Results 1 to 12 of 12

Thread: அன்னையவள் அன்புக்காக ஏங்கும் பேதையிவள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    அன்னையவள் அன்புக்காக ஏங்கும் பேதையிவள்

    ஈரைந்து மாதம்
    எனைச் சுமந்து
    பூமித் தாயின்
    முகம் பார்க்க
    வைத்த அன்னையே

    உன் முகம் காட்ட
    ஏனோ தவறி விட்டாய்

    தென்றல் என்னை தழுவும் போது
    அன்னையின் தழுவல் இதை
    விட எவ்வளவு மென்மையாய்
    இருக்கும் என மனம் தவித்தது
    கனவு தவிப்பை போக்கியது
    கனவில் கண்ட அரவணைப்பை
    உணர என் உடல் துடிக்கின்றது
    தாயே வந்து என்னை உன்
    அன்பால் அரவணைத்து விடு

    தந்தையினை பூமித்தாய்
    அரவணைதுக் கொண்டதும்
    பசியறியாமல் நாம்
    இருக்க உன்னை
    உருக்கி எமக்கு
    உணவளித்த தாயே

    என் பசி போக்கினாய்
    ஆடை அணிகலன்
    வாங்கித் தந்தாய்

    என் ஆசைகளை
    என்னைக் கேளாமலே
    நிறைவேறி வைத்த என் தெய்வமே

    உன்னை என் பதினாறாம்
    வயதில் பார்த்ததும்
    சிறு வயது முதல்
    உன் மேல் நான் தேக்கி
    வைத்த அன்பை உன் மீது
    காட்ட முயற்சித்தேன் ஆனால்
    உழைத்து உழைத்து
    ஓடாய்த் தேய்ந்த உன்
    முகத்தில் கண்ட இறுக்கத்தை
    கண்டதும் தேக்கி வைத்த அன்பு
    தேங்கிய படியே இருந்தது

    வறுமையை போக்கி
    பசியைப் போக்கிய
    தாயே ! உன்னால்
    என் மனதில் இருக்கும்
    அன்பு என்னும் வறுமையை
    போக்க முயற்ச்சிக்க வில்லையே

    எதிர் பார்புக்களோடு
    காத்திருக்கின்றேன் அன்னையே
    உன்னைச் சந்திக்க போகும்
    இன்னும் ஒரு நாளுக்காய்
    அன்பு கலந்த ஆவலோடு

    உன்னை முதல் முதல்
    பார்த்த அந்த இனிமையான
    நொடிப் பொழுது இன்னும்
    பசுமையாய் அழகான நாதமாய்
    இசைத்து உன் அடுத்த வருகைக்காய்
    என்னை உயிர்போடு காத்திருக்க
    வைத்திருக்கின்றது வந்து விடு
    அன்னையே உழைத்தது போதும்
    உன் அன்புக்காக ஏங்கும் உன்
    மகளின் ஆவலை பூர்த்தி செய்ய
    Last edited by இனியவள்; 03-07-2007 at 02:02 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஒவ்வொரு வரியிலும் பாசத்தின் ஏக்கம் தெரிகிறது.ஆழமான கருத்துள்ள கவிதை..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உறவு ..இருந்தும் இல்லாதது
    பாசம்.. பொங்கியும் பதுக்கி வைப்பது..
    ஒன்றை அனுபவித்து பின் இழந்து தவிப்பது..

    முக்கடல் கூடலாய் உணர்வுப்பிரவாகம் உங்கள் கவிதையில்..
    அப்பிரளயத்தில் வாசகனும் அடித்துச் செல்லப்பட்டுக்கொ......ண்.......டே.........


    பாராட்டுகள் இனியவள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    ஒவ்வொரு வரியிலும் பாசத்தின் ஏக்கம் தெரிகிறது.ஆழமான கருத்துள்ள கவிதை..
    நன்றி சூரியன் உங்கள் கருத்துக்கு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    உறவு ..இருந்தும் இல்லாதது
    பாசம்.. பொங்கியும் பதுக்கி வைப்பது..
    ஒன்றை அனுபவித்து பின் இழந்து தவிப்பது..

    முக்கடல் கூடலாய் உணர்வுப்பிரவாகம் உங்கள் கவிதையில்..
    அப்பிரளயத்தில் வாசகனும் அடித்துச் செல்லப்பட்டுக்கொ......ண்.......டே.........


    பாராட்டுகள் இனியவள்!
    நன்றி இளசு அண்ணா உங்கள் பாரட்டுக்கு
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்னையின் மகத்துவத்தை இனியவள் நீளமாகச் சொல்ல
    அதனை அண்ணன் சின்னதாக ஆழமாகச் சொல்ல
    அன்னையின் நினைவுகள் என் நெஞ்சில்.

    நன்றிகள் இருவருக்கும்.
    Last edited by அமரன்; 04-07-2007 at 08:35 AM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    இனியவள் அன்னையை பற்றி எழுதி அனைவருக்கும் இனியவளாகவே திகழ்கிறாய். மகளை பிரிந்து அன்னை எங்கு உழைத்து கொண்டிருகிறாள் என்று புரியவில்லை, ஆனால் வார்த்தையில் உள்ள பாசம் ஏக்கம் புரிந்தது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நன்றி அமர்

    நன்றி வாத்தியார்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    அம்மா என்றாலே அன்பு தான்.. அவர்கள் இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தம் குழந்தைகளை மறக்க மாட்டர்... அவரது அன்புக்கு ஈடு இணை இல்லை...

    கவிதை அருமை.. இனியவள்...
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    மிக சிரந்த படைப்பு....!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உறவுகளைப் பிரிந்திருக்கும் வலி இருக்கிறதே − அது கொடுமையிலும் கொடுமை இனியவள்!

    நான் அதனை நங்கு உணர்ந்தவன்.......

    என்ன செய்ய காலத்தின் சுழற்சியில் அவையும் சில பகுதிகள் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.


    உங்கள் அன்னையை நீங்கள் சந்திக்கும் தருணத்திற்காக எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உங்களுடன் சேர்ந்து கொள்ளட்டும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    இனியவளே! தாயின் ஏக்கம் கவி வரிகளில் ஆறா(ரணமா)ய் ஓடுகிறது...

    தாய் இருந்தும் பிரிந்திருப்பது மிக கடினமான ஒன்றுதான்...
    தாயவள் போல் ஒரு உற்றவர் நமக்கு யாரும் இருப்பதில்லை....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •