நீங்க சும்மா போங்கண்ணா... நீங்கள் இப்படிச்சொன்னால் ஞானிக்கு என்ன மரியாதை.... எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கார்...
நீங்க சும்மா போங்கண்ணா... நீங்கள் இப்படிச்சொன்னால் ஞானிக்கு என்ன மரியாதை.... எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கார்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஞானியின் அதிகப்பிரசங்கித்தனம் ஊரறிந்த விஷயம். அவர் வாராவாரம் ஓ பக்கங்களில் "யார் செய்வது சரி, தவறு.? யார் என்ன செய்ய வேண்டும்..? என்று வியாக்கியானம் சொல்வது ரொம்பவே ஓ(வர்)..!! அதுக்காக அவர் கொடுக்கும் பூச்செண்டை வைத்தே அவருக்கு "பூஜை" நடத்தலாம். ரஜினி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வெகுஜன பத்திரிக்கையில் சொல்ல இவர் யார்..? விரைவில் பிரபலம் ஆவதற்கு பிரபலமானவர்களை விமர்சிப்பது சிறந்த யுக்தி..!!
அன்புடன்,
இதயம்
ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
மறத்தமிழன்
_____________________________________
ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
ஆள நினைப்பதில் என்ன பிழை...!
www.enrenrumthamil.blogspot.com
//////////////////////
ஞானி எதற்காக சொன்னாரென்பதை விட்டு விடுவோம். அவர் சொன்னதில் என்ன தவறுகள்? அதற்கென்ன விளக்கங்கள்? அதை சொல்லி ரஜினியை நியாயப்படுத்தினால் அது நியாயம். அதை கண்டுகொள்ளாமல், குறை சொல்வது நியாயமில்லை என்ற பொதுவான வாதத்தை மட்டும் முன்வைப்பதில் எந்த நியாயமுமில்லை.
//////////////////////////////////////////////
சரியா சொன்னீங்க
தவறுகளை சுட்டிகாட்டினால் கோபம் கொள்வாது வீண்
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
ஒரு நடிகன் என்ற தகுதியை விடுத்து அவர் செய்த தவறுகளை சற்றே கூறுங்களேன்... யாரும் நியாயப்படுத்தவில்லை... தேவையற்ற ஒருசதத்துக்கும் பிரயோசனமில்லாத பக்கச்சார்பான விமர்சனங்களால் இன்னொருவருக்கு தவறான விடையம் சென்றடையக்கூடாது...
இங்கே பிரச்சனை இதுதான்... திரைப்படங்களில் கூறும் வசனங்களை வைத்துக்கொண்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நிர்ணயிக்க நீங்கள் யார்??? குறை சொல்வது யார்????
வாதம் என்று வந்தாலே பொதுவாகத்தான் இருக்கவேண்டும். எல்லோரும் ஒரே விடையத்தை ஆமோதித்து விவாதித்தால் அதற்கு பெயர் விவாதமா???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ஆனால் அந்த வசனங்கள் திரைப்படங்களையும் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும்போது பேசாது இருந்துவிட்டு தற்போது சில பிரச்சினைகள் வரும்போதுமட்டும் அவை சாதாரண சினிமா வசன்ங்களே என்று இவ்வளவு காலம் களித்து கூறுவதன் நோக்கம்தானென்ன?
பொதுவாழ்க்கை சம்பந்தமாக அவர் குரல் கொடுக்கும்போது அவர் சம்பந்தமாக பொதுமகனாய் எவரும் விமர்சிக்கலாம்தானே...! மறத்தமிழன் சொன்னதுபோல, ஞானி சொன்ன குற்றசாட்டுகளிற்கு சரியான விளக்கத்தை முன்வைத்துவிட்டு பின் ஞானிஜின் தகுதிகள்பற்றி விவாதிக்கலாம்.
எல்லோருக்கும் ஒத்த கருத்துள்ள விடயங்களில் எல்லோரும் ஒத்த கருத்தைத்தனே முன்வைப்பார்கள். விவாதிக்க வேண்டுமெபதற்காகா விதண்டாவதம் பண்ண முடியுமா...?
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
முதலாவது சிகப்புக்கு வருகிறேன். திரைப்படங்களையும் தாண்டி செல்வாக்கு செலுத்தியதற்கு யார் காரணம்? ரஜினியின் நடிப்பு என்ற காரணமா?? அல்லது வேறு ஏதாவதா???
அந்த வசனங்களால் மக்கள் தீமையை அந்தக்காலத்தில் அடைந்திருந்தால் அந்தவசனங்கள் செல்வாக்கு செலுத்தியிருக்குமா??? உங்களுக்கு நன்மை கிடைக்கிறது என்பதற்காக தலைக்குமேல் தூக்கி வைத்துவிட்டு அனுகூலம் கிடைக்கவில்லை என்றவுடன் கீழே போட்டு மிதிக்கவேண்டும் என்று எத்தணிப்பது உங்களின் சுயநலம் என்று நான் சொல்லலாம் தானே....
ரஜினி என்பவராக இல்லாது சிவாஜிராவ் ஆக எவ்வாறு ஒரு சமூகத்தினை அவர் ஆக்கிரமித்துள்ளார். அரசியல் கூட்டங்கள் உண்ணாவிரதங்கள் என நடந்தபோது அவர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த வசனங்களை வைத்து ஞர்னி கூறியிருந்தால் நிச்சயம் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். திரைப்படங்களில் வந்த வரிகளை வைத்து திரைப்படக்கண்ணோட்டத்தில் விமர்சிக்க வேண்டும். அரசியல் பொதுக்கண்ணோட்டத்தில் அல்ல... மாம்பழத்தை சுவைத்துவிட்டு வாழைப்பழம் சரியில்லை என்று சொல்வது தான் உங்களின் விமர்சனம் என்றால் அதற்கு விமர்சனம் என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது தமிழ் ஆர்வலர்கள் நிர்ணயிக்க வேண்டும்....
இரண்டாவதாக.... இங்கு யாரும் விதண்டாவாதம் செய்வதாக நான் உணரவில்லை. மாறாக உங்களுக்கு நான் செய்வது விதண்டாவாதமாக பட்டால் நேரடியாக கூறலாம்.....
1 + 1 = 3 என்று அனைவரும் கூறினால் எதற்காக வாதிட வேண்டும். அவசியம் தான் என்ன...?
ஞானியின் தகுதியை யாரும் குறைகூறவில்லை. ஞானி முன்வைத்த காரணிகள் விமர்சனத்திற்கு தகுதியான தரவுகள் அல்ல....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்பு,
ஞானியின் விமர்சனம் தவறு என்பதால் ரஜினி செய்வதெல்லாம் சரி என்றோ, அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ ஆகிவிடாது. ஞானிக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதியில்லை என்பது தான் இத்திரியை பொறுத்தவரை என் நிலைப்பாடு. ரஜினி பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களில் நான் நிறைய முரண்படுகிறேன். அதற்கு பதிலளிக்கலாம் என்றால் என் ப்ராக்ஸி பிரச்சினை ஒத்துழைக்க மறுக்கிறது.
அன்புடன்,
இதயம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks