Qவில் வளையாதவன் வீட்டில்
அணைந்த நர்த்தனப் புகை
மின்சார விளக்கில் வழிந்து கிடக்கிறது
கம்பிகளின் வழியே
வாய்களைப் பரிமாறியவன்
பாதிவழியிலேயே அறுந்து கிடக்கிறான்
எப்போதும் திறந்து கிடக்கும்
எதிர்வீடுகள்
கானல் புகையில் காணாமல் போகின்றன
அவனை வாங்க வந்தவனும்
இவனை விற்க வந்தவனும்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்
காசட்டைத் தலைகளை
கொய்து எறிகிறார்கள் கணக்குள்ளவர்கள்
மாய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு
காயங்கள் போர்த்திக் கிடக்கிறது
உயிர்க்கோளம்.
இவை கண்டு
மனநுண்மைகளில்
பாதரசம் நிரம்பிய மனிதர்கள்
சுய பிரஞ்ஞையற்ற ஆதிவாசியாகத்
திரிகிறார்கள்
இணையமற்ற காட்டில்
Bookmarks