Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: தலைப்பில்லா கவிதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    தலைப்பில்லா கவிதை

    Qவில் வளையாதவன் வீட்டில்
    அணைந்த நர்த்தனப் புகை
    மின்சார விளக்கில் வழிந்து கிடக்கிறது
    கம்பிகளின் வழியே
    வாய்களைப் பரிமாறியவன்
    பாதிவழியிலேயே அறுந்து கிடக்கிறான்
    எப்போதும் திறந்து கிடக்கும்
    எதிர்வீடுகள்
    கானல் புகையில் காணாமல் போகின்றன
    அவனை வாங்க வந்தவனும்
    இவனை விற்க வந்தவனும்
    தற்கொலை செய்துகொள்கிறார்கள்
    காசட்டைத் தலைகளை
    கொய்து எறிகிறார்கள் கணக்குள்ளவர்கள்
    மாய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு
    காயங்கள் போர்த்திக் கிடக்கிறது
    உயிர்க்கோளம்.

    இவை கண்டு
    மனநுண்மைகளில்
    பாதரசம் நிரம்பிய மனிதர்கள்
    சுய பிரஞ்ஞையற்ற ஆதிவாசியாகத்
    திரிகிறார்கள்
    இணையமற்ற காட்டில்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா "
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by Ravee View Post
    ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா "
    முதல் முறை ஆ..
    மறு முறை ஹா..
    அப்படித்தானே.. ஆஹா..

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    ஒருமுறைக்கு இருமுறை படித்த பின் சொன்ன வார்த்தை " ஆஹா "
    Quote Originally Posted by அமரன் View Post
    முதல் முறை ஆ..
    மறு முறை ஹா..
    அப்படித்தானே.. ஆஹா..
    ஆஹா ஆஹா.....

    யப்பா... இப்படியே ஓட்டிராதீங்கப்பா!!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வில்லு என்றாலே எனக்குப் பயம். அதிலும் விஜய் வில்லு பாத்த பிறகு அப்படி ஒரு பயம்.
    நீங்க என்னடான்னா வில்லு முன்னால சுழிச்சுக் காமிச்சு இருக்கீங்க. பயப்படாமல் என்ன செய்றது

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வில்லு என்றாலே எனக்குப் பயம். அதிலும் விஜய் வில்லு பாத்த பிறகு அப்படி ஒரு பயம்.
    நீங்க என்னடான்னா வில்லு முன்னால சுழிச்சுக் காமிச்சு இருக்கீங்க. பயப்படாமல் என்ன செய்றது
    தளபதியின் வில்லு வை விட மோசமாகவா இருக்கிறது கவிதை??
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    என்னைப் பொறுத்தவரை இக்கவிதை எனக்குக் காட்டுவது தன் வறியமுகத்தை.

    மின்சாரக்கட்டணம் கட்டப்படாமல் இருண்டுகிடக்கும் வீடு, தொலைபேசிக்கட்டணம் கட்டப்படாமல் அறுக்கப்பட்ட தொடர்பு, கேட்கப்படவிருக்கும் இரவல்களுக்காய் கதவடைக்கும் எதிர்வீடுகள், எதையும் விற்கவோ வாங்கவோ முடியாமல் திணறல், காசட்டை, கடனட்டையானபின் உண்டாகும் சிரமம், துண்டிக்கப்பட்ட இணையத்தொடர்பு, இத்தனையும் ஏற்று வாழும் ஒருவனது வாழ்க்கை ஒரு ஆதிவாசியின் வாழ்வுக்கு நிகரானது.

    இப்படிதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன். ஒன்றுமே புரியாமல் போவதை விடவும் கொஞ்சமாவது எனக்கும் புரிகிறதே என்றொரு சந்தோஷம்.

    ஆதவா, இப்படி ஒரு வியாக்கியானமா என்று வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    இப்படிதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன். ஒன்றுமே புரியாமல் போவதை விடவும் கொஞ்சமாவது எனக்கும் புரிகிறதே என்றொரு சந்தோஷம்.

    ஆதவா, இப்படி ஒரு வியாக்கியானமா என்று வருத்தப்படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    பார்ப்பவர்களுக்குப் பல கருத்துக்களைக் கொடுப்பதுதானே கவிதை? இதில் நீங்கள் நினைத்தது தவறென நான் சொல்லுவது என் கவிதையை கொலை செய்வதற்கு சமமானதாகும்.

    உங்களது ஆழ்ந்த வாசிப்பையும், திறமையையும் கண்டு வியக்கிறேன்.
    மிகவும் நன்றிங்க கீதம்

    உங்கள் அர்த்தம் அனைத்தும் சரியானதே வரிகளை சற்று இடம்மாற்றினால்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    உங்கள் அர்த்தம் அனைத்தும் சரியானதே வரிகளை சற்று இடம்மாற்றினால்..
    அப்பாடி கவிதை எனக்கும் புரிஞ்சிடுச்சு
    அதவா ரொம்ப கஷ்டமா இருந்தது

    நல்லக் கவிதை
    நன்றி ஆதவா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இன்றைய சூழலில் பயன்படுத்து பல விஷயங்கள் படிமங்களாகி உலவுகின்ரன இக்கவிதைக்குள், அதற்கு தனி சபாஷ் ஆதவா..

    Qவில் வளையாதவன்

    கம்பிகளின் வழியே
    வாய்களைப் பரிமாறியவன்

    கானல் புகையில் காணாமல் போகின்றன

    சுய பிரஞ்ஞையற்ற ஆதிவாசியாகத்
    திரிகிறார்கள்
    இணையமற்ற காட்டில்

    இவை நான் மிக ரசித்த வரிகள்..

    பாராட்டுக்கள்
    அன்புடன் ஆதி



  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நிவாஸ் மற்றும் ஆதனுக்கு நன்றிகள்!!

    @ ஆதன். (பழக்க தோஷத்தில ஆதவன்னு டைப் அடிக்க வருது.)
    ரசித்தமைக்கு நன்றி!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    உங்களுக்கே உரிய சொல்லாடலில் அற்புதமான கவிதை ஆதவா... வேறென்ன சொல்ல... பிரமிப்பாக இருக்கிறது...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •