ஜாலியா ஒரு பயணம்....
நெரிசலான பேருந்தில் நிற்பதற்கு இடம் பிடித்தேன்.,
எதிரில் ஒரு இளம் பெண் இருக்கையில் அமர்ந்திருந்தாள் .,
இளமை துள்ளும் விழிகள் ,எதையும் அலட்சிய படுத்தும் முகம் .,
இதழ்கள் பாடல் ஒன்று முணுமுணுக்க, கண்கள் நிலையில்லாமல் பாவியது .,
அவள் கையில் கைபேசி , விசைகளை விரல்கள் சொடுக்க ..........
பூவாக விரிந்தது செல் திரை .........
யாருக்கோ " ஹாய் " என்றாள்., குறுந்தகவலில்.,
" ஹாய் " என்று பதில் வந்தது.,
" எங்கே " என்றாள் மீண்டும்.,
" பஸ்ஸில் " என்று பதில் வந்தது.,
நானும் " பஸ்ஸில் " !!! என்றாள் ஆச்சரிய குறியுடன்.,
சரி, சரி, இருவரும் பஸ்சில் என்றால் " பார்ட்டி கொடு" என்று பதில் வந்தது.,
" உன் பஸ்சில் ரொம்பவும் கூட்டமோ " என்றாள்.,
" ம்ம் ரொம்ம்பா ...... " என்று நீட்டி இருந்தது .,
" நல்ல வேலை நான் சிட்டிங் " என்றாள் .,
" நானும்தான் " என்று பதில் வந்த்து .,
" சாப்பிட்டியா " என்றாள் .,
" இனிமேல்த்தான் " என்று பதில் வந்தது .,
" ஹீ...ஹீ " என்றாள் .,
" என்னடி " என்று பதில் .,
" சிவப்பு கலர் டி சர்ட் போட்டு ஒருத்தன் என்னை பார்த்து வழியுறான் " என்றாள் .,
சிறிது நேரம் பதில் இல்லை ....................
" போடி லூசே அவன் என்னை பார்த்துதான் வழியுறான் " என்று வந்தது பதில் .,
அடுத்த கேள்விக்கு தயங்கினாள் ...............
" அடி நாயே எங்கே இருக்க " என்றாள் .,
" திரும்பி பாரு எருமை மாடு உனக்கு பின்னாலே " என்று பதில் .,
தோழிகள் இருவரும் சுற்றி இருந்த கூட்டத்தை மறந்தனர் .,
" நாயே பேயே " என்று அடை மொழிகளுடன் கூச்சம் இல்லாமல் பலமாய் பேசி சிரித்தனர் .
ம்ம் ...
வாழ்க இலவச குறுந்தகவல் சேவை .,
வாழ்க இளைய சமுதாயம் .
Bookmarks