Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: முதியோர் இல்லம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    முதியோர் இல்லம்

    முதியோர் இல்லம்


    தாமு முதியோர் இல்லம், சென்னையில் புறநகர் பகுதியில் இருந்தது. அந்த இல்லத்தை சுற்றி மரங்கள், பூச்செடிகள், பறவைகள் என்று அழகாக இருக்கும். அதன் உள்ளே சென்றால் அது சென்னை என்று நமக்கு தோனாது. இன்று அந்த இல்லம் இன்னும் அலங்காரமாக இருந்தது, இல்லத்தின் 25-வது ஆண்டு விழா அதாவது வெள்ளி விழா. இல்லத்தில் இருக்கும் அனைவரும் அவர்களின் குடும்பமும் வந்து இருந்தார்கள். அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாத்தா பாட்டிகள் நடனம், பாட்டு, உடை அலங்காரம் என்று தூள் பண்ணினார்கள். பாட்டிகள் ஆடை அலங்கார அணி வகுப்பில் வெட்கப்பட்டு நடந்து வர, தாத்தாக்களும் பேரன்களும் விசில் அடித்தார்
    நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது. இறுதி நிகழ்ச்சியாக கலந்துரையாடல் வைத்தார்கள், அனைவரும் சிற்றுண்டி முடித்து விட்டு பேச வந்தார்கள். முதலில் இல்ல நிர்வாகி ராஜலட்சுமி அம்மாள் பேசினார்கள்.

    "அனைவருக்கும் வணக்கம் இந்த இல்லம் கட்டி இன்றுடன் 25 வருடம் ஆகிறது, இது என்னுடைய கணவரின் ஆசை அவர் இப்போது உயிருடன் இல்லை மேலே இருந்து சந்தோஷபடுவார் என்று நம்புகிறேன்" என்று மேலே பார்த்து அழுதாள் 75 வயதான பாட்டி, கண்களை துடைத்துக் கொண்டு " இந்த வெற்றிக்கு இங்கு இருக்கும் இல்லத்தின் உறுப்பினர்கள் தான் காரணம் அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை சொல்லும் படி கேட்டு கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார். முதலில் வந்தது திரு.சேகர்

    "ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் மனைவியும் என்கூட தான் இருக்கா. அதனால் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி" என்றார் சேகர்.

    "வணக்கம் என் பேர் சீனு, ரீடையர்டு கஸ்டம் ஆபிஸர் இங்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குது சந்தோஷமா இருக்கேன்.என் மனைவி போய்டா 10 வருஷம் முன்னாடி......... நன்றிகெட்ட என் மகன் வீட்டில் எச்ச சாதம் சாப்பிட்டு இருந்தேன், மகராசி மருமகளை நான் தேடி தேடி பிடித்து என் மகனுக்கு கட்டி வச்சேன். அவ தான் என்ன இங்க அனுப்பிச்சிட்டா. எண்டா இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க
    என் மகன் இன்னுக்கும் வரலை, அவன் எனக்கு செய்ததுக்கு அவன் பிள்ளை அவனுக்கு பதில் சொல்வான்.... ஆனா நீங்க எல்லோரும் வந்து இருக்கீங்க சந்தோஷம், என் வார்த்தைகள் வழியா உங்க பெத்தவங்களின் ஆசைகளை புரிஞ்சிக்கோங்க" என்று முடித்தார்.

    "வணக்கம் என் பெயர் மேரி, என்னுடைய பொண்ணு அமெரிக்காவுல இருக்கா, என்னையும் அங்கே அழைச்சிட்டு போறதா சொல்லினு இருக்கா.......6 வருஷமா (அவரின் குரல் தழுதழுத்தது). மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன்"

    "வணக்கம் என் பெயர் வாசுதேவ், நான் இங்கயே தான் கடைசிவரை இருப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை, நான் பார்த்து வளர்த்தவர்களிடம் நான் போய் கையை கட்டி நிக்க முடியாது, என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவன், நான் சந்தோஷமா இருக்கேன், ஆண்டவன் பார்த்துப்பான். நான் யாரையும் நம்பி இல்லை............... என்ன என் பேரக்குழந்தைகளை தான் பார்க்கனும் போல மனசு அடிச்சிக்குது" என்று கண்கலங்கினார்.

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரேஸ்வரன் தன் மனைவியை கைத்தாங்கலாக முன் வரிசைக்கு அழைத்து வந்து உக்காரவைத்தார். அவர் இல்லத்தின் மூத்த உறுப்பினர் இருபது வருடங்களாக இந்த இல்லத்தில் இருக்கிறார், வயது 80. அவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

    "எல்லாருக்கும் என்னுடைய சார்பாவும் என் மனைவியின் சார்பாவும் வணக்கம், நான் பேசுவதை தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் அறிவுரை கூற போவது பிள்ளைகளுக்கு இல்லை உங்களுக்கு தான். வயதானவர்கள் எல்லொரும் அவர்களின் கெளரவத்தை தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. நீங்க
    ஏன் உங்களையே இப்படி ஏமாத்திக் கொள்கிறீர்கள் உங்கள் பிள்ளைகள் கெட்டவர்கள் என்று. நாம் ஜென்மம் எடுத்து ஓடி ஓடி சம்பாதித்தது எல்லாம் அவர்களுக்கு தானே. அதை அவர்களிடம் கொடுத்து விட்டு ஏன் இப்படி அவர்களை சாபம் இடுறீங்க. அனைவருக்கும் அந்த அந்த வயதில் வர வேண்டிய முதிர்ச்சி வந்துடும். குழந்தையா இருக்கும் பொழுது தாய்பால் தான் உலகம்னு இருந்தோம், அப்புறம் பொம்மைகள், அப்புறம் விளையாட்டு, நண்பர்கள், பெண்கள், மனைவி, குழந்தைகள்ன்னு நம்மளுடைய ஆசைகள் லட்சியங்கள் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கு. இது என்னமோ உங்க பிள்ளைகள் மட்டும் தான் செய்றத நினைக்கறீங்க, நாம எல்லோரும் வாலிப வயதில் அப்படி தான் இருந்தோம் நம் பெற்றவர்களை கேட்ட தான் நம்ம யோகியம் தெரியும். உங்கள் கடமை அவ்வளவு தான் முடிந்து விட்டதுனு நினைத்த பின் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இருக்காதீங்க. தனியாக மனைவியுடன் வீடு எடுத்து வந்துடுங்க, இல்ல இந்த மாதிரி இல்லங்களில் வந்து தந்கிடுங்க, உங்களிடம் அதற்க்கான பணம் இல்லையா உங்கள் பிள்ளைகளிடம் வாங்கிக் கொண்டு தங்குங்க. இந்த மாதிரி நான் சொல்வது
    பிள்ளைகளை நிர்கதியாக விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்களை அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள், சந்தோஷமோ சோகமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.."

    "அப்ப பேரபிள்ளைகளை எல்லாம் பார்க்கறது தப்பு சொல்றீங்களா?" என்றார் ஒருவர்.

    "பார்கறது தப்புனு சொல்லல, பிள்ளைங்க வீட்டுலே இருந்துனு அவங்கள பார்த்துகறது தப்புனு தான் சொல்றேன்"

    "அப்படியே விட்ட தாத்தா பாட்டி என்ற பாசம் இல்லாம போய்டுமே"

    "பாசம் என்பது பக்கத்துலே இருந்த தான் வரும்னு இல்லை, பாசத்துக்கு தூர கணக்கு எல்லாம் இல்லை. நாம நடந்துகறதுல தான் இருக்கு"

    "அப்போ பிள்ளைங்கல கல்யாணம் செய்து கொடுத்தாச்சினா அவ்வளவு தான் நாங்க காசி களம்பனும் சொல்றீங்க"

    "காசிக்கு சொல்லல, உங்க வாழ்க்கையை இன்னொறு ஹனிமூன்ல இருந்து தொடங்குக சொல்றேன், (கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்) ஆமா வாழ்க்கையில் இனிமேல் உங்க மனைவிக்காக மட்டும் செலவு பண்ணுங்க, மனைவி இல்லாதவங்க மேட்ரிமோனியில் பதிவு பண்ணுங்க" (மறுபடியும் கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்). பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நாம் ஏன் அவர்களை சபிகவோ இல்லை திட்டிக் கொண்டோ இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள். நான் இந்த இல்லத்துக்கு வந்த கதையை நீங்கள் கேட்டீங்கனா சிரிப்பு வரும்.(என்று தன் மனைவியை திரும்பி பார்த்தார், அவர் சொல்ல வேண்டாம் என்பது போல சிரித்த படி கையை ஆட்டினார், இவரும் சிரித்துக் கொண்டு) நாங்கள் என்னுடைய மகன் வீட்டில் தான் தங்கி இருந்தோம். என் மகன் மருமகளுக்கு பட்டு படவை வாங்கி தரும் போதெல்லாம் எனக்கு இங்கே ஒவ்வொரு பல்லாக உதிரும், தனக்கும் அதே மாதிரி வேண்டும் என்பாள், வாங்கி கொடுத்தால் அதை கட்டமாட்டாள், அது அப்படியே பீரோவில் தூங்கும் . இதே என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு வாங்கி கொடுத்தாள், இவள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பாள். அதான் பெண்களின் மனது. அப்ப முடிவு எடுத்தேன் இங்க வரவேண்டும் என்று இது உங்களுக்கு சிரிப்பா கூட இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியா பார்த்தீங்கனா, அந்த மனோபாவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். இப்போ வாரம் ஆனா என் மகன் குடும்பம் இங்கே இல்லத்துக்கு வந்துடுவாங்க நாங்க எல்லாரும் அவுட்டீங் போவோம், என் மருமகள் எங்களுக்கு பிடிக்குமேனு ஆசை ஆசையா சமச்சி எடுத்துனு வரா. இங்க நாங்களும் சந்தோஷமா இருக்கோம், காரணம் இங்கே இருக்கறவங்க எல்லாம் என்ன மாதிரி வயதானவர்கள், என்னை மாதிரி கூன் விழந்தவர்கள்,
    கண் பார்வை மங்கியவர்கள், சத்தமாக பேச முடியாதவர்கள், இது என் இனம். எனக்கு பிள்ளை வீட்டில் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும் எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வார்கள் என்னால் அப்படி செய்ய முடியாது, அவமானமாக இருக்கும், இந்த மூப்பு மேல் கோபமாக வரும் அதை எல்லோரிடமும் காட்ட ஆரம்பித்தேன். ஆனால் இங்கு
    என்னை போல தான் எல்லாரும், உண்மை புரிய ஆரம்பித்தது. அதனால் முதியவர்களே உங்களின் இறுதி வாழ்க்கை தன்மானத்துடன் கழிக்க இந்த மாதிரி நல்ல இல்லங்களில் சேருங்கள். பிள்ளைகளே உங்களின் பிற்கால வாழ்க்கைகு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், நன்றி " என்று அமர்ந்தார். அனைவரும் எழுந்து நின்று கையை தட்டினார்கள்.

    இல்லவிழா நன்றாக முடிந்தது. அந்த இல்லத்தில் ஒரு மாதத்தில் பல பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பலரின் பெற்றோர்கள் இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சுந்தரேஸ்வரன் சொன்னது அவர் பார்வையில் நியாயமாகத் தோன்றினாலும், பொதுப்பார்வைக்கு சரியாகாது. முதியோர் இல்லங்களே இல்லாத நிலை வேண்டுமென்பவரும் உண்டு.

    இதைப்போன்ற இல்லங்கள் தோன்றி ஒரு 30, 40 வருடங்கள் ஆகியிருக்குமா? அதுவும் நகரத்தில்தான் தோன்றியது. ஆனால் அதற்கு முன்னால்...???,

    மேலும் இப்போதும் கிராமங்களில் 70 வயதான மகன் 90 வயதான அப்பாவின் சம்மதம் வாங்க கைகட்டி நிற்கும் காட்சியைக் காணமுடியும். அப்படியென்றால் அந்த மகன் தன் வாழ்க்கையை வாழவேயில்லையா?

    பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழவிட்டுவிட்டு விட்டேத்தியாய் இல்லம் வந்து அமர்ந்து கொள்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்?

    இப்படியான இல்லங்கள் வெள்ளிவிழா கொண்டாடுவது பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் சுயநலத்தால்தான். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

    சிந்திக்க வைத்த சிறுகதை. உங்கள் பார்வையும் யோசிக்க வைத்தது மூர்த்தி. பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post

    இதைப்போன்ற இல்லங்கள் தோன்றி ஒரு 30, 40 வருடங்கள் ஆகியிருக்குமா? அதுவும் நகரத்தில்தான் தோன்றியது. ஆனால் அதற்கு முன்னால்...???,

    மேலும் இப்போதும் கிராமங்களில் 70 வயதான மகன் 90 வயதான அப்பாவின் சம்மதம் வாங்க கைகட்டி நிற்கும் காட்சியைக் காணமுடியும். அப்படியென்றால் அந்த மகன் தன் வாழ்க்கையை வாழவேயில்லையா?

    பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழவிட்டுவிட்டு விட்டேத்தியாய் இல்லம் வந்து அமர்ந்து கொள்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்?
    நன்றி திரு.சிவா

    1. இந்த கதை 40, 50 வருடத்திற்க்கு முன்னால் எழுதியது இல்லை, இப்போ இருக்கும் கால கட்டத்துக்காக எழுதியது. வேறு வழியில்லாமல் சகித்து கொண்டு போவது வேறு, ஆசைபட்ட வாழ்க்கையை வாழ்வது என்பது வேறு. அந்த காலத்தில் போன் கிடையாது ஆனால் இப்போ இருக்கு, அதனால் அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்ற கேள்வி எப்படி அபத்தமோ அப்படி தான் இதுவும். அது மனிதர்களுக்கான டெக்னாலஜீ என்றால் இதுவும் உற்சாகமான ஒரு மனதுக்கான வழி தான். எப்படி குழந்தைகள் அவர்கள் வயதுள்ளவர்களை விரும்புவார்களோ அதுபோல தான் முதியவர்களும் (அவர்களும் குழந்தைதானே).

    2. கையை கட்டி வாய் போத்தி நிற்கிறான் என்றால் மகன் அது அப்பாக்களுக்கு செய்யும் மரியாதை. அதனால் அது மகனின் இஷ்டப்பட்ட வாழ்க்கை ஆகிவிடுமா?

    3. உண்மையான அக்கறையுள்ள பெற்றோற்கள் பிள்ளைகளிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு, அவர்களை வாழ்க்கையை எதிர்நோக்க தயார்படுத்துவார்கள்


    நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுந்தரேசனுக்கு இரு பிள்ளைகள். மற்றவர்களுக்கு ஒத்தைப் பிள்ளை. இன்னும் பலருக்கு பல பிள்ளைகள். அதனால்தான் இல்லத்தில் ஒலிவாங்கிய உணர்ச்சிகள் வேறுபட்டிருக்கின்றன.

    வெட்ட வெளியில் தனிமரமாக நிற்பதை விட தோப்புக்குள் தனிமரங்களாக நிற்பது சிறந்தது.

    பாராட்டுகள் மூர்த்தி.
    Last edited by அமரன்; 19-11-2008 at 08:59 AM.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    சொல்லப்பட்ட தீர்வில் முழு உடன்பாடு இல்லை என்றாலும்
    சாத்தியக்கூறுகளின் நிகழ்தகவு பெரிதாக வித்தியாசத்தை
    கொண்டு வந்து விட முடியாது.

    காலம்தான் இதற்கான பதிலை தீர்மானிக்க வேண்டும்.

    நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே.. கொஞ்சம் சிந்திக்க வைத்தமைக்கும்
    நன்றி





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by poornima View Post
    சொல்லப்பட்ட தீர்வில் முழு உடன்பாடு இல்லை என்றாலும்
    சாத்தியக்கூறுகளின் நிகழ்தகவு பெரிதாக வித்தியாசத்தை
    கொண்டு வந்து விட முடியாது.

    காலம்தான் இதற்கான பதிலை தீர்மானிக்க வேண்டும்.

    நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே.. கொஞ்சம் சிந்திக்க வைத்தமைக்கும்
    நன்றி
    நன்றி
    இதில் அனைவருக்கும் உடன்பாடு ஏற்படாது அதனால் தான் இந்த கதையின் முடிவில் பாதி பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து தங்களின் பெற்றோர்களை அழைத்து சென்றதாகவும். விழாவுக்கு வந்த மீதி பிள்ளைகள் அவர்களின் பெற்றோரின் உணர்வை மதித்து அவர்களை இல்லத்தில் வந்து சேர்த்தார்கள் என்று.

    இதை நீங்கள் சிறுகதையாக அங்கிகரித்ததுக்கு நன்றி, (ஒருவேளை எழுத்து பிழையில் போட்டுடீங்களோ, ஹா ஹா ஹா)
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இந்தச் சிந்தனை உங்களுக்கு மட்டுமல்ல மூர்த்தி எனக்கும் உண்டு.

    உணர்ச்சிகளை ஒற்றி வைத்து விட்டு மனதில் எழுப்பி வைத்துவிட்ட சுவர்களை உடைத்துவிட்டு அமைதியாகச் சிந்தித்தால்..

    நாம் எல்லோர் மீதும் பல கடமைகளை வலியத் திணிக்கிறோம் என்பதை எளிதில் அறியலாம். அந்தத் கடமைகளைத் திணித்தலை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்ந்தாலே பல ஈகோச் சுவர்கள் உடைந்துவிடும்.

    இது ஒரு பட்டைத்தீட்டப்படாத கச்சா வைரத்தனமான சிந்தனை.

    புரிந்து கொள்ளச் சற்று அனுபவம் தேவைப்படும்.

    தீர்வில் அனைவருக்கும் உடன்பாடு வருவது சிரமம்தான்,

    வளர்க்க முடியாதவன் ஏன் பெற்றாய் என்றும்

    உன்னை வளர்த்தவனை கடைசி காலம் வரை வச்சிருந்து காப்பத்தணும் என்றும் திணிக்கப்படும் கடமைகள். (அன்பால் ஏற்றுக் கொள்ளும் கடமைகள் கனப்பதில்லை)

    உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா? இப்ப இப்படிச் செய்யறியே இது ஞாயமா? என்பது நம்முடைய பழைய உழைப்பின் மீது சுயநலச்சாயம் பூசி விடுகிறது.

    நாம் பாரமாக இருக்க விரும்புகிறோமா இல்லை பாசமாக இருக்க விரும்புகிறோமா என்பது நம் உறவுகளின் பிறவிக் கடமை என்பதை வலியுறுத்தாதில் இருக்கிறது.

    இயலாமை வரக் கூடியதுதான். அறிந்ததுதான். அதற்கான திட்டமிடல் வேண்டாமோ? ஒரேநாளிலா தள்ளாமை சொல்லாமல் கொள்ளாமல் வந்து விடுகிறது.

    நமக்கு நாம் செய்து கொள்ளவேண்டிய கடமைகளை செய்து கொள்ளாமல் பிறரை நிந்தித்தலில் பயனென்ன?

    இதில் விதிவிலக்காக நிற்கிறவர்கள் வறிய குடும்பத்தில் பிறந்து / வளர்ந்து தன் குழந்தைகளின் வளத்திற்காக தன் வாழ்வை இழந்தவர்கள் மட்டுமே. அவர்களும் எதிர்பார்ப்புகளைச் சுருக்கினால் ஆனந்தம் தான்,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நல்ல கதைதான்... கருத்தில் உடன்பாடில்லை.

    இன்று முதியவர் இல்லம் இருக்கிறது.. இந்நிலை நீடிக்கவும், காலமாற்றத்திலும்
    நாளை குழந்தைகள் இல்லம் வர்லாம்.. கடமைகள் என்ற பெயரில் எதையும்
    திணிக்கவிரும்பவில்லை என்று பெற்றோர்கள் கொண்டு வந்து விடுவதும்
    பார்ப்பதுமாக இருந்தால்????

    தன்னைக் உலகுக்கு அறிவித்த அப்பா - மகனுக்கான கடமை
    நல்லபடியாக மகனை வளர்க்கவேண்டும் - அப்பாவுக்கான கடமை.

    கடமைகள் இல்லாமல் இந்த சுழற்சி இல்லை.... இன்று மகனாக இருப்பவன் நாளை அப்பாவாகிறான் இல்லையா?

    சரி இவையெல்லாவற்றிற்கும் என்ன காரணம்? சரியான புரிதல் இல்லாமை..

    எனக்குத் திருமணமாக இன்னமும் சில வருடங்கள் ஆகும்... ஆனால் என் அம்மா இன்றும் சொல்லிவருகிறார்.. திருமணமான மறுநாளே என்னையும் என் மனைவியையும் தனிக்குடித்தனத்திற்கு அனுப்பிவிடவேண்டுமாம்... நான் அவர்களை அனுப்புவதற்கு முன்னர் என்னை அவர்கள் அனுப்பிவிடுகிறார்கள்..

    இந்த புரிதல்தானே அவசியம்...

    தாமரை அண்ணா....

    கடமைகள் என்பது உணராத வரையிலும் திணிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்.. நான் நன்றாக படிக்கவில்லை என்றதும் என்னை நன்றாக படிக்க வைக்க என் அப்பா தன் கடமையென என்னி எனக்குச் சொல்லித்தரவில்லையா..... அதுகூட திணிக்கப்பட்ட கடமைதான்... ஏன்,?? சுயநலம் கூட.....

    சுயநலம் இல்லாமல் யாருமில்லை... ஏன்? பதிவுகள் கூட சுயநலம் தானே!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி இங்கு பதிவுகளை பதித்த அனைவருக்கும்
    இங்கு சிலர் இதை ஒத்துக்கொண்டார்கள், பலர் ஒத்துக்கொள்ளவில்லை, சிலர் என்ன சொல்லி இருக்காங்கனு புரியவில்லை. எதுவாக இருந்தாலும் யாரையும் நான் வற்புறுத்த(வில்லை.)வும் முடியாது. இது முதியவர்களின் அவலக்குரல் அவ்வளவே, நாம் எப்படி ஒரு குழந்தைக்கு பிடிக்கும் நினைத்துக் கொண்டு பிடிக்காததே திணிக்கிறோமோ அதைப்போல தான் இயலாத முதியவர்களின் மீதும் திணிக்கிறோம் என்பது என்னுடைய கருத்து மட்டுமே.
    Last edited by ரங்கராஜன்; 21-11-2008 at 05:59 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஆதவா View Post
    தன்னைக் உலகுக்கு அறிவித்த அப்பா - மகனுக்கான கடமை
    நல்லபடியாக மகனை வளர்க்கவேண்டும் - அப்பாவுக்கான கடமை.

    கடமைகள் இல்லாமல் இந்த சுழற்சி இல்லை.... இன்று மகனாக இருப்பவன் நாளை அப்பாவாகிறான் இல்லையா?

    சரி இவையெல்லாவற்றிற்கும் என்ன காரணம்? சரியான புரிதல் இல்லாமை..

    எனக்குத் திருமணமாக இன்னமும் சில வருடங்கள் ஆகும்... ஆனால் என் அம்மா இன்றும் சொல்லிவருகிறார்.. திருமணமான மறுநாளே என்னையும் என் மனைவியையும் தனிக்குடித்தனத்திற்கு அனுப்பிவிடவேண்டுமாம்... நான் அவர்களை அனுப்புவதற்கு முன்னர் என்னை அவர்கள் அனுப்பிவிடுகிறார்கள்..

    இந்த புரிதல்தானே அவசியம்...

    தாமரை அண்ணா....

    கடமைகள் என்பது உணராத வரையிலும் திணிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்.. நான் நன்றாக படிக்கவில்லை என்றதும் என்னை நன்றாக படிக்க வைக்க என் அப்பா தன் கடமையென என்னி எனக்குச் சொல்லித்தரவில்லையா..... அதுகூட திணிக்கப்பட்ட கடமைதான்... ஏன்,?? சுயநலம் கூட.....

    சுயநலம் இல்லாமல் யாருமில்லை... ஏன்? பதிவுகள் கூட சுயநலம் தானே!!
    வாழ்க்கையை மூன்று காலங்களாகப் பார்க்கவேண்டும் ஆதவா,

    1. பிறந்தது முதல் பெற்றோர் தேவைப்படும் இளமைக் காலம் வரை.

    2. தன்னிச்சையாய் வாழ உகந்த காலம்

    3. முதுமைக் காலம்

    முதல் இளமைக் காலத்தில் படிப்பைத் திணிப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் அதை விட வழிகாட்டுதல்தானே உயர்ந்தது. இன்று தம் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அவர்கள் என்னவாக வரவேண்டும் என்பதை அவர்களின் ஆர்வம், திறமை இதைக் கொண்டு அறிந்து அதற்கு வழிகாட்ட வேண்டுமென்ற கோட்பாடு வளர்ந்து வருகிறது. பென்ஸ் இதை இன்னும் அழகாக விளக்கக் கூடும்


    நாம் பொருளீட்டி வாழும் காலத்தில் அன்றைய வரவை அன்றே செலவு செய்வதில்லையே. வருங்காலத்திற்கு என்று சேமித்தும் வைக்கிறோம் அல்லவா. 40 வயதான நான் இன்னும் ஒரு 40 ஐம்பது வருடங்கள் வாழலாம். அதற்கும் சற்று வருமானத்தைச் சேமிக்க வேண்டாமா?ஓய்வு பெற்ற பின் பையன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடலாமா?

    வருமானத்திற்கேற்ப வாழ்வது மட்டுமல்ல, வாழ்நாள் வரைக்கும் தேவையான வருமானத்தை ஈட்டுவதும் நம் கடமை அல்லவா? நம்முடைய கடமையை நாம் செய்தால் திணிக்க வேண்டிய அவசியம் கிடையாதல்லவா?

    தன்னால் இயன்ற வரை தன் வாழ்நாள் முழுவதிற்குமான பாதுகாப்பை ஒருவர் ஏற்படுத்திக் கொள்வது என்பது எந்த விதத்தில் தவறு?

    25 வயதில் உலகம் சுற்றவேண்டிய இளைஞர்களை, கைவிலங்கு போட்டு வைப்பது ஞாயமா?

    இன்று வீட்டுக்கு ஒருவரோ இருவரோ குழந்தைகள், 50 வருடங்கள் அவர்கள் நம்முடன் மற்றும் நமக்காகச் செலவழித்தால் எப்போதுதான் அவர்கள் தேவைகளை அவர்கள் சம்பாதிப்பது, அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பாரமாகி விடலாம் இல்லையா?

    குழந்தைகள் ஒன்றுமில்லாமல் இருந்து வந்தவர்கள். அவர்களை வளர்ப்பது அவசியமாகிறது.

    முதியவர்கள் இளைஞர்களாக இருந்து வருமானம் ஈட்டி வாழ்க்கையை அறிந்தவர்கள். அவர்களுடைய தேவைகள் அவர்களுக்குத் தெரியும் அல்லவா? அதைப் பற்றி ஏன் இளமையில் யோசிக்கக் கூடாது. ஒரு 40 வயதாகும்பொழுது முதுமையைப் பற்றிச் சிந்திக்கலாமே!

    தனக்கான கல்லறையைக் கூடக் கட்டி வைத்தார் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள். பேரர்களுடன் அங்கே சென்று வரவும் செய்தார்.

    இறுதிச் சடங்குகளுக்கும், நமக்கு பின்னரான நம் குடும்பத்தின் வாழ்விற்கும் ஆயுள் காப்பீடு செய்கிறோம்.

    அப்புறம் நமது முதுமைக் காலத்திற்காக ஏற்பாடு செய்வது ஏன் தவறாகும்.

    மூர்த்தி தொட்டிருப்பது அடிப்படையான உணர்வு.

    குழந்தைகள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்களைச் சுதந்திரமாக விடுங்கள். அவர்கள் உங்களிடம் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

    நட்புகள் நீண்டும் விரும்பத்தக்கதாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

    அதையேதான் இங்கு உறவுகளுக்கிடையேயும் நாம் செய்ய வேண்டும்.


    நம்முடைய கடமைகளைச் செவ்வனே செய்ய மறக்கக் கூடாது. அதே சமயம் இது உன்கடமை. இதை எனக்கு நீ செய்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி தாமரை
    நீங்கள் ஆணா, பெண்னா?, இளையவரா? முதியவரா?, திருமணம் ஆனவரா? ஆகாதவரா?, என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்களின் அறிவு பூர்வமான பதில்களும் வக்காளத்தும் நீங்கள் வாழ்க்கையை விரும்பி வாழ்கிறீர்கள், வாழவிடுகிறீர்கள் என்று தெரிகிறது. நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    எத்தனை பேருக்கு அண்ணா விருப்பப்பட்ட படிப்பு இருந்திருக்கிறது.?? எத்தனை பேர் 25 வயதில் உலகம் சுற்றுகிறார்கள்???

    நான் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்னை வேலைக்கு அனுப்பினார்கள். அது கூட திணிப்புதான். பதினைந்து வயதிலேயே என் ஊர் சுற்றும் கால்களுக்கு விலங்கு மாட்டிவிட்டார்கள்.. ஏன்? சூழ்நிலை... என்னைப் போல எத்தனை பேர்... நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்கள். கொஞ்சம் திருப்பூருக்கு வந்து பாருங்கள். எத்தனை பேர் பதினைந்து வயதில் வேலைக்குச் செல்லுகிறார்கள் என்று நான் காட்டுகிறேன்... இவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகவே நாற்பது வருடங்கள் ஆகி கிழடு ஆகிவிடுவார்கள். பிறகெப்படி முதுமைக்கு தன்னைக் காத்துக் கொள்வது?

    என் அப்பா எங்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். அவருக்கு நாற்பத்தைந்து தாண்டி விட்டது. இன்னமும் செட்டில் ஆகவில்லை. அவர் முதுமை பற்றி யோசிப்பதற்குள் வேலை போய்விட்டது. இன்று அவர் என்/எங்களை நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலை.. நாளை அவரையோ அல்லது என் அம்மாவையோ நான் முதியோர் இல்லத்திற்குத் துரத்தினேன் என்றால் அது யார் தவறு?

    அதே சமயம் அவர்களாக விருப்பப்பட்டார்கள் என்றால் வழிவிடவும் தயங்கமாட்டேன்..

    ஒரு தகப்பன் தாய் எதற்காக முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.. தன் சொந்த வீட்டில் வாழ முடியாமை.. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.... அப்படி சொந்த வீட்டில் வாழமுடியாமைக்கு தன் மகன்/மருமக்ள் காரணமாக இருக்கவேண்டும்..

    நாற்பது வயதில் முதுமை பற்றி சிந்திக்க சிலருக்கு சாத்தியமாகலாம்.. ஆனால் பெரும்பாலோர் அன்றைய வாழ்வையே சிந்திக்க நேரமில்லாமல்தான் இருக்கிறார்கள்.

    இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது... எத்தனை பேர் ஆயுள் காப்பீடு செய்திருக்கிறார்கள்... ???

    கடமைகள் என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுமந்து கொள்வது. அல்லது திணிக்கப்படவேண்டும். இது என் கருத்து.. எல்லாரும் தத்தம் குடும்ப சூழ்நிலை காரணமாக திணிக்கப்பட்ட கடமைகளை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

    நட்புகள் நீளவும் சரி, விரும்பத்தக்கதாக ஆக்வும் சரி,, அது அவரவர் நடத்தையில் இருக்கிறது....

    கடமையை செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் அதை மறந்துவிட்டால் பிறகு அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை..

    தன்னைக் காப்பாற்றிய தாய்,
    தான் காப்பாற்றிய தாய்.... இப்படி ஒரு சுழற்சி நமக்குள் இருக்கவேண்டும்.. இது பிரதி பலன் அல்ல.. இன்றியமையாத கடமை........

    அவரவர் தத்தம் வாழ்வைத் தேர்ந்தெடுத்து, ஏற்படுத்திக் கொடுத்தவர்களை உதறினால்....????

    நன்றி மறப்பது நன்றன்று.

    இந்த விவாதங்களால் உங்கள் கதை பாதிக்கப்பட்டிருந்தால் எங்களை மன்னியுங்கள் மூர்த்தி...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •