Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: பெண்களே கவனம் கவனம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    பெண்களே கவனம் கவனம்

    பெண்களே கவனம் கவனம்

    ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
    சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே
    அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை
    லேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப்
    பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது.
    சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
    நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
    ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
    கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
    பழக வேண்டும்.
    பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
    அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
    இருக்கிறது. லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே தன்னை காம
    விகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
    கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.
    தொடக்கத்தில் சாதகன் ஒரு பெண்ணின் சமீபத்தில் போகக்
    கூடாதுதான். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடும்
    பட்சத்தில் எந்த கெடுதலும் நேராது.
    பெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள், இரக்கமுடையவர்கள்.
    அவற்றை மறைக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் முடியாது. ஒரு
    ஆண் கொஞ்சமே தங்களிடம் அன்பு காட்டினாலும் அவர்கள்
    அப்படியே உருகி விடுவார்கள். ஆடவன் நேசம் கலந்த ஒரு
    பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.
    அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,
    மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள
    சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.
    அமிர்தானந்தமயி
    Last edited by mgandhi; 17-05-2008 at 06:03 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    கத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by ரவுத்திரன் View Post
    கத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.
    இளம் தலைமுறையினர் தெளிவாக இருந்தால் நன்மையே
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் namsec's Avatar
    Join Date
    22 Apr 2006
    Location
    சென்னை மாநகர்
    Posts
    1,416
    Post Thanks / Like
    iCash Credits
    21,248
    Downloads
    1
    Uploads
    0
    பெண்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய திரி பதித்தவருக்கு நன்றி
    ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
    வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by mgandhi View Post
    பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே இருக்கிறது. -அமிர்தானந்தமயி
    அம்மா அமிர்தானந்தமயி சொல்வதைப் பார்த்தால்.. பெண்கள் எல்லாருமே கேடு நினைப்பவர்கள் என்பது போல தோற்றம் வருகிறதே.....!!

    எந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம்?? பள்ளியில்.. கல்லூரியில்.. அலுவலகத்தில் எத்தனையாயிரம் பெண்களோடு தினம் இருக்கிறோம்...
    என்னால் ஏற்கவே முடியாத கருத்து..!!


    விவாதிக்க விரும்பினால்.. பொதுவிவாதங்களுக்கு மாற்றுங்கள்.. இல்லையெனில் எனது பதிவை.. கருத்தாக மட்டும் கொள்ளுங்கள்.

    நன்றிகள்.

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    புதியவர்
    Join Date
    12 Feb 2008
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இரக்கமும் மென்மையுமே பெண்களின் மிகப்பெரும் பலவீனம். அதை மிக அழுத்தமாய் அளகாய் எடுத்துக் காட்டுகின்றது.

    பூஜா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    சிரிப்பும் வெறுப்பும் சேர்ந்து வருது...வாய்விட்டு சிரித்து கொஞ்சம் வெறுப்பைக் குறைச்சிட்டு...அந்தண்டை நகந்து போறதத் தவிர என்ன செய்ய?

    சாதனைன்னா என்ன? யாரெல்லாம் சாதகர்கள்?

    இதை வேறு யாராவது பதிந்திருந்தாலும் பரவாயில்லை. சகோதரர் காந்தி பதிந்தது மிகவும் வருத்தத்திற்குரியது.

    ஆடவன் நேசம் கலந்த ஒரு
    பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.
    அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,
    மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள
    சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.அமிர்தானந்தமயி
    __________________


    மேலுள்ள வாதம் உண்மையெனில் பால்காரன், பேப்பர்காரன், கடைக்காரன் தொடங்கி......எத்தனை பேர்கிட்ட எத்தனையை இழக்கறது...
    போங்கப்பா நீங்களும் உங்க திரியும்....
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    எந்த ஒரு செயலும் பெண்ணை பொறுத்து தான் மாறுகிறது.

    அன்பை காட்டி... அவர்களை ஆட்கொள்ள இயலும் என்பது போல் இருக்கிறது இந்த பதிவு...

    பெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...
    அப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..
    பெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா?
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by பூமகள் View Post
    அப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..
    பெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா?
    எளிதாக உணர்வால், உடலால் பாதிப்படையக்கூடியவர்கள்... தான் தெளிவாக இருக்கவேண்டும் என்றேன். (சில பெண்களால், பாதிப்படையக்கூடிய ஆண்களும் உண்டு....)

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    யவனிகா அவர்களிம் பதிவு மிகச் சரியானது. பூமகளால் யவனிகா அளவிற்கு நுணுக்கமான உணர்வுகளைக் காட்ட இயலாவிட்டாலும் மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.


    இதை இரண்டு கோணங்களிலும் பார்க்கவேண்டும்..

    சொன்னவன் சிறுவன், தகுதியில்லாதவன், என்றாலும் சொல்லப்பட்ட பொருள் மட்டுமே காணப்பட வேண்டும்..

    அதே சமயம், சொன்னது கடவுளே என்றாலும், சொல்லப்பட்டது சரிதானா என்று பார்க்கவேண்டும்.. வேறு யாருக்கு அந்த உணர்வில்லாட்டாலும் வள்ளுவனும். நக்கீரனும் வாழ்ந்த பூமியில் பிறந்தவர் அல்லவா நாம்.

    படித்ததில் பிடித்தது. காந்தி, நிஜமாகவே இந்தக் கருத்து உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா? நம்ப முடியவில்லை.


    களை பிடுங்குதல் முதல், கம்பெனிகளை நிர்வகிப்பது வரை, இட்லி சுடுவதிலிருந்து இந்தியாவை ஆள்வது வரை பெண்கள் பலப்பலத் துறைகளில் பணி புரிகிறார்கள்..

    அண்ணன் தம்பி அப்பா மகன் உறவு அனைவரிடத்திலும் கொண்டாடப் படுவதில்லை. அதற்காக அன்பும் அக்கறையும் காட்டப்படாமலும் இல்லை. பேருந்தில் ஏற வழிவிடுவதிலிருந்து, சுமை தூக்கி விடுவதிலிருந்து, பாடங்கள் கற்றுத்தருதல், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என எத்தனையோ அன்பான காரியங்களை தினம் தினம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

    பெரும்பான்மை மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். பலவீன மனமுடைய மிகச் சிலரே தவறி விடுகின்றனர்.

    சும்மா ஜாலியா கேட்கிறேன்..

    பெண்களின் பின்னால் கண்ணில் காதல் கருணை பாசம் அன்பு என அனைத்தையும் நிரப்பிக் கொண்டு அலையும் பலருக்குக் காதலிகளே கிடைப்பதில்லை..

    அது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட "உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று எனக்குச் சொல்லாதது ஏன்?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நல்லதொரு விளக்கம் தாமரை அண்ணா.
    தகுந்த பதில் போடவேண்டும். எப்படி போடுவது என்று பார்த்திருந்தேன். அழகாக சொல்லிவிட்டீர்கள்

    Quote Originally Posted by தாமரை View Post
    அது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட "உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று எனக்குச் சொல்லாதது ஏன்?
    நீங்கள் திருமணமானவர் என்று தெரிந்திருக்குமோ என்னமோ

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •