Results 1 to 12 of 12

Thread: நாணயம்

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    நாணயம்

    இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெலினாவிடம் பத்து ருயாய் நோட்டை கொடுத்து பக்கத்து கடைக்கு சென்று வாசிங் சோப்பும் ஷாம்புவும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ராதிகா.

    ``சரிம்மா!’’ என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள் ஜெலினா. கடைக்காரரிடம் வாசிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ருபாய் நோட்டை நீட்டினாள்.

    ``மொத்தம் ஒன்பது ரூபாய் ஆச்சு மீதி ஒரு ருபாய்க்கு சில்லரை இல்லை அதுக்கு ஒரு சாக்லெட்டு வாங்கிக்க!’’ என்றார் கடைக்காரர்.

    ``எனக்கு சாக்லெட் வேண்டாம், பாக்கி ஒரு ரூபா தான் வேணும்!’’ அடம் பிடித்தாள் ஜெலினா.

    ``ஏம்மா சாக்லெட் வேண்டாங்கறே, சாக்லெட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமுன்னு உன் அம்மா சொன்னாங்களா? ஆச்சர்யமாய் கேட்டார் கடைக்காரர்.

    ``சாக்லெட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ உங்ககிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க, நான் தான் வேணுமுன்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கிட்டேன்னு என்ன தப்பா நினைப்பாங்க.!”” ஜெலினா சொல்லச்சொல்ல இந்த சின்ன வயதில் அவளுக்கிருக்கும் நாணயத்தை பாராட்டியபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ருபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்...
    நான் மலர்கள் என்று நினைத்து முட்களில் நடந்தவன்.
    முட்களில் நடந்ததால் மனம் கிழிந்து போனவன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2


    மிக அருமை

    பாராட்டுகள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இக்கதையில் ஜெலினாவின் நாணயத்தை விடவும் அவளின் பயமும்,
    தாயின் பிள்ளை மீதான அவநம்பிக்கையுமே தெரிகின்றது.

    நாணயத்துக்காக நா நயத்தை நான் விடமாட்டேன்.
    சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்.
    Last edited by அக்னி; 23-07-2011 at 09:39 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by அக்னி View Post
    இக்கதையில் ஜெலினாவின் நாணயத்தை விடவும் அவளின் பயமும்,
    தாயின் பிள்ளை மீதான அவநம்பிக்கையுமே தெரிகின்றது.

    நாணயத்துக்காக நா நயத்தைய் நான் விடமாட்டேன்.
    சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்.
    அட அக்னி , பால்ராசய்யா என் பொண்ணை பார்த்து கதை எழுதினார் போல .... அம்மாவிடம் பயம் இருக்கும் .... அவள் அடிப்பதால் அல்ல .... அவள் அரவணைப்பு கிடைக்காமல் போய் விடும் என்று ... என் பெண்ணுக்கு அவள் அம்மாதான் உலகம் ... தப்பு செய்தால் அம்மா பேசமாட்டாள் என்றால் அடி வாங்கியதை விட தேம்பி அழுவாள் ... இந்த பாசம் நல்லதா கேட்டதா என்று என்னால் இன்றும் முடிவு சொல்ல முடியாதது. சிறிய கதையில் குழந்தையின் உணர்வுகள் தெளிவாக .... வாழ்த்துக்கள் அய்யா
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    புதியவர் பண்பட்டவர் redblack's Avatar
    Join Date
    10 Apr 2009
    Location
    சிவகாசி
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    13,937
    Downloads
    8
    Uploads
    0
    கடைசியில் நாணயம்தான் கிடைத்துவிட்டதே. அட மீதி உள்ள ஒரு ரூபாயத்தான் சொன்னேன்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சிறியகதை பெரிய செய்தி. வாழ்த்துக்கள் ஐ.பா.ரா அவர்களே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அக்னிப் பழமும் ரவீண்ணாவின் ரசமும் கதைக்கு மேலும் சுவையூட்டுகின்றன.

    பிள்ளை இனிப்பை வாங்கிவிட்டு அம்மாவிடம் உண்மையைச் சொல்லி இருக்க வேணும். அம்மாவும் அதை கண் திறந்து நம்பி இருக்க வேணும். அதனால் ஏற்படும் பிணைப்பு வலுவானது. வளமானது.

    ஒற்றை நாணயம் ஜெலினாவின் நா நயத்தின் உதவியுடன் கடைக்காரரின் நாணயத்தை கண்டு பிடித்திருக்கிறது

    பாராட்டுகள் ஐபாரா

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஒரு சிறுவிதைக்குள் அடங்கும் பெருவிருட்சம் போல் இக்குறுங்கதை சொல்லும் உளவியற்சிந்தனை மிகப்பெரியது. மனமார்ந்த பாராட்டுகள்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by Ravee View Post
    அட அக்னி , பால்ராசய்யா என் பொண்ணை பார்த்து கதை எழுதினார் போல .... அம்மாவிடம் பயம் இருக்கும் .... அவள் அடிப்பதால் அல்ல .... அவள் அரவணைப்பு கிடைக்காமல் போய் விடும் என்று ... என் பெண்ணுக்கு அவள் அம்மாதான் உலகம் ... தப்பு செய்தால் அம்மா பேசமாட்டாள் என்றால் அடி வாங்கியதை விட தேம்பி அழுவாள் ... இந்த பாசம் நல்லதா கேட்டதா என்று என்னால் இன்றும் முடிவு சொல்ல முடியாதது. சிறிய கதையில் குழந்தையின் உணர்வுகள் தெளிவாக .... வாழ்த்துக்கள் அய்யா
    இங்க அதை விட மோசம் இரவி... சிரிச்சிகிட்டே எத்தனை அடிச்சாலும் பிரச்சனை இல்லை.. கோவமா அல்லது சோகமா ஒரே ஒரு பார்வை பார்த்தா அவங்க அழுகை ஸ்டார்ட்...

    ஒரு வேளை அடியை அவாய்ட் பண்ண ஈஸியான டெக்னிக்கை அவங்க கத்துகிட்டாய்ங்களோ?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல கருத்துள்ள கதை. ஆனாலும் அதை விட நண்பரின் இந்த கருத்து மிகவும் பொருத்தமாக உள்ளது.

    Quote Originally Posted by அமரன் View Post
    பிள்ளை இனிப்பை வாங்கிவிட்டு அம்மாவிடம் உண்மையைச் சொல்லி இருக்க வேணும். அம்மாவும் அதை கண் திறந்து நம்பி இருக்க வேணும். அதனால் ஏற்படும் பிணைப்பு வலுவானது. வளமானது.
    பாராட்டுக்கள்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    ஜெலினாவைப்போல எல்லாப்பிள்ளைகளும் இருந்து விட்டால்.............
    நல்ல கதை!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  12. #12
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    ஆஹா ...இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு சிந்தனையா...பாராட்டவேண்டும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •