மேலும் ஊற்று,கீற்று,நெற்று,பருப்பு,அச்சு,செக்கு,தட்டு,லட்டு ... இப்படி பல சொற்களின் பன்மையும் இலக்கணப்படிதான் எழுதப்படுகிறதா...? இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.
அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!
இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பண்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?
தமிழ்த் தாய் வாழ்த்து
.
Last edited by சாம்பவி; 29-09-2007 at 09:59 PM.
..
இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
.
நன்றி பாரதி..
இப்போ அதிகமாய்க் குழம்பியிருக்கிறேன்..
எனவே
அதிகமாய்த் தெளிவேன் என நம்புகிறேன்..
--------------------------------------------
நன்றி சாம்பவி
(பெயர் மாற்றத்திற்கு இன்னொரு நன்றி)
ஸ்கேலடி புகழ் வசந்தா டீச்சர், அப்புறம் அறிவார்ந்த உங்கள் தந்தை..
இவர்களுக்கும் உங்கள் மூலம் நன்றி சொல்கிறேன்..
-------------------
குழப்பம் அதிகரிக்கட்டும்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
எனது பிழைகளைக் களைந்த அனைத்து நண்பர்கட்கும் வாழ்த்துகள். இதற்கு முந்தைய பதிப்பு வரை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவன் இனி வாழ்த்துகள் மட்டும் தருவேனாக்கும்.
காயத்ரி அவர்கட்கு: Phrase - சொற்றொடர்.
ஆகா சாம்பவி இன்று தானே என் கண்களிலே இது பட்டது....
குழப்பம் தெளிவிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல...
தொடர்ந்து நீங்கள் எங்கள் சந்தேகங்கள் பல நீக்க வேண்டுமென வேண்டுகிறேன்....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.
பயனுள்ள திரி
நான் இங்கே என் சகோதரியின் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லிக்குடுக்கும் போது அவர்கள் என்னை கேட்ட ஒரு கேள்வி இது(எனக்கு பதில் தெரியவில்லை).
தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்?
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!
அதைத்தான் நானும் சொன்னேன்.. மேலும் சொல்ல, சின்னவயசில் தாத்தா சொன்ன உதைகாலி மாட்டை துணைக்கழைத்தேன். கூடைப்பந்து என்று வரும்போது உதைப்பந்து வராதோ என்றார்கள்.. அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றேன். ஏற்கமாட்டோம்னு அடமாக நிற்கிறார்கள். அதனால சற்று நிலைகுலைவு. இப்போ நிமிர்ந்து நிற்போம்ல.. நன்றிங்க..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks