உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் சூப்பர் 8ல் தேர்வு பெறாமல் வெளியேறியுள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் யார்?
1. தேர்வாளர்கள்.
2. பயிற்சியாளர்.
3. அணித்தலைவர்
4. ஒவ்வொரு உறுப்பினரும்.
5. கிரிக்கெட் வாரியம்.
இந்தியாவில் அதிக பணம் புழங்கும் வாரியம் கிரிக்கெட் வாரியம். வீரர்கள் கோடி கோடியாக சம்பாதித்து உள்ளனர். அவர்கள் சம்பாதித்த பணத்தை... வசூலிக்க இயலுமா??.
கிரிக்கெட் அணியை ஒரு வருடத்திற்கு தடை செய்யலாமா??...
கிரிக்கெட் வீரர்கள் வரும் விளம்பர பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து கோபத்தை வெளிப்படுத்தலாமா??
ஒவ்வொரு அணி வீரருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
பழைய (சாதனைகளை) ஆட்களை வைத்தே சவாரி செய்யும் பழக்கம் மாறுமா?
அணியில் 5-6 மூத்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பலாமா??
மனதளவில் இந்திய வீரர்களுக்கு தெம்பு இல்லை.... அதை பலப்படுத்த பயிற்சி அளிக்கலாமா?
இது விளையாட்டில் ரொம்ப சகஜம் என சொல்லலாம்.... ஆனால் இது மாதிரியான தோல்வியை என்ன பண்ணுவது??
இந்தியாவில் கிரிக்கெட்டை பலர் தெய்வம் போல் போற்றுகிறார்கள்.... இவர்களின் நிலை இனி என்ன?
இப்படி பல கேள்விகள் உண்டு... பதில் உங்கள் விவாதத்தில் வெளிப்படட்டும்.
Bookmarks