Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 51

Thread: வெறுப்பு விஜய் கவிதைகள்

                  
   
   
  1. #37
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    இந்த சொல்
    கனத்து இருக்கிறது
    முதுகில் சுமந்து செல்வதற்கில்லா
    எடையுடன் இருக்கிறது
    உலகின் முதல்நாள் வெளிச்சம் போல
    பிரகாசமாக இருக்கிறது
    ஹீலியப்பந்து போல
    வெடிப்பதற்கு அழுத்தத்தோடு இருக்கிறது
    சொற்களில்
    மதர்த்து திரியும் திரிபுகள்
    துப்பாக்கிகளாய் முன்னீட்டி நிற்கிறது.
    கருத்த சிற்றறையில் அடைபட்டு
    வெளிவரத்துடிக்கும் சிற்றுயிராய்
    துடித்து நிற்கிறது
    மேலும் சொல்வதென்றால்
    இந்த சொல்
    ஒரு சொல்லாகவே இருக்கிறது

  2. #38
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    பெருங்கடலிலிருந்து கொண்டுவந்த நீரை
    இந்த பாட்டிலில் அடைத்திருக்கிறேன்
    எந்நேரமும் பொங்கி அலையும்
    கடலின் ஆக்ரோஷம்
    சிறிதேனும் இதனுள் இருக்குமோவென
    பாட்டிலை விட்டு வெளியேறத் துடிக்காத
    பெருங்கடல் நீரை
    என்னோடே எங்கும் கொண்டு செல்கிறேன்
    இப்போது கடல் என்னை பின் தொடர்கிறது.

  3. #39
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    சங்கினுள் அடைபட்டு புரளும் அலை
    எதைச் சொல்லுகிறது?
    நூற்றாண்டுகளாய் கடலெழுதிய
    கவிதைகளை பத்திரப்படுத்துகின்றனவோ
    சங்குகள்?

    ---------------

    காலங்காலமாய் இரகசியங்கள் படியும் அறை
    கடலின் தீர்க்க முடியாத துவேசத்தின்
    ஒரு பங்கு.

    -------------

    ஒரு சங்குக்கு இன்னொரு சங்கின்
    இரகசியங்கள் தெரியும்
    அலைபுரளும் சங்கதி தெரியவேணுமா
    நீ மாறவேண்டும்
    ஒரு சங்காய்..

    -----------------

    முற்றிலும் நீர் வடிந்த
    இடம்புரிச் சங்கு
    இரைக்கும் சப்தம்
    கடலிடமிருந்த
    சங்கிடமிருந்தா

    -----------------

    இடதோ
    வலதோ
    திரும்பிக் கிடக்கிறது தலை
    வெட்கிச் சுருண்டு
    சொருகியிருக்கிறது உடல்
    பாலினம் காண
    அதன் உறுப்புகள்
    மறைந்திருக்கிறது
    கடவுளரைப் போல

    ---------------

    சங்கோசை
    கேட்பதற்கு இனிமையானது
    இப்போது அது
    சாவுக்கு மட்டுமே ஊதப்படுகிறது.

    ---------------------

  4. #40
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0

    வேட்டை..


    இரைக்காக மானைத் துரத்தும்
    இளஞ்சிறுத்தையை
    வீட்டிற்குள் அழைத்து வந்தேன்
    பார்த்த கணத்திலேயே அம்மா
    மூர்ச்சையானாள்.
    இதை எதற்கு அழைத்து வந்தாயென
    அப்பா பயந்தோடினார்
    தமக்கையர்களோ செய்வதறியாது
    அதிர்ந்து நின்றனர்
    சிறு சலனமுமின்றி இங்கே
    அதை கூட்டி வந்திருக்கிறேன் பாருங்கள்
    எத்தனை மிருதுவானது அதன் ரோமங்கள்
    எத்தனை வலிமையானது பற்கள்

    இக்கவிதைக்கு மூன்று முடிவுகளுண்டு

    1. சிறுத்தை தெரியாவிடில்
    அப்படி ஒன்றிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்

    2. சிறுத்தைகள் எதுவும் செய்வதில்லை
    நீங்கள் மான்களன்றியிருந்தால்

    3. வேட்டையாடும் இளஞ்சிறுத்தை எனும் படிமம்
    மிக அழகானது.



  5. #41
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    ஒரு நீலப்படம் பார்ப்பதற்கு முன்னர்
    உடலெங்கும் குறுகுறுக்கும் உணர்வோடு
    திரையினை அணுகுகிறேன்
    ருதுவாகி இருக்கிறேனா என்பதை
    சுயசோதனை செய்து கொள்கிறேன்
    ரகசியமாய் பதுங்கியிருக்கும்
    ஒரு மிருகத்தைக் கட்டவிழ்க்கிறேன்
    திரையினுள் நுழைந்து அவனாக
    அல்லது
    அவளாக ஆகத்துடிக்கிறேன்
    முடிவுறாது மேயும் விலங்கினை
    பட்டிக்குள் அடைக்கப்பார்க்கிறேன்
    முடிவினில்
    நீலப்படங்கள் எனக்கு எந்தவொரு சுவையும்
    கொடுப்பதில்லை யாதலால்
    என்னை நானே தின்னத் துவங்குகிறேன்
    வேகமாக
    இன்னும் வேகமாக

  6. #42
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    செதில் செதிலாய் சித்ரவதை செய்யப்பட்ட
    கானக மரத்தின் மையத்தில்
    புகுத்தப்பட்ட கரிக்கோல் துண்டில்
    ஒளிந்துகிடக்கும் ஓவியங்கள்
    ஒன்றொன்றாய் வெளியேறுகின்றன.
    காட்டு மரங்கள்
    ஒவ்வொன்றாய் வீழுகின்றன,

  7. #43
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாக, வரிகள் ஒவ்வொன்றும் அதனுள் இன்னும் அடர்த்தி கூட்டிச் சேர்ந்து கவிதையாகியிருக்கிறது. என் அறிவுக்கு விமர்சனம் எழுதத் தெரியவில்லை. அப்பாற்பட்டு நிற்கிறது. வாழ்த்துக்களை மட்டும் பதிகிறேன். மேலும் தொடருங்கள். ரசித்துவிட்டாவது போகிறேன்.

  8. #44
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    கரியான காட்டின் சோகம் மட்டுமே..

    கரியான காட்டின் சோகம்
    என்னை திரும்பிப்பார்க்க வைத்தன -
    இப்போதுதான் என்னை உரசிக்கொண்டு போன
    கரிக்காற்றின் வெப்பத்தில்
    நான் அடிபட்டுப் போனேன்.
    ஆயினும்
    சாம்பலாகாமல் என்னை மூடும்
    எரிதழல்களை நான் விலைபேசிக்கொள்கின்றேன்
    என்னை விற்க நான் ஒரு சந்தை தேடிக்கொள்கின்றேன்
    மனிதம் உரிக்கப்பட்ட
    இந்த காட்டில் விபசாரம்தான் விலை போகிறது
    வெட்கத்தை விட்ட வேடிக்கை கூட்டம்
    அன்பை அடைமானம் வைத்த மானமிழந்த
    நிர்வானங்களில் தாகம் தீர்க்கின்றன.
    கானலைக் கடலாய்க் கற்பிக்கும்

    ஆயினும்
    உண்மை வைரம் போன்றது என்பதால்
    உறங்கிக்கிடக்கும் உயிர் முளையும் உச்சத்தைத் தொடும்
    உள்ளங்காலில் மிதிபட உண்மை ஒன்றும் நீலம் அல்ல ........

    உங்களின் கரித் துண்டு
    கருத்துன்டங்கள் ..
    காட்டின் தோல் உரிக்கப்பட்ட
    ஜீவனின் மிச்சம்
    அது எங்களின் எச்சரிக்கை
    சிவப்புவிளக்கின் உண்மைத்தோற்றம்..
    கரியாய் இருப்பினும்- அது சிவப்பே.

  9. #45
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0
    நன்றாக இருக்கு நண்பரே

  10. #46
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    கனச்சதுரமாய் விழுந்து
    கிடக்கிறாள் பெண்
    போராடும் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில்
    முதுகுப்புறத்தினோரமாய்
    கத்தியிலாலான பேனாவொன்றில்
    கவிதை கிழிக்கப்படுகிறது
    நரம்பும் சதையும் சக்கை சக்கையாய்
    அறுத்தெடுத்து இரத்த வாசனை
    முகர்தலில் ஒரு வெறித்தனம்
    சுயபிரக்ஞையிழந்த அல்லது
    தெளிவாக
    கட்டமைக்கப்பட்ட செயல்தளம்
    யுகயுகமாய் எழுதிய பின்னும் தீராத மை
    போலவே அவள் சாகவுமில்லை
    பெண்ணை வதைப்பது மிகவும் பிடித்தமாயிருக்கிறது
    ஒரு ஆணுக்கு
    அவளுக்கோ மயிற்பீலியின் சுரண்டல்
    (என எழுதச் சொன்னார்கள்)
    மொழிக்குப் புதிதான குறியீட்டில் கூக்குரலிட்டு
    வன்புணர்ந்து தள்ளிய அவளின் இறவாபிணத்தை
    துண்டாக்கப்பட்ட மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
    ஒரு கவிதை
    மென்மையாக அல்லது
    மிக மிகக் கொடுமையாக.

  11. #47
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    உயர் தரமான வார்த்தைகள்!!

    கவிதை விளக்க வந்தது கடினமான கரு ..

  12. #48
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    முன்குறிப்பு

    இது
    திருமணமாகாத
    திருமணத்திற்கே வழியில்லாத
    எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
    நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
    இருக்கும் ஒருவனின் கவிதை
    சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு
    ஏற்படும் சங்கடங்களையும்
    அசெளகரியங்களையும்
    காழ்ப்புணர்ச்சிகளையும்
    (அப்படி ஏதுமில்லை என்றாலும் கற்பனையாகவேனும்)
    இக்கவிதையில் நாம் காணப்போகிறோம்.
    கவிதை படித்த ஒவ்வொருவரின் மனதிலும்
    பிரம்மச்சரியம் கொடுமையானது என்பதை
    உணர்த்தும் விதமாக வார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
    கவிதையை பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது
    கவிஞரின் எண்ணம் - (ஆண்கள் தவிர்த்துவிடலாம்)
    இதன் எதிர்வினைகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்
    யாரையும் குறிப்பிட்டு சொன்னதாக இருக்காது,
    இதற்கு முன்பு இம்மாதிரியொன்றை
    எங்கும் நீங்கள் படித்திருக்க முடியாது
    நீங்கள் பெற்றோராகவோ
    சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவோ இருக்கும்பட்சத்தில்
    கனத்த இதயத்துடன் கவிதையைப் படிக்கவும்.

    பின்குறிப்பு :

    மிக முக்கியமான விஷயம்
    இக்கவிதை ஆரம்பிக்கபடாமலேயே
    முடிந்துவிடலாம்.

  13. Likes கீதம் liked this post
Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •