ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று எண்ணாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப்போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்...
ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
சுமையென்று எண்ணாமல்
சுகமென்று நினைத்தவள்
பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப்போல் காப்பவள்
பேணி வளர்த்திட்ட எம்மில்
பேரின்பம் அடைபவள்...
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
இந்த உலகில் தனியாய் பிறந்து எப்படி வளர்வேன் என்று கவலைப்பட்டுக்கேட்ட சிசுவுக்காக, இறைவன் படைத்த ஒரு தேவதைதான் தாய். அந்த தேவதைக்கு உங்கள் பாமாலை அருமை. பாராட்டுக்கள் தோழி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
முந்நூறு நாட்களில் எத்தனை எத்தனை துன்பங்கள் இனியவள்.?? சொல்லமுடியாத வேதனை... மூந்நூற்றியொன்றாம் நாள் மகிழ்ச்சியில் தொலைந்துபோகும் வேதனைகள்... அம்மா என்பது எளிதில் கிட்டாது. உயிரை உடலில் தாங்கி வேதனையை சிரிப்பில் தாங்கி அவர் படுத்தும்பாடு.... அப்பப்பா...
மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா./..
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks