Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

    கிட்டத்தட்ட பழமொழியாகவே ஆகிவிட்ட இந்த சொற்றொடர் மீண்டும் மீண்டும் இந்தியா தோற்பதால் உருவாகிவருகிறது. இந்திய அணி அப்படியொன்றும் அசாதாரண அணி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், சச்சின் ட்ராவிட் கங்குலி போன்ற ஜாம்பவன்களால் அது கபில்தேவ் காலத்திய அணியிலிருந்து உருமாறி இன்றைய அதிரடி நிலைக்கு வந்து நிற்கிறது. இந்திய அணியின் மாபெரும் உருவாக்கத்தில் சச்சினது பங்கு நிச்சயம் பெருமளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை, யாராலும் எட்டமுடியாத சாதனை எனும் அளவுக்கு படைக்காவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதன்முதலான சாதனைகள் பெரும்பாலானவைகளை இவர் செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பெரும்பாலும் தனிநபர் சாதனைகளாக அமைந்துவிடுகிறது. ஒரு தனிநபர் சாதனை புரிய ஏராளமான இடங்களை கிரிக்கெட் விட்டுத்தருகிறது. மொத்த அணிக்கான சாதனை என்று பார்க்கும்பொழுது தனிநபர் சாதனைகளே அதிகம் கிடைக்கிறது. இதில் சச்சின் மட்டும் ஒரு சாதனை வீரனாக, சுயநலத்தின் பால் பார்க்க்கப்படுவது பார்வையின் பட்டும்படாத மேலோட்டத்தையே காண்பிக்கிறது.

    ஒரு இளம் வீரனாகக் களமிறங்கி வக்கார் யூனிஸிடம் அடிவாங்கி, இரத்தம் சொட்டச் சொட்ட அணிக்காக ஆடியவர் சச்சின் என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறார்கள். ஒரு அணிக்கான அர்பணிப்பு உள்ளவனாக இருப்பவனை நாம் வீரன் என்கிறோம். சச்சினிடம் மட்டுமல்ல, எல்லா வீரர்களிடமும் அதையே நாம் எதிர்பார்க்கிறோம். சொந்த சாதனைக்காக அணியை கைவிட்டவன் எனும் பெயர் சச்சினுக்கு எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை. ஒரு அணியின் வெற்றியும் தோல்வியும் எல்லா வீரர்களையே சார்ந்திருக்க, ஒருவரை மட்டும் குறைசொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாமனைவருமே புரிந்து கொள்ளவேண்டும். சச்சின் ரன்னே அடிக்காத ஒரு இன்னிங்க்ஸில் அல்லது முக்கியமான போட்டிகளின் போது அடிக்காமல் போனால் “சச்சினால்தான் இந்தியா தோற்றது” எனும் வாதத்தை ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளமுடியும், ஏனெனில் சச்சின் மீதான எதிர்பார்ப்பு அத்தகையது. ஆனால் நூறு ரன்கள் அடித்தால் இந்தியா தோற்றுவிடும் எனும் மூடநம்பிக்கையை இந்தியர்களிடம் மட்டும்தான் காணமுடியும். தோற்ற போட்டிகளில் சச்சினது பங்களிப்பு என்பதைவிட மற்ற 10 பேரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்று ஆராயாமல் விடுவது தவறானதாகத் தெரியவில்லை இல்லையா? உதாரணத்திற்கு நேற்றைய பங்களாதேசுக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொண்டால், என்னிடம் சச்சின் குறித்த மூன்று சந்தேக/சர்ச்சைகள் எழுப்பப்பட்டன,

    1. சதத்திற்காக ஆடியதால் ஸ்கோரிங் ரேட் குறைந்து போய்விட்டது, அதனால் இந்தியா அதிகம் ஸ்கோர் செய்ய இயலவில்லை
    2. பங்களாதேஷ் எல்லாம் ஒரு அணியே அல்ல, அதற்கு எதிராக ஒரு சாதனை சதம் அடித்தது நன்றாக இல்லை,
    3. வழக்கம் போல சச்சின் சதமடித்து இந்தியா தோற்றுவிட்டது!

    ஒரு மேலோட்டமான பார்வையில் இவை உண்மையாகவே தெரிகிறது. ஆனால் இது “நிஜமாகவே” (!) உண்மைகளா?

    1. நேற்றைய போட்டியில் இறுதி நேர அழுத்தத்தின் காரணமாக ரைனா, தோனி தவிர வேறு யாரும் அடித்து ஆடவில்லை, குறிப்பாக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 80.48, குறைந்த ரன்களே அடித்திருந்தாலும் காம்பிரும் பாலைத் தின்றிருந்தார். இந்த சூழ்நிலையில் சச்சினின் ஸ்டாண்டிங்கில் பந்துகள் வீணாகப்போவது “சுயநலம்” காரணமல்ல, தவிர பந்து மெதுவாக வந்ததை சச்சின் குறிப்பிடுகிறார். அடுத்த இன்னிங்க்ஸ் ஆடிய பங்களாதேஷின் தமிம் இக்பால், ஜஹருல் இஸ்லாம் ஆகியோரும் மெல்லவே ஆடினார்கள்,

    2. பங்களாதேஷ் எனும் சிறூ அணிக்கெதிராக அடிக்கும் முதல் ஒருநாள் சதம் அது என்பதை அறியாமல் பேசுவது வீண். தவிர பங்களாதேஷ் ஒரு நல்ல எழுச்சி நிலை கண்டுள்ளது. அவர்களது அணியின் சகிப் அல் ஹசன், மொர்டாசா, தமிம் போன்ற தரம் வாய்ந்த வீரர்கள் வந்துவிட்டார்கள், ஒருகாலத்தில் இலங்கையும், அதற்கு முன்பு இந்தியாவுமே ஒரு “சப்ப” அணி தான் என்பதை மறந்துவிடக்கூடாது. தவிர டெண்டுல்கர் சுமாரான அணியிடம் அதிக ரன் அடித்தவர் கிடையாது, அவரது சதங்களும் ரன்களூம் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரானது என்பதை மறந்துவிடவேண்டாம். என்னதான் பங்களாதேஷ் வலிமை குன்றிய அணி என்றாலும் அவர்களும் வலிமை வாய்ந்த அணியினரை தோற்கடித்துள்ளனர் என்பதை மறக்கவேண்டாம். 2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் என்ன செய்தது என்பது ஞாபகம் இருக்கிறதா இல்லையா?

    3. ஒரு அணியின் தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணமாக ஆகமாட்டார். இதை ஏன் இந்த கோணத்தில் பார்க்கக் கூடாது... இந்தியாவின் ஸ்கோரில் சச்சின் பங்களிப்பை எடுத்துவிட்ட்டிருந்தால் வெறும் 175 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும், அதுவும் வலிமை குன்றிய ஒரு அணிக்கு எதிராக... ஒரு கெளரவமான ஸ்கோரில்தானே தோற்றிருக்கிறோம்.. தவிர இன்னொன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா எப்பொழுதுமே வலிமை வாய்ந்த அணீ அல்ல. வலிமை வாய்ந்த வீரர்கள் இருப்பினும் அது ஒரு சுமாருக்கும் மேலான அணிதான்!

    சச்சினது காலம் ஒருநாள் போட்டிகள் துவங்கி எழுச்சி பெற்ற காலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவே அவரது முதல் ஐந்து வருடங்கள் கழிந்தன. இன்றும் அவரை ஒரு நல்ல டெஸ்ட் வீரராகப் பார்க்க முடிகிறது. சமகாலத்தில் காலிஸும் சச்சினும் டெஸ்டை அடுத்த கட்ட அல்லது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றார்கள். (ட்ராவிட்டும் தான்...) காலத்திற்கு ஏற்ப சச்சின் ஒருநாள் வீரராகவும், ட்வெண்டி 20 வீரராகவும் கூட தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். இல்லையா?

    நேற்றைய பேட்டியின் போது தான் எந்தவித மனநெருக்கடிக்கு உள்ளானேன் என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஒரு வீரருக்கு மனநெருக்கடி என்பது சகஜமானதுதான். முதன்முறையாக ஒரு விருது விழாவில் உங்களுக்காக வழங்கப்படும் விருதிற்கு நீங்கள் மனநெருக்கடிக்கு உள்ளாவீர்களா மாட்டீர்களா என்பதை உங்களிடமே கேட்டறிந்து கொள்ளலாமே? சரி, நாட்டுக்காக ஆடுபவனுக்கு அணியின் நலந்தான் முக்கியம், சாதனையை மையப்படுத்திய மன அழுத்தம் கூடாது என்று அறிவுருத்துவதாக இருந்தால் ’நாட்டுக்காக’, ’அணிக்காக,’ என்று பாராமல் கோடிகள் புழங்கும் வியாபார ஆட்டமான ஐபிஎல்லை நாம் பார்க்கவே கூடாது... கிரிக்கெட் இன்று வியாபாரம் ஆகி பணம் கொழிக்கும் விருட்சமாக மாறிவிட்டது. இதில் நாட்டுணர்வு என்பது எங்கோ ஓரிரு இடங்களில் மிச்சமிருக்கும் வீரர்களிடம் இருப்பதையும் நாம் கொச்சைப் படுத்தி வருகிறோம்.

    99 சதங்களைப் பேசாதவர்கள், நூறாவது சதம் குறித்து பேச அருகதையற்றவர்களாகிறோம். அதனைத்தான் சச்சின் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்... விஜய் மல்லய்யாவின் வியாபார விளம்பரங்களில் நடிக்க மறுத்தவரான சச்சின் விளையாட்டுத் துறையில் மிகப்பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு வீரர்.. நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!

    வாழ்த்துக்கள் சச்சின்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சச்சினின் மூச்சு கிரிக்கெட்தான், கிரிக்கெட் தவிற அவர் எதையையும் நினைத்துப் பார்ப்பது இல்லை. பணம்கூட அவர் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் வியாபாரிகள் அவருக்குக் கொடுத்தது. அவர் கிரிக்கெட் மட்டுமே யோசிப்பதால்தான் அவரால் இத்தனை ஆண்டுகள் நினைத்து நிற்க முடிந்தது.

    எனக்குத் தெரிந்தவரை இதுவரை சச்சின் மாதிரி கிரிக்கெட்டில் இவ்வளவு ஈடுபாடு உள்ளவர் பிறக்கவில்லை அதுபோல் இனிமேலும் யாரும் பிறக்கப்போவதும் இல்லை.

    சச்சின் ஒரு சாகச மனிதர். அவர் இந்தியாவில் பிறந்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!

    வாழ்த்துக்கள் சச்சின்!
    இதை மட்டும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கவாஸ்கர், வெங்சர்க்கார் வரிசையில் இப்போது சச்சின். தனக்காக மட்டுமே விளையாடும் சுயநல வீரர்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இதை மட்டும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கவாஸ்கர், வெங்சர்க்கார் வரிசையில் இப்போது சச்சின். தனக்காக மட்டுமே விளையாடும் சுயநல வீரர்கள்.
    ஒரே வீரர் என்று எழுதும் போது சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. ஏன், வேறு யாருமே இல்லையா என்று கூட எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். ட்ராவிட் கூட நல்ல வீரர்தான்... இதைவிட்டுவிடலாம்.

    ஆனால் “சுயநல வீரர்கள்” என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? அதற்கான காரணங்கள், கூறுகள் ஏதாவது கூறுங்கள்....
    உங்கள் பார்வையில் வேறு யார் யார் தான் நாட்டுக்காக ஆடுகிறார்கள்?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நேற்றய போட்டியில் இந்தியா வென்றிருந்தால் சொத்தை அணியுடன் தான் நூறு அடித்தார் என்ற இன்னொருவகையான சாட்டும் வந்திருக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நேற்றைய சச்சினின் நூறாவது சதத்தின் மகிழ்ச்சியில் மன்றம் வந்தால், இந்திய அணி தோல்வி அடைந்தமையை இட்டு நண்பர்களின் பதிவுகள் கொஞ்சம் மனதை நெருடத்தான் செய்தன.....

    என் மனதிலும் பல எண்ணங்கள், எல்லாவற்றும் ஒன்று திரட்டியதாக உங்கள் பதிவு, மிக்க நன்றி ஆதவா..!!

    இந்திய அணி வெற்றி பெறுகையில் கொண்டாடுவதும், மாறாக தோல்வியடைகையில் சூதாட்டமாக இருக்குமோ, அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகவோ இருக்குமோ என நினைப்பது எதிரணி வீரர்களின் வெற்றியினைக் கொச்சைப் படுத்துவதாகவே எனக்குப் படுகிறது....!!

    நேற்றைய போட்டியில் சச்சின் பந்துகள் மட்டைக்கு வராமலிருந்தன என கூறியிருந்தார், அத்துடன் பங்களாதேஸ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டியதையும் கவனிக்க வேண்டும். அவர்களில் கூட முஷிபுர் ரகுமானும் சகிப் அல் ஹசன் மட்டுமே 100க்கு மேலான ஸ்டைக் ரேட்டில் விளையாடியிருந்தனர், அதவாது பங்களாதேஸ் அணிக்காக 5வதாகவும் 6வதாகவும் துடுப்பெடுத்தாடியவர்கள். ஆக மைதானமும், நாணயச் சுழற்சியும் கூட வெற்றியில் பங்கு வகிக்கின்றதென்பது மறுப்பதற்கில்லை.

    சச்சினுக்கு பின் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகள் கையிலிருந்தும், வேகமாக ஓட்டங்களைக் குவிக்கத் தவறியிருந்தனர், ரெய்னாவையும் கடைசி ஓவரில் தோனியையும் தவிர இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடத் தவறியிருந்தனர்...

    முக்கியமாக ரோஹித், ஜடேஜா.....!!

    ஜடேஜா தடுமாறிக்கொண்டிருக்கையில், அவருக்குப் பதில் யூசப் பதானை விளையாட வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் எழுந்து கொண்டிருந்தது.

    சச்சின் சதமடித்த போட்டிகளில் இந்தியா வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதமென நம் மன்றத்தில் ஏற்கனவே புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்த பின்னர், மீளவும் அது போன்ற கருத்துக்கள் வருவது வேதனை தான்....!!

    நான் கூட முன்னர் சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்கும் எனத்தான் கூறியிருக்கின்றேன், அதற்கு முக்கிய காரணம் எனக்கு ராகுல் ராவிட்டை நிரம்ப பிடித்திருந்தமைதான் - அவருக்கு போட்டியாக இவர் இருக்கிறாரே என்ற எண்ணத்தால் வந்த தவறான கோபம் அது. அது கூட ஆதவனின் முன்னைய புள்ளி விபரத்திரியுடன் காணாமல் போய் விட்டது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    புதியவர்
    Join Date
    09 Feb 2012
    Location
    TRICHY
    Age
    34
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    16,478
    Downloads
    19
    Uploads
    0
    சச்சின்தான் கிரிக்கட்டின் கடவுள்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    சச்சினுக்காக பரிதாபப்படத்தான் முடிகிறது. நீ ஒரு இந்தியனாக இருப்பதால்தான் உனக்கு இந்த அவலம். சச்சின் ஒரு அவுஸ்திரேலியனாகவோ அல்லது இங்கிலாந்து வீரராகவோ இருந்திருந்தால் இன்று உன் நிலை மிகவும் போற்றப்பட்டிருக்கும்.

    இன்னொரு பிறவி இருந்தால் நீ சச்சினாகவே பிறந்துவிடு ஒரு வேண்டுகோள் அவுஸ்திரேலியனாக பிறந்துவிடு

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்....படிக்கும்போதே எரிச்சலாய் இருக்கிறது...எப்பதான் நீங்க திருந்துவீங்க?

    ஆதவா கேட்டதால் சொல்கிறேன்...நாட்டுக்காக விளையாடியவர்கள்...கபில்தேவ், ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத், அனில்கும்ளே....

    கிரிக்கெட் மட்டுமே விளையாட்டா....இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கியைப் பற்றி யாருக்குமே கவலையில்லையா...பாஸ்கரன்....ஒலிம்பிக்ஸ் கோல்மெடல் வாங்கிவந்த அடுத்த நிமிடமே அணியிலிருந்து விலக்கப்பட்டார்....காரணம்...பணம் கொழிக்கும் கிரிக்கெட்டை....இந்த ஹாக்கி ஓவர்டேக் செய்துவிடுமோ என்ற பயம்....பணம் கொழிப்பவர்களின் கையில் தடுமாறும் இந்த கிரிக்கெட்....ஒரு விளையாட்டே அல்ல....வியாபாரம்.

    ஹலோ வியாசரே....இதே சச்சின் அவுஸ்த்ரேலியராகப் பிறந்திருந்தால்...எப்போதோ அணியைவிட்டு அதிரடியாய் விலக்கப்பட்டிருப்பார் பாண்டிங்கைப் போல...இந்தியராய் பிறந்த புண்ணியத்துக்காகத்தான்...இப்போது இத்தனை ரசிகர்கள்....குருட்டுத்தனமாய்.....போங்க போய் வேற வேலையிருந்தாப் பாருங்க....
    Last edited by சிவா.ஜி; 18-03-2012 at 07:46 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்....படிக்கும்போதே எரிச்சலாய் இருக்கிறது...எப்பதான் நீங்க திருந்துவீங்க?



    ஹலோ வியாசரே....இதே சச்சின் அவுஸ்த்ரேலியராகப் பிறந்திருந்தால்...எப்போதோ அணியைவிட்டு அதிரடியாய் விலக்கப்பட்டிருப்பார் பாண்டிங்கைப் போல...இந்தியராய் பிறந்த புண்ணியத்துக்காகத்தான்...இப்போது இத்தனை ரசிகர்கள்....குருட்டுத்தனமாய்.....போங்க போய் வேற வேலையிருந்தாப் பாருங்க....
    ஐயா சிவா.ஜி
    குஷ்புவிற்கு கோவில் கட்டியதைவிட கடவுள் என்பது கேவலமில்லை. இந்த அளவு சாதனைகள் செய்யாத பான்டிங் இன்னமும் அணியிலிருப்பது உங்களுக்கு தெரியாது போலு
    ம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஓவியன் View Post

    நான் கூட முன்னர் சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்கும் எனத்தான் கூறியிருக்கின்றேன், அதற்கு முக்கிய காரணம் எனக்கு ராகுல் ராவிட்டை நிரம்ப பிடித்திருந்தமைதான் - அவருக்கு போட்டியாக இவர் இருக்கிறாரே என்ற எண்ணத்தால் வந்த தவறான கோபம் அது. அது கூட ஆதவனின் முன்னைய புள்ளி விபரத்திரியுடன் காணாமல் போய் விட்டது.
    இந்த மாதிரி உண்மையை ஒத்துக்கொள்ள வெகு சிலரால் மட்டுமே முடியும் ஓவியன். சச்சின் எப்படியாவாது இருந்துட்டுப் போகட்டும். ஆனால் அவர் கொரிக்கெட் விளையாட்டுச் சாதனையாளர். பாராட்டுவோம்.. போற்றுவோம்.. மதிப்போம்...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆங்கில மோகம், சினிமா மோகம், கிரிக்கெட் மோகம் இவற்றிலிருந்து விடுபட்டால்தான் தமிழகம் உருப்படும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •