    Thumbs up

    அழகான வரிகள் இனியவளே அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

    Quote Originally Posted by இனியவள் View Post
    இன்னும் எத்தனை நாட்களுக்கு − இந்த
    இன்ப அவஸ்தை அன்பே வாய் திறந்து
    கூறி விடு நான் உன்னைக் காதலிக்கின்றேன் என
    உயிர் தவிக்கின்றாதே உன் உயிரோடு கலக்க...
    மெளன மொழியில் உண்டு
    ஆயிரம் காதல்
    பதியேற விரும்புகிறாய்
    என்னுள் பதியேற்றிய நாள்
    நீயறியாயோ...
    என்னுள் கலக்க
    நாளேது உனக்கு
    தினமும் பதி நான்கு
    சாவு அணைக்கும் வரை
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post

    உனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச்
    சேமிக்கின்றேன் யாருக்கும் தெரியாமல்
    உனக்கு பிடிக்காதவைகளை நானும்
    வெறுக்கின்றேன்
    வெறுத்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றேன்
    உனக்கு பிடிக்குமே என பிடித்த உணவுகளை
    வெறுக்கின்றேன் உனக்கு பிடிக்காதே என..
    காதலுக்காக, காதலுனுக்காக தன்னை மாற்ற வைப்பது தான் உண்மைக் காதலோ........?

    பாராட்டுக்கள் இனியவள்!.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    முதலில் இது ஒரு ஆண் அவன் காதலியை நினைத்து பேசுகிறாள் என்று நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது இது ஒரு பெண் தன் காதலனை நினைத்து ஏங்குகிறாள் என்று.

    அருமை இனியவள் அவர்களே. எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ இந்த மாதிரி அழகான கவிதைகளை எழுதுவதற்கு. பாராட்டுக்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இனியவள் காதல் ஏக்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். கண்ணாடி முன் பல*மணித்துளிகள் நிற்பதுக்கான காரணம் இப்போது புரிந்தது. பாராட்டுக்கள்.

    உனக்கு பிடிக்காதவைகளை நானும்
    வெறுக்கின்றேன்
    உன்னை எனக்குப் பிடிக்கவில்லை
    உன்னையே வெறுப்பாயோ....
    Last edited by அமரன்; 14-07-2007 at 06:51 PM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பாராட்டுக்கள் இனியவள்.. காதல் செய்யும் ஏக்கத்தைக் கண்டுகொண்டேன்...

    இதைச் சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறதா தெரியாது..
    ---------------

    வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன இனியவள்... அதைக் குறையுங்கள்

    வர்ணனைகளை கூடுமானவரை காதல் கவிதையில் அள்ளீ வீசுங்கள்.

    புதுப்புது சிந்தனைகளைப் புகுத்துங்கள்...

    இன்று நிலவாய் ஜொலிக்கும் உங்கள் கவிதை நாளை சூரியனாய் ஒளிதரும்..

    வாழ்த்துக்கள்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அழகான வரிகள் இனியவளே அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
    நன்றி அன்பு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    முதலில் இது ஒரு ஆண் அவன் காதலியை நினைத்து பேசுகிறாள் என்று நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது இது ஒரு பெண் தன் காதலனை நினைத்து ஏங்குகிறாள் என்று.
    அருமை இனியவள் அவர்களே. எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ இந்த மாதிரி அழகான கவிதைகளை எழுதுவதற்கு. பாராட்டுக்கள்.
    நன்றி வணக்கம்
    ஆரென்
    நன்றி ஆரென் அண்ணா உங்கள் பாராட்டுக்கு

    நேரத்தை நாமாக எடுத்து
    கொள்ள வேண்டும்
    இல்லா விடின் நேரம்
    எம்மை எடுத்து விடும்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    காதலுக்காக, காதலுனுக்காக தன்னை மாற்ற வைப்பது தான் உண்மைக் காதலோ........?
    பாராட்டுக்கள் இனியவள்!.
    நன்றி ஓவியன்

    ம்ம் ஆமாம் என்று தான் நினைக்கிறன் ஓவியன்..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அப்படியே காதல் வயப்பட்டவன் (எனக்குத்தெரிந்த பக்கம் அதுதான்) என்ன செய்வானோ அதை எழுதியிருக்கிறீர்கள்.

    கவிதைக்கு பாராட்டுக்கள்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post
    நன்றி ஆரென் அண்ணா உங்கள் பாராட்டுக்கு

    நேரத்தை நாமாக எடுத்து
    கொள்ள வேண்டும்
    இல்லா விடின் நேரம்
    எம்மை எடுத்து விடும்
    நீங்க பிறக்கும் போது கத்தினீங்களா.. கவிதை சொன்னீங்களா..?!!
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இனியவள் காதல் ஏக்கத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். கண்ணாடி முன் பல*மணித்துளிகள் நிற்பதுக்கான காரணம் இப்போது புரிந்தது. பாராட்டுக்கள்.
    உன்னை எனக்குப் பிடிக்கவில்லை
    உன்னையே வெறுப்பாயோ....
    நன்றி அமர்

    உன்னை நான் வெறுக்க
    முடியவில்லை அதனாலே
    என்னை நான் வெறுக்கின்றேன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •