கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல்
உனக்குள்ளும் பாசம் இருப்பதை
நானறிவேன் அன்பே.....
கோபத்தை வேலியாக்கி அன்பை
வெறுப்பாக மாற்றி கைதேர்ந்த
கலைஞரைப் போல் நடித்து
என்னை ஏமாற்றுகின்றாயே
உன்னால் மட்டும் எப்படி
முடிகின்றது இப்படி....
உன் கண்களில் தெறிக்கும் கோபம்
எனக்கு எனக்கு மட்டும் உன் மனதினை
படம் போட்டுக் காட்டுகின்றதெ வெட்ட
வெளி வானம் போல்....
உன் சுடு சொல்லால் கோபம்
வருவதற்கு பதில் ஏன் அன்பே இன்னும்
உன் மேலான காதலை அதிகரிக்கின்றதே....
அந்தி மாலை வேளையின் − உன்
நினைவோடு யன்னலோரம் நிற்கையில்
மின்னலாய் உன் விழிகள் என்னைத்
தீண்டிச் சென்றதைக் கண்டு என் மனம்
ஆகாயத்தில் துள்ளிக் குதித்த*தனை − நீ
அறிவாயா....
முன்பை விட இப்பொழுது கண்ணாடியில்
என்னை நான் அதிகம் பார்க்கின்றேன்
என்னுருவத்தில் உன்னுருவைக் காண்பதற்காய்....
ஆசையாய் பேணி வளர்த்த நிகவிரலை
வெட்டுகின்றேன் கரங்களை நீ தழுவும் போது
நிகம் கீறி உனக்கு வலிக்குமே என்றெண்ணி.....
உன் நினைவோடு சேர்ந்து − நான்
சிரிக்கையில் அதனைக் கண்ட தோழிகள்
உனக்கென்ன பயித்தியமா என கோபக்
குரலில் பேசுவது கூட என் காதில்
விழவில்லையே உன் குரலே காற்றாய்
என் காதில் விழுந்து கொண்டிருக்கின்றதே.....
உனக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச்
சேமிக்கின்றேன் யாருக்கும் தெரியாமல்
உனக்கு பிடிக்காதவைகளை நானும்
வெறுக்கின்றேன்
வெறுத்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றேன்
உனக்கு பிடிக்குமே என பிடித்த உணவுகளை
வெறுக்கின்றேன் உனக்கு பிடிக்காதே என...
இன்னும் எத்தனை நாட்களுக்கு − இந்த
இன்ப அவஸ்தை அன்பே வாய் திறந்து
கூறி விடு நான் உன்னைக் காதலிக்கின்றேன் என
உயிர் தவிக்கின்றதே உன் உயிரோடு கலக்க...
Bookmarks