Page 6 of 7 FirstFirst ... 2 3 4 5 6 7 LastLast
Results 61 to 72 of 84

Thread: வெண்பா எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #61
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    வெண்பா எழுத வேண்டும் என்று என் மனதின் ஓரத்தில் ஆசை உள்ளது..
    அதன் சூட்சுமமும் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்..

    வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கமாக
    சொல்லிகொடுங்களேன்...

    திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை என்று அறிந்திருக்கிறேன்..

    உங்கள் விளக்கங்களும் வெண்பாக்களும் தாருங்கள்..

    இணையத்திலிருந்து கீதா என்பவர் எழுதின சில வெண்பாக்கள்
    நன்றி கீதா...
    http://geeths.info/archives/category/venba-muyarchi/

    சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
    ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
    தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
    தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


    விளக்கம்:
    தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
    அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

    வெண்பாவின் சூட்சுமம்... நான் அறிந்தவரையில்...

    சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
    ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
    தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
    தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


    முதல் இரண்டு அடியில்
    ஒரே உச்சரிப்பை உடைய வார்த்தைகள் மூன்று இடத்திலும்
    அடுத்த இரண்டு அடியின் தொடக்கத்தில்
    ஒரே உச்சரிப்பை உடைய இரண்டு வார்த்தைகள் வருகின்றன..

    எல்லா வெண்பாக்களையும் நான் ஆராய்ந்த வரையில் இம்முறையிலேயே அமைந்துள்ளன..

    ஆனால் இலக்கணப்படி எப்படி எனறு தெரியவில்லை.

    வெண்பாவின் வகைகள்..

    குறள் வெண்பா
    சிந்தியல் வெண்பா
    நேரிசை வெண்பா
    இன்னிசை வெண்பா
    பஃறொடை வெண்பா
    சவலை வெண்பா

    வெண்பா முயற்சியில் சூட்சுமம் தெரியாமலே பல வருடங்களுக்கு முன்பாய் எழுதிய ஒன்று...


    விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
    வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
    உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
    இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...


    நிச்சயம் ஏகப்பட்ட குறைகள் இதிலே இருக்கும்...

    கவிதைகளில் வெண்பா எழுதுவது மிகவும் ரசனையான ஒன்று...

    வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் இன்னும் விளக்கமாக
    சொல்லிகொடுங்கள் நண்பர்களே!
    நானும் வெண்ப கற்றுக்கொள்ள வெகு ஆசையாய் இருக்கிறேன்.

  2. #62
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    நானும் வெண்ப கற்றுக்கொள்ள வெகு ஆசையாய் இருக்கிறேன்.
    செந்தமிழ்ச் செல்வரும்
    லதா அம்மையும்
    அம்மையோடு
    சாம்பவியும்
    பெண்பா வெழுதும்
    ஆதவனும்
    இன்னபிற செல்வங்களும்
    இருக்க

    பயமெதற்கு சிவனே!

  3. #63
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    சீரிரண்டு மாச்சீராம் முச்சீரோ காய்ச்சீராம்
    பாரிதுதான் பாவுக்கு பாங்காய் இலக்கணமாம்
    மூன்றாம் அடிக்குகீழ் முச்சீர் வரவைத்து
    வெண்பா வடிக்கலாம் வா

  4. #64
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    நாள்மலர் காசு பிறப்பு இவைநான்கும்
    நான்காம் அடிச்சீர் இறுதியில் நன்றேவாம்
    தேன்போல் ஒலித்திட செப்பலோசை சேர்த்தேதான்
    வெண்பா வடிக்கலாம் வா.

  5. #65
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    முதலில் வருமெழுத்து ஒன்றினால் மோனை
    இரண்டில் வருமெழுத்து ஒன்றில் எதுகையாம்
    மாச்சீரும் காய்ச்சீரும் மாண்புடன் கற்றேநாம்
    வெண்பா வடிக்கலாம் வா

  6. #66
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆஹா... வெண்பாவின் இலக்கணத்தையே வெண்பாக்களாக பாடும் பூர்ணிமா அவர்களே கலக்குறீங்க. எப்புடி இப்புடி அந்த வித்தைய கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #67
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    வெகு எளிது

    வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட
    நண்பனே நம்மிடையே ஆசிரியர் உண்டிங்கு
    அன்பாய் அதைஅவர் சொல்லித் தந்திடநாம்
    வெண்பா வடிக்கலாம் வா
    Last edited by அமரன்; 26-07-2008 at 03:55 PM.

  8. #68
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அந்தப் பாட்டின் முதல்வரியில் தளை தட்டும். அதை மாற்றி இப்படி
    படிக்க

    வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட

  9. #69
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆஹா.. வெண்பா இலக்கணத்தினை வெண்பாவில் புகுத்தி சொல்லியிருக்கும் பாங்கு.. வியக்க வைக்கிறது..

    பாராட்டுகள் சகோதரி..
    உங்களால் நாங்களும் கொஞ்சம் செந்தமிழைச் சுவைக்கிறோம்..!!
    எங்களுக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள் தானே?

    Quote Originally Posted by poornima View Post
    அந்தப் பாட்டின் முதல்வரியில் தளை தட்டும். அதை மாற்றி இப்படி
    படிக்க
    வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட
    இந்த சிறு வார்த்தை மாற்றத்தை மேல் உள்ள உங்களின் இந்த பதிவில் Edit என்ற பட்டனை அழுத்தி.. மாற்றம் செய்யலாம் சகோதரி பூர்ணிமா..!!

    மறுபடி பின்னால் எழுத வேண்டுமென்ற சுமை குறையுமல்லவா??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #70
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    எடிட்பற்றி சொன்னதற்கு ஏற்றமிகு நன்றி
    படித்திட்டேன் மன்றத்தில் இன்றொரு பாடத்தை
    பூமகளே வாழிஉன் புகழ்
    - இது மூன்றடி - சிந்தியல் வெண்பா

  11. #71
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கவனம் ஈர்க்கும் பூர்ணிமாவின் வெண்பாக்கள்..

    பாராட்டுகள் + வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #72
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    நல்லார் பதிவுக்கும் நல்லபடி பாராட்டி
    எல்லார் பதிவிலும் பின்னூட்டி - செல்லும்
    இடமெல்லாம் சிறப்பாய் பதில்தந்து ஊக்குவிக்கும்
    இன்முக நண்பர் இளசு.

Page 6 of 7 FirstFirst ... 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •