(மக்களே... பயந்துவிடாதீர்கள். கவிதைப் பட்டறையில் தட்டி செம்மைப்படுத்துவதற்காகவே இக்கவிதை(?)
எவரும் படித்தால் எளிதில் புரியும் என்று நினைக்கிறேன். புரியவில்லையெனில் விளக்கம் பிறகு தருகிறேன்.)
*****************
நாவிடம் பாவிடம்
விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்
கருப்பை வாழ்விடம் உடைப்பைச் சூழ்விடம்
அகப்பை வழிவிடம் இரைப்பை நிறைவிடம்
படிப்பை அறிவிடம் பகுப்பை உணர்விடம்
இருப்பை அறிவிடம் இயல்பை உணர்விடம்!
மசிப்பைத் துளிவிடம் வனப்பைப் பொழிவிடம்
கனிப்பை வடிவிடம் முகப்பைக் கனிவிடம்
விழிப்பைக் கருவிடம் இமைப்பைக் கனவிடம்
அகப்பை உறைவிடம் வதைப்பை உணர்விடம்
இனிப்பைத் தருவிடம் இனிப்பைத் திருவிடம்!
மணப்பை பூவிடம் மனப்பை மகிழ்விடம்
நகைப்பை மனைவிடம் களிப்பை மகவிடம்
மிதப்பைத் தருவிடம் மதிப்பைச் சரிவிடம்
பணப்பை அசைவிடம் பழிப்பை அழைவிடம்
பிழைப்பை நுழைவிடம் தலைப்பை சுழிவிடம்!
புகைப்பை நுழைவிடம் நுரைப்பைத் தீவிடம்
மதுப்பை பூவிடம் இரைப்பை மதுவிடம்
இருப்பைப் பாய்விடம் இருப்பைத் தேய்விடம்
அரிப்பை குறைவிடம் குடற்பை அரிவிடம்
அகப்பை அயர்விடம் இறப்பை உணர்விடம்!
உயிர்ப்பை நோவிடம் உடற்பை சாவிடம்
சிதைப்பை எருவிடம் சதைப்பை கழிவிடம்
நெருப்பைச் சேர்விடம் கரிப்பை முடிவிடம்
கலப்பை வாழ்விடம் உழைப்பைச் சூழ்விடம்
விதைப்பை உருவிடம் வரப்பை உறைவிடம்!
Bookmarks