இருமனம் இணையும் போது
இதயத்தில் அன்பைக் கணித்திட்ட
உன் இதயம்
திருமணம் என்று வரும் பொழுது
மட்டும் ஏனோ பணம் என்னும்
காகிதத்தை அளவிட்டு அழித்து
விடுகின்றது காதலை....
இருமனம் இணையும் போது
இதயத்தில் அன்பைக் கணித்திட்ட
உன் இதயம்
திருமணம் என்று வரும் பொழுது
மட்டும் ஏனோ பணம் என்னும்
காகிதத்தை அளவிட்டு அழித்து
விடுகின்றது காதலை....
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அதுதான் இனியவள் பணம் படுத்தும் பாடு என்பது.காதல் மட்டுமே இருக்கும் இதயம் பணம் பார்ப்பதில்லை....காதல் மட்டமாய் இருக்கும் இதயம் மனம் பார்ப்பதில்லை.
வாழ்த்துக்கள் இனியவள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மனதில் பிறப்பெடுத்த,
காதலை...
பணத்தில் கணக்கெடுக்கின்றாயே...
விவாகம் செய்யப்போகின்றாயா?
அல்லது,
விபச்சாரம் செய்யப்போகின்றாயா..?
இந்த மாறவேண்டிய நிலையால்...
உணமைக்காதல் கூட, வெட்கித்தலை குனியும் நிலையில்...
பாராட்டுக்கள் இனியவள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாழ்த்துக்கள் இனியா... இங்கே அழிந்துவிடுவது காதல் மட்டுமல்ல.. அதன் புனிதமும்தான்..!
Last edited by சுகந்தப்ரீதன்; 01-10-2007 at 03:16 AM.
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
காதலை பணம் அழித்துவிடுகிறது. சிறந்த அழிப்பான் பணம் என்கறீர்கள். ஆக்கும் சக்தி அழிவுசக்தி இரண்டும் கொண்டது பணம்
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
பணம் இருந்தால் மட்டுமே கதால் வெற்றி பெறாது.
நல்ல மணம் இருந்தாலும் வெற்றி பெறும்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks