Results 1 to 8 of 8

Thread: அவளின் முதல் ஸ்பரிசம்!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    அவளின் முதல் ஸ்பரிசம்!

    உன் முகத்தில் யார் இப்படி கோவைப்பழத்தை ஒட்டி வைத்தது?
    ஓ! இது என்மேல் கோபத்தில் இருக்கும் உன் மூக்கா?

    உன் கொடிகயிற்றில் தொங்குவது பூஞ்சோலையா?
    ஓ! அது நீ கழட்டி போட்ட கொடுத்து வைத்த சேலையா?

    நீ திரும்பும் போது உன் கழுத்தையும்
    நீ சாயும் போது உன் கன்னத்தையும் தடவி பார்க்கும்
    யார் அந்த களவானி?
    ஓ! அது உன் காது கம்மலா?

    "இவள் உனக்கு தான்" என்று பிரம்மன் எனக்காக குத்தி அனுப்பிய முத்திரையின் மிச்சமா அது?
    ஓ! அது என்னை மடக்கிய உன் கையில் இருக்கும் மச்சமா?

    உன் விஷம விழிகள்! அதில் விளக்கு பார்வை!
    உன் அமைதி இதழ்கள்! அதில் அடாவடி வார்த்தைகள்!
    உன் மெலிந்த விரல்கள்! அதில் உயிர் எடுக்கும் கிள்ளல்கள்!
    எப்படி உன் வீட்டில் மட்டும் பூக்கள் துப்பாக்கி சுடுகின்றன?
    ஏன் இப்படி அராஜக செயல் செய்யும் உனது உடல் பாகங்கள் அனைத்தும்
    அடக்கமான தோற்றம் கொண்டு, என்னை ஏமாற்றுகின்றன?
    என்னை ஏன் உனக்காக மாற்றுகின்றன?

    நீ என்னை தொட்டு விட்டு அமைதியாக தான் இருக்கிறாய்!
    ஆனால்,
    நெற்றி வேர்த்து
    இதயம் படபடத்து
    உடல் வெடவெடத்து
    வாய் வார்த்தை அடைத்து
    என்னுள் மட்டும் ஏன் இப்படி கலவரம்?

    இதுவரை கவிதையை எழுதி தான் இருக்கிறேன்!
    இன்று தான் ஒரு கவிதையை தொடுகிறேன்!

    இதுவரை கவிதையை வாசித்து இருக்கிறேன்!
    இன்று தான் ஒரு கவிதையை சுவாசித்து இருக்கிறேன்!

    இதுவரை பூக்களோடு நான் மட்டும் தான் பேசி இருக்கிறேன்!
    இன்று தான் பூவும் பேச, நானும் பேசி இருக்கிறேன்!

    இதுவரை பூக்களால் மனசு வழுக்கி இருக்கிறேன்!
    இன்று தான் பூவோடு கை குலுக்கி இருக்கிறேன்!

    உன் கை பிடித்த நொடி,
    என்னில் மெல்லிய மின்சார அடி!

    உம் மெல்லின தீண்டல்,
    என்னில் வல்லின தீ மூண்டல்!

    உன் கன்ன இளம்சிவப்பு!
    என்னில் ரத்தக் கொதிப்பு!

    உன் துள்ளல் பேச்சு!
    எனக்கு உயிர் நின்று போச்சு!

    உன் குயில் சிரிப்பு!
    மற்ற பெண்களின் ஆணவம் மரிப்பு!

    ஆக மொத்தம் உன் தென்றல் ஸ்பரிசம்,
    என்னுள் வாழும், அது இன்னும் ஆயிரம் வருஷம்!
    Last edited by lenram80; 21-07-2007 at 02:04 AM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    அழகு..அழகு..
    சந்தங்கள் அசத்தல்..

    வித்தியாசமான வரிகளாய் வலம் வரும் உங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்..
    சுகுணா ஆனந்தன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    லெனின் நெய்யாய்
    வழுக்கிச் செல்கின்றது
    எங்கள் மனங்களில்
    உங்கள் கவிதையெனும்
    பொக்கிஷம் வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    லெனின் பிரமாதம். உருகி உருகி காதல் செய்யும் கவிதையின் நாயகன் கொடுத்து வைத்தவன். வரிவரியாய் ரசிக்க வைத்த காதல் சொட்டும் கவித்தேன். பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ராம்...அழகான வர்ணனைகள்..காதல் ரசம் கொட்டும் வரிகள். முதல் ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்பதை அப்படியே உணர வைக்கின்றது. எல்லை மீறாத வார்த்தைகள். கலக்கல் கவிதை. பாராட்டுக்கள்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    லெனின் ரொம்பவே இரசித்தேன் உங்கள் கவிதையை..........
    முக்கியமா.............
    Quote Originally Posted by lenram80 View Post
    இதுவரை கவிதையை எழுதி தான் இருக்கிறேன்!
    இன்று தான் ஒரு கவிதையை தொடுகிறேன்!
    இதுவரை கவிதையை வாசித்து இருக்கிறேன்!
    இன்று தான் ஒரு கவிதையை சுவாசித்து இருக்கிறேன்!
    மிக ரொம்பவே இரசித்தேன் இந்த வரிகளை...........

    பாராட்டுக்கள் லெனின்..........!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    15 Aug 2006
    Posts
    159
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    ஆகா அருமையான ரசனை நன்பரே உங்கலுக்கு கவிதை மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கல்

    அன்புடன்
    லதுஜா

  8. #8
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி சுகுணா, இனியவள், சிவாஜி, அமரன், ஓவியன் & லதுஜா
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •