Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 13 to 24 of 71

Thread: ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)

                  
   
   
  1. #13
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்க சும்மா போங்கண்ணா... நீங்கள் இப்படிச்சொன்னால் ஞானிக்கு என்ன மரியாதை.... எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கார்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #14
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    கோடி கோடியாக செலவு செய்து ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை விநியோகஸ்தர்களும் கோடி கோடியாக பணம் கொடுத்து வாங்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லையென்றால் என்ன செய்வது. மன்னிப்பு கேட்டால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் பணம் போட்டவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்று பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    ரஜினி பெங்களூரிலிருந்து வந்தார் என்ற காரணத்தால் காவிரி பிரச்சனையில் அவரை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசச்சொல்லிவிட்டு பின்னர் கர்நாடகா பிரச்சனையை கிளப்பும்பொழுது ரஜினியை தனியாக விட்டுவிடுகிறார்கள். அவர் என்னதான் செய்யமுடியும்.

    ஒரு நடிகரை நடிகராகவே விட்டுவிடுங்கள். இந்த பிரச்சனையே யாருக்கும் வராது.


    விஜயை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.
    அவர் நடிகராக மட்டும் இருந்திருக்கலாமே...

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ஞானியின் அதிகப்பிரசங்கித்தனம் ஊரறிந்த விஷயம். அவர் வாராவாரம் ஓ பக்கங்களில் "யார் செய்வது சரி, தவறு.? யார் என்ன செய்ய வேண்டும்..? என்று வியாக்கியானம் சொல்வது ரொம்பவே ஓ(வர்)..!! அதுக்காக அவர் கொடுக்கும் பூச்செண்டை வைத்தே அவருக்கு "பூஜை" நடத்தலாம். ரஜினி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன பத்திரிக்கையில் சொல்ல இவர் யார்..? விரைவில் பிரபலம் ஆவதற்கு பிரபலமானவர்களை விமர்சிப்பது சிறந்த யுக்தி..!!
    அன்புடன்,
    இதயம்

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    ரஜினி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன பத்திரிக்கையில் சொல்ல இவர் யார்..? விரைவில் பிரபலம் ஆவதற்கு பிரபலமானவர்களை விமர்சிப்பது சிறந்த யுக்தி..!!

    சபாஷ் இதயம்..!

    ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்..!

    பிரபலமானவர்களை சர்ச்சைக்கு இழுத்து தானும் பிரபலமாகும் ஆசை நாணிக்கு நிறையவே உண்டு..!

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
    மறத்தமிழன்
    _____________________________________
    ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
    ஆள நினைப்பதில் என்ன பிழை...!
    www.enrenrumthamil.blogspot.com

  6. #18
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    //////////////////////
    ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
    //////////////////////////////////////////////

    சரியா சொன்னீங்க
    தவறுகளை சுட்டிகாட்டினால் கோபம் கொள்வாது வீண்
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by கிஷோர் View Post
    இதில் ஏதாவது உள்குத்து எம் மன்றுக்கும் இருக்குதோ?
    என்ன கிஷோர்...

    கும்மாங் குத்து வாங்கி கொடுத்திடு"வீங்க" போல....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #20
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மறத்தமிழன் View Post
    ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
    ஒரு நடிகன் என்ற தகுதியை விடுத்து அவர் செய்த தவறுகளை சற்றே கூறுங்களேன்... யாரும் நியாயப்படுத்தவில்லை... தேவையற்ற ஒருசதத்துக்கும் பிரயோசனமில்லாத பக்கச்சார்பான விமர்சனங்களால் இன்னொருவருக்கு தவறான விடையம் சென்றடையக்கூடாது...

    இங்கே பிரச்சனை இதுதான்... திரைப்படங்களில் கூறும் வசனங்களை வைத்துக்கொண்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க நீங்கள் யார்??? குறை சொல்வது யார்????

    வாதம் என்று வந்தாலே பொதுவாகத்தான் இருக்கவேண்டும். எல்லோரும் ஒரே விடையத்தை ஆமோதித்து விவாதித்தால் அதற்கு பெயர் விவாதமா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஒரு நடிகன் என்ற தகுதியை விடுத்து அவர் செய்த தவறுகளை சற்றே கூறுங்களேன்... யாரும் நியாயப்படுத்தவில்லை... தேவையற்ற ஒருசதத்துக்கும் பிரயோசனமில்லாத பக்கச்சார்பான விமர்சனங்களால் இன்னொருவருக்கு தவறான விடையம் சென்றடையக்கூடாது...

    இங்கே பிரச்சனை இதுதான்... திரைப்படங்களில் கூறும் வசனங்களை வைத்துக்கொண்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க நீங்கள் யார்??? குறை சொல்வது யார்????

    வாதம் என்று வந்தாலே பொதுவாகத்தான் இருக்கவேண்டும். எல்லோரும் ஒரே விடையத்தை ஆமோதித்து விவாதித்தால் அதற்கு பெயர் விவாதமா???
    ஆனால் அந்த வசனங்கள் திரைப்படங்களையும் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும்போது பேசாது இருந்துவிட்டு தற்போது சில பிரச்சினைகள் வரும்போதுமட்டும் அவை சாதாரண சினிமா வசன்ங்களே என்று இவ்வளவு காலம் களித்து கூறுவதன் நோக்கம்தானென்ன?
    பொதுவாழ்க்கை சம்பந்தமாக அவர் குரல் கொடுக்கும்போது அவர் சம்பந்தமாக பொதுமகனாய் எவரும் விமர்சிக்கலாம்தானே...! மறத்தமிழன் சொன்னதுபோல, ஞானி சொன்ன குற்றசாட்டுகளிற்கு சரியான விளக்கத்தை முன்வைத்துவிட்டு பின் ஞானிஜின் தகுதிகள்பற்றி விவாதிக்கலாம்.
    எல்லோருக்கும் ஒத்த கருத்துள்ள விடயங்களில் எல்லோரும் ஒத்த கருத்தைத்தனே முன்வைப்பார்கள். விவாதிக்க வேண்டுமெபதற்காகா விதண்டாவதம் பண்ண முடியுமா...?
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by தீபன் View Post
    ஆனால் அந்த வசனங்கள் திரைப்படங்களையும் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும்போது பேசாது இருந்துவிட்டு தற்போது சில பிரச்சினைகள் வரும்போதுமட்டும் அவை சாதாரண சினிமா வசன்ங்களே என்று இவ்வளவு காலம் களித்து கூறுவதன் நோக்கம்தானென்ன?
    பொதுவாழ்க்கை சம்பந்தமாக அவர் குரல் கொடுக்கும்போது அவர் சம்பந்தமாக பொதுமகனாய் எவரும் விமர்சிக்கலாம்தானே...! மறத்தமிழன் சொன்னதுபோல, ஞானி சொன்ன குற்றசாட்டுகளிற்கு சரியான விளக்கத்தை முன்வைத்துவிட்டு பின் ஞானிஜின் தகுதிகள்பற்றி விவாதிக்கலாம்.
    எல்லோருக்கும் ஒத்த கருத்துள்ள விடயங்களில் எல்லோரும் ஒத்த கருத்தைத்தனே முன்வைப்பார்கள். விவாதிக்க வேண்டுமெபதற்காகா விதண்டாவதம் பண்ண முடியுமா...?
    முதலாவது சிகப்புக்கு வருகிறேன். திரைப்படங்களையும் தாண்டி செல்வாக்கு செலுத்தியதற்கு யார் காரணம்? ரஜினியின் நடிப்பு என்ற காரணமா?? அல்லது வேறு ஏதாவதா???

    அந்த வசனங்களால் மக்கள் தீமையை அந்தக்காலத்தில் அடைந்திருந்தால் அந்தவசனங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்குமா??? உங்களுக்கு நன்மை கிடைக்கிறது என்பதற்காக தலைக்குமேல் தூக்கி வைத்துவிட்டு அனுகூலம் கிடைக்கவில்லை என்றவுடன் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று எத்தணிப்பது உங்களின் சுயநலம் என்று நான் சொல்லலாம் தானே....

    ரஜினி என்பவராக இல்லாது சிவாஜிராவ் ஆக எவ்வாறு ஒரு சமூகத்தினை அவர் ஆக்கிரமித்துள்ளார். அரசியல் கூட்டங்கள் உண்ணாவிரதங்கள் என நடந்தபோது அவர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த வசனங்களை வைத்து ஞர்னி கூறியிருந்தால் நிச்சயம் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். திரைப்படங்களில் வந்த வரிகளை வைத்து திரைப்படக்கண்ணோட்டத்தில் விமர்சிக்க வேண்டும். அரசியல் பொதுக்கண்ணோட்டத்தில் அல்ல... மாம்பழத்தை சுவைத்துவிட்டு வாழைப்பழம் சரியில்லை என்று சொல்வது தான் உங்களின் விமர்சனம் என்றால் அதற்கு விமர்சனம் என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது தமிழ் ஆர்வலர்கள் நிர்ணயிக்க வேண்டும்....

    இரண்டாவதாக.... இங்கு யாரும் விதண்டாவாதம் செய்வதாக நான் உணரவில்லை. மாறாக உங்களுக்கு நான் செய்வது விதண்டாவாதமாக பட்டால் நேரடியாக கூறலாம்.....

    1 + 1 = 3 என்று அனைவரும் கூறினால் எதற்காக வாதிட வேண்டும். அவசியம் தான் என்ன...?

    ஞானியின் தகுதியை யாரும் குறைகூறவில்லை. ஞானி முன்வைத்த காரணிகள் விமர்சனத்திற்கு தகுதியான தரவுகள் அல்ல....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நாணியின் செயல்பாடுகளுக்கு விளக்கம் தேவை எனில் வலைப்பூக்கள் பக்கமாக போய்ப்பாருங்கள். அல்லது கூகிளாண்டவர் துணையை நாடுங்கள்.

    அவருடைய வரலாறும், அடிக்கடி தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போக்கும் உங்களுக்கு தெரிய வரலாம்.


  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அன்பு,
    ஞானியின் விமர்சனம் தவறு என்பதால் ரஜினி செய்வதெல்லாம் சரி என்றோ, அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ ஆகிவிடாது. ஞானிக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதியில்லை என்பது தான் இத்திரியை பொறுத்தவரை என் நிலைப்பாடு. ரஜினி பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களில் நான் நிறைய முரண்படுகிறேன். அதற்கு பதிலளிக்கலாம் என்றால் என் ப்ராக்ஸி பிரச்சினை ஒத்துழைக்க மறுக்கிறது.
    அன்புடன்,
    இதயம்

Page 2 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •