உன் முகத்தில் யார் இப்படி கோவைப்பழத்தை ஒட்டி வைத்தது?
ஓ! இது என்மேல் கோபத்தில் இருக்கும் உன் மூக்கா?
உன் கொடிகயிற்றில் தொங்குவது பூஞ்சோலையா?
ஓ! அது நீ கழட்டி போட்ட கொடுத்து வைத்த சேலையா?
நீ திரும்பும் போது உன் கழுத்தையும்
நீ சாயும் போது உன் கன்னத்தையும் தடவி பார்க்கும்
யார் அந்த களவானி?
ஓ! அது உன் காது கம்மலா?
"இவள் உனக்கு தான்" என்று பிரம்மன் எனக்காக குத்தி அனுப்பிய முத்திரையின் மிச்சமா அது?
ஓ! அது என்னை மடக்கிய உன் கையில் இருக்கும் மச்சமா?
உன் விஷம விழிகள்! அதில் விளக்கு பார்வை!
உன் அமைதி இதழ்கள்! அதில் அடாவடி வார்த்தைகள்!
உன் மெலிந்த விரல்கள்! அதில் உயிர் எடுக்கும் கிள்ளல்கள்!
எப்படி உன் வீட்டில் மட்டும் பூக்கள் துப்பாக்கி சுடுகின்றன?
ஏன் இப்படி அராஜக செயல் செய்யும் உனது உடல் பாகங்கள் அனைத்தும்
அடக்கமான தோற்றம் கொண்டு, என்னை ஏமாற்றுகின்றன?
என்னை ஏன் உனக்காக மாற்றுகின்றன?
நீ என்னை தொட்டு விட்டு அமைதியாக தான் இருக்கிறாய்!
ஆனால்,
நெற்றி வேர்த்து
இதயம் படபடத்து
உடல் வெடவெடத்து
வாய் வார்த்தை அடைத்து
என்னுள் மட்டும் ஏன் இப்படி கலவரம்?
இதுவரை கவிதையை எழுதி தான் இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை தொடுகிறேன்!
இதுவரை கவிதையை வாசித்து இருக்கிறேன்!
இன்று தான் ஒரு கவிதையை சுவாசித்து இருக்கிறேன்!
இதுவரை பூக்களோடு நான் மட்டும் தான் பேசி இருக்கிறேன்!
இன்று தான் பூவும் பேச, நானும் பேசி இருக்கிறேன்!
இதுவரை பூக்களால் மனசு வழுக்கி இருக்கிறேன்!
இன்று தான் பூவோடு கை குலுக்கி இருக்கிறேன்!
உன் கை பிடித்த நொடி,
என்னில் மெல்லிய மின்சார அடி!
உம் மெல்லின தீண்டல்,
என்னில் வல்லின தீ மூண்டல்!
உன் கன்ன இளம்சிவப்பு!
என்னில் ரத்தக் கொதிப்பு!
உன் துள்ளல் பேச்சு!
எனக்கு உயிர் நின்று போச்சு!
உன் குயில் சிரிப்பு!
மற்ற பெண்களின் ஆணவம் மரிப்பு!
ஆக மொத்தம் உன் தென்றல் ஸ்பரிசம்,
என்னுள் வாழும், அது இன்னும் ஆயிரம் வருஷம்!
Bookmarks