Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: ஐந்து மணி ரயில்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    ஐந்து மணி ரயில்


    மதியம் மூன்று மணி மின்சார ரயிலில் கூட்டம் நிறைய இல்லை காலியாக இருந்தது. வயதானவர்கள்,குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும்
    இருந்தனர்.ரயிலின் குலுக்கல் தாலாட்டை போல இருந்ததினால், அனைவருக்கும் கண்கள் இழுதுக் கொண்டு சென்றது. அப்பொழுது அசெளகர்யமான ஒரு குரலில் பாடல் ஒலித்தது

    "இறைவனிடம் கை ஏந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
    இறைவனிடம் கை எ..........."


    அனைவரும் "ப்ச்ச்ச்" என்று ஒத்த குரலில் எதிர்த்தார்கள், ஆனால் அந்த குருட்டு பாடகன் அதை பற்றி கவலைப்படாமல் பாடிக்கொண்டு இருந்தான். ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடி, சரியாக ஒதுக்கப்படாத மீசை, அவன் பின்னாடி அவன் தோளை பிடித்து பின் தொடரும் அவன் மனைவி. இவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும் நான்கே வயதான பிஞ்சு பெண் குழந்தை. நல்லா வெள்ளையா, ஒல்லியாக இருந்தது, சட்டையில் பட்டன்கள் தப்பு தப்பாக போடப்பட்டு இருந்தது. தொப்பை மட்டும் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் இருந்தது, மூடி ஆண்பிள்ளை போல செய்யப்பட்டு இருந்தது. பாடலை முடித்தது அந்த சிறுமி அவர்கள் இருவரையும் ஒரு கம்பி பிடித்து நிற்கவைத்து விட்டு, அனைவரிடனும் தன்னுடைய பிஞ்சு விரல்களால் பிச்சை கேட்டாள். குழந்தை நெருங்க அனைவரும் தூங்குவதுப் போல நடித்தார்கள்.

    "சார், அம்மா காசு தாங்க" என்று கெஞ்சினால் குழந்தை, பிறந்ததில் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை தான். பெண்கள் பாவப்பட்டு காசு போட்டனர். ஆண்கள்

    " ஏன் இந்த ஆளு எதாவது லாட்டரி டிக்கெட்டு விக்க வேண்டியது தானே, வீ மஸ்ட் நாட் என்கரேஜ் திஸ் கய்ஸ் " என்று வியாக்ஞானம் பேசினார்கள்.

    அந்த பிச்சை எடுக்கும் குழந்தை, அங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு குழந்தையை வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள். ரயில் நின்றது.

    "திவ்யா கண்ணு" என்று குருடனின் குரல்

    "தொ ப்பா" என்று குடுகுடுன்னு ஓடினாள், இருவரையும் பத்திரமாக இறக்கினாள். மறுபடியும் வேறு ஒரு ரயில் வேறு ஒரு பாட்டு

    "ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
    கன்றினைப் போல் மாயக்கண்னன்
    தூங்குகின்றான் தாலேலோ......."


    மறுபடியும் அதே பிச்சை, மறுபடியும் அதே பொய் தூக்கம், அதே காலி டப்பா. மதியம் 4.30 மணி மூவரும் ஒரு மர நிழல் அடியில் உணவுக்காக உக்கார்ந்தனர். அந்த சிறுமி பையில் இருந்த பாக்ஸில் இருக்கும் உணவை அப்பாவுக்கு அம்மாவுக்கு கையில் உருண்டை பண்ணி கொடுத்தாள். இவளும் தன்னுடைய முறை வரும் பொழுது சாப்பிட்டுக் கொண்டாள். அவர்களுக்கு கைக் கழுவ தண்ணீர் ஊற்றினாள்.

    "ராஜாத்தி இன்னைக்கு எவ்வளவு வந்து இருக்குமா"

    அவள் தன்னுடைய பிஞ்சு விரல்களால் எண்ணி "பத்து ஒரு ரூபா, மூணு ஐஞ்சி ரூபா, அம்மது காசு எட்டு ப்பா"

    "அய்யோ 29 ரூபா தானா, என்னங்க இது நம்ம நைட்டு சாப்பாட்டுக்கே பத்தாதே"

    அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

    "இல்ல வாசுகி இன்னைக்கு 5.00 மணி ரயில்ல காலேஜ் பசங்க நிறை வருவாங்க, அதுல நிறைய கிடைக்கும் கவலைப்படாதே"

    ஐந்து மணி ஆனது, ரயில் தூரத்தில் வரும் சத்தம் கேட்டுது, மூவரும் தயார் ஆனார்கள்.

    ரயில் நெருங்க நெருங்க மூவருக்குள்ளும் சந்தோஷம் அதிகமாகியது.

    அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"

    அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"

    அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"

    ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.
    Last edited by ரங்கராஜன்; 05-11-2008 at 03:45 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    மனதை தொடும் கதை.....
    அவாரவர் கவலை அவரவர்க்கு என்று வைத்து,
    கடைசியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று சொல்லி எம்மை கவலையில் ஆழ்த்திவிட்டீர்கள்

    தொடரட்டும் உங்கள் பயணம்!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    உடனடி பதிலுக்கு நன்றி நாரதரே
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட.. போட வைக்கும் முடிவு... மனதை பாரமாக்கி விட்டீர்கள்....
    நாரதர் சொன்னது போல் அவரவர் கவலை அவரவர்க்கு
    வாழ்த்துகள் மூர்த்தி

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by murthyd99 View Post
    தாயுமானவள்

    அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"

    [b]அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"

    அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"

    ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.
    யாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. ?

    யாரிதில் தாயுமானவள்.. ??
    குழந்தையெனில்
    அவளின் எதிர்ப்பார்ப்பில்
    தாய்மையைக் காட்ட வேண்டாமோ......

    அவர்களின்
    எதிர்ப்பார்ப்புகளைப்
    பொய்ப்பிக்கும் வில்லனாய்
    ஞாயிற்றுக் கிழமையெனின்...
    தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

    தலைப்பும் முடிப்பும்
    தாமரை இலை தண்ணீராய்... !!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.

    சாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.

    (ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    [QUOTE=சாம்பவி;389308]யாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. ?

    யாரிதில் தாயுமானவள்.. ??
    குழந்தையெனில்
    அவளின் எதிர்ப்பார்ப்பில்
    தாய்மையைக் காட்ட வேண்டாமோ......

    அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

    இதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.


    அவர்களின்
    எதிர்ப்பார்ப்புகளைப்
    பொய்ப்பிக்கும் வில்லனாய்
    ஞாயிற்றுக் கிழமையெனின்...
    தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

    தலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்

    சகோதரி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by பாரதி View Post
    நன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.

    சாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.

    (ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)
    நன்றி
    கண்டிப்பாக அடுத்த முறை அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by murthyd99 View Post

    அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

    இதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.


    அவர்களின்
    எதிர்ப்பார்ப்புகளைப்
    பொய்ப்பிக்கும் வில்லனாய்
    ஞாயிற்றுக் கிழமையெனின்...
    தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

    தலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்

    சகோதரி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்
    சுபமும் சோகமும்.
    கதையின் முடிவில்...
    தலைப்பு மட்டும்
    கதையின் முடிப்பில் (knot) ....... !!!!

    பெண்ணுள் தாயுள்ளம் சுயம்பு.,
    அவள் தாய்...
    அது ஆணுக்கும் வருமேயாயின்
    அவன் "தாயும்" ஆனவன்... !

    குழந்தையின் தாய் உள்ளத்தை மட்டுமே
    உங்களின் கதை முன்னிறுத்துமேயாயின்.,
    நான்கு வரிக்கு முன்பே முடித்திருக்கலாமே..
    இச்சிறுகதையின் முடிச்சே
    கடைசி வரியில் தானே..... !!

    மனித "எதிர்ப்பார்ப்புகளை"
    காலம் எள்ளி நகையாடுகிறது... !

    தாமரையில் குற்றமில்லை...
    தண்ணீரிலும் மாசில்லை......
    தாமரையின் மீது தண்ணீர் மட்டும் ஒட்டவில்லை... !!

    "எதிர்ப்பார்ப்பு"களோடு
    படிக்கும் போது ஒட்டும் பாருங்கள்... !

    ...
    Last edited by சாம்பவி; 05-11-2008 at 08:53 AM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    அடேங்கப்பா திட்டுவதை (அல்லது) அதிருப்தியை கூட எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள், நல்ல திறமை, விமர்சனத்திற்க்கு நன்றி, என்னுடைய மற்ற கதைகளையும் படியுங்கள், உங்களின் திட்டுகளை (அல்லது) அதிருப்தியையும் அதிலும் பதியுங்கள், சந்தோஷப்படுவேன், நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #11
    இளையவர் பண்பட்டவர் பாபு's Avatar
    Join Date
    03 Jan 2008
    Location
    Hong Kong
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல அருமையான கதை ! டைட்டில் தான் கொஞ்சம் நெருடுகிறது.
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி நண்பர்களே
    உங்களின் விமர்சனங்களை பதிந்தமைக்கு, உங்கள் அனைவரின் அறிவுரையை ஏற்று, கதையின் தலைப்பை மாற்றியுள்ளேன். ஏனென்றால் கதை சொல்லியைவிட கதை கேட்பவரின் கருத்து மிக முக்கியம்.......................நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •